ஞாயிறு, 12 ஜூன், 2011

வாத்தியார் இன்று வீடு திரும்புகிறார்



சேலம் செல்லப்பா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அம்மாபேட்டை கணேசன் வாத்தியார் இன்று வீடு திரும்புகிறார். கலைஞர் காப்பீட்டுத்திட்டத்தில் இலவசமாக ஆபரேசன் செய்து புருசன் பொண்டாட்டி இரண்டுபேர்களையும் சொஸ்தப்படுத்துவதாக சொன்ன டாக்கிட்ரு புனிதவதி அம்மையார் பெருங்கருணை காட்டி பில்லை முப்பத்தி நான்காயிரமாக குறைத்திருக்கிறாராம். கேசை எடுத்துக்கொண்ட வக்கீல் சாரிடம்( போலிஸ் ஸ்டேசனில் எல்லாம் தாம் பார்த்துக்கொள்வதாக மிழற்றியவர்) நேற்று இராவெல்லாம் மண்டியிட்டு பிச்சைகேட்டதில் ஒரு ஐயாயிரம் பிறந்திருக்கிறது. என்னிடமுள்ள பனிரெண்டாயிரம் போக கணேசன் மகள் வாணியிடம்( மேச்சேரி புதன் சந்தையில் காய் கசுறு வித்து புருசனுக்கு தெரியாமல் சீட்டு நாட்டு போட்டு சிறுவாடு சேர்த்து அப்பனிடமும் உடன் பிறந்தானிடமும் பறிகொடுப்பவள். தேள் கொடுக்கு நாக்குள்ள மாப்பிள்ளையின் ஏச்சும் பேச்சும் தம்பியின் கண்ணீரில் கரைந்துவிடும்) மூவாயிரம் இருக்கிறதாம். பாக்கி பணத்துக்கு என்னடா பண்டப்போறமென்று கையை பிசைந்து விட்டு லெனின் சாருக்கு காலையில் போன்போட்டேன். ஏழாயிரத்து எண்ணூறு பேங்கில் போடுவதாக சொல்லியிருக்கிறார். போக்குவரத்துக்கு நம்ப தக்கை பாபுவுக்கு ஒரு ரிங் வுட்டாபோதும். கடம்பட்டு ஒடம்பட்டு மனுச உசுர காப்பாற்றியாச்சு. வந்து பழையபடிக்கி நான் கண்டு அதியசிக்கும் ரெட்டடவு போட்டு ஆடுவாரா? கொளத்தூரில் கொள்முதல் செய்து குறிச்சி ஒலகடத்தில் அரைத்த மிளகாப்பொடியை கூவி விற்க சந்தை சந்தையாக போவாரா? தெரியவில்லை.

கருத்துகள் இல்லை: