சனி, 27 பிப்ரவரி, 2016

ச்சட்டீர்........ச்சட்டீர்

ச்சட்டீர்........ச்சட்டீர்













மாடு வாய்க்குமாம் மவராசனக்கு .பொண்டு வாய்க்குமாம் புண்ணியவானுக்கு .செட்டுக்கு  ஆளுங்க நேர்றது அவ்ளச் சிலேட்டமில்ல. ரெட்டியாரும்,பரமசிவனும் ,ராசாக்கவுண்டனும்,செல்வராசியுங்கூட நல்லூரு கருவாயஞ்  சேகரும் வந்து எடஞ்  சேந்துருக்கறாங்க.இந்த சீசனு தேவல. நடுத்தரம். தையில இருவது ராத்திரி  மாசியில பத்து ராத்திரி ஒட்டியிருக்குது .ரண்டு  வருசமா செட்டு  இல்லாம பெறத்தியாருக்கு ஒழச்சி சல்லிக்காசு  மிச்சமில்ல.சொந்த செட்டுன்னா சாமானஞ்  சட்டு படுதா ,பொட்டி மத்தாள வாடவ, பூசபணம் வெத்தலப்பாக்குப் பணமின்னும் இனாம் வர்ற சொணையான்னும்  சம்பளத்துக்கும்  மேல வரும்பிடி ஆயிரம்  ரெண்டாயிரம்  தேறும் .

சீட்டு நாட்டு போட்டு சேத்தி வெய்க்கலாம்.பின்னியும்  இப்ப ஆளுங்க மிம்பணம் கேக்கப் பழவிக்கிட்டாங்க . நீட்டிச்  சுருக்கனா நெடும் பக . வருச கண்ட மாப்ளைங்க  வந்து வந்து  நிக்கறாங்க.ஆளும்பேர்ல  பவ்வத்து  ஆயிரம்  அவுக்கும்பிடி  சிரிச்ச  மூஞ்சியாத்  திரியறாங்க வான்னா  வராங்க , போன்னாப் போறாங்க. பொறுப்பா கருதிப்புடிச்சி  தொழுவாடு நடக்குது .

இன்னைக்கு  கூத்து கெடையூரு மட்டம்பட்டி.எஸ். அஞ்சில  எடப்பாடி  வந்து, வெள்ளண்டி வலச  தாட்டி வீரப்பம்பாளையம்  வந்து  சங்கரி  ரோட்டுல  வவானி  பைபாசுக்கு முந்தி   கவண்டமூட்டு  கல்யாணமண்டபத்து முக்குல சோத்தாங்கை பக்கம் திலும்புனா அவத்திக்கி  யெட்டிபுடிச்சாப்ல மட்டம்பட்டி .
அண்ணாமல மொகாமியிலதான் கூத்து . சாயிண்டு  கூத்துன்னும் தெரியல. அந்தாளுக்கிட்ட  என்னாவொரு  சங்கடமின்னா    தனிச்  சம்பளத்துக்குப் பேசியாச்சும் ஆளு    எச்சா  வெச்சிக்  கூத்தாடணும். மொகமான வெத்தல  முன்ன  இருக்கணும் .

ஆளு  வரச்சொல்றத பத்தி இல்ல . நம்ப கைக்காசியா  நட்டம் .அஞ்சாறு  ஆளுக்கூட  வரச்சொல்லலாம்.வர்ரவிங்க வந்தா குடுத்த வேசத்தப் போட்டாடிப்புட்டு  கோளாறு பண்டாமப் போயிட்டா  தும்பமில்ல. அய்யோன்னப்பாவம்  கையோட  வருது.போனப்பூட்டுக்கு  சாயிண்டு  கூத்தொண்ணுக்கு செட்டிபட்டி  சின்னாளையும் , கொம்பாடிப்பட்டி ராசிப்பையனையும்  கூட்டியாரனமுன்னு  ஒரே  அடவாதம்  புடிச்சி  ஆளுமேல ஆயிரம்  உரூவா மொன முறியாம குடுத்துக்  கூட்டியாந்தாங்க. கெந்துருவ பருவதம்  வச்சிருந்தம். கூத்தென்னமோ எத்தாதான்  இருந்துச்சி.சின்னாளு  வெளிய வந்து   தர்ப்பார முடிச்சிக்கிட்டு    சுபத்ரா  சந்திப்புக்கட்டம்  வந்ததும் ராசிப்பையன்  வழமொறையா பாதம் பணிஞ்சி -


-ஆனக்குந்தி  பட்டணத்து  அரமண அந்தப்புரத்துல  சிலான  தாதிமார்களோட  சிரிச்சி  பேசி சொக்கட்டான்  வெளையாடிக்கிட்டு  இருந்தேன்.இந்த  ராஜ  கொலு மண்டபத்துக்கு      என்னைய  கூப்புட்டு  இருக்கறீங்களே யென்னா சாமி  சமாச்சார-மின்னு
 
ரெண்டடி  பாட்டுப்பாடி நாலடி வசனமா கேட்டதுதான்  தொச்சம் .  
சின்னாளு ஆ - ன்னு அவன வாய்ப் பேசறதுக்கில்லாம

-தேவி  நான்  உரைக்கும் பரியந்தம் நீயுந்தன் வாயை  திறக்கப்படாது-ன்னு

இவரே பேசிக்கிட்டு  இருந்தாரு.ஒருமாறு  பொழுதும் ஒரே  ஆளு எவ்ள பேசுவ ? சந்து வுடணுமில்ல.ராசிப்பையன் இதுதாஞ்  சாக்குன்னு  அரா சிவாங்கல.கம்முனே  நின்னுக்கிட்டிருந்தான்.அவரு பேசறமுட்டும் பேசிப்புட்டு
-பார்ரா  கழுத  வண்ணான் என்னைய  பாணி  பண்றான் -  
பார்ரா  கழுத  வண்ணான் என்னைய  பாணி  பண்றான்- ன்னு

ஒடனதும் பொண்ணு வேஷக்காரன,

-ஏன்  தேவி  பேசல
ஏன்  தேவி  பேசல
அடி  ஏண்டி  பேசல  கிளிக்குஞ்சி -ன்னு  புடிச்சி உலுக்க

அட  ராசிபையன் இந்தாள தர தரன்னு இழுத்துக்கிட்டு மின் சபையில  நிறுத்தி-

-கேளுங்க மகா  ஜனங்களே எம்பிருசன்  தாஞ்  சொல்றவரைக்கும்  வாயே பேசப்படாதுன்னு  தானே  சொல்லிப்புட்டு இப்ப
-ஏண்டி  பேசல
-ஏண்டி பேசலன்னா நானு  வாயில  பேசாம  எங்கூதியிலியா பேசட்டும்?- மின்னு  கேக்க

ஒரே ரசாப்பாசமா  போச்சி .








இதோடவா?

நெருப்பூரு நாகமரையில  வஸ்திர பங்கம் கூத்து எச்சாளு ரண்டுப்பேர  கூட்டியாரச்சொன்னாங்க.பாஞ்சாலி  வேசத்துக்கு  ராசிப்பையனையும் துச்சாதனன்  வேசத்துக்கு சூளமேட்டு காவேரியும்  வர சொல்லியாச்சி. துரியோதனமூடு  தர்பாரு  ஆனாங்க.பஞ்ச பாண்டவரு  தர்ப்பாரு  ஆனாங்க . ஆச்சி ராசிப்பையன்  வேசமும் ஆச்சி .
பக்கத்துல கோந்து துச்சாதனன்  வேசக்காரம்  மொகமெழுதி மீசக்கட்டி  எந்திரிச்சி அம்புறேக்கு  போட்டு  கண்ணாடியப் பாத்தவன்
-அண்ணா  ராஜின்னா  எப்பிடின்னா  எம்பட வேசமின்னு ஒரு  மெப்புதலைக்கி கேக்க -
ராசிபையன்
-இதென்னா  வேசம்   தங்கம்- மின்னு அவன  வளைச்சி  கேக்க

-என்னாண்ண கிண்டுலு  பண்ற ? வீரப்புலி  துச்சாதனன்  வேசந்தான்னா- ன்னு  அந்த  திருவாத்தாஞ்  சொல்ல -

-அப்படியா-
-அப்படியா-
- என்னமோப்பா உனக்கே  நல்லாருந்தா  சேரி - ன்னு

சொல்லிப்புட்டு  கண்ணாடிய  பாத்து   குமிஞ்சிக்கிட்டான் ராசிப்பையன்.
பழிகாரன்கிட்ட  பஞ்சாங்கம்  கேட்டா  அவன்  மட்ட  மத்தியானத்துல  மரணமுன்னுதானேச்  சொல்லுவான்.இவன்  வழுதுப்  பேசல.ச்சர ச்சரன்னு  கட்ட நவய அவுத்து  வெச்சிட்டு படல  பிரிச்சிவுட்டு தெக்க போனவம்  போனவனே .மறுக்க ஆத்ர அவசரத்துக்கு  கூப்புட்டா  ஆளே  வரதில்ல .






சுள்ளிமுள்ளூரூ  பொனங்காட்டு மாரியாயிக்கு  கூத்து. அரவங்கடப்பலி பெருங்கொண்ட  சதுரு .செட்டிபட்டி  சின்னபையனும் அவஞ்செட்டு சாரிவேசக்காரன்  மதிபையனும் வெத்தலப்பாக்கு வாங்கி தண்ணிதாசனூர்  கொக்கிபல்லனையும் அம்மாபேட்ட முட்டக்கண்ணனையும் ஆட்டத்துக்கு  கூப்புட்டுருந்தாங்க .அவனவனுக்கு தகுதியான  வேசங்கட்டி  ஆடுங்கன்னு  சொல்லி  பாகம் பிரிச்சிருந்தா  சங்களவம் இல்ல . மண்டகொழுப்பேறி தானுங்கற கெருவத்துல  சின்னபையன்

-டே  ஆராடா கூத்தாடிங்களே அரவான் வேஷம் , உளுவி  வேஷம் ரெண்டையும்   போட்டு  செலுத்தமாண்டீங்க. அத  தள்ளிப்புட்டு  மிச்சத்த போட்டாடுங்க -ஆயிரம்  வேசக்காரனுங்க இருதாளும்  இந்த   கெழவனுக்கு  டூட்டி  குடுத்து  ராவுடி   பண்டராங்க-ன்னு

 சலிச்சிக்கிட்டு  போயி  கரக்கட்டு  மேல  தானும்  மதியும்  கூத்தியா நாயம்  போட்டுக்கிட்டு  படுத்தவிங்க  அலுப்பத்து  தூங்கறாங்க .எங்க  கெடக்கறீங்க நாயிங்களேன்னு ஒருத்தரும் கண்டுக்கவே  இல்ல.கெழக்க  வெளுக்க  கெனா கண்டு  முழிச்ச  செட்டிபட்டி  ஒழு  வாத்தியாரு டெசிக்கி போகாமயே மங்களம் பாடி  சம்பளம்  பிரிச்சான்  கொக்கிப்பல்லன் .

செட்டுப்பண்ணாடி தலமேல  துண்டப்போட்டுக்கிட்டு  வெறுங்கையோட ஊடு  போனான் .

என்னாதான்  நேரமா பொறப்பட்டாலும் எடம்  வந்துசேர நெடு  நேரமாவிப்போவுது .இந்த  கொழலுக்காரனும்  கோமாளி  வேசக்காரனும் வந்த பாட்ட  காணம்.முக்குல குந்தி சலிச்சி  டேசிக்கி  வந்தா ஆளாளுக்குப்  பேசறாங்க மணி  ஒம்போதுக்கே  கூத்து  ஆரம்பிக்கலைன்னு .

ஊட்டுக்கு  ஓராளு பன்னண்டு  பேரு  தூளு  வரிக்கப்போயி  வந்த பொறவும் இந்த ரெண்டு  கொலவாரிங்களும் காணல. பெருந்தனக்காரு,ஊரு மூப்பனெல்லாம் சும்மாயிருப்பானா  இப்பிடித்தான்  ரெண்டாளு  தாவு  வந்து  சேரலைன்னா ......

போனு மேல  போனு போட்டா திருட்டு ஒக்காளவோளிங்க எடுத்து  தொலையல.பேனுத்தலையமூட்டு தனபாலுக்கு  தாக்கலச்  சொல்லி மேச்சேரி  பைட்டேன்டுல ஆளுங்க  நடமாடறாங்களா-இல்ல  விராந்தி  கட கண்ட பக்கம்   குடிச்சி குண்டி வெடிச்சிக் கெடக்கறாங்களான்னு பாக்கச் சொன்னம் மவராசன் ஆள கைப்புடியா  புடிச்சி  கொண்டாறன்.பூசப்போட்டு கூத்த ஆரம்பியிங்கன்னு  சொன்னப்போறவுதான் மனசாறிச்சி.





இந்த  கூறுக்கெட்ட  கொசவங்  கூத்து  படிச்சப்ப  மயில்ராவண  வேசந்தாம்  போடப் பழவுனான். அவிங்கப்பன் பெரிய  கொழந்தையொரு அசகாயச்சூரன்.கட்டப்பொம்ம வீரப்பனவிக அப்பன்  முட்டக்கண்ணனோடடெண்டுக்கூத்தாடிக்கிட்டுஏரியூரு சந்தப்பேட்டையில இருந்தாங்  குடி .


கூத்திருந்தா  ஆச்சி . இல்ல  ஊருப்பாட்டுக்கு  போயி  ஒண்ணு ரெண்டு  வரும்பிடி  வந்தா  கால்வவுறு  அரவவுறு  கஞ்சி, எதுவுஞ்  சிக்கலைன்னா போரு பைப்பு  தண்ணி குடிச்சி கொலைய நனைச்சிக்குவாங்க .
இப்பத்தான்  சினிமா  டி வீ  அந்த நாளையில அதெல்லாமேது . உள்ளூரு பசங்க ஒரு  செட்டு  கூத்துப்பித்து  புடிச்சதுங்க  இவனோட  கூத்துப்படிச்சி  அவத்திக்கே ரெண்டாட்டம்  ஆடனாங்க .
ஆடன முசவக்கண்டு  அக்கம்  பக்கத்து  ஊருக்காரும்  இவிங்கள கூட்டிப்போயீ கம்புக்கும் ஆரியத்துக்கும்  ஆடச் சொன்னாங்க. அப்படித்தான்  செல்லமண்டி சித்தரப்பட்டி  தாண்டி  வத்துலுப்பட்டி ஒருக்கோடியா வருசக்கூத்து  வந்து  இவிங்க  ஆடிக்கிட்டிருக்கும்பிடி  வத்துலுப்பட்டி பெரியத்தனக்காரமூட்டு  பொம்பளயொருத்தி அடந்தடந்து  ஆட்டம்  பாக்க வந்துக்கிட்டிருந்தா .

மொத நாளு தெக்கவொரு  கடையா குந்தியிருந்தவ நாளுக்கு   நாளு    
நவுந்து லைட்டுக்கம்பத்திண்டையே கோந்து கூத்து  பாத்தா .கதா நாயகம்  வேஷம்  கண்ணுக்கு  குளும.மாப்ளைக்கு தெனம் நோட்டுமாலச்  சாத்துறா .
ருசிக்கண்ட  பூன உரியேறுமா ஏறாதா ?
இந்த  செத்தய  முழுங்கி கோணயன்
-உரூவா  நோட்டுத்தாங்  குத்துவியா இல்ல  சோறு தண்ணி  எதனாலும்  ஊத்துவியான்னு - கேக்க
அவளும்  வேணும்  வேணாங்க  விருந்தே  போடறன்   வாடா  சமுட்டி மொட்டான்னு  ஊட்டுக்கே வர  சொல்லிப்புட்டா.புலி  மார்க்கம் சீவக்கா  தூளு  போட்டு  தலைக்கி  தண்ணி வாத்து ஒரு  சித்திய  ஆறவுட்டு  ஆறன மசுத்துக்கு   சம்பங்கி  எண்ணத் தடவி கோணக்கெராப்பு சீவி  மயிலுக்கண்ணு வேட்டிக்கட்டி அரக்குச்  சொக்கா மாட்டி  மீசைய  முறுக்கி  தொடைய த்தட்டி  கூத்தியா வெய்க்கத்  திலும்புனான் .

வூட்டுக்குப்  போனாரு பண்ணாடி .உபசரண  சம்ரட்ன ஒண்ணுஞ் சொல்லிக்கிறதுக்கில்ல.பையன தரையில  குந்தவுடல கூத்தியா.போனமாப்  போன  வேலயப்பாத்தமான்னு  இல்லாமச் செய்யற  வேலய வுட்டுட்டு  செனையாட்டுக்கு  மசுரு  புடுங்கற  மாதர அவக்கிட்ட வாயக்குடுத்து  இவஞ்  சூத்த  புண்ணுப் பண்டிக்கிட்டான்.

தின்னுக்கொளுத்தவன  எச்சிப்பிரியத்துல  அவங்கூத்தியா என்னான்னு  கேக்கறா ..


-அன்னாடம்  பத்துப்  பேரு  சவையில ஆட்டம்  ஆடறியே ராசாவூ இன்னிக்கி  ஒருநா  எனக்கோசரம்  ஒராட்டம் புடியேஞ் சித்தங்கூறி  -

-பகலு  வேஷம்  போடப்பிடாதுன்னு  அவன்  மறிச்சி  சொல்ல .உடாம அட்டிபிடிச்சி  ஆட்டங்கட்றா.  

வேசப்பொட்டி துணி மணி  இல்லைன்னு  சுதாரிச்சா

இருக்கறத வெச்சி கட்டுங்கறா.

புஜகீர்த்திக்கி  என்ன  கட்டறதுன்னான்

ரெண்டு கைக்கு  ரெண்டு  மொறத்த  குடுத்தா .

சிகரக்குச்சின்னான்

அவ  ஓரளுப்புட்டிய தலமேலக்  கமுத்துனா .
 
மார்ப்பதக்கமின்னான் -நாலு  பிரமனயக்கோர்த்து இடுப்பாரம்  தொங்கவுட்டா .

மயிலுத்தோகைன்னு கேக்க  ஊடு  கூட்ற ஈச்சவௌக்குமாத்த  முதுகுப்பக்கம்  சொருவிவுட்டா .

அவ்வளதான் அலங்காரத்தப்பாக்க  ரெண்டு  கண்ணுப்பத்தல.


இந்தக்கத இப்படியோட கூத்தியாருப்புருசன்  ஊருப்பெரியத்தனக்காரன்  மத்தியான  சோறுங்க வூட்டுக்கு  வந்துட்டான்.அப்பறம் பாத்துக்க  கூத்து  கொண்டயம்  ஏறிட்டுது .

இரும்பு  பூணு போட்ட  ஓலக்கையில கூத்தாடி  மாப்ளைய  கணுவு  கணுவா  வூணனா....அட அட  கதவடியிலச்  சிக்குன  பெருச்சாளியாட்டம்  கத்தி  பப்பாரி எந்தப்பக்கம் அவம்  முட்டறதுக்கும் எசவில்ல. வாசக்காலுப்பக்கம் முட்னா கதவு  அறிகாலு  ரெண்டுப்பக்கத்து  மொறத்த  தடுக்க   குப்புற வுழுந்தவன்  இடுப்பக்கட்டி சேங்கி சேங்கி  ரெண்டூனு  வூணனாம்பா.

ஓரம்  இழுத்துக்கிட்டு  போயி  இவுனுக்கு  ஒருப்பக்க  நடையாச்சி .பொறவு  கொண்டக்கட்டு  வேசமாவுது  குத்தடவு  ஆவுது !

வவு நாளா நெண்டிக்கிட்டு  திரிஞ்ச மொண்டி  கட்டங்  கடசியா  கோமாளி  வேஷம் போட்டு  வவுத்த  வளக்குது.






பத்து மணி  ராவுக்கு வந்துச்  சேந்தாங்க  மாப்ளைங்க. சோறு  தண்ணி  குடிக்கிறியான்னு  ஒருத்தருங் கேக்கல.உஸ்ஸ்ஸ் அப்பாடான்னு   டேசிக்குள்ள  போயி ஒக்காந்தான் ராசப்பன் .


இன்ன  அலங்காரம்    வெய்க்கலாமுன்னு ஒரு  முடுவா தீருக்கட  பண்டமுடியாம ஊருக்கறவத்தானுங்க அத வெய்க்கிலாமா இத  வெய்க்கிலாமான்னு   தடுமாறி  அல்லாட்டம்  போட்டுக்கிட்டிருந்தாங்க.செட்டு  மொகாமி  மத்தாளக்கார நடராசனும் விடியறமுட்டும் கூட்டம்  கலையாம இருக்க  என்னா ஆட்டம்  வெச்சா  எடுக்குமுன்னு சுதி கூட்னவாக்குல யோசனப்பண்டிக்கிட்டிருக்க  ராசப்பன் கண்ணாடிய சுத்தஞ்செஞ்சி  வேசப்பொட்டிக்கி முட்டுக்குடுத்து  முத்து  வெள்ளையக் கொழப்பி மூஞ்சியில  அப்புனான் .

கிணி கிணியின்னு போனு அடிக்கிது .

அவுதி பவுதியா  கையத்தொடச்சி  அதயெடுத்து

அலோ  அலோ -ன்னு  வெற எடுத்தப்பன்னியாட்டம்   கத்தறான் .


சுதிக் கூட்டறத  வுட்டுட்டு  இவம் போட்ட  ரவுசுல அண்ணாந்து  மொறச்ச  நடராசி  ஆரவல்லிச்சண்ட  வெச்சிக்கிலாமுன்னுச் சொல்ல  ஊராரு  ஒத்துக்கிட்டாங்க .



அடிக்கொருக்க  அடிக்கொருக்க ஓயாம  சில்லுபோனு வுடாம  அடிக்க கோமாளி  எடுத்து

- அலோ ஆராயா அதுன்னு  - கேக்க

-நாந்தா -ங்குதுவொரு பொம்பள  கொரலு .

-நாந்தான்னா -

-அட நாந்தாங் கோணையா -

-ஆரு ஒண்ணும் நெட்டுச்  சிக்கலியே -

-ஏம்மாப்ள எத்தனாடங்  கூப்படறது ? காதுல  ஈயமா காச்சி  ஊத்தி  வெச்சிருக்குது -

-ஆராயிருந்தாலுஞ்  சேரி .வேசம்  போடணும்.பேச  நேரமில்ல பொறைக்கி நாளைக்கி  பேசலாம் -

-ஓகோ அவ்ளத்தூரம் ஆயீப்போச்சா.நானு  ஆட்டம்  பாக்க வந்தன். இப்பிடியே  திலும்பி  போறன்.வூட்டுப்பக்கம்  வா - கால  திருவுலு போட்டுப்  படுத்துக்கறன்-

-ஆரு பிள்ள  செலம்பாயீ ! எப்ப  வந்த ? ஆரு ஆரு வந்தீங்க ?இப்பத்தான் சமாச்சாரம்  தெரிஞ்சிதா ?எங்க இருக்கற ? எவத்த  இருக்குற ? அங்கியே  இரு  வாறன் -

துண்டெடுத்து  முக்காடுப்போட்டுக்கிட்டு  மூத்தரம்  பேய போறவனாட்டம்  பட்டிப்படல  ஒங்கிரிச்சி வுட்டுட்டு வேக்கு  வேக்குன்னு சவுனிப்பக்கம் துடியா  தடம்  புடிச்சான் .

அந்த  ஒணத்திக்கெட்டவனுக்கு  இன்ன ஆளு  இவத்திக்கித்தான் இருக்குதுன்னு  ஒண்ணும் துப்பு  கண்டுப்புடிக்க  முடியல .பழுப்பு  சாரி  பட்டுகிச்சின்னு  சும்மா ஆவு ஆவுன்னுப் பறக்கறான்.  அலமோதறான் . சவுனிய  எடம்புரி  வலம்புரிச்  சுத்தறாஞ் சொழமாடறாங்   கவடத்து . நேரம் போனதே தெரியல .கோமாளி  வேசம் வர  நேரமாச்சே  இன்னுங்  காணமேன்னு தெரைய வெலக்கி  டேசிக்குள்றப்  பாத்தா  ஆளு  எங்கிருப்பான் .கூத்தியா  போணங்கிக்கிட்டு பூந்தடிச்சிப்போயிருவான்னு     சவுனிய  வுட்டு  அந்தாண்ட  பனஞ்சாரிய  வுட்டு கள்ளிப்போத ஒருக்கடையா  தேடித்  தொளாவுறாம்பா.

நடராசிக்கு  ஆத்ரந் தாக்குப்புடிக்க  முடியல . பின்னென்னாப்பின்ன சனத்த அதக்க அவனுந்தான் என்னமுட்டும் கிடீர் கடீர்னு சத்நக்கூட்டி மத்தாளத்த சொமறுவான்?  மூணு  செல்லு  பேட்ரிய கைலெடுத்துப்புடிச்சிக்கிட்டு ராமகறவத்தான  தேடி  பொறப்பட்டான் இருட்டுல .

-அங்க  எங்கடா  செத்தைய  முழுங்கி  கண்ணத்தின்னுப்புட்டு போற? நானு  இங்க  இருக்கறன்-

-இங்கன்னா  எங்கப்பிள்ள -    

-அட இங்கதாம்பாரு-

-அட  எங்கப்பிள்ள -

-நொள்ளையா சவுனிக்கி  மேக்க பாரு -

-தெரியலியே -

-என்னா தெரியலியே  இப்ப  பாரு  முன்ன வந்துட்டன் -

-ஐயோ  தெரியலப்பிள்ள  எவத்திருக்கற ?-

புழுதிக்காட்ல  வடக்க தெக்க கெழக்க மேக்க  வண்டியோட்டிக்கிட் டிருந்த ராசப்பன  பாத்து மத்தாளக்காரன் அங்கம்  அறுவத்தி  நாளும் பத்தி எரிஞ்சது .

-யோவ்  மச்சான் வேசமெழுதி வெளிய வருவன்னு  பாத்தா ...இங்கென்னய்யா  பண்ற ?வாய்யா இப்படி - ன்னு

கழுத்துக்கு  கைப்போட்டு இழுத்துக்கிட்டு வரவும் நல்லூரு  சேகரு அவங்கிட்ட வந்து

-இதா  ஏம்பேசல?  அட  ஏம்பேசல? கோவிச்சிக்காத. இன்னிக்கி  வேண்டாம்  மாமா! ஞாயித்தன்னைக்கி  கறி எடுத்து  தின்னுட்டு  இன்னுக்கலாம் மாமா -ன்னு கூத்தியா நாயம் பேச கோமாளி  நவண்டைய கடிச்சிக்கிட்டு  அவன அடிக்க  கைநோங்கிக்கிட்டுத் தொரத்த   கூத்தாடிங்க  பூராப்பேரும்  கொல்லுன்னுச்  சிரிச்சாங்க .
 






ஆட்டமாடி  சோக்கா பாட்டுப்பாடி

அழகான கோமாளி  வந்தாரய்யா

நாட்டுக்கு  சேவைச் செய்ய

நாகரீக  கோமாளி  வந்தாரய்யா

ஊருக்கு  சேவைச்  செய்ய

உத்தமங் கோமாளி  வந்தாரய்யா

வந்தாரய்யா பெருமாள்  வந்தாரய்யா

அந்த  வடமலை ரங்கநாதர்  வந்தாரய்யா

மோட்டார  விட்டிறங்கி  வந்தாரய்யா

முங்குடுமி  வெச்சிக்கிட்டு  நின்னாரய்யா

நின்னாரய்யா  பெருமாள்  நின்னாரய்யா

அந்த நீலகிரி  பர்வதம்போல்  நின்னாரய்யா

கச்சைக்கட்டி  ஒட்டியாணம்  காலில  சலங்கயாம்

கரியபெருமாளாம் கோமாளியப்  பாருங்க

காட்டு  தொளசிய  வெட்டுவாராம் பெருமாள்

கருணா  கருணையா  கத்தரிப்பார்  மாயவர்

கோர்த்து  கழுத்துல போடுவாராம்

கோவிந்தம்  போடச்சொல்லி  ஆடுவாராம்

வந்தனமய்யா  வந்தனம்  வந்த சனமெல்லாம்  குந்தனம்

சந்தனத்த  பூசிக்கொள்ளுங்க எஞ் சபையோர்களே

சந்தோசமா  பாட்டக்கேளுங்க

கோமாளி வேசம்  சவைக்கி வரும்போது மணி  பதனொன்னு அதும்போறவு  ஆரவல்லி  வேசம்  வர இன்னும்  நேரமாச்சி .


-யாரிங்கே -

-நானிங்கே-

-வாடா  இப்படி-

-வந்தேன் -

-என்னைக்கண்டால்  சற்றேனும்  பயமென்பது  கிடையாது-

-ஐயோ  அப்படி இல்லைங்க  மகா ராணி  உங்கள  கண்டாவே  நடுக்குலு எடுக்குதுங்க-

-என்னிடத்தில்  எக்கச்சக்கம்  ஏடாகூடம்  வைத்துக்கொண்டால் உன்  சிரத்தையறுத்து காக்கைக்கு  விருந்தாக்கி  விடுவேன்-

-மகாராணி  கண்ணு மயிரூண்டு  தப்பு  வராதுங்க-

-எத்தன  மணிக்கடா  கூத்துக்கு  வரச்சொன்னார்கள்-

-ஏனுங்க  - நேரமா வரச்சொன்னாங்க-

-நேரமா  வந்தாயா-

-இல்லீங் -

-வராம பத்துபேர  காக்க வெச்சிட்டு  எங்கடா  பச்ச  பேப்பரு  பொறுக்க போன ?-

மகா  ராணி தப்பா  நெனைக்கப்படாது  முக்கிலியமான சோலியா  போய்ட்டனங்க-

-ராசாங்க  காரியத்த வுட்டுட்டு  அப்படி  என்னடா  முக்கியமான  சோலி?


-மகாராணியம்மா  நேத்துக்கூத்துல  கறிக்கோழி  ஏலம் எடுத்தனுங்க. வூட்ல  ஒரேச்  சனக்காடு .ஒரே குஞ்சான  குஞ்சி பொழுதே  எறங்க  மட்டும்  வூட்ட வுட்டு அந்தண்டத் தாண்டலீங்க பொறவு  அசலூரு  சொந்தக்காரஞ்ச் செத்துப்போய்ட்டான்னு ஆளுவுட்டு தகோலுச்  சொல்லி அல்லாத்தையுந் தாட்டிவுட்டுட்டு  கறியாக்கி களி கிண்டி திங்க  நேரமாவிட்டுதுங்க . முழுகோழி  மூன்றப்படி  கறி- நாலு உண்ட  களி நானே தின்னங்க .

அதென்றான்னா மேச்சேரி  வரங்காட்டியும் அடி  புடிங்கிட்டுது. சின்ன எலும்பு  தொச்சமில்ல முச்சூடும் வந்துட்டது .கெவுருமெண்டு கக்கூசுன்னு  அவசரத்துக்கு  உள்ள  போனனுங்க .காசு கேட்டாங்க   இல்லைன்னேன்- கக்கூசு கழுவப்  போட்டுட்டாங்க .

ஆளே வரல  நாம்போறமின்னு கேட்டா .. வந்தா  கழுவ  ஆளு  வேணுமுன்னு புடிச்சி வெச்சிக்கிட்டாங்க மகாராணி -

-அட  அட  டேய் இதெல்லாம்  ஒரு பழமையின்னு சவையில வந்து  சொல்றியே  உனக்கு  ஈனப்பானங்கறது ஒரே இம்மியாச்சியுமிருக்குதா ?-

-ச்சட்டீர்  ச்சட்டீர் -

-வந்தது  வந்த இவ்ள ரேட்டுக்கழிச்சி படார்ன்னு  ஒக்காந்து மளார்ன்னு  வேசங்கட்டி வெளிய  வராம   வயசுப்பையனாட்டம் உனக்கென்றா  சில்போனு ?-

 -ச்சட்டீர்  ச்சட்டீர் -

ஆரு பேசறாங்க?  எவுரு பேசறாங்க ?பொம்பள  பேசுதா ? ஆம்பள  பேசுதா?-  ன்னு  நெதானம் இல்லாம போனத்   தூக்கிக்கிட்டு போட்ட  பவுடர  தொடைச்சிப்புட்டு  அவுத்துட்ட கழுதையாட்டந்    திரியற ? பொண்டுங்க  பொறன போவியா?  போவியா ?


 -ச்சட்டீர்  ச்சட்டீர் -

-அம்மா  ராணியம்மா!  என்னைய   வெட்டுங்க !  குத்துங்க!  கொல்லுங்க! ஆனாவொரு  விண்ணப்பம்  நானு  சோறில்லாம  கெடந்தாலுங்  கெடப்பன்  ஆனா  ஓழு இல்லாம இருக்கமாண்டேன் -

  -அட  அட  டேய் !

ச்சட்டீர்  ச்சட்டீர் -
-





-பொண்டாட்டி  இல்லாதவஞ்  சந்தையிலகண்டாரவோளி    கண்டாரவோளின்னானாம்.ஏண்டா கோமாளிதாசா வெறும்பீத்துலு பீத்தர? நீயொரு  சூரப்புலியின்னா  வுங்கூட்டுக்காரி ஏண்டா  குருசாமி  வாத்தியார கூட்டிக்கிட்டு  ஓடிப்போவுனும் -

பொட்டிக்காரந் தொரையன்  பொறனயிருந்து  கேக்க

-அட  அட  டேய் ! என்னடா  சொல்கிறாய்  முன்னே  வந்துச்  சொல்லடா -

-அய்யயோ  நானொன்னுஞ்  சொல்லலீங்    ராணியம்மா-

-சொன்னதைச்சொல்லடா  சுனைக்கெட்ட மூடா -

 குடுமிய  புடிச்சி  இழுத்துக்கொண்டி  நடுசபையில வுட்டான் . ஆரவல்லி  வேசக்காரன் .

ச்சட்டீர்  ச்சட்டீர் -

ராணியம்மா  இந்த  தெள்ளவாரி கூத்தாடிப்புட்டு  வூடு  அண்டாம ஊரு  ஊரா எச்சில  பொறுக்கிக்கிட்டு திரிஞ்சது. பாக்கறவரைக்கும் பாத்துட்டு  அவ  செட்டு  வாத்தியாரோட ஓட்டம்  புடிச்சுட்டுட்டா  ஒமலூரு காமலாபுரம்.
-
-பெண்டை வைத்து  ஆளத்தெரியாத  பேதமதியா இவன் ?-

-ஆமாங்க  மகாராணி ! பத்துப்பொண்டாட்டி கட்டனாலும்  தரித்தினியம்  புடிச்சவனுக்கு  படுக்க  பொண்டாட்டி  இல்லீங் -

ச்சட்டீர்  ச்சட்டீர் -

பொறவு  வுழுந்த அடியெல்லாம் கோமாளிதாசன் உசுருமேல தான் வுழுந்தது.
-





 .


   

கருத்துகள் இல்லை: