tag:blogger.com,1999:blog-8912724824161270462024-03-05T05:55:26.302-08:00மணல் வீடுmanalveeduhttp://www.blogger.com/profile/11701810894595985945noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-891272482416127046.post-30729397143247542872016-02-27T22:26:00.000-08:002016-02-27T22:26:19.577-08:00ச்சட்டீர்........ச்சட்டீர் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ச்சட்டீர்........ச்சட்டீர்<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiDDHPt8WMGiAYrTWK_Q9XVFDnDTwsHrMweP79J3EA9nj40PZW9QyHbLYDLj_WvDq3NLNZNpZBEgqZDoRQQyaJZCsoAUGabCtg1toMQS0yA0njvYUeLeHfQCC7dYD9EWZccF7VvpVJcjYN2/s1600/download.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="216" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiDDHPt8WMGiAYrTWK_Q9XVFDnDTwsHrMweP79J3EA9nj40PZW9QyHbLYDLj_WvDq3NLNZNpZBEgqZDoRQQyaJZCsoAUGabCtg1toMQS0yA0njvYUeLeHfQCC7dYD9EWZccF7VvpVJcjYN2/s320/download.png" width="320" /></a></div>
<br />
<br />
<br />
மாடு வாய்க்குமாம் மவராசனக்கு .பொண்டு வாய்க்குமாம் புண்ணியவானுக்கு .செட்டுக்கு ஆளுங்க நேர்றது அவ்ளச் சிலேட்டமில்ல. ரெட்டியாரும்,பரமசிவனும் ,ராசாக்கவுண்டனும்,செல்வராசியுங்கூட நல்லூரு கருவாயஞ் சேகரும் வந்து எடஞ் சேந்துருக்கறாங்க.இந்த சீசனு தேவல. நடுத்தரம். தையில இருவது ராத்திரி மாசியில பத்து ராத்திரி ஒட்டியிருக்குது .ரண்டு வருசமா செட்டு இல்லாம பெறத்தியாருக்கு ஒழச்சி சல்லிக்காசு மிச்சமில்ல.சொந்த செட்டுன்னா சாமானஞ் சட்டு படுதா ,பொட்டி மத்தாள வாடவ, பூசபணம் வெத்தலப்பாக்குப் பணமின்னும் இனாம் வர்ற சொணையான்னும் சம்பளத்துக்கும் மேல வரும்பிடி ஆயிரம் ரெண்டாயிரம் தேறும் .<br />
<br />
சீட்டு நாட்டு போட்டு சேத்தி வெய்க்கலாம்.பின்னியும் இப்ப ஆளுங்க மிம்பணம் கேக்கப் பழவிக்கிட்டாங்க . நீட்டிச் சுருக்கனா நெடும் பக . வருச கண்ட மாப்ளைங்க வந்து வந்து நிக்கறாங்க.ஆளும்பேர்ல பவ்வத்து ஆயிரம் அவுக்கும்பிடி சிரிச்ச மூஞ்சியாத் திரியறாங்க வான்னா வராங்க , போன்னாப் போறாங்க. பொறுப்பா கருதிப்புடிச்சி தொழுவாடு நடக்குது .<br />
<br />
இன்னைக்கு கூத்து கெடையூரு மட்டம்பட்டி.எஸ். அஞ்சில எடப்பாடி வந்து, வெள்ளண்டி வலச தாட்டி வீரப்பம்பாளையம் வந்து சங்கரி ரோட்டுல வவானி பைபாசுக்கு முந்தி கவண்டமூட்டு கல்யாணமண்டபத்து முக்குல சோத்தாங்கை பக்கம் திலும்புனா அவத்திக்கி யெட்டிபுடிச்சாப்ல மட்டம்பட்டி .<br />
அண்ணாமல மொகாமியிலதான் கூத்து . சாயிண்டு கூத்துன்னும் தெரியல. அந்தாளுக்கிட்ட என்னாவொரு சங்கடமின்னா தனிச் சம்பளத்துக்குப் பேசியாச்சும் ஆளு எச்சா வெச்சிக் கூத்தாடணும். மொகமான வெத்தல முன்ன இருக்கணும் .<br />
<br />
ஆளு வரச்சொல்றத பத்தி இல்ல . நம்ப கைக்காசியா நட்டம் .அஞ்சாறு ஆளுக்கூட வரச்சொல்லலாம்.வர்ரவிங்க வந்தா குடுத்த வேசத்தப் போட்டாடிப்புட்டு கோளாறு பண்டாமப் போயிட்டா தும்பமில்ல. அய்யோன்னப்பாவம் கையோட வருது.போனப்பூட்டுக்கு சாயிண்டு கூத்தொண்ணுக்கு செட்டிபட்டி சின்னாளையும் , கொம்பாடிப்பட்டி ராசிப்பையனையும் கூட்டியாரனமுன்னு ஒரே அடவாதம் புடிச்சி ஆளுமேல ஆயிரம் உரூவா மொன முறியாம குடுத்துக் கூட்டியாந்தாங்க. கெந்துருவ பருவதம் வச்சிருந்தம். கூத்தென்னமோ எத்தாதான் இருந்துச்சி.சின்னாளு வெளிய வந்து தர்ப்பார முடிச்சிக்கிட்டு சுபத்ரா சந்திப்புக்கட்டம் வந்ததும் ராசிப்பையன் வழமொறையா பாதம் பணிஞ்சி -<br />
<br />
<br />
-ஆனக்குந்தி பட்டணத்து அரமண அந்தப்புரத்துல சிலான தாதிமார்களோட சிரிச்சி பேசி சொக்கட்டான் வெளையாடிக்கிட்டு இருந்தேன்.இந்த ராஜ கொலு மண்டபத்துக்கு என்னைய கூப்புட்டு இருக்கறீங்களே யென்னா சாமி சமாச்சார-மின்னு<br />
<br />
ரெண்டடி பாட்டுப்பாடி நாலடி வசனமா கேட்டதுதான் தொச்சம் . <br />
சின்னாளு ஆ - ன்னு அவன வாய்ப் பேசறதுக்கில்லாம<br />
<br />
-தேவி நான் உரைக்கும் பரியந்தம் நீயுந்தன் வாயை திறக்கப்படாது-ன்னு<br />
<br />
இவரே பேசிக்கிட்டு இருந்தாரு.ஒருமாறு பொழுதும் ஒரே ஆளு எவ்ள பேசுவ ? சந்து வுடணுமில்ல.ராசிப்பையன் இதுதாஞ் சாக்குன்னு அரா சிவாங்கல.கம்முனே நின்னுக்கிட்டிருந்தான்.அவரு பேசறமுட்டும் பேசிப்புட்டு<br />
-பார்ரா கழுத வண்ணான் என்னைய பாணி பண்றான் - <br />
பார்ரா கழுத வண்ணான் என்னைய பாணி பண்றான்- ன்னு<br />
<br />
ஒடனதும் பொண்ணு வேஷக்காரன,<br />
<br />
-ஏன் தேவி பேசல<br />
ஏன் தேவி பேசல<br />
அடி ஏண்டி பேசல கிளிக்குஞ்சி -ன்னு புடிச்சி உலுக்க<br />
<br />
அட ராசிபையன் இந்தாள தர தரன்னு இழுத்துக்கிட்டு மின் சபையில நிறுத்தி-<br />
<br />
-கேளுங்க மகா ஜனங்களே எம்பிருசன் தாஞ் சொல்றவரைக்கும் வாயே பேசப்படாதுன்னு தானே சொல்லிப்புட்டு இப்ப<br />
-ஏண்டி பேசல<br />
-ஏண்டி பேசலன்னா நானு வாயில பேசாம எங்கூதியிலியா பேசட்டும்?- மின்னு கேக்க<br />
<br />
ஒரே ரசாப்பாசமா போச்சி .<br />
<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg2QQLYIkGS6rY9niBTTZfIsJXpe7eUncUX5km7UuWXGqLBxN9sotFHykROHldvDFK352vXrGk_-0MdjmuTlekMiB2X_e7L_TtNAv1jINcJXCWrHJrYEXt7IHwZCtL714qbDLa9N0bDnaeG/s1600/images+%252862%2529.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg2QQLYIkGS6rY9niBTTZfIsJXpe7eUncUX5km7UuWXGqLBxN9sotFHykROHldvDFK352vXrGk_-0MdjmuTlekMiB2X_e7L_TtNAv1jINcJXCWrHJrYEXt7IHwZCtL714qbDLa9N0bDnaeG/s1600/images+%252862%2529.jpg" /></a></div>
<br />
<br />
<br />
<br />
<br />
இதோடவா?<br />
<br />
நெருப்பூரு நாகமரையில வஸ்திர பங்கம் கூத்து எச்சாளு ரண்டுப்பேர கூட்டியாரச்சொன்னாங்க.பாஞ்சாலி வேசத்துக்கு ராசிப்பையனையும் துச்சாதனன் வேசத்துக்கு சூளமேட்டு காவேரியும் வர சொல்லியாச்சி. துரியோதனமூடு தர்பாரு ஆனாங்க.பஞ்ச பாண்டவரு தர்ப்பாரு ஆனாங்க . ஆச்சி ராசிப்பையன் வேசமும் ஆச்சி .<br />
பக்கத்துல கோந்து துச்சாதனன் வேசக்காரம் மொகமெழுதி மீசக்கட்டி எந்திரிச்சி அம்புறேக்கு போட்டு கண்ணாடியப் பாத்தவன்<br />
-அண்ணா ராஜின்னா எப்பிடின்னா எம்பட வேசமின்னு ஒரு மெப்புதலைக்கி கேக்க -<br />
ராசிபையன்<br />
-இதென்னா வேசம் தங்கம்- மின்னு அவன வளைச்சி கேக்க<br />
<br />
-என்னாண்ண கிண்டுலு பண்ற ? வீரப்புலி துச்சாதனன் வேசந்தான்னா- ன்னு அந்த திருவாத்தாஞ் சொல்ல -<br />
<br />
-அப்படியா-<br />
-அப்படியா-<br />
- என்னமோப்பா உனக்கே நல்லாருந்தா சேரி - ன்னு<br />
<br />
சொல்லிப்புட்டு கண்ணாடிய பாத்து குமிஞ்சிக்கிட்டான் ராசிப்பையன்.<br />
பழிகாரன்கிட்ட பஞ்சாங்கம் கேட்டா அவன் மட்ட மத்தியானத்துல மரணமுன்னுதானேச் சொல்லுவான்.இவன் வழுதுப் பேசல.ச்சர ச்சரன்னு கட்ட நவய அவுத்து வெச்சிட்டு படல பிரிச்சிவுட்டு தெக்க போனவம் போனவனே .மறுக்க ஆத்ர அவசரத்துக்கு கூப்புட்டா ஆளே வரதில்ல .<br />
<br />
<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhs3TQ5EML95FGzuUuZAAgVY4DBiJi5urYYnS5KbT1bDxVe2xjgLWoEsZELQWGhbI5sfF5EuATphiqMXxAK76SFHguj_9lrDa13Ul6YBVR2YdPQDD1MOhPinZU3MA1JasfL6OtwyaGBt7cx/s1600/download+%252811%2529.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhs3TQ5EML95FGzuUuZAAgVY4DBiJi5urYYnS5KbT1bDxVe2xjgLWoEsZELQWGhbI5sfF5EuATphiqMXxAK76SFHguj_9lrDa13Ul6YBVR2YdPQDD1MOhPinZU3MA1JasfL6OtwyaGBt7cx/s1600/download+%252811%2529.jpg" /></a></div>
<br />
<br />
சுள்ளிமுள்ளூரூ பொனங்காட்டு மாரியாயிக்கு கூத்து. அரவங்கடப்பலி பெருங்கொண்ட சதுரு .செட்டிபட்டி சின்னபையனும் அவஞ்செட்டு சாரிவேசக்காரன் மதிபையனும் வெத்தலப்பாக்கு வாங்கி தண்ணிதாசனூர் கொக்கிபல்லனையும் அம்மாபேட்ட முட்டக்கண்ணனையும் ஆட்டத்துக்கு கூப்புட்டுருந்தாங்க .அவனவனுக்கு தகுதியான வேசங்கட்டி ஆடுங்கன்னு சொல்லி பாகம் பிரிச்சிருந்தா சங்களவம் இல்ல . மண்டகொழுப்பேறி தானுங்கற கெருவத்துல சின்னபையன்<br />
<br />
-டே ஆராடா கூத்தாடிங்களே அரவான் வேஷம் , உளுவி வேஷம் ரெண்டையும் போட்டு செலுத்தமாண்டீங்க. அத தள்ளிப்புட்டு மிச்சத்த போட்டாடுங்க -ஆயிரம் வேசக்காரனுங்க இருதாளும் இந்த கெழவனுக்கு டூட்டி குடுத்து ராவுடி பண்டராங்க-ன்னு<br />
<br />
சலிச்சிக்கிட்டு போயி கரக்கட்டு மேல தானும் மதியும் கூத்தியா நாயம் போட்டுக்கிட்டு படுத்தவிங்க அலுப்பத்து தூங்கறாங்க .எங்க கெடக்கறீங்க நாயிங்களேன்னு ஒருத்தரும் கண்டுக்கவே இல்ல.கெழக்க வெளுக்க கெனா கண்டு முழிச்ச செட்டிபட்டி ஒழு வாத்தியாரு டெசிக்கி போகாமயே மங்களம் பாடி சம்பளம் பிரிச்சான் கொக்கிப்பல்லன் .<br />
<br />
செட்டுப்பண்ணாடி தலமேல துண்டப்போட்டுக்கிட்டு வெறுங்கையோட ஊடு போனான் .<br />
<br />
என்னாதான் நேரமா பொறப்பட்டாலும் எடம் வந்துசேர நெடு நேரமாவிப்போவுது .இந்த கொழலுக்காரனும் கோமாளி வேசக்காரனும் வந்த பாட்ட காணம்.முக்குல குந்தி சலிச்சி டேசிக்கி வந்தா ஆளாளுக்குப் பேசறாங்க மணி ஒம்போதுக்கே கூத்து ஆரம்பிக்கலைன்னு .<br />
<br />
ஊட்டுக்கு ஓராளு பன்னண்டு பேரு தூளு வரிக்கப்போயி வந்த பொறவும் இந்த ரெண்டு கொலவாரிங்களும் காணல. பெருந்தனக்காரு,ஊரு மூப்பனெல்லாம் சும்மாயிருப்பானா இப்பிடித்தான் ரெண்டாளு தாவு வந்து சேரலைன்னா ......<br />
<br />
போனு மேல போனு போட்டா திருட்டு ஒக்காளவோளிங்க எடுத்து தொலையல.பேனுத்தலையமூட்டு தனபாலுக்கு தாக்கலச் சொல்லி மேச்சேரி பைட்டேன்டுல ஆளுங்க நடமாடறாங்களா-இல்ல விராந்தி கட கண்ட பக்கம் குடிச்சி குண்டி வெடிச்சிக் கெடக்கறாங்களான்னு பாக்கச் சொன்னம் மவராசன் ஆள கைப்புடியா புடிச்சி கொண்டாறன்.பூசப்போட்டு கூத்த ஆரம்பியிங்கன்னு சொன்னப்போறவுதான் மனசாறிச்சி.<br />
<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjwLVN89iZQTkFsjkXhGGMYbLKnKnM1eeN3rAKLHL4m_jkn3BZoitHUdWArLXSqFfQp8nEMcUejll9lA1hUiNg_2UhQhv1eFQLQumGsiY7s9quSbZ0B9_nric9sUOPdWK6EHfvFFzuo4SUY/s1600/c0268b1d82d3.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjwLVN89iZQTkFsjkXhGGMYbLKnKnM1eeN3rAKLHL4m_jkn3BZoitHUdWArLXSqFfQp8nEMcUejll9lA1hUiNg_2UhQhv1eFQLQumGsiY7s9quSbZ0B9_nric9sUOPdWK6EHfvFFzuo4SUY/s320/c0268b1d82d3.jpg" width="320" /></a></div>
<br />
<br />
இந்த கூறுக்கெட்ட கொசவங் கூத்து படிச்சப்ப மயில்ராவண வேசந்தாம் போடப் பழவுனான். அவிங்கப்பன் பெரிய கொழந்தையொரு அசகாயச்சூரன்.கட்டப்பொம்ம வீரப்பனவிக அப்பன் முட்டக்கண்ணனோடடெண்டுக்கூத்தாடிக்கிட்டுஏரியூரு சந்தப்பேட்டையில இருந்தாங் குடி .<br />
<br />
<br />
கூத்திருந்தா ஆச்சி . இல்ல ஊருப்பாட்டுக்கு போயி ஒண்ணு ரெண்டு வரும்பிடி வந்தா கால்வவுறு அரவவுறு கஞ்சி, எதுவுஞ் சிக்கலைன்னா போரு பைப்பு தண்ணி குடிச்சி கொலைய நனைச்சிக்குவாங்க .<br />
இப்பத்தான் சினிமா டி வீ அந்த நாளையில அதெல்லாமேது . உள்ளூரு பசங்க ஒரு செட்டு கூத்துப்பித்து புடிச்சதுங்க இவனோட கூத்துப்படிச்சி அவத்திக்கே ரெண்டாட்டம் ஆடனாங்க .<br />
ஆடன முசவக்கண்டு அக்கம் பக்கத்து ஊருக்காரும் இவிங்கள கூட்டிப்போயீ கம்புக்கும் ஆரியத்துக்கும் ஆடச் சொன்னாங்க. அப்படித்தான் செல்லமண்டி சித்தரப்பட்டி தாண்டி வத்துலுப்பட்டி ஒருக்கோடியா வருசக்கூத்து வந்து இவிங்க ஆடிக்கிட்டிருக்கும்பிடி வத்துலுப்பட்டி பெரியத்தனக்காரமூட்டு பொம்பளயொருத்தி அடந்தடந்து ஆட்டம் பாக்க வந்துக்கிட்டிருந்தா .<br />
<br />
மொத நாளு தெக்கவொரு கடையா குந்தியிருந்தவ நாளுக்கு நாளு <br />
நவுந்து லைட்டுக்கம்பத்திண்டையே கோந்து கூத்து பாத்தா .கதா நாயகம் வேஷம் கண்ணுக்கு குளும.மாப்ளைக்கு தெனம் நோட்டுமாலச் சாத்துறா .<br />
ருசிக்கண்ட பூன உரியேறுமா ஏறாதா ?<br />
இந்த செத்தய முழுங்கி கோணயன்<br />
-உரூவா நோட்டுத்தாங் குத்துவியா இல்ல சோறு தண்ணி எதனாலும் ஊத்துவியான்னு - கேக்க<br />
அவளும் வேணும் வேணாங்க விருந்தே போடறன் வாடா சமுட்டி மொட்டான்னு ஊட்டுக்கே வர சொல்லிப்புட்டா.புலி மார்க்கம் சீவக்கா தூளு போட்டு தலைக்கி தண்ணி வாத்து ஒரு சித்திய ஆறவுட்டு ஆறன மசுத்துக்கு சம்பங்கி எண்ணத் தடவி கோணக்கெராப்பு சீவி மயிலுக்கண்ணு வேட்டிக்கட்டி அரக்குச் சொக்கா மாட்டி மீசைய முறுக்கி தொடைய த்தட்டி கூத்தியா வெய்க்கத் திலும்புனான் .<br />
<br />
வூட்டுக்குப் போனாரு பண்ணாடி .உபசரண சம்ரட்ன ஒண்ணுஞ் சொல்லிக்கிறதுக்கில்ல.பையன தரையில குந்தவுடல கூத்தியா.போனமாப் போன வேலயப்பாத்தமான்னு இல்லாமச் செய்யற வேலய வுட்டுட்டு செனையாட்டுக்கு மசுரு புடுங்கற மாதர அவக்கிட்ட வாயக்குடுத்து இவஞ் சூத்த புண்ணுப் பண்டிக்கிட்டான்.<br />
<br />
தின்னுக்கொளுத்தவன எச்சிப்பிரியத்துல அவங்கூத்தியா என்னான்னு கேக்கறா ..<br />
<br />
<br />
-அன்னாடம் பத்துப் பேரு சவையில ஆட்டம் ஆடறியே ராசாவூ இன்னிக்கி ஒருநா எனக்கோசரம் ஒராட்டம் புடியேஞ் சித்தங்கூறி -<br />
<br />
-பகலு வேஷம் போடப்பிடாதுன்னு அவன் மறிச்சி சொல்ல .உடாம அட்டிபிடிச்சி ஆட்டங்கட்றா. <br />
<br />
வேசப்பொட்டி துணி மணி இல்லைன்னு சுதாரிச்சா<br />
<br />
இருக்கறத வெச்சி கட்டுங்கறா.<br />
<br />
புஜகீர்த்திக்கி என்ன கட்டறதுன்னான்<br />
<br />
ரெண்டு கைக்கு ரெண்டு மொறத்த குடுத்தா .<br />
<br />
சிகரக்குச்சின்னான்<br />
<br />
அவ ஓரளுப்புட்டிய தலமேலக் கமுத்துனா .<br />
<br />
மார்ப்பதக்கமின்னான் -நாலு பிரமனயக்கோர்த்து இடுப்பாரம் தொங்கவுட்டா .<br />
<br />
மயிலுத்தோகைன்னு கேக்க ஊடு கூட்ற ஈச்சவௌக்குமாத்த முதுகுப்பக்கம் சொருவிவுட்டா .<br />
<br />
அவ்வளதான் அலங்காரத்தப்பாக்க ரெண்டு கண்ணுப்பத்தல.<br />
<br />
<br />
இந்தக்கத இப்படியோட கூத்தியாருப்புருசன் ஊருப்பெரியத்தனக்காரன் மத்தியான சோறுங்க வூட்டுக்கு வந்துட்டான்.அப்பறம் பாத்துக்க கூத்து கொண்டயம் ஏறிட்டுது .<br />
<br />
இரும்பு பூணு போட்ட ஓலக்கையில கூத்தாடி மாப்ளைய கணுவு கணுவா வூணனா....அட அட கதவடியிலச் சிக்குன பெருச்சாளியாட்டம் கத்தி பப்பாரி எந்தப்பக்கம் அவம் முட்டறதுக்கும் எசவில்ல. வாசக்காலுப்பக்கம் முட்னா கதவு அறிகாலு ரெண்டுப்பக்கத்து மொறத்த தடுக்க குப்புற வுழுந்தவன் இடுப்பக்கட்டி சேங்கி சேங்கி ரெண்டூனு வூணனாம்பா.<br />
<br />
ஓரம் இழுத்துக்கிட்டு போயி இவுனுக்கு ஒருப்பக்க நடையாச்சி .பொறவு கொண்டக்கட்டு வேசமாவுது குத்தடவு ஆவுது !<br />
<br />
வவு நாளா நெண்டிக்கிட்டு திரிஞ்ச மொண்டி கட்டங் கடசியா கோமாளி வேஷம் போட்டு வவுத்த வளக்குது.<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgVtWss5OqkDbC6xjrIYFZ6aeJMASFlo09FoLRbMJf2BmXzlqJnw_YCdUQf9b2-MTT_cfQgYIiKBeLttr3fBCI2TScqfCFqHZga88SQsnukR0_Dm6Hff8iJo2YcIXOUYb3LtQSrgj-EgxVH/s1600/yem+thaayoru+vesai.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgVtWss5OqkDbC6xjrIYFZ6aeJMASFlo09FoLRbMJf2BmXzlqJnw_YCdUQf9b2-MTT_cfQgYIiKBeLttr3fBCI2TScqfCFqHZga88SQsnukR0_Dm6Hff8iJo2YcIXOUYb3LtQSrgj-EgxVH/s320/yem+thaayoru+vesai.jpg" width="208" /></a></div>
<br />
<br />
<br />
<br />
பத்து மணி ராவுக்கு வந்துச் சேந்தாங்க மாப்ளைங்க. சோறு தண்ணி குடிக்கிறியான்னு ஒருத்தருங் கேக்கல.உஸ்ஸ்ஸ் அப்பாடான்னு டேசிக்குள்ள போயி ஒக்காந்தான் ராசப்பன் .<br />
<br />
<br />
இன்ன அலங்காரம் வெய்க்கலாமுன்னு ஒரு முடுவா தீருக்கட பண்டமுடியாம ஊருக்கறவத்தானுங்க அத வெய்க்கிலாமா இத வெய்க்கிலாமான்னு தடுமாறி அல்லாட்டம் போட்டுக்கிட்டிருந்தாங்க.செட்டு மொகாமி மத்தாளக்கார நடராசனும் விடியறமுட்டும் கூட்டம் கலையாம இருக்க என்னா ஆட்டம் வெச்சா எடுக்குமுன்னு சுதி கூட்னவாக்குல யோசனப்பண்டிக்கிட்டிருக்க ராசப்பன் கண்ணாடிய சுத்தஞ்செஞ்சி வேசப்பொட்டிக்கி முட்டுக்குடுத்து முத்து வெள்ளையக் கொழப்பி மூஞ்சியில அப்புனான் .<br />
<br />
கிணி கிணியின்னு போனு அடிக்கிது .<br />
<br />
அவுதி பவுதியா கையத்தொடச்சி அதயெடுத்து<br />
<br />
அலோ அலோ -ன்னு வெற எடுத்தப்பன்னியாட்டம் கத்தறான் .<br />
<br />
<br />
சுதிக் கூட்டறத வுட்டுட்டு இவம் போட்ட ரவுசுல அண்ணாந்து மொறச்ச நடராசி ஆரவல்லிச்சண்ட வெச்சிக்கிலாமுன்னுச் சொல்ல ஊராரு ஒத்துக்கிட்டாங்க .<br />
<br />
<br />
<br />
அடிக்கொருக்க அடிக்கொருக்க ஓயாம சில்லுபோனு வுடாம அடிக்க கோமாளி எடுத்து<br />
<br />
- அலோ ஆராயா அதுன்னு - கேக்க<br />
<br />
-நாந்தா -ங்குதுவொரு பொம்பள கொரலு .<br />
<br />
-நாந்தான்னா -<br />
<br />
-அட நாந்தாங் கோணையா -<br />
<br />
-ஆரு ஒண்ணும் நெட்டுச் சிக்கலியே -<br />
<br />
-ஏம்மாப்ள எத்தனாடங் கூப்படறது ? காதுல ஈயமா காச்சி ஊத்தி வெச்சிருக்குது -<br />
<br />
-ஆராயிருந்தாலுஞ் சேரி .வேசம் போடணும்.பேச நேரமில்ல பொறைக்கி நாளைக்கி பேசலாம் -<br />
<br />
-ஓகோ அவ்ளத்தூரம் ஆயீப்போச்சா.நானு ஆட்டம் பாக்க வந்தன். இப்பிடியே திலும்பி போறன்.வூட்டுப்பக்கம் வா - கால திருவுலு போட்டுப் படுத்துக்கறன்-<br />
<br />
-ஆரு பிள்ள செலம்பாயீ ! எப்ப வந்த ? ஆரு ஆரு வந்தீங்க ?இப்பத்தான் சமாச்சாரம் தெரிஞ்சிதா ?எங்க இருக்கற ? எவத்த இருக்குற ? அங்கியே இரு வாறன் -<br />
<br />
துண்டெடுத்து முக்காடுப்போட்டுக்கிட்டு மூத்தரம் பேய போறவனாட்டம் பட்டிப்படல ஒங்கிரிச்சி வுட்டுட்டு வேக்கு வேக்குன்னு சவுனிப்பக்கம் துடியா தடம் புடிச்சான் .<br />
<br />
அந்த ஒணத்திக்கெட்டவனுக்கு இன்ன ஆளு இவத்திக்கித்தான் இருக்குதுன்னு ஒண்ணும் துப்பு கண்டுப்புடிக்க முடியல .பழுப்பு சாரி பட்டுகிச்சின்னு சும்மா ஆவு ஆவுன்னுப் பறக்கறான். அலமோதறான் . சவுனிய எடம்புரி வலம்புரிச் சுத்தறாஞ் சொழமாடறாங் கவடத்து . நேரம் போனதே தெரியல .கோமாளி வேசம் வர நேரமாச்சே இன்னுங் காணமேன்னு தெரைய வெலக்கி டேசிக்குள்றப் பாத்தா ஆளு எங்கிருப்பான் .கூத்தியா போணங்கிக்கிட்டு பூந்தடிச்சிப்போயிருவான்னு சவுனிய வுட்டு அந்தாண்ட பனஞ்சாரிய வுட்டு கள்ளிப்போத ஒருக்கடையா தேடித் தொளாவுறாம்பா.<br />
<br />
நடராசிக்கு ஆத்ரந் தாக்குப்புடிக்க முடியல . பின்னென்னாப்பின்ன சனத்த அதக்க அவனுந்தான் என்னமுட்டும் கிடீர் கடீர்னு சத்நக்கூட்டி மத்தாளத்த சொமறுவான்? மூணு செல்லு பேட்ரிய கைலெடுத்துப்புடிச்சிக்கிட்டு ராமகறவத்தான தேடி பொறப்பட்டான் இருட்டுல .<br />
<br />
-அங்க எங்கடா செத்தைய முழுங்கி கண்ணத்தின்னுப்புட்டு போற? நானு இங்க இருக்கறன்-<br />
<br />
-இங்கன்னா எங்கப்பிள்ள - <br />
<br />
-அட இங்கதாம்பாரு-<br />
<br />
-அட எங்கப்பிள்ள -<br />
<br />
-நொள்ளையா சவுனிக்கி மேக்க பாரு -<br />
<br />
-தெரியலியே -<br />
<br />
-என்னா தெரியலியே இப்ப பாரு முன்ன வந்துட்டன் -<br />
<br />
-ஐயோ தெரியலப்பிள்ள எவத்திருக்கற ?-<br />
<br />
புழுதிக்காட்ல வடக்க தெக்க கெழக்க மேக்க வண்டியோட்டிக்கிட் டிருந்த ராசப்பன பாத்து மத்தாளக்காரன் அங்கம் அறுவத்தி நாளும் பத்தி எரிஞ்சது .<br />
<br />
-யோவ் மச்சான் வேசமெழுதி வெளிய வருவன்னு பாத்தா ...இங்கென்னய்யா பண்ற ?வாய்யா இப்படி - ன்னு<br />
<br />
கழுத்துக்கு கைப்போட்டு இழுத்துக்கிட்டு வரவும் நல்லூரு சேகரு அவங்கிட்ட வந்து<br />
<br />
-இதா ஏம்பேசல? அட ஏம்பேசல? கோவிச்சிக்காத. இன்னிக்கி வேண்டாம் மாமா! ஞாயித்தன்னைக்கி கறி எடுத்து தின்னுட்டு இன்னுக்கலாம் மாமா -ன்னு கூத்தியா நாயம் பேச கோமாளி நவண்டைய கடிச்சிக்கிட்டு அவன அடிக்க கைநோங்கிக்கிட்டுத் தொரத்த கூத்தாடிங்க பூராப்பேரும் கொல்லுன்னுச் சிரிச்சாங்க .<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjvIOXcI2_D417vCszSvhJ6wuxwugFWLXalMSFfhsjFfZw4vxgydQ4FiWH69smC75NANZqm4EOmOcG-SeFaiVHdM8q4qfOkKczoGLLnophenrd6rwkWxJeONZIfNrXkovvQBDYzdEcXEd5z/s1600/images+%252865%2529.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjvIOXcI2_D417vCszSvhJ6wuxwugFWLXalMSFfhsjFfZw4vxgydQ4FiWH69smC75NANZqm4EOmOcG-SeFaiVHdM8q4qfOkKczoGLLnophenrd6rwkWxJeONZIfNrXkovvQBDYzdEcXEd5z/s1600/images+%252865%2529.jpg" /></a></div>
<br />
<br />
ஆட்டமாடி சோக்கா பாட்டுப்பாடி<br />
<br />
அழகான கோமாளி வந்தாரய்யா<br />
<br />
நாட்டுக்கு சேவைச் செய்ய<br />
<br />
நாகரீக கோமாளி வந்தாரய்யா<br />
<br />
ஊருக்கு சேவைச் செய்ய<br />
<br />
உத்தமங் கோமாளி வந்தாரய்யா<br />
<br />
வந்தாரய்யா பெருமாள் வந்தாரய்யா<br />
<br />
அந்த வடமலை ரங்கநாதர் வந்தாரய்யா<br />
<br />
மோட்டார விட்டிறங்கி வந்தாரய்யா<br />
<br />
முங்குடுமி வெச்சிக்கிட்டு நின்னாரய்யா<br />
<br />
நின்னாரய்யா பெருமாள் நின்னாரய்யா<br />
<br />
அந்த நீலகிரி பர்வதம்போல் நின்னாரய்யா<br />
<br />
கச்சைக்கட்டி ஒட்டியாணம் காலில சலங்கயாம்<br />
<br />
கரியபெருமாளாம் கோமாளியப் பாருங்க<br />
<br />
காட்டு தொளசிய வெட்டுவாராம் பெருமாள்<br />
<br />
கருணா கருணையா கத்தரிப்பார் மாயவர் <br />
<br />
கோர்த்து கழுத்துல போடுவாராம்<br />
<br />
கோவிந்தம் போடச்சொல்லி ஆடுவாராம்<br />
<br />
வந்தனமய்யா வந்தனம் வந்த சனமெல்லாம் குந்தனம்<br />
<br />
சந்தனத்த பூசிக்கொள்ளுங்க எஞ் சபையோர்களே<br />
<br />
சந்தோசமா பாட்டக்கேளுங்க<br />
<br />
கோமாளி வேசம் சவைக்கி வரும்போது மணி பதனொன்னு அதும்போறவு ஆரவல்லி வேசம் வர இன்னும் நேரமாச்சி .<br />
<br />
<br />
-யாரிங்கே -<br />
<br />
-நானிங்கே-<br />
<br />
-வாடா இப்படி-<br />
<br />
-வந்தேன் -<br />
<br />
-என்னைக்கண்டால் சற்றேனும் பயமென்பது கிடையாது-<br />
<br />
-ஐயோ அப்படி இல்லைங்க மகா ராணி உங்கள கண்டாவே நடுக்குலு எடுக்குதுங்க-<br />
<br />
-என்னிடத்தில் எக்கச்சக்கம் ஏடாகூடம் வைத்துக்கொண்டால் உன் சிரத்தையறுத்து காக்கைக்கு விருந்தாக்கி விடுவேன்-<br />
<br />
-மகாராணி கண்ணு மயிரூண்டு தப்பு வராதுங்க-<br />
<br />
-எத்தன மணிக்கடா கூத்துக்கு வரச்சொன்னார்கள்-<br />
<br />
-ஏனுங்க - நேரமா வரச்சொன்னாங்க-<br />
<br />
-நேரமா வந்தாயா-<br />
<br />
-இல்லீங் -<br />
<br />
-வராம பத்துபேர காக்க வெச்சிட்டு எங்கடா பச்ச பேப்பரு பொறுக்க போன ?-<br />
<br />
மகா ராணி தப்பா நெனைக்கப்படாது முக்கிலியமான சோலியா போய்ட்டனங்க-<br />
<br />
-ராசாங்க காரியத்த வுட்டுட்டு அப்படி என்னடா முக்கியமான சோலி?<br />
<br />
<br />
-மகாராணியம்மா நேத்துக்கூத்துல கறிக்கோழி ஏலம் எடுத்தனுங்க. வூட்ல ஒரேச் சனக்காடு .ஒரே குஞ்சான குஞ்சி பொழுதே எறங்க மட்டும் வூட்ட வுட்டு அந்தண்டத் தாண்டலீங்க பொறவு அசலூரு சொந்தக்காரஞ்ச் செத்துப்போய்ட்டான்னு ஆளுவுட்டு தகோலுச் சொல்லி அல்லாத்தையுந் தாட்டிவுட்டுட்டு கறியாக்கி களி கிண்டி திங்க நேரமாவிட்டுதுங்க . முழுகோழி மூன்றப்படி கறி- நாலு உண்ட களி நானே தின்னங்க .<br />
<br />
அதென்றான்னா மேச்சேரி வரங்காட்டியும் அடி புடிங்கிட்டுது. சின்ன எலும்பு தொச்சமில்ல முச்சூடும் வந்துட்டது .கெவுருமெண்டு கக்கூசுன்னு அவசரத்துக்கு உள்ள போனனுங்க .காசு கேட்டாங்க இல்லைன்னேன்- கக்கூசு கழுவப் போட்டுட்டாங்க .<br />
<br />
ஆளே வரல நாம்போறமின்னு கேட்டா .. வந்தா கழுவ ஆளு வேணுமுன்னு புடிச்சி வெச்சிக்கிட்டாங்க மகாராணி -<br />
<br />
-அட அட டேய் இதெல்லாம் ஒரு பழமையின்னு சவையில வந்து சொல்றியே உனக்கு ஈனப்பானங்கறது ஒரே இம்மியாச்சியுமிருக்குதா ?-<br />
<br />
-ச்சட்டீர் ச்சட்டீர் -<br />
<br />
-வந்தது வந்த இவ்ள ரேட்டுக்கழிச்சி படார்ன்னு ஒக்காந்து மளார்ன்னு வேசங்கட்டி வெளிய வராம வயசுப்பையனாட்டம் உனக்கென்றா சில்போனு ?-<br />
<br />
-ச்சட்டீர் ச்சட்டீர் -<br />
<br />
ஆரு பேசறாங்க? எவுரு பேசறாங்க ?பொம்பள பேசுதா ? ஆம்பள பேசுதா?- ன்னு நெதானம் இல்லாம போனத் தூக்கிக்கிட்டு போட்ட பவுடர தொடைச்சிப்புட்டு அவுத்துட்ட கழுதையாட்டந் திரியற ? பொண்டுங்க பொறன போவியா? போவியா ?<br />
<br />
<br />
-ச்சட்டீர் ச்சட்டீர் -<br />
<br />
-அம்மா ராணியம்மா! என்னைய வெட்டுங்க ! குத்துங்க! கொல்லுங்க! ஆனாவொரு விண்ணப்பம் நானு சோறில்லாம கெடந்தாலுங் கெடப்பன் ஆனா ஓழு இல்லாம இருக்கமாண்டேன் -<br />
<br />
-அட அட டேய் !<br />
<br />
ச்சட்டீர் ச்சட்டீர் -<br />
-<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi0lAxjS9QwJiowwNGL7tJj2ps4HNYT08qdGf00YU1C7lnhUfJrRpHL6m0Kde3mpqhiehxqrDdc7rQzzW7QqXwPe1lkamyTA0pUNVld8H0dLMz8EOAS7ZVO3qNNeSjnDANwD9Yx-svR-mSi/s1600/artbig721.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi0lAxjS9QwJiowwNGL7tJj2ps4HNYT08qdGf00YU1C7lnhUfJrRpHL6m0Kde3mpqhiehxqrDdc7rQzzW7QqXwPe1lkamyTA0pUNVld8H0dLMz8EOAS7ZVO3qNNeSjnDANwD9Yx-svR-mSi/s320/artbig721.jpg" width="239" /></a></div>
<br />
<br />
<br />
<br />
-பொண்டாட்டி இல்லாதவஞ் சந்தையிலகண்டாரவோளி கண்டாரவோளின்னானாம்.ஏண்டா கோமாளிதாசா வெறும்பீத்துலு பீத்தர? நீயொரு சூரப்புலியின்னா வுங்கூட்டுக்காரி ஏண்டா குருசாமி வாத்தியார கூட்டிக்கிட்டு ஓடிப்போவுனும் -<br />
<br />
பொட்டிக்காரந் தொரையன் பொறனயிருந்து கேக்க <br />
<br />
-அட அட டேய் ! என்னடா சொல்கிறாய் முன்னே வந்துச் சொல்லடா -<br />
<br />
-அய்யயோ நானொன்னுஞ் சொல்லலீங் ராணியம்மா-<br />
<br />
-சொன்னதைச்சொல்லடா சுனைக்கெட்ட மூடா - <br />
<br />
குடுமிய புடிச்சி இழுத்துக்கொண்டி நடுசபையில வுட்டான் . ஆரவல்லி வேசக்காரன் .<br />
<br />
ச்சட்டீர் ச்சட்டீர் -<br />
<br />
ராணியம்மா இந்த தெள்ளவாரி கூத்தாடிப்புட்டு வூடு அண்டாம ஊரு ஊரா எச்சில பொறுக்கிக்கிட்டு திரிஞ்சது. பாக்கறவரைக்கும் பாத்துட்டு அவ செட்டு வாத்தியாரோட ஓட்டம் புடிச்சுட்டுட்டா ஒமலூரு காமலாபுரம்.<br />
-<br />
-பெண்டை வைத்து ஆளத்தெரியாத பேதமதியா இவன் ?-<br />
<br />
-ஆமாங்க மகாராணி ! பத்துப்பொண்டாட்டி கட்டனாலும் தரித்தினியம் புடிச்சவனுக்கு படுக்க பொண்டாட்டி இல்லீங் -<br />
<br />
ச்சட்டீர் ச்சட்டீர் -<br />
<br />
பொறவு வுழுந்த அடியெல்லாம் கோமாளிதாசன் உசுருமேல தான் வுழுந்தது.<br />
-<br />
<br />
<br />
<br />
<br />
<br />
.<br />
<br />
<br />
<br />
<div>
<br /></div>
</div>
manalveeduhttp://www.blogger.com/profile/11701810894595985945noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-891272482416127046.post-75863525454625306672015-10-03T00:22:00.001-07:002015-10-03T00:22:38.910-07:00தாய்க்கி பிள்ளையேதடாதண்ணி கெணத்துக்கு முறைமையேதடா சாரங்கதாரா!- கூத்துக்கலைஞர் -கொத்தாபாளையம் குருநாத வாத்தியார் -குறித்தொரு பதிவு.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;">சேலம் மாவட்டத்தில் பூரல்கோட்டை கருப்புசெட்டி என்றால் அழுதபிள்ளை வாய் மூடும்.வன்னிய சமூகத்தில் மாத்திரமல்ல,மற்ற இடைச்சாதியினர் மத்தியில் மேலதிக செல்வாக்கும், ஆதிக்கமும் பெற்றிருந்தவர்.கோனூர் பஞ்சாயத்தில் ஒரு குட்டி ராசாவாக கோலோச்சி வந்த அவர் வெள்ளைப் புரவி ஏறி ஊர் பவனி வருகையில் கைச்சொடுக்கும் சாட்டையொலி மக்களுக்கு அசீரிரி!.உதிர்க்குஞ் சொல் வேதவாக்கு!. மேச்சேரி பத்ரகாளியம்மன் கோயில் நிர்வாகப் பாத்தியதை சம்மந்தமாக நடைப்பெற்ற வழக்கொன்றில் அந்த ரணபத்ரகாளியே வந்து இவர்பட்சமாக சாட்சி சொன்னதாக பெருங்கதையாடல்கள் இங்குண்டு. </span><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjs8JhQr2H_iAg4qX-B6myqEqnjE0lRP7ozex-qZZRm4KFIa3XOsDxlG78yqIUIjalwJLrBIJy4bwP8KMEtnLgpYyg14hEJ9ad5pqqFDO_GR-sqCJZ0luZ_ALxXjOjALWiujTZCwDh-Fgp_/s1600/gurunaatha+vaaththiyaar.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjs8JhQr2H_iAg4qX-B6myqEqnjE0lRP7ozex-qZZRm4KFIa3XOsDxlG78yqIUIjalwJLrBIJy4bwP8KMEtnLgpYyg14hEJ9ad5pqqFDO_GR-sqCJZ0luZ_ALxXjOjALWiujTZCwDh-Fgp_/s320/gurunaatha+vaaththiyaar.jpg" width="320" /></a></div>
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"><br /></span>
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;">மனிதனின் எச்சிப்பால் குடித்து வளர்ந்தது தான் சாதியென்றாலும் அதனின்று இப்பூலகில் ஜனித்தவன் அவன் எப்பேர்ப்பட்ட கொம்பனாக இருக்கட்டுமே! தப்பித்தல் அரிது.இதற்கு கருப்பு செட்டியும் விதி விலக்கல்ல!( பெற்ற பாசத்தைவிட வளர்த்த பாசம் பெரிதல்லவா?) பூரல்கோட்டையில் பிறக்கப்பட்ட பறையன், சக்கிலி, குறவன் (அவர்கள் சின்னச்சாதிகள் என்றே இட்டு வழங்கப்படுகிறார்கள்)மட்டுமல்ல உடுத்தியிருக்கும் இடுப்புவேட்டி, கால்செருப்பு ,தலைமுண்டாசு,மொட்டைக் கோமணம் முதற்கொண்டு அவர் ஆக்கிணையை சிரமேற்கொண்டொழுக வேண்டும். அன்றேல் மண்மேல் மனுசன் சீவிப்பது யதேஷ்டம்!</span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"><br /></span>
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;">இப்படியாகத்தானே கருப்புசெட்டியின் ராஜ்யபரிபாலனத்திற்கு உட்பட்ட பள்ளிப்பட்டி வேடமாரியம்மன் கோவிலில் சோமாரக்கிழமை ஊர் பெருந்தனக்காரர்கள் கெவுளி வாக்கு கேட்டுச் சொல்ல, இறங்கு பொழுதில் அன்றைக்கெல்லாம் ஒருசிந்தியிருந்த ஊர்தோட்டி வட்டப்பாறையில் நின்று நோம்பிச்சாட்டை துடும்படித்து அறிக்கைச் செய்தால் சுற்றியுள்ள ஆண்டிக்கரை, தானம்பட்டி,மேட்டுத்தானம்பட்டி, கந்தனூர், சாவடியூர்,குள்ளமுடையானூர்,நரியனூர்,மல்லிகுந்தம், பூரல்கோட்டை,காலாண்டியூர், கரட்டுப்பட்டி உள்ளிட்ட பதினெட்டு கிராமங்களில் உள்ள மாரியம்மனுக்கு அந்தந்த ஊருக்குண்டான வழமொறை,வாமூல் என்னென்னவோ அந்தப்படியே நோம்பி சாட்டிவிடுவார்கள். </span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"><br /></span>
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"><br /></span>
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;">இந்தப்பிரகாரமாகத்தானே பூரல்கோட்டை மாரியம்மனுக்கு காதறுத்து* ,கம்பம் நட்டு*, கம்பளிக்கூத்தாடிச்* சாட்டிய பதினைந்து நாள் சாட்டுக்கு அன்றாடம் பனிரெண்டு வகை தாளத்திற்கு சாரிக்கு எவ்வேழுப்பேர், பதினாறு சாரியாக நின்று இளவட்டங்கள் ஆடும் மாரியாத்தா ஆட்டத்தில்(சேவாட்டம்) ஊரே அல்லோகலப்பட்டுக்கொண்டிருந்தது. பதிமூன்றாம் நாள் திங்கள் அம்மன் அழைப்பு, பதினான்காம் நாள் செவ்வாய் இராவிளக்கு, கடைசிநாள் புதன் பகல் விளக்கு, அந்தியில் அலகு குத்து,பூங்கரகம், அக்னி கரகத்தோடு வண்டிவேசம், குதிரை வேசம்,நரி வேசம், வாணவேடிக்கை என்று இந்த அமர்க்களம் போதாதென்று குருநாதவாத்தியாருக்கும் வெற்றிலைப்பாக்கு கொடுத்திருந்தார்கள் கூத்தாட. மூணேகால் உரூவா ஒத்திக்கு காந்த விளக்கை கொண்டுவரும் சேலத்துக்காரன் இன்னும் வந்துசேர்ந்திருக்கவில்லை. </span><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEixRKq-JwRsx2c_u6MhMrEnfXqFfhIGcfxNZREmlXj-JCLrevOsU3nGNQdDALnBjWXti6_f3UGITchMMi1tXQ8DE72oM9hJornaN0qiKYuAcBkzQhhoXN_FywOTx3yO0Ttv0gOdcE4Vxcfi/s1600/IMG_0060.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEixRKq-JwRsx2c_u6MhMrEnfXqFfhIGcfxNZREmlXj-JCLrevOsU3nGNQdDALnBjWXti6_f3UGITchMMi1tXQ8DE72oM9hJornaN0qiKYuAcBkzQhhoXN_FywOTx3yO0Ttv0gOdcE4Vxcfi/s320/IMG_0060.jpg" width="320" /></a></div>
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"><br /></span>
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"><br /></span>
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;">பார்க்கின்றவரைக்கும் பார்த்துவிட்டு கொடுவாள்முனையில் மேட்டூர் பழம் மல்லை சுற்றி பந்தம் முடைந்து சீமெண்ணையில் நனைத்து பற்ற வைத்து அதையிருவர் வாகாக பிடித்துக்கொண்டு நின்றிருந்தனர். அதிகாலையிலிருந்து அந்திவரை குடித்த ஒருமரக்கள்ளுக்கும் செலவுச்சாமான்கள் ஏதுமின்றி வெறும்குறுமிளகிட்டுப் பிரட்டிய வெள்ளாட்டுக்கறிக்கும் அமைந்த தோதில், இன்னும் துளி, இன்னும் துளியென ஒரம்பரை சரம்பரைகளை உற்றார் உறவினர் வஞ்சனையின்றி உபசரிக்க, அதில் நெகிழ்ந்து போய் நாலுவாய்ச்சோற்றினை எச்சாக உண்ட மயக்கத்தில் சனம் ஒருவிதமான கிறக்கத்துடனேதான் கூத்துப்பார்க்க காத்திருந்தார்கள்.</span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"><br /></span>
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;">பூசைப் போட்டாயிற்று, பொட்டி மத்தளத்தை வெளியே எடுத்து வைத்தாயிற்று, களரிக்கூட்டி கூத்தும் துவக்கமாயிற்று. பாத்திரங்களை பங்கு வைத்துப் பிரித்துக் கொடுத்தப்பின்பு வரிசைக்கூத்தாகயிருந்தால் குருநாதவாத்தியார் வேசங்கட்ட உக்காருவதற்கு முன்பு காற்றாட சற்றெங்காவது ஒதுக்குப்புறமாக துண்டை விரித்து கண் அயர்வது வழக்கம்.முந்தி தோன்றிய கோமாளி வேடதாரியும் உடன் தர்பாரான தலை வேடதாரியும் துருவதாளத்தில் ஆடிக்கொண்டிருக்க சபை அந்த ஆட்டத்தில் மெய்ம்மறந்து அமர்ந்திருந்தது. கூத்தாடிகளுக்கு ஆக்கிப்போடவா நான் தாலிக்கட்டி நீரு வைத்துக்கொண்டேன் என பெண்டாட்டிக்காரி பிணங்கிக்கொண்டுவிட்டதால் வந்திருந்த ஆட்டக்காரர்களை வீட்டிற்கு ஒருவராக சோத்துக்கு அனுப்பியதில் பந்தி விசாரிக்க முடியாமல் போயிற்று.</span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"><br /></span>
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;">அதும்போக ஊர் முகாமியாக தானிருக்க, உள்ளூரில் விசேசம் நடந்துக்கொண்டிருக்க கூத்தாடிகளுக்கு ஒரு நாலணாவோ, எட்டணாவோ எனாங்கொடுக்காமல், ஒரு வெற்றிலைப்பாக்கு பொகையிலை நறுக்கு வாங்கிக்கொடுக்காமல், கொட்டாங்குச்சியில் வார்த்துக்கொடுக்கும் டீத்தண்ணியோ, ஒரு சுக்குத்தண்ணியோ ஏற்பாடு பண்டாமல் இருந்துவிட்டால் இதுகாறும் செய்து வந்த பண்ணாட்டுத்தனத்திற்கு அதனாலொரு பின்னம் நேர்ந்துவிட்டால் எதைக்கொண்டு அதனை ஈடுக்கட்டுவது? கவுண்டா கவுண்டான்னா ஓய்ங்கிறான்! ஒராளுக்கு சோறுடான்னா ஊகூங்கறாண்டா இந்தூரு கவுண்டன்! என்று மணியக்காரர் வீட்டில் கை நனைத்துவிட்டு வருகையில் ஏவிடியம் பேசிய எடக்கு பிடித்த கூத்தாடியொருவன் அதை எத்தனை ஊரில் போய்ச்சொல்லுவானோ! என்ற விசனமும் சேர்ந்துகொள்ள, எதற்கும் ஓருப்பூட்டு எட்டி பார்த்துவிட்டு போகலாமென்ற கட்டாசாரத்தில் ஊர் மந்தைக்கு அவர் தனது சாரட்டுவண்டியை திருப்ப விளைந்தது வம்பு! முக்கியஸ்தர் உக்காருவதற்கென்று தருவிக்கப்பட்ட நாற்காலியில் தன் சரீகலத்தை ஓய்வாக சாய்த்திருக்க ஒருகணமுமவருக்கு இருப்புக்கொள்ளவில்லை. </span><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgdsFPhr10CyMdWryGPJmHfHQytDC0JmK7nouknHhsmuUsrjGalmRtOVEDGZ01M5ZO_0waHq9xC8Cy_QCK5ZpeBIVbglDGnNVcYAP5xvsAIYqly4V1OWxnbRCQ-cQhLz5jdWqkCAbXhN0Cu/s1600/IMG_0077.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgdsFPhr10CyMdWryGPJmHfHQytDC0JmK7nouknHhsmuUsrjGalmRtOVEDGZ01M5ZO_0waHq9xC8Cy_QCK5ZpeBIVbglDGnNVcYAP5xvsAIYqly4V1OWxnbRCQ-cQhLz5jdWqkCAbXhN0Cu/s320/IMG_0077.jpg" width="320" /></a></div>
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"><br /></span>
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;">பத்துத்தலை ராவணேசன் கொலுவில் பதிக்கெட்ட குரங்கு வால்கோட்டையிட்டு அமர்ந்தாற்போல ஒண்ணானப்பட்ட பண்ணாடி தன் எதிரே மத்தளமடித்த பறையனும்,குழலூதிய பறையனும் பெஞ்சுப்போட்டு குந்தியிருப்பதா? காண மனம் ஒப்புமா? அண்ணாருக்கு கோபம் வந்து கண்கள் சிவந்தால் அடிப்பொடிகள் சும்மாயிருப்பார்களா? "ஆரடா கூத்தாடி? எவண்டா வாத்தியாரு? ஊளச்சாதி கழுதைங்களா! ஒங்க பொச்சிக்கெட்டக் கேட்டுக்கு அட்டாலிக் கேக்குதா? மண்ணுல குந்தி மத்தாளமடிக்கிறதுன்னாதாங் கூத்தாடும்! இல்ல தல தனியா முண்டந்தனியா கெடக்கும்!" என்று மிரட்ட மத்தாளக்காரர் பள்ளிப்பட்டி பெருமாளும், குழல்காரர் வேலாயுதமும், பெட்டிக்காரரோடு மூவரும் விரித்துப்போட்ட கோணிப்பைமேல் சத்தமில்லாமல் உட்கார்ந்து வாசிக்கலாயினர். இந்த அமளி துமளியில் தூக்கம் கெட்ட குருநாதன் முழித்தெழுந்தார். விசயம் தெரிந்தது, வேறுப் பேசவில்லை. </span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"><br /></span>
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"><br /></span>
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;">மானம் மருவாதி கெட்டு கூத்தாடமாட்டேன்! என்று கூத்தை நிறுத்தி விட்டார். வந்தது சண்டை! கூடியது பஞ்சாயத்து! கண்டால் கையெடுக்கும்படி விதிக்கப்பட்ட ஒடுக்கப்பட்டவனின் குரல் கேட்க நாதியற்று காற்றில் கரைந்துப் போனது. தளரவில்லை குருநாதன்," சாமி நீங்க படியளக்கற பரமேஸ்பரனா இருக்கலாம்! பதனெட்டுப்பட்டிக்கி ராஜனா இருக்கலாம்! பெரிய்ய நாயாதிபதியா இருக்கலாம்! நீங்க தொட்டு இழுத்தாதான் மேச்சேரித்தேரு மறு அடி நகருங்கறது உம்மயாக்கூட இருக்கலாம்! அது பத்துப்பேரா ஒத்துக்கிட்ட சங்கதி! அதுல உங்களுக்கு பவுருண்டு! பங்கு பாத்தியமுண்டு! அவுத்த உங்க பேச்சி செல்லும்! </span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"><br /></span>
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;">கூத்து உங்களுக்கு தெரியாத பொருளு! அங்க என்னய படைச்ச பிரம்மாப் பேச்சின்னாக்கூட நானு வெச்சிக்கமாட்டன்! ஜதியும் சுதியும் புருசம் பொண்டாட்டி மாதர! புருசங் கட்லு மேலயும், பொண்டாட்டி பாயி மேலயும் படுத்திருந்தா சம்சாரம் நெறக்குமா?நானு நின்னுக்கிட்டுப் பாடி அவிங்க ஒக்காந்தி அடிச்சா மேளக்கட்டு நல்லாயிருக்குமா? ஆஞ்சியோஞ்சிப் பாக்காட்டி நாயஞ்செத்துப்போவுங்க! நேந்து நெரவுங்க செத்த!" என்க, அவருதவிக்கு எழுந்து நின்ற சனத்திரளைக்கண்டு கருப்புச்செட்டியாரும் தணிந்து நிதானித்து," டேய் இவனென்றா தெரிஞ்சப்பொருளு, தெரியாதப்பொருளுன்னு புது நாயம் போடறான்? ஒண்ணும் பிருவாத் தெரியிலியே! கூப்புடுறா வாயாடிப்பூசேரிய! வாக்கு கேட்டு அவஞ் சொல்ற மாதரச் செய்வம்." என்றுமருளாடியை அழைத்து சாமி வருந்தினர்.</span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"><br /></span>
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"> உடனே அம்மன் பிரசண்டமாகி பூசாரி மீதிறங்கி,"எளச்சவிங்கன்னு எளக்காரமா நெனைக்காதீங்கடா! அவிங்களும் எம்மக்கமாருதாண்டா! ஒசக்க ஒக்காந்தி அடிக்கச் சொல்றா!" என்று தீர்க்கபிரச்சனை முடிவுக்கு வந்து அந்த இரவு மட்டுமல்ல, தொடர்ந்து அந்த வட்ட வாகறையில் ஏழு ராத்திரி கூத்தாடினாராம்!. கலைஞனுக்கு தன் சுயத்தை விட்டுக்கொடுக்காத மன உறுதி வேண்டும். குருநாதன் கலைஞர் மாத்திரமல்ல நல்ல மனிதரும் கூட.</span><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg-5QOyyDlrVRlOKLXzENF2EdhRAkzgGkkXdkpfYWdi3iCd4BpA5eqQPcYr6XDqYNgFdbL0CC5FUg5Zepag2H_ofcsetbBVNX6WOlR9PiDlqv7YWt5xHE1BtxGKsbvmFs3TpEwj1pvbeVDU/s1600/PB230563.ORF.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="241" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg-5QOyyDlrVRlOKLXzENF2EdhRAkzgGkkXdkpfYWdi3iCd4BpA5eqQPcYr6XDqYNgFdbL0CC5FUg5Zepag2H_ofcsetbBVNX6WOlR9PiDlqv7YWt5xHE1BtxGKsbvmFs3TpEwj1pvbeVDU/s320/PB230563.ORF.jpg" width="320" /></a></div>
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"><br /></span>
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;">எடப்பாடி தாதாபுரம் காட்டுவளவைச் சேர்ந்த குருநாதனுக்கு உடன்பிறந்தோர் ஐந்துபேர். மூன்று தமையன்கள், இரண்டு தமக்கைகள்.தந்தை வீரய்யனுக்கும்,தாயார் பாவாயிக்கும் செல்லப்பிள்ளையாக வளர்ந்த குருநாதனின் பால்யகாலம் சேட்டைகளும், வாய்த்துடுக்கும், விளையாட்டுப் புத்தியும் நிரம்பியதாக இருந்ததினால் திண்ணைப்பள்ளிக்கூடமும் அங்கிருந்த முரட்டு வாத்தியாரும் அவருக்கு வேப்பங்காயாய் கசந்துப் போனதில் வியப்பேதுமில்லை.பிறகு தன் மாமன் மகனுடன் சேர்ந்து அரிச்சுவடிகளை தானே வாங்கிப் படித்துக்கொண்டு வந்தவருக்கு அதன் நீட்சியாக பிற்காலத்தில் கூத்துப்பிரதிகளை படைக்கும் அளவிற்கு அந்த கனமுள்ள வாசிப்பனுபவம் கைக்கொடுத்திருக்கிறது.</span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"><br /></span>
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"> பள்ளி நிழல்தானுறியாத தன் மகன் எண்ணற எழுத்தற துருசாகப் படிப்பதை பார்த்த தந்தையாருக்கு ஓரெட்டில் சந்தேகம் மண்டி பையனுக்கு பைத்தியமென்று ஊரெல்லாம் தூற்றிவிட, சொந்தக்கார பெரியவர்கள் இருவர் குருநாதனை சோதித்து அப்பாமர தகப்பனின் ஐயம் போக்கியுள்ளனர். தாதாபுரம் கரட்டுப்பெருமாள் கோயிலுக்கு செலவடை கொன்னவாயன்* அவர்கள் வந்து அலங்காரம் வரிக்க லைட்டு கம்பத்தடியிலிருந்து அதைப்பார்த்தவருக்கு கூத்தின் மேல் ஆர்வம் பிறந்திருக்கிறது. பிறகென்ன எந்த ஊரில் கூத்தென்றாலும் கிழடு கிண்டுகளோடுஅரையில் மொட்டக்கோவணம்,தோளில் மேல் சுண்டு சகிதமாக, நடைத்துணையாகச் செல்லும் வாத்தியாரையும் முதல் ஆளாக அங்கேப் பார்த்துக்கொள்ளலாம். கண்டதை காலாடிப்பார்க்க, காதால் கேட்டதை வாய்ப்பாட ஆடு மாடு மேய்க்குமிடமெல்லாம் குருநாதனுக்கு கூத்தாடும் சபையாகிப்போனது. </span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"><br /></span>
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;">ஆசை பித்தாகி ஆட்டுவிக்க, உள்ளூரில் குடியிருந்த பழைய கூத்தாடி பொன்னான் வாத்தியாரிடம் இவர் வேண்டியதற்கிணங்க, அவராடிய துரோபதை துயில் கூத்தில் முதன்முறையாக அர்ச்சுனன் வேடங்கிட்ட, கரட்டுப்பெருமாள் முன்னிலையில் குருநாதனவர்களினுடைய அரங்கேற்றம் நடந்தேறியிருக்கிறது.பின்தொடர்ந்த நாட்களில் சொந்தமுயற்சியில் தன் வயதொத்த சகாக்களுடன் சத்தியவதிக் கல்யாணம், கிருஷ்ணன் பிறப்பு,போகவதி கல்யாணம் போன்ற கூத்துக்களைப் பயின்று நிகழ்த்தி வந்தவருக்கு பதினாறு வயதில் மேச்சேரி சடையன் வாத்தியாரின் பாஞ்சாலக் குறவஞ்சி கூத்தைப் பார்த்தப் பிற்ப்பாடு ஓர் திருப்பம்! அதில் சடையன் புனைந்த குறத்தி வேடத்தாக்கத்தில் தானும் சிலவருடங்கள் பெருங்கொண்ட பெண் வேடங்களை விரும்பியேற்று அவைத்தோறுந் துலங்கி கோரிய வாலிபத்தில் மூண்ட இருபது வயதிலெல்லாம் தக்கப்படியான கூத்தாடி என்று பேர் எடுத்து விளங்கியிருக்கிறார். </span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"><br /></span>
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;">அன்று தொட்டு இன்று வரை அறுபதாண்டு காலங்களுக்கு மேலாகியும் இக்கலைச்சங்கின் சங்கநாதம் ஓயாது தொனித்தபடியேயிருக்கிறது. எனது விடலைபருவத்தில்தான் வாத்தியாரின் கூத்தைப் பார்க்க வாய்த்தது. அப்பொழுது எனக்கு பதினான்கு அல்லது பதினைந்து வயதிருக்கும். ஏர்வாடியிலிருந்து மாதநாயக்கன்பட்டிக்கு விருந்தாடப் போயிருந்தோம். காது குத்து- கல்யாணம், நோம்பி- நொடி,வீட்டுச்சாமி- காட்டுச்சாமி,தேரு-தெவம் என்று வந்துவிட்டால் மேச்சேரி பகுதிகளில் ஒரம்பரை அழைப்பு என்றவோர் சம்பிரதாயம் இன்றளவும் உண்டு. விருந்துக்கு கூப்பிடுவதென்றால் சும்மா அல்ல! ஒரு ஊரில் விசேசமென்றால் பெண்டுகள் பேசிவைத்து முப்பது நாற்பதுபேர் ஒன்றிணைந்து அக்கம்பக்கமோ, தூரந்தொலைவோ அதெங்கிருந்தாலும் உறவினர் வீட்டுக்கு கட்டெறும்புச்சாரிப்போல் படையெடுப்பார்கள்.</span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"><br /></span>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiT7M0m2ZghiNoxKOMegXF2KWYe1_KlUygGWjZLWs6J8qBcPTg8XfyVnmhxazWZ8A1ohIIdHdIKk25Z-2Q9H9WhlMyFmfa-op3Grx866HLLmt6KNvXHvFbHqZ1UguIvsq38ZAAB_ceZIMSK/s1600/PB230534.ORF.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="241" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiT7M0m2ZghiNoxKOMegXF2KWYe1_KlUygGWjZLWs6J8qBcPTg8XfyVnmhxazWZ8A1ohIIdHdIKk25Z-2Q9H9WhlMyFmfa-op3Grx866HLLmt6KNvXHvFbHqZ1UguIvsq38ZAAB_ceZIMSK/s320/PB230534.ORF.jpg" width="320" /></a></div>
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"><br /></span>
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;">ஒரு வீட்டில் எத்தனைப் பேரிருந்தாலும், சிட்டாமுட்டிகளானாலும் சரியே அவர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியே "நோம்பிக்கி வாங்க! நோம்பிக்கி வாங்க! என நெஞ்சார அழைத்து மனதார விருந்தளிப்பார்கள். அந்தச்சோலி, இந்தச்சோலி என்று சாக்குச்சொல்லி காரியத்தின் பேரில் விருந்துண்ண வாராதவர்களை "கொன்னவாயன் சமா- குருநாதன் சமா, சடையன் சமா- சின்னாளு சமா,பாப்பம்பாடி சமா- கன்னந்தேரி பச்சமுத்து சமா கூத்தாடுது சோத்துக்கு வராட்டிப்போவுது! கூத்துப்பாக்கவாச்சும் வந்துட்டு வருவீங்களாம் வாங்க" நோம்பி கும்பிடுவதின், விருந்திடுவதின் சிறப்புக்கூறாக கூத்தை முன்வைத்து அழைப்பதும் வழமை. ஆண்கள் கறிபோட, பெண்கள் சாந்தறைக்க என மாயாத வேலைகளை பகிர்ந்துக் கொள்ளும்போதே கோப தாபங்கள், குற்றம் குறைப்பாடுகள்,கஷ்ட நஷ்டங்கள், உதவி ஒத்தாசைகள் பரஸ்பரம் பரிமாறி ஒருவருக்குள் ஒருவர் இளைப்பாறிக்கொள்வார்கள். பேச்சு திசைத் தப்பி வார்த்தை தடித்து சண்டையிட்டு மண்டை உடைத்துக் கொள்வதும் நடக்கும்.</span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"><br /></span>
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;">குருநாதவாத்தியாரின் சமாவினரை வைத்து பள்ளத்து கட்டேறுப்பன்* தெவத்துக்கு அன்று "வன்னியன் பிறப்பு" கூத்து வைத்திருந்தார்கள். முன் வந்த பாத்திரங்கள் களைத்து ஓய்ந்த மூன்று மணி கருக்கல், அங்கமெலாம் தீயெரிய அதிவீரவன்னியனாக குருநாதன் சபையில் தோன்ற உக்கிரமாகி தகித்தது.சுமார் இரண்டரை மணிக்கூறுகள் ஆயிற்று அந்த பாத்திரத்தின் தர்பார் விருத்தாத்தங்கள் முடிவதற்கென்றாலும் கூடிய அச்சபையினின்று ஒருவரும் அசைந்தவர்களில்லை. பார்த்தகண் பூக்கவில்லை, கேட்ட காதடைக்கவில்லை! கைகள் பொத்தி, வாய் பதைக்க பக்தி சிரத்தையோடும், தொற்றவைத்த பதட்டத்தோடும் கூத்தை கண்டு களித்திருந்தோம்.இரண்டாம்முறை குருநாத வாத்தியாரைச் சந்தித்தது கரும்பு சாலியூர் ஊத்துக்கோம்பை மாரியம்மனுக்கு* 'சாரங்கதாரா ' கூத்தாட வந்தபோது. உடாங்கனை கனவு நிலையென்னும் 'வாணாசூரன் சண்டை' எனுமோர் கூத்தைப்போன்றே சாரங்கதாராவும் புழக்காட்டத்திலிருந்து அருகி மறைந்து வருமொரு கூத்து.</span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"><br /></span>
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"> அர்ச்சுனன் மகன் அபிமன்யு, அபிமன்யு மகன் பரிச்சித்து, பரிச்சித்து மகன் ஜனமேஜெயன், ஜெனமேஜெயன் மகன் சுரேந்திரன், சுரேந்திரன்மகன் நரேந்திரன். இந்த நரேந்திர மன்னன் சபையில் தோன்றுவது முதல் மகன் சாரங்கன் சித்திரத்தைக் காட்டி சித்ராங்கியை நயவஞ்சகமாக ஏமாற்றி மணம் முடிப்பது,அந்த ரகசியத்தை மைந்தனிடம் சொல்லப்படாதென்று மந்திரிகுமாரானாகிய சுபந்திரனை நிர்ப்பந்தஞ் செய்வது, மந்திரிகுமாரனும், சாரங்கனும் புறாப்பந்து விளையாடுவது, எதிர்பாரா சந்தர்ப்பத்தில் சாரங்கனின் மணிப்புறா சித்ராங்கி மடியில் தஞ்சமடைய, மீள புறாவைப் பெறும் பொருட்டு சாரங்கன் அந்தப்புறம் ஏகுவது, சித்திரத்தில் கண்டவன் இவனென துணிந்து சாரங்கனை சித்ராங்கி புணர்ச்சிக்கு அழைப்பது, மறுத்தவன் வெளியேற, வெஞ்சினங்கொண்டவள் சாரங்கன் மீது வீண்பழிப் போடுவது, மனையாட்டி சுமத்தும் குற்றத்தை ஆராயாமல் நரேந்திர மன்னன் மகனை மாறுகை, மாறுகால் வாங்குவது ஈறாக இந்த கட்டங்களெல்லாம் வாத்தியார் நடத்தும் சாரங்கதாரா கூத்தில் செறிவார்ந்தபகுதிகள்.</span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"><br /></span>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiZuYBNrCx_b0QFkOWXOJW0BEFPh91Uy-_Tws8wR17Qdeluh53z5Xe_likRX1KmcNrVj0lcZRl3894TIFc06MHe3vUDNCwcjmK_Nopd2jPpn_vPPKhHuYQsTRc0G0OCEcssO4cWXuXtUB1Y/s1600/PB230516.ORF.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="241" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiZuYBNrCx_b0QFkOWXOJW0BEFPh91Uy-_Tws8wR17Qdeluh53z5Xe_likRX1KmcNrVj0lcZRl3894TIFc06MHe3vUDNCwcjmK_Nopd2jPpn_vPPKhHuYQsTRc0G0OCEcssO4cWXuXtUB1Y/s320/PB230516.ORF.jpg" width="320" /></a></div>
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"><br /></span>
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"> கதையோட்டத்தின் பல நிலைகளை குருநாதனும் அவர்தம் சகாக்களும் மெனக்கெடாமல், இயல்போட்டம் மாறாமல் அந்த புராதான காலத்தை கரைந்து நிற்றல் வழி அப்படியே கண்முன் நிறுத்தியப் பாங்கு அசாத்தியமானது.மூன்றாவது முறை நேரிட்ட சந்தர்ப்பத்தில் வாத்தியார் வல்லிய இடுங்கட்டில் மாட்டிக்கொண்டிருந்தார்.காப்புக்கட்டு முடிந்து தை பிறந்துவிட்டால் ஆடிமாதம் முடியும் மட்டும் ஊரில் இருக்கப்பட்ட சாமிகளுக்கு கொண்டாட்டத்திற்கு குறைவிருக்காது. காமாண்டாருக்கு* படையலிட்ட கரிநாளன்று சாட்டப்பெறும், ஏழு நாள் சாட்டென்றாளும் சரி, பதினைந்து நாள் சாட்டென்றாளும் சரி அதில்விழும் வியாழக்கிழமை மாமூலாக கூத்து நடத்தியே தீருவார்கள். ஊர்ப்பெரியத்தனக்காரர்கள் அவரவர்கள் நேமித்துக்கொண்ட ஜமாக்களுக்கும் இன்னும் பிறவுள்ள புதுமை விரும்பிகளுக்கும் அடிக்கடி மூளும் போட்டி பொறாமை, சண்டை சச்சரவுகளிடையே ஆனைச்சண்டையில் கொசு நசுங்குவதுப்போல வாத்தியார்கள் சிக்கி தத்தளிப்பார்கள். </span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"><br /></span>
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;">நெருக்கடி மிகுந்த இச்சூழலில் அம்மாபேட்டை சரஸ்வதி ஜமா பெரியத்தலைகளான கனகராஜி வாத்தியாரும், கணேசவாத்தியாரும் ஒருவருக்குத் தெரியாமல் ஒருவர் ஒரே நாளில் ஆரியக்கவுண்டனூரிலும், குருவரெட்டியூர் அண்ணாநகரிலும் ஆடும்படிக்கு வெற்றிலைப்பாக்கு வாங்கிவிட்டார்கள். சரியானபடிக்கு நிறைந்த தருணம் வேண்டி வேண்டி அழைத்தாலும் மாற்று ஜமாவிலிருந்து ஒரே ஒரு ஆளைப் பெயர்க்கமுடியவில்லை. முன்பணம் கொடுத்தவர்கள் அம்மாபேட்டை அந்தியூர் பிரிவு ரோட்டில் வண்டிப்போட்டுக்கொண்டு வந்து மணிக்கணக்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள். செய்வதறியாது கையைப் பிசைந்துக் கொண்டு நின்றிருந்தவர்களுக்கு முடை நீக்கிய ஆபத்தாந்தவனாக வந்துச் சேர்ந்தார் குருநாத வாத்தியார்! ஒரே (அபிமன்னன் சுந்தரி மாலை) கூத்தை இரண்டு நிகழ்விடங்களிலும் வைத்துக்கொள்ளலாமென்றும், வேடதாரிகளை மாத்துக்கட்டில் (இங்காடியவர் அங்கு, அங்காடியவர் இங்கு ) பாகமேற்கப் பண்டலாமென்றும், பின்னித்தி மேளத்தோடு இருப்பவர்களை தன்னோடுத் தாட்டிவிடுமாறு பணித்தவர், பன்னிருவர் இருக்குமிடத்தில் வெறும் அறுவரை இட்டுக்கொண்டு ஊர்போய்ச் சேர்கையில் இரவு மணி பத்து. கூத்துப் பார்க்கப் போன நான் ஓட்டை டிவியெஸ் வண்டியில் விடிய விடிய ஆரியக்கவுண்டனூருக்கும் அண்ணாநகருக்கும் சவாரியடித்து சலித்து ஓய்கையில் வாத்தியார்,</span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"><br /></span>
<span style="background-color: white; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"><span style="color: red;">அறம் புகழ் ஈன்ற நகர்</span></span><br />
<span style="background-color: white; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"><span style="color: red;">அரசுக்கு உரிமையான</span></span><br />
<span style="background-color: white; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"><span style="color: red;">அபிமன்னராஜனிதோவந்தேன்</span></span><br />
<span style="background-color: white; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"><span style="color: red;">சபையை நாடி</span></span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"><br /></span>
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;">என துடியாக தர்பாராகிக்கொண்டிருந்தார்.</span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"><br /></span>
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"> என் உறக்கச்சடைவை கண்ட சுப்ரமணி(அம்மா பேட்டை கணேச வாத்தியாரின் சோதரர்) சுபத்திரை வேடமிட்டாடிக்கொண்டிருந்தவர் சுருக்கமாக தன் டூட்டியை முடித்துக்கொண்டு வந்த சுருக்கில் அங்கிருந்த இச்சிமரத்திட்டில் என்னை இளைப்பாறச்சொல்லிவிட்டு தான் ஒரு நடை ஆரியக்கவுண்டனூருக்கு போய் வருவதாக வண்டியை வாங்கிக்கொண்டார். தவிரவும் ஆடிமுடிக்கப்படாத சுபத்திரை பாகம் அவருக்கென்று அங்கு காத்திருந்தது. போனவர் போனவரே! வெகு நேரமாகியும் ஆள் துப்பே காணவில்லை! வரவேண்டிய மற்றொருவரும் வந்துச்சேரவில்லை! </span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"><br /></span>
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;">அபிமன்யு கானகத்தில் வேட்டையாடிக்கொண்டிருந்தவர் காதலியாம் மாமன் மகள் கமலச்சுந்தரி எட்டடுக்கு கற்கோட்டை! எறும்பேறா மண்டபம்! பத்தடுக்கு கற்கோட்டை! பாம்பேறா மண்டபத்தில் சிறையிடப்பட்ட சேதியை சுந்தரியெழுதிய நிருபம்கண்டு தெரிந்து சிறைமீட்க தாய் சுபத்திரையிடத்தில் உத்தாரம் பெற ஆனைக்குந்திப்பட்டணம் நோக்கி காற்றாய் பறந்துவந்துக்கொண்டிருந்தார். </span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"><br /></span>
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;">என்னாச்சோ, ஏதாச்சோ தம்பி எட்டிப்பாத்துட்டு வாங்க ஒருவிச, என்று குருநாதவாத்தியார் வேண்ட திரும்ப ஆரியக்கவுண்டனூருக்கு பயணம்போனேன்.எதிரே சுப்ரமணியை தேடிக்கொண்டு அங்கிருந்தொருவர் வரவே எனக்கோ பதட்டமான பதட்டம். கூடி இருவருந் துழாவியதில் பழையூர் முக்கில் எம்.பி நலநிதியில் வடிக்கட்டி எழுப்பிய பேருந்து நிழற்குடையினடியில் மனிதர் நாயொன்றிற்கும் தனக்கும் நடந்த அகோரயுத்தத்தில் மிஞ்சியிருந்த தாய்ச்சீலையினைக் கிழித்து கடிப்பட்ட இடத்தில் கட்டுப்போட்டப்படி விதியே என்று ஒடுங்கிப்போய்க் குந்தியிருந்தார். </span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"><br /></span>
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;">ஆண்வேடமோ, பெண் வேடமோ அதுவெந்த வேடமாகயிருந்தாலும் தரித்தவர் முகமழிக்காமல், கால்களிலிருக்கும் சதங்கைகளை அவிழ்க்காமல் ஆடரங்கை விட்டகலமாட்டார்கள். இட்ட வேடத்திற்கு எதாவதொரு விதத்தில் பங்கம் விளைந்தால் தன் வாழ்வில் ஏற்பட்ட மிகப்பெரிய அவகேடாக அதை எண்ணியெண்ணி வருந்துவார்கள். அன்றைக்கிருந்த இக்கட்டில் யாருக்கும் எதையும் பொந்தியிலிருத்த இயலவில்லை. அவதி பகுதியாக கிளம்பியவர் எண்ணை இல்லாமல் முண்டியடித்த வண்டியை நடைப்பழக்கிப்போயிருக்கிறார் தடத்தோர பஞ்சர் கடையில் எப்படியும் எண்ணையைப் பிடித்துக்கொள்ளலாமென்று துணிந்து!. கட்டுத்திட்டத்தை மீறி தனது காற்சதங்கையை அவிழ்க்காமல் சென்றதால் அந்த கலைவாணி சரஸ்வதியே நாயாக அவதாரமெடுத்து வந்து தன்னை தண்டித்துவிட்டதாக வருந்திய அந்த அப்பாவிக்கலைஞனை உடனடியாக பூதப்பாடி மருத்துவமனையில் அனுமதித்தப்பின் உடன் வந்தவரை ஆரியக்கவுண்டனூருக்கு அனுப்பிவிட்டு தக்க கலைஞர்களின்றி இரண்டு பக்க கூத்தும் என்ன கதியானதோ என்ற வாட்டம் மேலிட நான் அண்ணா நகருக்கு விரைந்தேன்.</span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"><br /></span>
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"> குரு நாத வாத்தியார் நெடிது நீண்ட தன் சிகையை விரித்துப் போட்டு சுபத்திரை வேடத்தில் நின்று கண்ணனிடம்,</span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"><br /></span>
<span style="background-color: white; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"><span style="color: red;">உரிமைக்காரி நானிருக்க</span></span><br />
<span style="background-color: white; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"><span style="color: red;"><br /></span></span>
<span style="background-color: white; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"><span style="color: red;">யாருக்கண்ணா பெண் கொடுத்தாய்</span></span><br />
<span style="background-color: white; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"><span style="color: red;"><br /></span></span>
<span style="background-color: white; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"><span style="color: red;">சொந்தக்காரி நானிருக்க</span></span><br />
<span style="background-color: white; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"><span style="color: red;"><br /></span></span>
<span style="background-color: white; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"><span style="color: red;">சுந்தரியை!தரலாமா</span></span><br />
<span style="background-color: white; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"><span style="color: red;"><br /></span></span>
<span style="background-color: white; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"><span style="color: red;">அவன் பாவி துரியனாச்சுதே</span></span><br />
<span style="background-color: white; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"><span style="color: red;"><br /></span></span>
<span style="background-color: white; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"><span style="color: red;">என் ஆவி பதறலாச்சுதே</span></span><br />
<span style="background-color: white; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"><span style="color: red;"><br /></span></span>
<span style="background-color: white; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"><span style="color: red;">ஓ அண்ணா மாயக்கண்ணா</span></span><span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;">!</span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"><br /></span>
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;">என்று அபிமன்னனுக்கு பெண் கேட்டது ஆச்சரியமென்றால் அதைவிட ஆச்சரியம், தங்கை மகனுக்கு பெண் தர மறுத்ததோடு தகாதமுறையில் அவமானப்படுத்தி கண்ணனும் அவன் மனைவி மலர்மங்கை லட்சுமியும் சுபத்திரையை விரட்டியடிக்க, தாயை அவமதித்த மாமனை கருவறுத்து கமலசுந்தரியை சிறைமீட்ட சபதங்கூறி புறப்படவேண்டிய இடத்தில் பெண் வேடத்தில் உள்ளே சென்றவர் மூன்றடி பாட்டு இடைவெளியில் மீண்டும் ஆண்வேடத்தில் வெளியில் வந்த சுருக்கு. மின்னல் வேக தோற்ற மாற்றம்! யாருக்கு வேண்டுமானாலும் சமயோசிதப் புத்தி வாய்க்கலாம், அது காரியமாவது கலைஞனிடமே! பத்தடிக்கு பத்தடி சதுரம், அம்மண் தரையே கொலுமண்டபம், சபாமண்டபம், அந்தப்புரம், ஆண்டவன் சந்நிதானம், ஆரண்யமான கானகம், படுகளம், பாடிக்கூடாரம்!!!நவீனகால காணூடகங்கள் கொண்டாட்டமாக கட்டமைக்கும் பிரம்மாண்டமான காட்சிப் பின்புலங்களுக்கு நிகரானதொரு காட்சிக்களத்தை தனியொரு கலைஞன் தனது தனித்த மெய்ப்பாடுகள் வழி நிகழ்த்திக்காட்டும் வன்மை குருநாதனவர்கள் நிகழ்த்தும் கூத்திலுள்ளது..</span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"><br /></span>
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"> மற்றுமவர் ஆடும் கூத்துக்களில் சிறப்பம்சங்களென்று தருக்கள் விருத்தங்களைச் சொல்லலாம். (மரபுக்கலை வடிவமான கூத்து பாட்டுக்கள் வழி கதை நகர்த்தும் போக்கை கொண்டது) ஓர் பனுவலாக எழுத்துரு காணாத இப்பாடல்களை நாம் இன்றியமையாதனவொன்றாக கருதி படைப்பாக வடிக்கவேண்டிய காரணம் என்னவெனில் பாட்டன் பூட்டன் காலத்து பழைய சொத்து என்பதனால் மட்டுமல்ல,பொருளோடு புதைந்திருக்கும் கருத்துச்செழுமைக்கும்,வழி வழியாக பல தலைமுறை கண்டபோதும் வகைத்தூய்மை சிதையாத மூல மெட்டுக்கள்,அதன் கட்டுறுதி, இசைக்குந்தோறும் சலிக்காமல் கேட்பவரை மனங்கிறங்கடிக்கும் உள்ளுறைந்த அந்நூதனம்! சாரங்கதாரா கூத்தில் சித்ராங்கி சாரங்கன் சந்திப்பில் இருவருக்குமுண்டான தர்க்கத்தில் அமைந்த தருக்கள் இவை: </span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"><br /></span>
<span style="background-color: white; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"><span style="color: red;"><b>சாரங்கன் சொல் தரு</b></span></span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"><br /></span>
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"> இங்குவந்த என்புறாவைமாதாவே தாயே</span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;">எடுத்திருந்தால் தந்திடம்மாமாதாவே தாயே</span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;">மணிப்புறாவைத் தந்தீரானால்</span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;">மாளிவிட்டுச் சென்றிடுவேன் </span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"><br /></span>
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"><br /></span>
<span style="background-color: white; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"><b><span style="color: red;">சித்ராங்கி சொல் தரு</span></b></span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"><br /></span>
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"> மாராப்பு சீலைக்குள்ளே</span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;">என் கண்ணாளா</span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;">மானு ரெண்டு வெளையாடுது</span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;">மானை நீ பிடிப்பதெப்போ</span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;">இந்த மங்கை குறைதீர்ப்பதெப்போ</span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;">சித்தாட சீலைக்குள்ளே</span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;">என் கண்ணாளா</span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;">சித்திரம் எழுதியிருக்குது</span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;">சித்திரத்த நீ பார்ப்பதெப்போ</span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;">இந்த செல்லி குறைதீர்ப்பதெப்போ </span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"><br /></span>
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"><br /></span>
<span style="background-color: white; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"><span style="color: red;">சாரங்கன் சொல் தரு</span></span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"><br /></span>
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"><br /></span>
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"> விடு விடம்மா மடி விடம்மா</span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;">நான் வீடு போய் சேரவேண்டும் </span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;">சித்ராங்கி சொல் தரு </span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;">விடுவதற்கா மடி பிடித்தேன்</span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;">மெல்லியாளை என்னைச் சேரும்</span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"><br /></span>
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"><br /></span>
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"> </span><span style="background-color: white; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"><span style="color: red;">சாரங்கன் சொல் தரு</span></span><br />
<br />
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;">என் தந்தையாரும்</span><span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"> வந்து கண்டால்</span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;">தகுந்த பழி நேருமம்மா </span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"><br /></span>
<br />
<span style="background-color: white; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"><span style="color: red;">சித்ராங்கி சொல் தரு</span></span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"><br /></span>
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"> உந்தன் தந்தையாரும் வருகுமுன்னே</span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"> தாட்டிடுவேன் என் மாளிவிட்டு</span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"><br /></span>
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"><br /></span>
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"> </span><span style="background-color: white; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"><span style="color: red;">சாரங்கன் சொல் தரு </span></span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"><br /></span>
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;">என்னை கணவன் என்று சொன்னால்</span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;">அம்மாஉனக்கு கண்ணு தெரியுமோ</span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;">என்னை புருசன் என்று சொன்னால்</span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;">அம்மாஉனக்கு புண்ணியம் கிட்டுமோ</span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"><br /></span>
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"> </span><span style="background-color: white; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"><span style="color: red;">சித்ராங்கி சொல் தரு</span></span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"><br /></span>
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"> தாயிக்கி பிள்ளையேதடாசாரங்கதாரா</span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;">தண்ணி கெணத்துக்கு முறைமையேதடாசாரங்கதாரா</span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;">கோழிக்கி முறைமையேதடாசாரங்கதாரா</span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;">கொக்குக்கு முறைமையேதடாசாரங்கதாரா</span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"><br /></span>
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"><br /></span>
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"> அச்சரப் பிழையற்ற வசனங்கள், அடிபிறழாத பாடல்கள், தாளம் தப்பாத அடவுகள், பாகத்திற்குண்டான ஒப்பனை, ஒன்றி இயைந்து பகட்டின்றி வெளிப்பட்ட நடிப்பு இவற்றின் மூலம் மட்டுமல்ல, அந்நேரமந்நேரம் தோன்றும் கற்பனையில் குருநாதனவர்கள் நிகழ்த்துதலில் உருவாக்கிய காட்சியற்புதம் அதன் தீவிரம் இன்றளவும் மனதைவிட்டகலவில்லை.தற்செயலாக திறமைசார்ந்த பற்பல அசாத்தியங்களை வெளிக்கிட்டுக்காட்டும் அளிக்கை குருநாதனவாத்தியாரின் கூத்தில் ஓர் தனித்த பண்பாகும். தொடர் ஒத்திகை, நெறியாள்கை முதலான அறிவுத்தளத்திலமைந்த செல்நெறிகளினின்றும் அதை தனித்தே இனங்காணலாம்.அறிவனுபவமாகவும், உணர்பனுவமாகவம் உள்ள படிமம் கவிதையை உன்னதமாக்கும் அத்தன்மைப்போல் அவர் பாத்திரத்தோடு பொருந்தி அதில் பற்பல மெய்ப்பாடுகளை பொதிந்து பார்வையாளனின் உள்ளத்தில் உணர்வெழுச்சியை உண்டுச்செய்யும் சமத்காரம் அவர்தம் ஆளுமையை கட்டியம் கூறும் பிரதான கூறு. </span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"><br /></span>
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;">கற்றலும் கற்பித்தலும் கலைஞனை புதுப்பிக்குமோர் பாரிய செயற்பாடு! நிகழ்வுதோறும் கற்றுதெளிந்ததோடு மெய்வேல்,நல்லூர் பெரிய மாது, சாத்தனூர் வெள்ளையன்,பொன்னான்,சோரகை மணி, மட்டம்பட்டி பழனி,போன்ற வளப்பமான சீடப்பிள்ளைகளை வளர்த்தி ஆளாக்கி நிகழ்த்து கலையுலகில் அழியாச்சுவடுகள் பதிக்க வைத்துள்ளார் வாத்தியார். </span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"><br /></span>
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;">இங்குகலைஞனென்றும் கலைவாழ்க்கையென்றும் பேதங்களில்லை.வறண்டபூமியில் பொங்கலிட்டு உண்டுகளித்த உடல் உழைப்பாளிக்கு, நாளுக்கு நாள் கூடிய உழைப்பில் பாடு ஏற்றிய சேகு ஆகச்சிறந்த கலைக்கூறுகளை அவனுள் உற்பவனம் செய்வதோடு அவனை வாதைகளை பகடியாக்கும் தேர்ந்த கலைஞன் ஆக்குகிறது. </span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"><br /></span>
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"><br /></span>
<span style="background-color: white; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"><span style="color: red;"><b>காதறுத்தல்:</b></span></span><br />
<br />
<span style="background-color: white; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"><span style="color: #e06666;">நோம்பி சாட்டும் முகமாக நடப்படும் கம்பத்திற்கு (மூன்றடிக்கு ஐந்தடி ஆழம்) வெள்ளாட்டு கிடாயின் காதறுத்து இரத்தப்பலி கொடுத்த அன்றைக்கு மரம் தேர்ந்து அக்கம்பத்தில் உருவம் வடித்தமைக்காக ஆசாரிமார்களுக்கு அக்கிடாய் இனாமாகக் கொடுக்கப்படும். கம்பம் நடுதல்:கம்பம் நடுவது நோம்பி சாட்டுதலில் முக்கியமான சம்பிரதாயமாகும். கார்த்த வீரியார்ச்சுனனை மனதிலெண்ணியது ஓரு குற்றமென வன்கொலை செய்யப்பட்ட ரேணுகா பத்தினி உருமாறி தெய்வமாக நின்றபோழ்து அம்மணி உனைப் பிரிந்து யாம் உய்வது எங்ஙகனம்? என்று ஜமதக்னி முனிவர் தம் பெண்டாட்டியை கேட்க, கலியுகத்தில் மக்கள் எனக்கு நோம்பி சாட்டி விழா எடுக்கும் அந்த பதினைந்து தினங்கள் மாத்திரம் கம்பத்தில் வனைந்த சிற்பமாக தன்னோடு உறையலாம் என அம்மன் சொன்ன ஐதீகப் பிரகாரம் முற்றிய பாலை மரத்தை தேர்ந்து ஆண் உருவை செதுக்கி தூய நீராட்டி மஞ்சள் சந்தனம் தடவி சிறப்பு பூசனையிட்டு கோயில் தலைவாசலில் அம்மன் முகம் பார்க்கும்படி நட்டு விடுவார்கள்.</span></span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"><br /></span>
<span style="background-color: white; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"><span style="color: red;"><b>கம்பளிக்கூத்து</b></span></span><br />
<br />
<span style="background-color: white; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"><span style="color: #e06666;">மாமன் மைத்துனர் முறையுள்ள உறவுக்காரர்களிரண்டுபேர்களுக்கு உடலில் கம்பளி சுற்றி, முகத்திற்கு மாறுபட்ட ஒப்பனை செய்து தாளக்கட்டுக்கு ஏற்றவாறு அடவில் பகடி கலந்து ஆடும் ஆட்டம் கம்பளிக்கூத்து. இதற்கென்று பாடப்பெறும் தனிப்பாடல்களும் உண்டு. </span></span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"><br /></span>
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"><br /></span>
<span style="background-color: white; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"><span style="color: red;"><b>செலவடை கொன்னவாயன்</b></span></span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"><br /></span>
<span style="background-color: white; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"><span style="color: #e06666;">சொந்த பெயர் குஞ்சிப்பையன்.தந்தையார் இராமசாமி படையாச்சி சேவாட்டத்தில் மிகச்சிறந்த விற்பன்னர். தகப்பன் வழி காலடவு ஆட்டங்களில் விஞ்சிய ஆட்டம் கொன்னவாயன் அவர்களுடையது. கூத்தில் தனக்கென்றுவோர் தனி பாணி அமைத்து அதையும் சிறப்பாக செய்து வந்தவர்.சாரங்கதாரா கூத்தில் அவரிட்டு விளையாடும் சாரங்கன் வேடம் மக்களிடையே வெகுவான மதிப்பை பெற்றது.</span></span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"><br /></span>
<span style="background-color: white; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"><span style="color: red;"><b>கட்டேறுப்பன்( கட்டு ஏரியப்பன்):</b></span></span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"><br /></span>
<span style="background-color: white; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"><span style="color: #e06666;">சேலம் ஜில்லா, மேட்டூர் வட்டார வன்னிய குடிகளின் காவல் தெய்வமாகிவிட்ட மூத்த குடித்தலைவன். முஸ்லீம் பெண்ணை சிறையெடுத்து (நங்கியம்மனாக) இணை சேர்த்து கொண்டதனால் வழிபாட்டு முறைகளும் இசுலாமிய வழிபாட்டு முறைகளையொட்டிய பழக்கங்கங்களாக உள்ளது. (அருள் வந்து சாமி பேசுகையில் உருது மொழியில் பேசுவதாக சொல்கிறார்கள். மண்டிபோட்டு வணங்குகிறார்கள்.) ஆதி பதி வாணியம்பாடி திருப்பத்தூரிலும், இன்ன பிற பதிகள் சேலம் கீரை பாப்பம்பாடி, மாதநாயக்கன் பட்டி, கொப்பம் புதூர் ஆகிய இடங்களில் கிளை பிரிந்து அமைந்திருக்கிறது.</span></span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"><br /></span>
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"><br /></span>
<b><span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"> </span><span style="background-color: white; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"><span style="color: red;">காமாண்டார்</span></span></b><br />
<span style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"><br /></span>
<span style="background-color: white; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.8px;"><span style="color: #e06666;">தைமாதம் மூன்றாம் கிழமை கரிநாளன்று காலை, பிள்ளை பிராயத்திலுள்ள இருபால் சிறார்கள் மணியடித்து பாட்டுப்பாடி ஊர் சோறெயெடுத்து பிள்ளையார் கோயில் முன்பதாக கூடியதை உண்ட பிற்பாடு அங்கிருந்து ஒரு அரை மைல் தூரத்திற்கு ஒட்டப்பந்தயம் விடுவார்கள். தோற்றவர்கள் ஆணோ பெண்ணோ அவர்களை காமாண்டார் பெண்டாட்டி என தெரிவு செய்துஅன்று மாலைபொழுது இறங்கியபின் ஆறோ, ஏரியோ, கிணறோ ஊர் எல்லையிலுள்ள நீர் நிலைக்கு சென்று களிமண் எடுத்து வந்து ஆணுரு (காமாண்டார்) பெண்ணுரு(காமாண்டார் பெண்டாட்டி) பிடித்து வைக்க அவரவர் பெற்றவர்கள தங்கள் குழந்தைகளுக்கு இட்டு அழகு பார்ப்பதுபோல வெள்ளியோ,தங்கமோ, பித்தளயோநகைகளை அப்பிரதிமைகளுக்கு போட்டு அலங்கரித்து கூடி நின்று கும்மியடித்து,மாவிளக்கோடு பழந்தேங்காய் படைத்து வழிபடுவார்கள். பெரும்பாலும் பிள்ளை வரம் கேட்டு வரும் கோரிக்கைகளே அதிகமுமிருக்கும். விடிந்தபின் அப்பொம்மைகளை மீண்டும் பிள்ளையார் கோயில் வாசலில் எரியூட்டிவிடுவார்கள்.</span></span></div>
manalveeduhttp://www.blogger.com/profile/11701810894595985945noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-891272482416127046.post-90147603015049007322014-11-15T23:13:00.001-08:002014-11-16T03:14:59.992-08:00மாண்டும் மறக்கவில்லை மாது பெண்ணாசை செத்தும் மறக்கவில்லை சீமாட்டி கண்ணாசை <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
கோவிலன் சரித்திரத்தின் மூன்றாவது ராத்திரி பாண்டியன் சண்டை -கூத்து<br />
<br />
நிகழ்வும் கலைஞர்களும் - ஓர் பதிவு -தவசிக்கருப்புசாமி<br />
<br />
<br />
பசியோடு அலைய வச்சான் அந்த பரமன்<br />
<br />
ருசியோடு நூறு கலைகள் ...!கசியும் மனம் ...!<br />
<br />
நிற்கவச்சி ஏங்கவச்சி காக்கவச்சி கற்க வச்சி<br />
<br />
விற்கவும் வச்சிட்டா னே-<br />
<br />
-ஆகாசம்பட்டு சேஷாசலம் <br />
<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi8wW6AYsGqW585Q9fAYG5A1qgsjrvAV05e51pbuWtnQDC4T4KYNxEV4bKD2pyd4pe9aSfY7w2Saxb77kb1MIFPtSRAAZ3_RFg3A7YyK6ekuZns6g6pPeKikjhdiwB9bY8vn3o3CwklTC_S/s1600/DSC03786.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi8wW6AYsGqW585Q9fAYG5A1qgsjrvAV05e51pbuWtnQDC4T4KYNxEV4bKD2pyd4pe9aSfY7w2Saxb77kb1MIFPtSRAAZ3_RFg3A7YyK6ekuZns6g6pPeKikjhdiwB9bY8vn3o3CwklTC_S/s1600/DSC03786.JPG" height="320" width="180" /></a></div>
<br />
<br />
<br />
<br />
<br />
தருணமின்னும் துவங்கியிருக்க வில்லை . அங்கொன்றும் இங்கொன்றுமாக வேண்டுதலை கூத்துகள் நிகழ்ந்த வண்ணமிருக்கின்றன . இருக்கப்பட்ட ஜமாக்களில் எகாபுரம் சுப்ருவும் எலிமேடு வடிவேலுந்தான் வருடம் முச்சூடும் நிறை செலுத்துபவர்கள் .நிகழ்த்துதல் பாங்கின் குலையாத கட்டுறுதி .உறுத்தாத எளிமை சுப்ருவுக்கு நிரந்தர பார்வையாளர்களையும் ஆதரவாளர்களையும் பெற்றுத்தந்திருக்கிறது . செல்லுபடியாகாத இந்த ஐப்பசி மாதத்தில் கூத்துக்கலைஞர் பெரிய சீரகாப்பாடி க . ராசுவை தொடர்ந்து மெய்யழகன் அவர்களும் மாரடைப்பால் காலமானதை அடுத்து ரொம்பவும் மனம் கனத்து போய் திரிந்துக்கொண்டிருந்தேன் .ஒன்றன் பின் ஒன்றாக இருவர் இரண்டு முக்கிய புள்ளிகளை மண்ணுக்கு வாரிக்கொடுத்த இழப்பிலிருந்து இன்னும் மீள முடியவில்லை ....<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhzzsp3trd74xnkWDi4ZSugyIx4Nzo81FetP_LXBU_l_6ZNVMjdyioh7OBO0KgTgQWG-y4lIIDNzcgSd45NlPJMI8dEhUOwHWN6FCtF7vzAjsIj7rNcvFwxbTXWCt1iMObOIRe3WTndmxVQ/s1600/DSC03796.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhzzsp3trd74xnkWDi4ZSugyIx4Nzo81FetP_LXBU_l_6ZNVMjdyioh7OBO0KgTgQWG-y4lIIDNzcgSd45NlPJMI8dEhUOwHWN6FCtF7vzAjsIj7rNcvFwxbTXWCt1iMObOIRe3WTndmxVQ/s1600/DSC03796.JPG" height="320" width="180" /></a></div>
<br />
<br />
<br />
<br />
ராஜுவின் நினைவஞ்சலி கூட்டத்துக்கு வாத்தியாரை அழைக்கும்போதுதான் வெள்ளையம் பாளையம் மூலக்கடை பாட்டப்ப சாமிக்கு கூத்து விட்டுருக்கும் தாக்கல் சொல்லி கூத்துப்பாக்க கூப்பிட்டார் .கொங்கு மண்டலத்தில் அரங்கக்கலை வழிப்பாட்டுச்சடங்கு களின் ஓர் இன்றியமையாத கூறு . சுண்டமேட்டூர் ஆயீ கோவில் , செங்கோடம்பாளையம் மேடை பெருமாள் கோவில் ,வெள்ள கரட்டூர் பெருமாள் கோவில் மற்றும் ஊர்ப்புற அம்மன் கோவில் நோம்பிகளில் கூத்து ஓர் இரவு கட்டாய நிகழ்வு .<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgiac1FmJpRBhyphenhyphenjifJG7NpfDBPQBlq47IKeGorrqwyLSz-aA_hjc6WPGKd1PcaQzPPyD30Ffvyhyphenhyphen_FCgzjqe8iY19X0pMVDe3jSBRgwuO6cD6Alm5IGKQr-5mycoXVQ7bzSnwmYkD8E6PMZ/s1600/DSC03780.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgiac1FmJpRBhyphenhyphenjifJG7NpfDBPQBlq47IKeGorrqwyLSz-aA_hjc6WPGKd1PcaQzPPyD30Ffvyhyphenhyphen_FCgzjqe8iY19X0pMVDe3jSBRgwuO6cD6Alm5IGKQr-5mycoXVQ7bzSnwmYkD8E6PMZ/s1600/DSC03780.JPG" height="320" width="240" /></a></div>
<br />
<br />
ஒன்பதரை மணிக்கெல்லாம் சின்னு கோமாளி தர்பாராகி விட்டார் . மரம் பழுத்தாலும் புளிப்பு குறையவில்லை , அழுத்ததிருத்தமான அதே பகடி எள்ளல் .ஜமா விருத்தாந்தங்களை சொல்லி நிகழ்வு ஏற்பாட்டாளர்களை வாழ்த்தி அன்றைய கூத்து கோவில சரித்திரத்தின் மூன்றாம் இரவு பாண்டியன் சண்டை என முன்னறிக்கை செய்யப்பட்டது . பாரத -இராமாயண- இதிகாச புராண கதைகள் உட்பட 180 கதைகள் கொங்கு சீமை நிகழ்த்துவெளியில் நிகழ்த்தப்படுகின்றன .பிரதி வழி நாம் வாசிக்கும் சிலப்பதிகார கோவலன் கதையிலிருந்து மக்கள் உருவாக்கிய இக்கதை மாறுப்பட்டது .<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi_uL7JwWraki0wZV_fALkNhmCZXdi1N4j4W9zZgzvWF4cJ5RlGWtFOo6vb491dSvbLsH3Gg4CV2l32vOAFCmTxhK3HvEIeYIdQGy6CE7uzD0GSF97MQsXHThBzs_x6-bPke6LcZQAXcbni/s1600/DSC03837.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi_uL7JwWraki0wZV_fALkNhmCZXdi1N4j4W9zZgzvWF4cJ5RlGWtFOo6vb491dSvbLsH3Gg4CV2l32vOAFCmTxhK3HvEIeYIdQGy6CE7uzD0GSF97MQsXHThBzs_x6-bPke6LcZQAXcbni/s1600/DSC03837.JPG" height="320" width="180" /></a></div>
<br />
காவிரிப்பூம் பட்டினம் வாழ் கப்பல் வியாபாரி மாத்தோட்டான் செட்டி மனையாட்டி வருணமாலை தமையன் வீட்டு திருமணத்திற்கு சீர் கொண்டு சென்றும் பிள்ளை இல்லா கொடுமைக்கு வரிசையின்றி அவமானப்பட்டு திரும்புகிறாள் . தவமிருந்து அவள் கோவலனை பெறுவது ஒரு ராத்திரி கதை . கோவலன் கண்ணகியை மணந்து மாதவியிடம் அடிமையாகி மீண்டு வருவது ஒரு ராத்திரி கதை.. சிலம்பு விற்க போகும் கோவலன் மதுரை வஞ்சி பத்தான் ஆசாரி சதியில் கொலையாகுவது மூன்றாம் ராத்திரி கதை ... <br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjbnLJMrksoe-bRk36M6dO0QP5TauYzuTr0eYvdF2wizL2kOgQiBIkPUkzXB2oSwandi2DebMVwzwH9Op1dj2B-N7uUYLZTC6ECsCxernlhDAySGJ1uYe_8fXe9FhyUKfjIveV50np0DRWz/s1600/DSC03808.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjbnLJMrksoe-bRk36M6dO0QP5TauYzuTr0eYvdF2wizL2kOgQiBIkPUkzXB2oSwandi2DebMVwzwH9Op1dj2B-N7uUYLZTC6ECsCxernlhDAySGJ1uYe_8fXe9FhyUKfjIveV50np0DRWz/s1600/DSC03808.JPG" height="320" width="180" /></a></div>
<br />
பார்வை வடிவ படிம மொழியை ஆடும் சபையில் செயற்படுத்தும் கூத்தாடி நிகழ்த்துதல் மூலம் சுவை உணர்வை அனுபவமாக சமைத்து தருகிறான் .கருத்து புலப்பாடு அதன் காத்திரமான அங்கம். ..கலைஞன் எண் வித உணர்ச்சி குறிப்புகள் மற்றும் குரல் வழி- உடல் வழி- அணி வழி உள்ளிட்ட நான்கு வகை வெளிப்படுத்துதல் வாயிலாக அவையோருக்கு ஆக சிறந்த இரசனையை - உய்த்தலை உண்டாக்குகிறான் .<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiRjuQICF8rYUmFBlEy8f7knh7aFucTkQvERLt1x_6joaVZG1eLI34uWBTqHYHbQY0jmIlTI1gNnUOgf5CdCFzkYsnQQ_U10AF7zLBmHRPOpaIJA7bq6B5s72hjQSykdh50LjjrhRG5zAgq/s1600/DSC03841.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiRjuQICF8rYUmFBlEy8f7knh7aFucTkQvERLt1x_6joaVZG1eLI34uWBTqHYHbQY0jmIlTI1gNnUOgf5CdCFzkYsnQQ_U10AF7zLBmHRPOpaIJA7bq6B5s72hjQSykdh50LjjrhRG5zAgq/s1600/DSC03841.JPG" height="320" width="180" /></a></div>
<br />
சுப்ருவுக்கு அன்று தலை வேடம் ..முதன்மை பாத்திரம் .. சரியாக இரவு பத்துமணிக்கு அரங்கில் தோன்றியவர் பூர்வோத்திரங்களை வருணித்து முடிக்க ஒன்றரை மணித்தியாலங்கள் ஆகியிருந்தது ..<br />
கண்ணுக்கு வெளிச்சமான் வேடம்...தாளம் - காலம் -சுருதி பிசகாத பாட்டு வித்தியாசமான ஆட்டமுறைமை . புத்திக்கு உறைத்த கதை.<br />
<br />
அர்ச்சுனன் தபசுக்கு - ஜம்பை, ஆரவல்லி சண்டை அல்லிமுத்து பந்தயம், மதுரை வீரன் ஆகியவற்றுக்கு சுத்தமான ஆதி , அண்ணமார் சரித்திரத்துக்கும் நூதன ஓட்ட நாடகமென்னும் சித்தரவல்லி கூத்துக்கும்- நொண்டி சிந்து .....<br />
<br />
இந்த கோவலன் கூத்துக்கு ஓரடி ஆதி சாப்பில் அமைந்த ஏக தாள மெட்டு வரிசை பாத்தியம் . அத்துடன் ஆதி, அடவு, திருப்படை,ரூபகம், ஜம்பை, நொண்டிச்சிந்து,கும்மிதாளம் என்ற தாள வரிசைகளையும் பாவித்து நிகழ்வுக்கு செழுமை சேர்த்தார்கள்<br />
<br />
<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQIjaTamHwYHEj2Oyvo4X8n_WUZ3-kv27sYMTPIZu-PrS9mxE-Hz4xXVmqNFoBQZPxS6O4dcIvuk0dWmVBKhIhfDU1e29JQx7PvNaLczS-Va5CZH3JdbNKqGRh1_0-eGOIAaOcimolt6NH/s1600/DSC03869.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQIjaTamHwYHEj2Oyvo4X8n_WUZ3-kv27sYMTPIZu-PrS9mxE-Hz4xXVmqNFoBQZPxS6O4dcIvuk0dWmVBKhIhfDU1e29JQx7PvNaLczS-Va5CZH3JdbNKqGRh1_0-eGOIAaOcimolt6NH/s1600/DSC03869.JPG" height="320" width="180" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj9ndQwTYM4R5qF042Ew6YjOmtvEHY9sm28oTkqxAkOQllw156sCDO684y9UgkoF8036PTtqDJo9Zf1pqoJdWy3DmqCgUPEoZm_BHmwy-D45MXUJyS3sgMEzaHgNPjk-1M6xjCBxCuKohyw/s1600/DSC03871.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj9ndQwTYM4R5qF042Ew6YjOmtvEHY9sm28oTkqxAkOQllw156sCDO684y9UgkoF8036PTtqDJo9Zf1pqoJdWy3DmqCgUPEoZm_BHmwy-D45MXUJyS3sgMEzaHgNPjk-1M6xjCBxCuKohyw/s1600/DSC03871.JPG" height="320" width="180" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgGeT7Xn2a_PZaCtqwC3deyAWfps4MEKNC7c8egnPIuHWSS9QI4q1TQCkxVUfKfmh5SPOYUzF06q8YpJ63B4jRvcPSOiBsoRxf_C-fEWluNbfE_TRDv9SWcNjFNdi3RexCCHVuXLD0ogaok/s1600/DSC03876.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgGeT7Xn2a_PZaCtqwC3deyAWfps4MEKNC7c8egnPIuHWSS9QI4q1TQCkxVUfKfmh5SPOYUzF06q8YpJ63B4jRvcPSOiBsoRxf_C-fEWluNbfE_TRDv9SWcNjFNdi3RexCCHVuXLD0ogaok/s1600/DSC03876.JPG" height="320" width="180" /></a></div>
<br />
ஆசாரி சிரமறுப்பேன்<br />
<br />
அருந்தாமாலை ஸ்தனமறுப்பேன்<br />
<br />
பொன்னரசன் உடல் கிழிப்பேன்<br />
#<br />
அத்த அத்த மாமி அத்த<br />
<br />
ஆகாத கனவு கண்டேன்<br />
<br />
வாழ மரம் சாயக்கண்டேன்<br />
<br />
வடிவழகன் சாக கண்டேன்<br />
<br />
தென்ன மரம் சாயக்கண்டேன்<br />
<br />
என் தேசிகரும் மடிய க்கண்டேன்<br />
#<br />
கொண்டவளை சிறையில் வைத்து<br />
<br />
கூத்து பார்க்க போனேன் அண்ணா<br />
<br />
மங்கையாளை சிறையில் வைத்து<br />
<br />
மாதாட்டம் பார்க்க போனேன் அண்ணா<br />
<br />
#<br />
<br />
<br />
<br />
போன்ற பாடல்களும் - இசையும் அம்பலக்கலையின் உயிர்த்தளம். ஆம் கூத்துப்பாதி கொட்டுப்பாதி .சேகர் அவர்களும் , மெய்வேல் அவர்களும் மாற்றி மிருதங்கம் வாசிக்க அன்றைய கூத்தின் பிரதான அம்சம் முகவீணை.<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhBiUv8dYKUCexW4rN0eU25nf80lCSaCtvcNVBLkuRBQexDyCMby2fXzO101I2yo2WDZfW_aE-PtMysrRgf3Dpw9pNY2VZDtD6UV1GJiK4BlabhhOTYBpuVqxiZtMrAteNHdXlrZ5P3KddZ/s1600/DSC03885.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhBiUv8dYKUCexW4rN0eU25nf80lCSaCtvcNVBLkuRBQexDyCMby2fXzO101I2yo2WDZfW_aE-PtMysrRgf3Dpw9pNY2VZDtD6UV1GJiK4BlabhhOTYBpuVqxiZtMrAteNHdXlrZ5P3KddZ/s1600/DSC03885.JPG" height="320" width="180" /></a></div>
<br />
<br />
ரெட்டிப்பாளையம் குப்பன் அவர்களையடுத்து வந்த தலைமுறையில் செல்வம் முதல்தரமான முகவீணைக் கலைஞர். நாபியில் பிறந்து கண்டத்தில் இழைந்து குழல் வழி வழிந்தோடும் நாதம் கேட்பவரை மனம் பேதலிக்க வைக்கும். அகவலிடுவது, அணுக்கள் கொடுப்பது, சரளி வரிசை என்று தேர்ந்த தெளிந்த இசைஞானம் இவருக்கென்றாலும், இழைத்து, இழைத்து நயமாக்கி அவர் வாசிக்கும் குழல் சோகத்தை, மந்தகாசத்தை, அதிகாரத்தை, ஆணவத்தை, அது எந்த உணர்ச்சி வெளிப்பாடாகயிருப்பினும் பிறழ்வு இன்றி பரிபூரணமாக நம்மை உணரவைக்கும் வித்தைகளையடக்கியது. உயிர் மூச்சை முதலாக்கி செய்யும் இந்த பிறப்புத் தொழிலுக்கு ஒவ்வொரு இரவும் ஒவ்வொரு பிரசவம். பிராணசங்கடமேற்று, மக்களை மகிழ்விக்கும் இசையை உற்பவனம் செய்யும் இவர்கள் கலைச் சேவை வெறும் புகழுரைக்கானது மட்டுமன்று!.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjEJu5_Jr_ozWo6emmI92lOlSHpLBdVldeYYCntVK7V6xHa-7LIbUFf6lU446dTuUvuGsatV_BfmvEI-eFMQLqYS06C0IveFNQBEYumDfmX5D2VKGCrS2pyRN4eUZOd6JYxl6lLSAMU3eJl/s1600/DSC03875.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjEJu5_Jr_ozWo6emmI92lOlSHpLBdVldeYYCntVK7V6xHa-7LIbUFf6lU446dTuUvuGsatV_BfmvEI-eFMQLqYS06C0IveFNQBEYumDfmX5D2VKGCrS2pyRN4eUZOd6JYxl6lLSAMU3eJl/s1600/DSC03875.JPG" height="320" width="180" /></a></div>
<br />
<br />
கரணம் தப்பினால் மரணம் என்பார்கள். தான் என்கிற வித்துவானோ அவர் எப்பேர்ப்பட்ட விற்பன்னரோ கூத்தில் கைத்தாளம் கலைந்தால் மிருதங்கம் வாசிப்பவர் மண்ணை கவ்வ வேண்டியதுதான் . அந்த வகையில் லயம் தப்பாது தாளமடித்த சுந்தரம் - கொழந்தையப்பன் இருவரும் கவனங் கொள்ளத்தக்கவர்கள்<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjUgVr1G54zwmT69mKC_q-OM2Zr8fkICG8ztGlg7Ew_bGCEqhKf2ueGaRxkBesCbOZw9gWoz_Rk3C-kNOnVrFBNjCvkfyPd_g2AJk7O5bocG7yF8BUTNoa_z3mxfyn9A02F_UC4ytGzN79S/s1600/DSC03841.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjUgVr1G54zwmT69mKC_q-OM2Zr8fkICG8ztGlg7Ew_bGCEqhKf2ueGaRxkBesCbOZw9gWoz_Rk3C-kNOnVrFBNjCvkfyPd_g2AJk7O5bocG7yF8BUTNoa_z3mxfyn9A02F_UC4ytGzN79S/s1600/DSC03841.JPG" height="320" width="180" /></a></div>
<br />
அன்று கனகு அப்பு தாசி வேடம் ஏற்றிருந்தார் .தெருக்கூத்தில் திருநங்கைகளை பங்கேற்க வைப்பதில் முன்னோடியானவர் கூலிப்பட்டி சுப்ரமணி வாத்தியார் அவர்களே! அவரது ஜமாவில் பங்கு பற்றிய ரேகா அவர்களை தொடர்ந்து ஒக்கிலிப்பட்டி சாமியாருடன் இயங்கிய அபிராமி, புவியரசி,ஆகியோருடன் கனகு அவர்களும் கடந்த பத்தாண்டு காலங்களாக வேடங்களிட்டு ஆடி வருகிறார். ஒப்பு நோக்கும்போது திருநங்கையருக்கு ஆடவர் பெண்டிரைக்காட்டிலும் விஞ்சிய கலைத்தேட்டமும்,நுகர்வும், உற்றுநோக்கி உள்வாங்கும் திறனும் இருப்பதை உணரலாம். மண்டோதரி, அதி வர்ணமாலை, துரோபதை, ஏலக்கன்னி போன்ற<br />
பெருங்கொண்ட கதைமாதர்களாக தோன்றும் கனகு தானதுவாகி பாத்திரத்தை கனம்பண்ணுவதோடு அவையை தனது பல்வேறு கோட்டுச்சித்திரங்கள்,பண்பட்ட ஒயிலாக்கம் வழி நிரப்பித்தருகிறார்.<br />
<br />
சுப்ரு அவர்களுடன் கரட்டூர் செல்வம் (பொன்னரசன் ),அய்யந்துரை ( அருந்தாமாலை ) மெய்வேல் (வஞ்சி பத்தான் )தருமன் (குப்பு தாசி ) சீனிவாசன் ( சுப்பு தாசி ) செந்தில் (பாண்டிய மன்னன்) ஆகியோரும் பாகம் ஏற்றிருந்தனர் . வாத்தியார் என்ற ஹோதாவில் உருட்டி மிரட்டி ஆர்ப்பாட்டங்கள் ஏதும் செய்யாத தோழமையுள்ள மூத்த கலைஞன் - அவன் குறிப்பறிந்து காரியமாற்றும் சகபாடிகளை காண ஆனந்தமாகயிருந்த அன்றிரவு நன்றிரவு.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhOJ8DhZxZYQyYieE-cxbcWIPcAliRWDMgwKrkLEdMqFIzADLew20Ut96Uyh93Cf9JPKAHS_IvwTh6X3PHIcD_3kIK8s9DYoUxITuMql4Se-bYYuuW1dr-RD5-oHlBRTGfD0_F3nEn006Q6/s1600/DSC03882.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhOJ8DhZxZYQyYieE-cxbcWIPcAliRWDMgwKrkLEdMqFIzADLew20Ut96Uyh93Cf9JPKAHS_IvwTh6X3PHIcD_3kIK8s9DYoUxITuMql4Se-bYYuuW1dr-RD5-oHlBRTGfD0_F3nEn006Q6/s1600/DSC03882.JPG" height="320" width="180" /></a></div>
<br />
பின்னொட்டு<br />
<br />
நிழல் சாய்ந்த பக்கம் குடை பிடித்து அதிகாரத்தை கைப்பற்றி விடும் புலவர் பெருமக்களுக்கு எப்படியோ சடையப்ப வள்ளல்கள் கிடைத்துவிடுகிறார்கள் .போஷகரையும் புரவலர்களையும் வாசகர்களையும் கொண்டு சேர்க்க ஊடகங்களையும் ஏற்ப்பாடு செய்த பிறகே பேனா மூடியை எழுத திறக்கும் நாம் . கூச்சமே படாது தகுதிக்கு மீறிய அங்கீகாரம் தேடும் நாம் , வாய்ப்பு அருகி நலிவடைந்து வரும் நமது தொல்கலைகளின் மேம்பாடு, மீட்டுருவாக்கம் , சீர்மை ,ஆவணமாக்கம் ,மதிப்பீடுகள் ,விமர்சனங்களின் ஊடாக சாத்தியப்பட்ட நகர்வு மற்றும் சம்பந்தப்பட்ட நிகழ்த்துக்கலைஞர்களின் வாழ்வியற் மேம்பாடு குறித்து ஒரு சிந்தனை தொடர்ச்சியை மேற்கொள்வதுடன் வாய் பேசிக்கொண்டிருப்பதை நிறுத்திவிட்டு வேலை மட்டும் பார்த்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் .<br />
<br />
கலைஞன் பார்வையாளன் இவ்விருவருடைய உறவு குறித்த ஆத்மார்த்தமான , தீர்க்கமான புரிந்துணர்வு இல்லையெனில் கலை படைப்பது வெட்டி வேலை .<br />
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
http://youtu.be/q7rV8b2P8zg</div>
<br />
<div align="right" class="MsoNormal" style="text-align: right;">
<br /></div>
<br />
<br /></div>
manalveeduhttp://www.blogger.com/profile/11701810894595985945noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-891272482416127046.post-82724701196580969412014-11-13T17:48:00.001-08:002014-11-13T17:48:15.757-08:00மன்மதன் ரதிக்கி மேலே வனத்தில்வாழும் குறத்தி கேளாய்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">
கொம்பாடிப்பட்டி ராஜூ - கூத்துக் கலைஞர்</div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">
ஓர் அற்புதமான கூத்துக்கலைஞன் என்பதற்கப்பால் ராஜீவைக் குறித்துச் சொல்ல நிறைய விசயங்களிருக்கின்றன. இன்று பெண் வேடம் தரிப்பவர் அறுதி பெரும்பான்மையினர் அவரையே முன்னோடியாகக் கொள்கின்றனர். வேடம் ஒன்றுக்கு மாத்திரமல்ல, போடும் ஒப்பனை, தோன்றும்பாத்திரம்,பாடும் சாரீரம், ஆடும் அடவென்று தனக்கென்ற ஓர் தனித்துவத்தை ஏற்படுத்திக் கொண்டவர். சென்னை லலிதகலா அகாதமியில் நடைபெற்ற தமிழ்நாடு-கர்நாடக மாநிலங்களுக்கிடையேயான கலாச்சார பரிவர்த்தனை நிகழ்வொன்றில் பாஞ்சாலி சபதம் கூத்து நடத்த வந்த ராஜூ அவர்களோடு மேற்கொண்ட உரையாடலில் பதிவான அவரது வாழ்க்கை பதிவிது!</div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjrYEV8szR6MGTyGD2JaYZPowNX0zZ3JS9ixKNwZRxUl1j0IBdpGnJBrWwOC7gsa0XqclLeEQrEGqfJPWQil7LPdHnXJRlD1OTX0hmhSSzDYUBfP_PtrvwxtApmPDtk7lME0FLBs3U7Qyx4/s1600/raji-2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjrYEV8szR6MGTyGD2JaYZPowNX0zZ3JS9ixKNwZRxUl1j0IBdpGnJBrWwOC7gsa0XqclLeEQrEGqfJPWQil7LPdHnXJRlD1OTX0hmhSSzDYUBfP_PtrvwxtApmPDtk7lME0FLBs3U7Qyx4/s320/raji-2.jpg" width="267" /></a></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">
-----------------எங்க சொந்த ஊரு சுண்டமேட்டூரு, ஆயி கோயிலு, பச்சாயி கோயிலு இருக்குதில்ல அந்த ஊரு.</div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">
அம்மா எனக்கு விவரந் தெரியுமுந்தியே செத்துப் போச்சிங்க. ஊருக்கு போனாலும், எங்க போனாலும், ஒரு ஒரம்பறைக்கிப் போனாலும்அப்பாதான் என்னய தோலுமேல தூக்கிவெச்சிக்கிட்டு வளத்துனாரு. நல்லபடியாத்தான் வளத்துனாரு. அப்பையே சின்ன பையனா இருக்கும்போதே கூத்தாடிச்சின்னா கூட்டிக்கிட்டுப் போவாரு. சால்ரா போடுவன். தூக்கி கக்கத்துல வெச்சிக்கிட்டு பாடச் சொன்னா அப்பையே பொட்டிக்கிச் சேத்தி பாடுவன். சுத்தி இருக்கறவங்கல்லாம் பேசிக்குவாங்க, பார்ரா இந்த அறியா வயசிலியே பையம் பொட்டிக்கி சேத்தி பாடறதன்னு. </div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">
அப்பா கட்ட பொம்மையில பேரு வாங்கனவரு. காருவள்ளிகாரங்கிட்ட பொம்மையாட்டிக்கிருந்தாரு. அதுக்கு முன்ன சிலிவாயன், வடுகப்பட்டி முத்துசெலவடகொன்னவாயன்இவங்களோடகூத்தாடிக்கிட்டிருந்தாரு. எங்கப்பாபட்டியிலகாவலுக்குபடுத்துக்கிட்டிருந்தாசெலவடகொன்னவாயந்தான் வந்து கூத்தாட எழுப்பிக்கிட்டு போவாராம். காலையில எங்க தாத்தன் கூத்தாடிப்பட்டு வர்ற எங்கப்பன தொரத்து தொரத்துன்னு தொரத்துவாராம். ஏன்னா ஆடு மேய்க்கப் போறவரு கூத்தாடிப்புட்டு களப்புல நெவுல்ல படுத்து தூங்கிப் போயிருவாராம், ஆட்ட தன்னப்பால வுட்டுட்டு. தாத்தனுக்கு காடு, தோட்டம் உண்டு வசதியான குடும்பம். முன்சீப்பே எங்க தாத்தாவ டே கொளந்தையின்னு கூப்பட மாட்டாராம் கொழந்தைப்பான்னு தான் கூப்புடுவாராம். மணியாரமூட்டுக் காடும் எங்க காடும் எணக்காடு. அப்பனுக்கு பொண்ணெடுத்தது பெரிய சீரகாபாடி. நாங்க பொறந்தது ரெண்டு பசங்க. எனக்கு நேரிளையவன் செத்துப்போயிட்டானாம். செம்மலைக்கி சித்தப்பா மவதான் எங்கம்மா. பசங்க பொறந்ததும் பொம்பள லாயிக்கில்லாத ரூட்ல போவ, அப்பா வுட்டுட்டாராம். எனக்கு தெரியாது, எல்லாருஞ் சொல்வாங்க. பொறவு அப்பா, இன்னோரு அம்மா ரெண்டாந்தாரங்கட்டி, அதுவும் ஒத்து வரல. பொம்பளைங்க சமாச்சாரத்துல அப்பன் ரெண்டு பேத்துக்கு மூத்தவரு. ரெண்டு பேத்துக்கு எளயவரு. இது புடிக்காம எங்க சின்னம்மா அவுத்தியே தனியாவொரு வீடு பாத்து இருந்திச்சி. எம்மேல ரொம்ப ஆசம்பா இருக்கும். தண்ணி வாத்துவுடும், சடபின்னி சிங்காரிச்சிவிடும். எதனா திம்பண்டம் வாங்கனா வெச்சிருந்து குடுக்கும், ஆனா எங்கப்பங்கிட்ட மட்லும் பேசறதில்ல. இப்பிடி இருக்கப்பட்ட நாளையில சின்னு சின்னுன்னு ஓராளு காருவள்ளியில, சீனு வரையிறதில மீறன கையி. அவுரு செட்டுக்கு ஆளு இல்லையின்னு வந்து கூப்புட்டாரு அப்பனும் நானும் சேரி வர்ரன்னுப்புட்டு போனம்.போயி மூணு மாசமாட்டம் பொம்ம கூத்து நடத்தனம். அங்க தெனமும் டெண்டக்கட்டி ரைட்டு போட்டுவுட்டார்ராங்களா வௌயாட புடிக்க குசாலமா இருக்கும். நல்லா அவ்வள அவ்வளசைசி பசங்கள செட்டு சேத்திக்கிட்டு ஓடறது, ஓடியார்றது, குதிக்கிறது இப்பிடி வௌயாடிக்கிட்டிருந்தம்.</div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">
ஒருநாளு நானு துண்ட முறுக்கி கத்தி மாதிரி சொழட்டி அடிக்க ஒரு பையன் உசுரு நெலயிலபட்டு ரத்த ரத்தமா ஊத்துது. ஊராரு அடிக்க தண்டு கட்டிக்கிட்டு என்னய தேடறாங்க. ஆரந்த பையங் கூப்புடுங்க கூப்புடுங்கன்னு ஒரே புடியா நிக்கறாங்க.</div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">
இந்த சம்பவம் நடந்தது கீழ்வால!.</div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgLFgAfa37VO1BSSEi31yr_DhJ2JzUgYbQuiSFHIemXQAiJaJ3RVkKDWtXZz8IdXwBlkV3gDHFGp9Gcr2NERaDw4PdtBt2sYzdCvqnC6G4Cib6av1h7WggDJMd7xBS43r0ZSyWSZPXJ7Ino/s1600/137.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgLFgAfa37VO1BSSEi31yr_DhJ2JzUgYbQuiSFHIemXQAiJaJ3RVkKDWtXZz8IdXwBlkV3gDHFGp9Gcr2NERaDw4PdtBt2sYzdCvqnC6G4Cib6av1h7WggDJMd7xBS43r0ZSyWSZPXJ7Ino/s320/137.jpg" width="244" /></a></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">
அப்பரம் பொம்ம வெக்கிற பொட்டியிருக்குமில்ல பெரிய பொட்டி, ராமரு பொம்ம, சீத பொம்ம, பொம்மய பூரா எடுத்துப்புட்டு அடியில என்னய படுக்க வெச்சி மேல பொம்மய அடுக்கிப்புட்டாங்க. கேட்டவங்களுக்கு எந்த பையங்க எங்ககிட்ட இருக்கறான், இருக்கறவிங்க பூராம் பெரியாளுங்கன்னு சமாளிச்சிப்புட்டாங்க. மணி ரெண்டு இருக்கும். வண்டிகட்டி ஒரு பத்து மையிலு தாட்டி பஸ்சு ஏத்திவுட்டாங்க. அப்பறந்தான் எங்க பாட்டி வூடு பெரிய சீரகாபாடிக்கு வந்தம். எங்கப்பா காட்டு வேலைக்கிப் போனாரு. நானு தறி நேயப்போனன். கைத்தறி நேசிக்கிட்டு இருக்கும்போது பள்ளிக் கோடத்துக்கு எதுத்தாப்ல குச்சி வூடு இருக்குதுல்ல அதுல நானும் ங்கப்பனும் சோறாக்கி தின்னுக்கிட்டிருந்தம். இருக்க வூடுல்லாம இப்பிடியே தறி நெஞ்சிக்கிட்டிருந்தா என்னா செய்யறது எப்பிடி பொழைக்கிறது வெசனம் புடிச்சிக்க, சேரி இந்த வூட்ட வாங்கி கெரயம் பண்டலாமுன்னு தீர்மானம் பண்டி வூட்டுக்காரங்கிட்ட எரநூத்தி பத்து உருவாயிக்கி வூட்ட வெல பேசிப்புட்டன். கையில சல்லிக்காசில்ல. வெறுங்கைய மொழம் போட முடியுமா? இங்க தறியோட்டிக்கிட்டிருந்தனே அதவுட்டுட்டு இன்னோரு மொதலாளியிண்ட போயி அண்ணா எனக்கு தறியோட்ட தெரியும், நாளையிலிருந்து நம்ப தறிக்கி வர்ரன். இப்பிடித் தான் வூட்ட வெலக் கூறிப்புட்டண்ணா, பாக்கி எரநூத்தி பத்து ரூவா குடுங்கண்ணு கேட்டன். அந்த மொதலாளி சேரி தம்பி காச காலையில தர்றன். ஆனா ரவைக்கி வந்து நீ தறிஓட்டு,அதபாத்துட்டுத்தான்பணந்தாருவன்னு கட்டாச்சாரமாச் சொல்ல, நானு ராத்திரியே போயி சாயிண்டு தறிக்காரன காக்காப் புடிச்சி விடியறதுக்குள்ள ஏழு தாரு ஓட்டிப்புட்டன். காத்தால மவராசன் பணத்த குடுக்க வாங்கியாந்து வூட்டுக்கு கட்டிப்புட்டேன். இப்பிடியே துண்டு தறியில இருந்து சர்வீசாவி எஸ்போட்டு (எக்ஸ்போர்ட்) தறிக்கு போவாரம்பிச்சேன். அந்தச் சமயம் வூட்டுமேல ஒரே ஓலக்கட்டயில்ல. எல்லாங்கரயாந் தின்னுபுடிச்சி. வூட்ட மேயணுமே !நேரா வேம்படிதாளத்துலஆட்டையாம்பட்டியாரு ஆட்டையாம்பட்டியாருன்னு ஒருத்தரு! அவுருக்கிட்ட போயி அண்ணா ஐநூறு உருவா கடந்தாருங்கண்ணா நம்ப தறிக்கு வாரன்னு கேக்க, அவரு யாருப்பா நீயி எந்தூரப்பா, சாலச்சட்டையா வந்து பணங்கேக்கறங்க, நானு இப்பிடித்தாண்ணா உங்களிண்ட தறியோட்ற பழனிசாமிக்கி பக்கத்தூட்டுக்காரன்னு சொன்னன். அவரு பழனிசாமிய கூப்புட்டு ஏப்பா பையம் பாக்கி கேக்கறான் வாங்கிக்கிட்டுப் போயிட்டு வராம இருந்துக்கிட்டா ஆரப்போயி நாங்கேக்கறதுங்க, பழனிசாமி நானாச்சிங்க பையனுக்கு சாமினுன்னு ஏத்துக்க, அப்பையே செட்டியாரு பணத்த எண்ணி குடுக்க, வாங்கிட்டு போயி, கன்னந்தேறியில எங்க சின்னாயி புருசங்காட்ல கரும்புசோவ இருந்திச்சி, வண்டியில ஏத்தியாந்து, வூட்ட நல்ல வெல்ல அச்சுமாதர கிர்ன்னு மேஞ்சிப்புட்டன். காச வாங்கியாந்து மூணு நாளு வேலைக்கிப் போவல. மூணா நாளு போனன். செட்டியாரு என்னடா தம்பி காச வாங்கனதும் ஆள கண்ல காங்க முடியலன்னு ஆவேசப் பட்டாரு! நானு இப்பிடித்தான்னா வூடு மேயத்தாம் பாக்கி கேட்டன், நேத்து வூட்டு வேல முடிஞ்சது, இன்னமேட்டு வேலைக்கி ஒழுக்கமா வந்துருவேன்னு தவுமானஞ்சொல்ல, அவருஞ் சேரிங்க அங்க போயிக்கிட்டிருந்தன்.</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjhjPQXKpkkVPMGPDb7R45HHuWfUCJOeCJ3JqFMtgBxCpYc2C9dZZTBEuuGfxQv73dQDX_23_GNizn2ZJs2IqTiUL8jY0_aQ4Zyp_zqFSoZyMpvVmlANYc9ncGYyChi6N2PRUXvjXIjhpUS/s1600/10620766_686994094712039_4835362356438794501_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjhjPQXKpkkVPMGPDb7R45HHuWfUCJOeCJ3JqFMtgBxCpYc2C9dZZTBEuuGfxQv73dQDX_23_GNizn2ZJs2IqTiUL8jY0_aQ4Zyp_zqFSoZyMpvVmlANYc9ncGYyChi6N2PRUXvjXIjhpUS/s320/10620766_686994094712039_4835362356438794501_n.jpg" width="180" /></a></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">
கொம்பாடிப்பட்டி அம்மங்கோயிலு நோம்பிச் சாட்டியாச்சின்னா அந்தாண்ட மூணு நாலு மாசத்திக்கி ஒரு நாளுவுட்டு ஒரு நாளு கூத்து ஆடியேருப்பாங்க. அந்தெட்டு கூலிப்பட்டி சுப்ரமணி, குருக்குப்பட்டி கணேசன் இவிங்க ரெண்டு பேருதான் இவத்த கூத்துக்கு காணியாச்சி, நல்ல பேருங்கூட. குருக்குப்பட்டி செட்ல அப்ப சோரக ஆறுமுகம் இருந்தாப்ல. ரெட்டச்சட போட்டு பொண்ணு வேசங்கட்டி சண்டாளன் வெளிய வந்தா இன்னஞ்சித்த பாத்தாவாச்சின்னு இருக்கும். அன்னாடம் நாங்க தறி ஓட்டற பசங்க ரவ்வு சிப்ட்டு பாக்கறவங்க ஒரு மணிக்கு மோட்டார நிறுத்தவம். டீ குடிக்க வந்து அப்பிடி ஒசுருக்கா நின்னு கூத்து பாப்பம். அந்த மாதர ஒருப்பூட்டு, அம்மங்கோயில்ல செகநாதஞ்செட்டு கூத்தாட, போயி பாத்துக்கிட்டுருந்தம். அவஞ் செட்டு சூரவேசக்காரன் மெய்யழகனுக்கொரு பொறந்தவன், அவம்பேரு ஆறுமுகம், ஆளு நல்ல செவப்பு கூளயா பந்தடிச்சாப்ல இருப்பான். அவெனங்கியோவொரு சண்ட தகராறுல ஒருத்தம் மண்டயப் பொளக்க, போலிசி கேசாவி போலிசிக்காரங்க ஆளுக்கு வலப்போட்டு தொழாவிக்கிட்டு கூத்து டேசிக்கே வந்துட்டாங்க. செகநாதனும் சூரவேசக்கார மெய்யழகனும் என்னாப் பண்டனாங்க, இந்த ஆறுமொகத்துக்கு தாவணி பாவாட கட்டி சாரி வேசத்த போட்டு சவையில வுட்டுட்டாங்க போலிசு ஆள துப்பு காங்க முடியாம சித்தங்கூறியும் தொழாவிப்புட்டு போயிட்டாங்க. வேசம் போட்டு வெளிய வந்த ஆறுமொவத்துக்கு கட்ட தொண்ட!</div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">
“செந்தார்மலர் பாதனே வந்தேன் குருநாதனே” ன்னு பாட எனக்குன்னா கர்ண கொடூரத்த கேக்க மனம் ஒப்பல. பசங்கள வாங்கடான்னு இழுத்துக்கிட்டு, எப்பயும் குந்தி பொறுமையா கூத்த பாக்கறவன் அன்னைக்கிங்க இந்த ஆறுமொவம் வேசத்த பாக்கப் பொறுக்காம பாதியிலேயே தறிக்கி மோட்டார் போட பொறப்பட்டுட்டன். போயிதான் தறி ஓட்ட முடிஞ்சிதா? முடியல. ஓடாத எண்ணமெல்லாம் பொந்தியில ஓடுது. மனசே ஒரு நெலயில இல்ல. என்னடா இவனெல்லாம் வேசம்போட்டு கூத்தாடும்போது, நம்பளால முடியாதா, அப்பிடின்னு. ராத்திரி எப்படியோ விடிஞ்சது, விடிஞ்சி போயி படுத்தா கண்ணக் குத்தனாலும் தூக்கம் வல்ல. நானுத் தூங்கவுமில்ல. துருவா போனன் செங்கோடம் பாளையம், சுப்ரமணிக்கிட்ட கூத்துக்கு வர்ரன்னு கேக்க. அதுக்குமிந்தியே சுப்ரமணி ஓராடஞ் செட்டுக்கு ஆளுப் பத்தலைன்னு அப்பங்கிட்ட வந்து கருப்பண்ணா! கருப்பண்ணா! பையன ஆட்டத்துக்கு வுடு கருப்பண்ணா! தொழிலு அவனுக்கு அமையுமுன்னு கேக்க, அப்பன் என்னோட போவுட்டுமிந்த கூத்து, பையனுக்கு அது வேண்டாமுன்னு ஒரே தீர்மானமாச் சொல்லிப்புட்டாரு. அட அப்பன் இப்பிடி சொல்லியிருக்க நாம்ப போயி கேட்டா நல்லாயிருக்குமான்னு நானு ஓசிக்கல. நேரா போனன். ஏப்பா என்ன வந்ததுன்னு கேட்டாரு. கூத்துக்கு வரலாமுன்னு இருக்கறன்ணான்னேன். கூத்து பாக்க வர்றியா, இல்ல கூத்தாட வர்றியான்னாரு. கூத்தாடத்தாண்ணா வரலாமுன்னிருக்கறன்னேன். டேயெப்பா என்னா திடீருனு இந்த கூத்து மேல பிரியமுன்னு கேக்க, நானு இப்பிடி, இப்பிடித்தான்னா சமாச்சாரம் நேத்து ராத்திரி மெய்யழகந்தம்பி பொண்ணு வேசம் போட்டு ஆட, அதப்பாத்ததுந்தாண்ணா அவனெல்லாம் பாவாட தாவணிக்கட்டி பொண்ணு வேசம் போடறானே நாம்ப போட்டா என்னான்னு அதும்பேர்லவொரு நாட்டமின்னேன். சேரி அப்பிடின்னா, உறுதியா வாரயான்னாரு, உறுதியா வர்ரமின்னேன். </div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhgmUSnnWURPEYkxIAEDxliqQmBqA7DQZGO9aywMkYIe55hpw5xeY4suDgJRI0nngyUSP1zgKGieR1JRGluqdJTQ8BqqOzpMRbGwTpi6MBXt5HX8nJp9OfuD7AzvEQv-hyOXORKtp-uKD5f/s1600/Copy+of+Picture+014.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhgmUSnnWURPEYkxIAEDxliqQmBqA7DQZGO9aywMkYIe55hpw5xeY4suDgJRI0nngyUSP1zgKGieR1JRGluqdJTQ8BqqOzpMRbGwTpi6MBXt5HX8nJp9OfuD7AzvEQv-hyOXORKtp-uKD5f/s320/Copy+of+Picture+014.jpg" width="191" /></a></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">
அவரு சமாவுல கூடலூரு மாரிமுத்துன்னு ஓராளு நம்ப தென்னாட்டுல சோகக் கட்டத்துக்கு அவருதான் மெயினு. அவரவுட்டா வேற ஆளில்ல. மாரிமுத்து, அரியானூரு பழனிசாமி, சாத்தனூரு வெள்ளையன் இவிங்க மூணு பேருந்தான் சாரி வேசம். வேசங்கட்ட என்னென்ன பொருளு வேணுமுன்னேன், என்னா வேணும்? ரெண்டு சவுரி சீல சாக்கிட்டு பாவாட வேணும். சலங்க வேணும் அதுக்கூட வேற ஆருக்கிட்டயாச்சும் எறவலு வாங்கிக்கலாம். சொன்னதயெல்லாம் எடுத்துக்கிட்டு பொறைக்கி பாலம்பட்டி பெருமாக் கோயில்ல ஆட்டம் நேரமா வந்துருன்னாரு. அங்கிருந்து வூட்டுக்கு வந்ததும் பக்கத்தூட்ல சலங்க காயி வெச்சிருந்தாங்க. ஒரு காயி ஒண்ற உருவாயின்னு அறுவது காயி வாங்கி சலங்க செட் பண்டன கையோட சீல, சாக்கிட்டு, பாவாடயும் எடுத்துவொரு பையில தயாரா வெச்சிக்கிட்டு மத்தியானம் ரெண்டு மணி வரைக்குந் தூங்கனன். அட நேரமா வர்ரச் சொன்னாங்களேன்னு எந்திரிச்சி கௌம்பி அரியானூரு போயி அங்கிருந்து பாலம்பட்டிக்கி மூணு மணிக்கெல்லாம் போயிட்டன். பஸ்சவுட்ட எறங்கனதுந்தான் நெனப்பு வந்திச்சி, அடடா பெருமாக் கோயிலு கூத்துன்னாரே, கோயிலுக்கிட்ட கூத்தா, ஊருக்குள்ள கூத்தா ஆடற எடம் எவுத்தன்னு கேக்காத வுட்டுட்டமே, எதக்கண்டு தாவு சேர்றதுன்னு ஒரே தடுமாட்டமாப் போச்சி. சேரின்னு டாப்பிங்கிலியே விசாரிச்சேன். அவிங்க கெழபொறமா ஒரு பர்லாங்கு நடந்துபோ, ரோட்டோரம் போரிங்கி பைப்பிருக்கும் அதுக்கு எதுப்புற இருக்கற கூர வூட்டுக்காரமூட்டாருதாங் கூத்துவுட்ருக்காங்கன்னு வெவரஞ் சொன்னாங்க. மொள்ள தடம் புடிச்சேங் கூற வூட்டுக்கு. எவுத்தயிருக்கறாங்களோ ஆளுங்கவொருத்தருங்காணமே!நாம்பதாவொரு வேகத்துல நேரங்கெட்ட நேரத்தல வந்துட்ட மாட்டமிருக்குதுன்னு பலத ஔப்பிக்கிட்டு...... அங்க போனா சால்ரா போடறவனும், பொட்டி மீட்றவனும் கோரப்பாய விரிச்சுட்டு படுத்துக்கிட்டிருந்தாங்க. எங்கியோ கூத்தாடிப்புட்டு நெட்டா மக்யாநாத்து ஆட்டமுட்டவிங்க வூட்டுக்கே வந்துட்டாங்களாட்டமிருக்குது. எந்த கூத்தாடிங்களுக்கு என்னைய தெரியாதிருக்குது, அம்மங்கோயில்ல கூத்தாட வார அத்தன ஆட்டக்காரனுக்கும் பவ்வத்துஉருவா பின்னுக்குத்துவன். நானு ரொம்ப ரசிப்புத்தம்மையோட பின்னுக்குத்தனது அக்ராவரம் ராமன். பாருங்க நம்ப மாது செட்ல குந்தி வேசம் போடுவாரு, அப்பறம் நாம்ப பாப்புக் கோமாளி. எந்த ஜமா வந்தாடனாலும் ஓராளு தொச்சமில்லாம ஓராளு தொச்சமில்லாம பின்னுக்குத்துவன். அதனால சுப்ரமணி செட்டுல அன்னைக்கி வந்த பொட்டிக்காரனும் மத்தாளக்காரனும் என்னய நெப்பு கண்டு, ஏப்பா ராசு எங்க வந்த? என்னா இவ்ளத் தூரமின்னு கேக்க, ஏப்பா என்னாப்பா இவ்வளத்தூரமின்னு கேக்கறீங்க நானும் ஆட்டத்துக்குத்தாம்பா வந்துருக்கறன், நீங்கயென்றான்னா எங்க வந்த? எவத்த வந்தன்னு? இப்பிடி சிலப்பமா கேக்கறீங்கங்கும்பிடி அவிங்க அடடா ஆட்டத்துக்கு வந்தபரவால்ல எடு, வா வா வந்துயிப்பிடி படுன்னு அந்த பாயில எடமுட்டு என்னையும் படுக்க வெச்சிக்கிட்டாங்க மணி ஆறாச்சி, ஏழு, எட்டாச்சி ஒம்போது மணிக்கு ஒவ்வொருத்தரா வந்து சேந்தாங்க. </div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhf6NyhtK1LZQ7-chL796ac2bRNd78f2NfCHndIQtKpesp2XQR2Q2URBJzNvn1Qe6_V4UkljoSIAh6U1M1gobRBGf-so_PKQtu_WA5sgNnw11TLZb-h6p09NvvvtVXf5RykWAYBtK8hwxd5/s1600/DSC00841.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhf6NyhtK1LZQ7-chL796ac2bRNd78f2NfCHndIQtKpesp2XQR2Q2URBJzNvn1Qe6_V4UkljoSIAh6U1M1gobRBGf-so_PKQtu_WA5sgNnw11TLZb-h6p09NvvvtVXf5RykWAYBtK8hwxd5/s320/DSC00841.JPG" width="240" /></a></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">
செட்டு மெயினு பொண்ணு வேசக்காரனிருந்தானே கூடலூரு மாரிமுத்து! அவனும், சூரவேசம்போடற மெய்வேலும் ராத்திரி மணி பத்தே காலுக்கு லாடங்கட்ன தோலு செருப்பு போட்டுக்கிட்டு, சும்மா நறுக்கு நறுக்குன்னு வர்ராங்கப்பா. அன்னநேரமுட்டும் வந்தவிங்க ஒருத்தரு பாக்கியில்லாம வாத்தி வரங்குடுத்த சுப்பிரமணி அவிங்க ரெண்டு பேத்தயும் ஏண்டா இவ்வளநேரங்கழிச்சி வர்றீங்கன்னு ஒருவார்த்த கேக்கல. வந்தும் வராதமின்ன அவிங்களுக்கு கைக்கி தண்ணி குடுங்க வந்து சோறுங்குட்டுமுங்கறாரு. சாப்ட்டம் போனம். என்னடா வேசம் போடறியான்னு ஆளத்தூக்கி கனம் பாத்தாரு. நானு வுடல, என்னான்னா இப்பிடி கேக்கற வேசம் போடதான் வந்துருக்கறன்னன். சேரி இரு பாக்கலாம் என்னா அலங்காரம் வெக்கறாங்கன்னு பாத்துட்டுச் சொல்றன்னு டேசிக்குள்ற போயிட்டாரு. ராமகறவத்தான் பாப்பு வெளிய வந்தான். ஆசி கேக்கக்குள்ள என்ற ரசிகன் ராசு இருக்கறாப்ல உள்ள அவர வரச்சொல்லுங்கன்னான். நானுப் போனன் வணக்கண்ணான்னன். ஏப்பா நீ செட்டுக்கு சேந்த ஆளுதான? பாட்டி வயசிக்கி வந்துட்டா கூத்துவுட கூத்தாடிங்கள தேடிக்கிட்டு திலும்பனன். பாலம்பட்டியில கூத்துன்னாங்க, உங்கள பாத்துட்டு வெத்தலப் பாக்கு குடுக்கலாமின்னு...</div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">
ஆமா உங்களுக்கு வருணமால தவிசி கூத்து ஆடத் தெரியுமான்னாரு. </div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">
நானு அன்னைக்கித்தான் சவையில போயி மொத தபா நிக்கறன். இருந்தாலுங் கூச்ச நாச்சமில்லாம என்னாங்க இப்பிடி சொல்றீங்க, பிரமாதமா ஆடுவங்க, வருணமால தவிசி எங்களுக்கு தண்ணி பட்ட பாடுங்கன்னன், எங்க ரெண்டடி பாட்டு பாடுன்னாரு பாப்பு. நாலடி பாட்டுத்தாம் பாடனன், படுத்திருந்தவரு எந்திரிச்சிவந்து சால்ரா போட்டாரு கூலிப்பட்டியாரு. நானு படக்குன்னு நாலடி பாடி நிறுத்தனதும், பாட்டு ருசனையில சுப்ரமணி அட ஏண்டா நிறுத்தன பாடறா, வேசமாக இன்னும் நேரமிருக்குதுன்னாரு. அரமணி நேரம் பாடனன். வருணமால புள்ள இல்லாத கொறயில புருசங்கிட்ட சொல்லி பொலம்பறது, அண்ண பொண்டாட்டிக்கிட்ட அழுவறதுன்னு வுட்டு பொளந்து கட்டனன்.</div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">
அருமப்பா பிரமாதமா பாடற! நல்லா வருவ. இன்னைக்கி என்னா அலங்காரம் அதச் சொல்லுன்னாரு. </div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">
அண்ணா அதுக்கு வதுலுச் சொல்ல எங்க வாத்தியாரு இருக்கறாரு அவர வரச் சொல்றன்னு டேசிக்குள்ள வந்துட்டன். </div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgMuwr-Zm4tgqX-WNKDsrW4XoYZ92VaFBaByhvuv0x_8waYAiIhr-RPajqGxg50VOua4T6R6dddx-vclzgvJNdar5Y4yaGtYkvUK6_86KcMWadX0qMO03xWCe8xh2wQKYhRS8nVhFfixwjv/s1600/Untitled-6.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgMuwr-Zm4tgqX-WNKDsrW4XoYZ92VaFBaByhvuv0x_8waYAiIhr-RPajqGxg50VOua4T6R6dddx-vclzgvJNdar5Y4yaGtYkvUK6_86KcMWadX0qMO03xWCe8xh2wQKYhRS8nVhFfixwjv/s320/Untitled-6.jpg" width="134" /></a></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">
என்னா கூத்து வெக்கிறாங்களோ, ஆரு கூத்துவுட்டவங்களோ நாம்ப என்னத்தக்கண்டம். அத தூக்கிட்டு நாம்ப ஏம்பா திரியணும்?</div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">
அலங்காரம் ஆரவல்லிச் சண்ட வெச்சிட்டாங்க. ராசுக்கு பொண்ணு வேசம் போட்டுவுட்டு ஏழு பொம்பளைங்களோட ஒரு பொம்பளையா முடுக்குன்னவரு, மறுக்க என்னா நெனச்சாரோ, ஏப்பா ராசு உனக்கென்னாஆடத்தெரியுமா? பாடத்தெரியுமா?நடதான்நடக்கத்தெரியுமா இல்ல வசனந்தாம் பேசத் தெரியிமா? அவிங்களோட வந்து என்னாப் பண்டுவ, நீ பல்வருசா போட்டுக்க. கண்ணே பல்வருசான்னா வெளிய ஓடியாந்துருன்னாரு வாத்தியாரு..</div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">
சேரிப்பான்னுட்டு வேசம் போட்டன். அன்னைக்கி தாரமங்கலம் மாது வந்துருக்கறாப்ல. என்னு வேசத்தப் பாத்துட்டு, என்னா தம்பி கெழவி கட்ற சீலய எடுத்தாந்துருக்கற வயசிப்பையன், முகமான வேசம் பீத்த சீல வேண்டாமடா இருன்னு அவரு கொண்டாந்த பாவாட தாவணி அவரு கொண்டாந்த டோப்பாவ வெச்சி நல்ல கட்டபொம்மையாட்டம் கும்முனு சிங்காரிச்சி வுட்டாரு மவராசன்.</div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">
ஏப்பா சுப்ரமணி நல்ல வேசத்த உள்ற குந்த வெச்சிக்கிட்டு நீங்களா ஔப்பரிச்சிட்டிருக்கறீங்க! அவன வெளியவுடங்கப்பா!வௌயாடட்டமுன்னு பறக்கறாங்க கூத்து பாக்க வந்த சனம்!.</div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">
ஆரவல்லிய பந்தயத்துல செவிச்ச அல்லிமுத்துவுக்கு வெற்றி பரிசு குடுக்கற கட்டம். எங்க உங்க பொண்ண கொஞ்சங் கூப்புடுங்கன்னாரு சுப்ரமணி. ஆரவல்லி வேசக்காரன் கண்ணே பல்வருசா வாடி! வெளியன்னான்.</div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">
நானு உள்றயிருந்துக்கிட்டே “ஓ அம்மா, ஏம்மா பாதாள செறயில இருக்கறன். சூரிய வெளிச்சமே தெரியல! தாளு நீக்கி சிறையிலிருந்து என்னய விடுவிச்சாத்தாம்மா நானு வெளிய வரமுடியும் சிறைய நீக்குமா மொதல்ல”ன்னேன்.</div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">
அப்பையே கூடலூரு மாரிமுத்துக்கு சப்புன்னு ஆயிப்போச்சி. நேத்து பேஞ்ச மழயில இன்னைக்கி மொளச்ச காளான், பவுடரு போட்டு முழுசா வேசமாடல, பூராக்கதையுந் தெரியுது! பல்வருசா பாதாள சிறையில இருக்கறதுந் தெரியிதேன்னு அவிங்க புழுங்க, நானு சவைக்கி தர்பாரு ஆனன். சுப்ரமணி என்னய சும்மாவே நோண்டராரு, இதுதாம் பொண்ணா, இதுதாம் பொண்ணா, ஏம்பிள்ள முகஞ்சோந்தாப்ல இருக்குதுன்னு நானும் அவுத்த வெக்கப்பட்டு ஓடறது இவித்த வெக்கப்பட்டு ஒடறதுன்ன வெறும் பாவ்லா பண்றன்.</div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">
கதப்பிரகாரம் பின்ன மரச்சோலைக்குப் போற கட்டம். எலுமிச்சங்கனி பூச்செண்டு ரெண்டயுங்குடுத்தாங்க. அதுயெதுக்குன்னு சொல்லல. பாக்கலாம் இவிங்க கீட்டகத்தன்னு ஒண்ணும் பேசாம வாங்கியத மடியில வெச்சிக்கிட்டன் பின்ன மரச்சோலைக்கிப் போனன். எம்பிருசனுக்கு தாவம் எடுத்துக்கிச்சி. கண்ணே பல்வருசா எனக்கு பச்ச தண்ணி தாவம் பல்லொணந்து போகுது, நல்ல தண்ணி தாவம் நாவொணந்து போகுதேன்னு வசனம் பேசிப்புட்டு சுப்ரமணி ஒருத்தருக்குங் கேக்காதபடிக்கி “ராசு பூச்செண்டு மோந்தா தாவமடங்குமின்னு சொல்லி குடு”ன்னு எங்கிட்ட குசு குசுன்னு சொல்றாரு, எலுமிச்சங்கனி எதுக்கு, பூச்செண்டு எதுக்குன்னு அவருக்கு பிருவா தெரியல. நானு என்னாச் செஞ்சன், ஓ மன்னா பிராணபதி! எங்கம்மா எனக்கு சொன்னது, இதோயிந்த எலுமிச்சங்கனியை ரெண்டாக பாகம் செய்து சாறு பிழிந்து குடித்தால் போகுவழியதனில் உண்டாகும் தாகம் தணியுமென்று! அந்தப் பிரகாரமே சாமி இந்த கனிய பாகஞ்செய்து புசிப்பீர் ன்னு சொல்லிப்புட்டு அண்ணா சமாச்சாரத்த இப்பிடித்தாண்ணா செய்யுனுமுன்னு அவரு காதுல சொன்னான். பின்ன மரச்சோலையில இன்னங்கொஞ்ச தூரம் போனதும் எம்புருசனுக்கு தலயச் சுத்தி மயக்கம் வந்துட்டது. </div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgenLalnkG8ZBQxKI-D6ltUY2KU_MemZCmlj8jO-1fxsE9Bg9gXf9QraQcIZuNgkJ7QSqY_iPCn5qfSpEkaHGnIs9_kkqTsDz6igZl-UxFiuzzWY_usonBWgH159_j-j7hKBC7A3Za-TdQm/s1600/480988_422425684502216_844751694_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgenLalnkG8ZBQxKI-D6ltUY2KU_MemZCmlj8jO-1fxsE9Bg9gXf9QraQcIZuNgkJ7QSqY_iPCn5qfSpEkaHGnIs9_kkqTsDz6igZl-UxFiuzzWY_usonBWgH159_j-j7hKBC7A3Za-TdQm/s320/480988_422425684502216_844751694_n.jpg" width="240" /></a></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">
“பெண்ணே பல்வருசா பூமி சொழலுதடி, புத்தி தடுமாறுதடின்னாரு,</div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">
சுவாமி இதோயிந்த பூச்செண்டை முகந்து பார்த்தீர்களானால் உண்டான மயக்கம் தன்னால தீருஞ்சுவாமின்னு நானு பூச்செண்டு எடுதுக்குடுக்க மோந்துப் பாத்தவரு, மயக்கமல்ல பெண்ணே! இது மாரகம், நான் பிழைக்கயினி வழியில்லன்னு ஒரே வார்த்த பேசனதும் சுப்ரமணி என்னு மடிமேல சாஞ்சி கண்ண மூடி படுத்துக்கிட்டாரு. அல்லிமுத்து செத்ததும் பின்ன மரச்சோலையில அடுத்தாப்ல நானு இன்னத செய்யணும், இன்னார சந்திக்கணுமின்னு ஒருத்தருஞ் சொல்லிக் குடுக்கல. என்னயத்தவிர மிச்ச பொண்ணு வேசக்காரனங்கெல்லாம் சுத்தி நின்னு வேடிக்கப் பாக்கறாங்க. என்னாப் பண்றானோ ஏது பண்றானோன்னு மெதுவா சுப்ரமணி தலய அசாம மடியிலயிருந்து எடுத்து கீழவெச்சிட்டு எடுத்தம் பாட்ட. கண்ணீரா கடவாயில ஒழுவுது!கொல்ல நினைத்தாளோ!கொலைகார ஆரவல்லின்னு மடிக்க நினைத்தாளோமாபாவி ஆரவல்லி!திருப்பி பாட்ட நிறுத்தவேயில்ல.</div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">
சனமுன்னா ச்சும்மா காசா கொண்டாந்து கொட்டி என்ற மடிய நப்பறாங்க. கீழ படுத்துக்கிட்டு சுப்ரமணி பாடு, பாடு சொனையான் எறங்குது பாடுங்கறாரு. அன்னராவு கூத்து முடிஞ்சி வேசமழிச்சம். எல்லாருக்கும் சம்பளம் பிரிச்சாரு வாத்தியாரு. என்னய கூப்புட்டு அம்பது உருவா சம்பளங் குடுத்தாரு. மடியில வுழுந்ததே சில்லரக்காசி அத முடிஞ்சி வாத்தியாரு பொட்டியில வெச்சிருந்தன். அதயும் எடுத்து இந்தாடா ராசு பத்ரமா வெச்சிக்க பஸ்ல கிஸ்ல தூங்கி காச தொலைச்சிப்புடாதன்னு புத்தி சொன்னாரு, கேட்டுக்கிட்டன். வூட்டுக்குப்போயி மூட்டய பிரிச்சிப் பாத்தன் முந்நூத்தியம்பது உருவா இருந்திச்சி. நூத்திருவது உருவாயிக்கி சூட்கேசி பொட்டி வாங்கிக்கிட்டன்.</div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">
மக்யாநாத்து திண்டமங்கலம் ஆட்டம். பழனிமாதர பெரும் பெருத்த கூத்தாடிங்க இருக்கப்பட்ட ஊரு.சலவ வேட்டி, சலவ சர்ட்டு மாட்டிக்கிட்டு கௌம்பனேன். பெருமன்னாலூம் பெரும சாமி எனக்கு காலு தரையில பாவல. என்னையே திரும்பி திரும்பி பாத்துக்கறன். காத்தாலயே சம்பளம் பிரிக்கறப்ப, பாரு எளம்பிள்ளையில பன்னியாண்டிங்க இருப்பாங்க காதுகுத்திக்க, ராத்திரி காதுமணியில்லாம பொக்குனுயிருந்திச்சின்னாரு வாத்தியாரு. ஓமலூரு பஸ்சவுட்ட எறங்கி காதுமணி ரெண்ட வாங்கிக்கிட்டேன். திண்டமங்கலம் போனம். இவரு முந்தியேப் போயி அம்பாள் கல்யாணம் அலங்காரம் வெச்சிட்டாரு. மூணுபேரு மெயினு வேசக்காரங்க, இருக்கும்போது எனக்கென்னா வேசங்குடுக்கறதுன்னு வாத்தியாரு சித்தங்கூறி தடுமாறிப்புட்டு ராசு நீ தாயி வேசம் போட்டுக்க, பரிமளகந்தி! முன்ன போ ஒண்ணும் ஆட வேண்டாம், பாடவேண்டாம்! தர்பார முடிச்சிக்கிட்டு, “என் மைந்தர்கள் இருவர்களிரண்டு பேர்களும் வீர விளையாட்டுக்கள் விளையாடிக்கொண்டிருப்பாங்க தாயார் நான் அழைத்ததாக அதி சீக்கிரமாக அழைத்து வாருங்கள்”ன்னு சொல்லிப்புட்டு வந்துரு அவ்வளத்தான் வேலன்னாரு. வேசம் போட்டன். புதுசா வாங்கன காதுமணிய கண்ணமூடிக்கிட்டு ரெண்டு காதுலையும் குத்தி பட்ன மாட்டிக்கிட்டன். வெளிய போனன் தெரிஞ்சத ஆடனன். அறுவது உருவா பின்னுக்குததனாங்க. முன்னப் போனாங்களே செட்டு மெயினு வேசக்காரங்க மாரிமுத்து, வெள்ளையன், பழனிசாமி இவிங்க ஆருக்கும் ஒருபைசா சொனையாங்குத்துவாரில்ல. ஆடி தர்பார முடிச்சிக்கிட்டு உள்ர வந்தன். ரெண்டு பக்கத்து தோளுபட்டயும் நனஞ்சி, சாக்கிட்டும் நனஞ்சி போச்சி! சோத்தாங்கையி காதுல சொட்டு சொட்டுன்னு ரத்தம் ஒழுதே இருக்குது. சட்டுனு வேற சாக்கிட்டு மாத்திக்கிட்டு காத்தாட நின்னு வலிய ஆத்திக்கிட்டிருந்தன். இந்த மாரிமுத்து கிட்டவந்து "முன்ன போயி நாலு பேரு ஆடனம் ஒருவா குத்துவாரில்ல! பொறன போயி மூணுபேத்தயும் மண்ட பண்டிப் புட்ட''ங்கறான்! மொவறயில எள்ளுங்கொள்ளும் வெடிக்குது. நானு ஒண்ணுஞ்சொல்லல பேசாம இந்துக்கிட்டன். சந்திப்பு கட்டம் வந்திச்சி திலும்பி சவைக்கி போனன். பீஷ்ம வேசக்காரனும், விசித்திர வீரியன் வேசக்காரனும் இருக்க, எனக்கு மாத்தரம் ஒருத்தன் பத்து உருவாயகொண்டாந்து குத்திபுட்டு என்ற கைய புடிச்சி குலுக்கல,சுப்பிரமணிய கையப்பிடிச்சி குலுக்கி என்னான்னு சொல்றான் மவராசன், புண்ணியவான் இன்னிக்கிச் சொன்ன மாதர இருக்குது "சுப்ரமணி இந்தபையம் மட்டும் உன்ற செட்டுல ஒரே வருசம் இருந்தான்னா, உன்ன அடிச்சி ஆட இந்த தென்னகத்துல வேற செட்டு இல்ல''ன்னாம்பா. சுப்ரமணிக்கு வாயி வெப்பிரிச்சிப் போச்சி. ம்... ம்... செய்வான்னாரு.</div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJPIXwwb9Z7_963T837ZzpiRZCk_rZPIlmXXnkI5WrsxEmlNDsM3zO8IrcTllM2zy0z1RQV8bB5_JJV85vp5CjtzrUOI2mR3QBZUObDFtqBVfJaNFwFZQA6Cky6ezazuEB6XrK5nTTRMPS/s1600/1383481_507582439319873_1579006657_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJPIXwwb9Z7_963T837ZzpiRZCk_rZPIlmXXnkI5WrsxEmlNDsM3zO8IrcTllM2zy0z1RQV8bB5_JJV85vp5CjtzrUOI2mR3QBZUObDFtqBVfJaNFwFZQA6Cky6ezazuEB6XrK5nTTRMPS/s320/1383481_507582439319873_1579006657_n.jpg" width="240" /></a></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">
அடுத்த நாளு கள்ளக்குறிச்சி ஆட்டம் எல்லாம் அஞ்சர மணிக்கு கள்ளக்குறிச்சி பஸ்டாண்டுக்கு வந்துருங்கன்னு வாத்தியாரு சொன்னதும், அவிங்கவிங்க வூட்டுக்கு பொறப்பட்டம். அப்ப சுப்ரமணி சாவா வண்டி வெச்சிருந்தாரு. ரயிலு மாதர பொக. பொறன ஒருவண்டி போறதுக்கில்ல தடதடன்னு சத்தம் வேற. என்னய பொறன குந்த வெச்சிக்கிட்டாரு ராசு, நீயி கள்ளக்குறிச்சி வந்து சேர மாண்ட, மூணு மணிக்கி நம்ப வூட்டுக்கு வந்துரு, நாம்ப ஒட்டா போவலாமுன்னாரு. சேரின்னுப்புட்டு நானு வூட்டுக்கு வந்து தூங்கல, நேரா ஓராள புடிச்சிக்கிட்டு திருச்செங்கோடு வந்து தேர்முட்டிக்கிட்ட இந்தா வளத்தி டோப்பா முடி! முந்நூறு உருவாக்கி வாங்கனேன். வூட்டுக்கு போனன், தண்ணி வாத்தன் நேரஞ் செரியாயிருந்திச்சி. கள்ளக்குறிச்சி போயிட்டம். அன்னைக்கும் சுப்ரமணி அம்பாள் கல்யாணமே வெச்சிட்டாரு. அம்பாலிக வேசக்காரன் அரியானூரான் வரல. வேசம் போட்டன், வெளிய போனன் நூத்திருவது உருவா பின்னுக்குத்தனாங்க. சந்திப்பு கட்டத்துல, அவிங்க பாடிக்கிட்டிருந்தா, ஏப்பா நீங்களே பாடறீங்க அந்த பையன செத்த பாடச் சொல்லங்கறாங்க சவையில குந்தியிருக்கறவங்க. மாரிமுத்தும் வெள்ளையனும் மொவறய திருப்பிக்கிட்டு நிக்கறாங்க. நானென்ன செய்யறது? உண்டான விருத்தம், உண்டான பாட்ட பாடனன். அவிங்கள நாங்கண்டுக்கல. கள்ளக்குறிச்சி ஆட்டத்துல சுப்ரமணி சம்பளத்த ஏத்தி எம்பது உருவா குடுத்தாரு. விடிஞ்சன்னைக்கி ஆட்டம் சாமக்குட்டப்பட்டி... நம்ப ராசாபாளையத்துக்கிட்ட. அந்த ராவும் அம்பாள் கல்யாணமே அலங்காரம், அம்பாள் வேசம் போடற மாரிமுத்து வரல வாத்தியாருக்கிட்டயும் சொல்லல, ஒருத்தருக்கிட்டயும் சொல்லல. ராத்திரிப்புடிச்சே ஆளு மொவற சுண்டிப்போயி அரா சிவான்னு ஆருகிட்டயும் பேசிக்கல. ஆளுக்கு என்னமோ பொந்தியில பொமைச்சலு. சுப்ரமணி பழனிசாமிய அம்பாள் வேசங்கட்டுன்னா அவன் க்கும் நாந்தான், அம்பாள போடறானா? ன்னு ஒரே முக்கு முக்கிப்புட்டா. வெள்ளயன கேட்டா ஏப்பா நீயொருப்பக்கம்! நாந்தான் சிக்கனான்னு ஆளு தூரமாப் போயிட்டான். வேசம் போட்டு செலுத்தமுடியாமயில்ல, புதுவேசக்காரனுக்கு இவ்வளவு ரஸ்பீட்டு மயிரா? இன்னைக்கு ஆக்கிட்டு போட்டு புளுத்துட்டுமே! சவையில வுட்டு சனங்க மின்ன சமாச்சாரந் தெரியாம சரக்கு பத்தாம சின்னப்படட்டுமுன்னு ஒரு கெட்ட எண்ணம்.</div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhlnIeEGGb6befAVcJBQY4jMX_itf8rREwuDYzLDB3uC9ucvT7pUMrM-cPmX4xzclmWcLmYrHpMP-lw-wNp0aKFSsoTVj8KW3qsvBJyX7MKRH5hUx2pCWQwcrA9mRbotb0WbYxebXIFgeL2/s1600/DSC00840.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhlnIeEGGb6befAVcJBQY4jMX_itf8rREwuDYzLDB3uC9ucvT7pUMrM-cPmX4xzclmWcLmYrHpMP-lw-wNp0aKFSsoTVj8KW3qsvBJyX7MKRH5hUx2pCWQwcrA9mRbotb0WbYxebXIFgeL2/s320/DSC00840.JPG" width="240" /></a></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">
என்னய கேட்டாரு, சுப்ரமணி. அண்ணா வேசம் போடத்தான் வந்துருக்கறன், எந்த வேசமுன்னாலுங்குடு போட்டுக்கறன். இன்ன இன்னத இப்பிடி இப்பிடி செய்யணும் விங்கிணிச்சி சொல்லு அந்தப்பிரகாரஞ் செஞ்சிபுடறன்னன். அம்பாள் வேசங்குடுத்தாரு. மொத மொத பெருங்கொண்ட கதாநாயகி வேசம் போடறன்னு கொஞ்சம் அச்சமா இருந்திச்சி சுதாரிச்சிக்கிட்டன். சும்மா சொல்லக்கூடாது அத்தனாம்பட்டி சீனு சால்வன் வேசம், சுப்ரமணி பீஷ்மரு வேசம் ரெண்டு பேருச் சந்திப்பையும் திருத்தமா செஞ்சன். எல்லாத்துக்கும் நல்ல பேரு, கூத்து எத்தாயிருந்திச்சி. அந்த அம்பாள் வேசத்துலயிருந்து இன்னைக்கி வரைக்கும் சுபத்தர, சித்ராங்கத, சீத, தமயந்தி, பாஞ்சாலி ன்னு பெருங்கொண்ட வேசந்தான் கட்டியாடறன். "சீசீ இந்த வேசம் நல்லாயில்ல உள்ற போ'' ன்னு ஒரு சொல்லு கேக்காத அளவுக்கு தொழிலுப் பண்றன். தனியா செட்டுக்கட்டி பதனஞ்சி வருசம் ஆடிப் பத்துப்புட்டன். ஒண்ணும் சுத்தப்படல. இப்ப ஏகாபுரம் சுப்ருகிட்ட ஆடிக்கிட்ருக்கறன். வரும்பிடி பரவால்ல, மூணு பேரு சம்சாரத்த தாட்ட முடியிது. என்று தனது, வாழ்வானுபவத்தை தொழில் ரீதியாகவே பகிர்ந்து கொள்ளும் ராஜூ அவர்கள் சிறந்த கலைஞர் என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது.*</div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEilOIQaS1G6_RNqmsJpvjEMWzXfmvSgrpq5OhTbwqzcgsNXUWe-5ikNL09d9quovJR896-sT6i7BFauCqC2wEjqUtS7y0VuwncYzbZa3GoGGRKskDNoGO82clFC_iSymIgAS2WYteNQu7a9/s1600/_MG_8703p3.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEilOIQaS1G6_RNqmsJpvjEMWzXfmvSgrpq5OhTbwqzcgsNXUWe-5ikNL09d9quovJR896-sT6i7BFauCqC2wEjqUtS7y0VuwncYzbZa3GoGGRKskDNoGO82clFC_iSymIgAS2WYteNQu7a9/s320/_MG_8703p3.jpg" width="267" /></a></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">
*********கலைஞனை அணுகுவதும், அண்டியிருப்பதும் அவனது உட்கிடக்கையை உள்வாங்குவதும், பின் வெளிச்சமிட்டுக் காட்டுவதும் சாமான்யமல்ல. ஒவ்வொரு கணமும் அவனே அவனுக்கே புதுமையானவன், நிகரானவன். உள்ளதை உள்ளவாறே கண்டு நுகர்வதே சாலச் சிறந்தது. மற்றங்கே நமது தேடலை, விருப்பத்தை கேள்விகளாக்கி வேண்டிய விடையெதிர் நோக்கி பரிட்சித்தோமானால்இ நாமங்கே பெறும் மதிப்பெண் பூச்சியமே!</div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.31999969482422px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<a href="https://www.youtube.com/watch?v=2kWEPkCXvGU" rel="nofollow" style="color: #3b5998; cursor: pointer; text-decoration: none;" target="_blank">https://www.youtube.com/watch?v=2kWEPkCXvGU</a></div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.31999969482422px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<a href="https://www.facebook.com/l.php?u=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3DO30v5UwNSWg&h=zAQGwyJTr&enc=AZOII3NGXwKxxrWbOqavnvH4rBJBL9UvQ8XJ2dyp2rfYmcSPXDVqeGwAMDkqi9Ifkl--QKbNOBBFjptxtu-5I0shNNNyAUE3gvFSnSfZbvoLRQossIeE51L4MIMfJB_X7hmGWEFGGo84UzeC1R8XXaigavDzNsOR-J-sx6VBmUkU3Q&s=1" rel="nofollow" style="color: #3b5998; cursor: pointer; text-decoration: none;" target="_blank">https://www.youtube.com/watch?v=O30v5UwNSWg</a></div>
<div style="background-color: white; margin-bottom: 6px; margin-top: 6px;">
<span style="color: #141823; font-family: Helvetica, Arial, lucida grande, tahoma, verdana, arial, sans-serif;"><span style="font-size: 14px; line-height: 19.31999969482422px;">https://www.youtube.com/watch?v=UEyYo9lXhng</span></span></div>
<div style="background-color: white; margin-bottom: 6px; margin-top: 6px;">
<a href="https://www.youtube.com/watch?v=PHnKgz-rx7c" rel="nofollow" style="color: #3b5998; cursor: pointer; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.31999969482422px; text-decoration: none;" target="_blank">https://www.youtube.com/watch?v=PHnKgz-rx7c</a><span class="text_exposed_show" style="color: #141823; display: inline; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.31999969482422px;"><br />.<a href="https://www.youtube.com/watch?v=NhUCH2c33Bo" rel="nofollow" style="color: #3b5998; cursor: pointer; text-decoration: none;" target="_blank">https://www.youtube.com/watch?v=NhUCH2c33Bo</a></span></div>
<div style="background-color: white; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.31999969482422px; margin-bottom: 6px;">
பெற்றவள் என்றில்லை தண்ணீருக்கும் மூன்று முறை</div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.31999969482422px; margin-bottom: 6px; margin-top: 6px;">
தாளம் காலம் இசையாத அச்சிறுப்பிழையும் பொறுக்கான்</div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.31999969482422px; margin-bottom: 6px; margin-top: 6px;">
பொட்டி மூலிகைச் சிமிழ் கொண்டு நெறிதப்பி போகும்</div>
<div class="text_exposed_show" style="background-color: white; color: #141823; display: inline; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.31999969482422px;">
<div style="margin-bottom: 6px;">
மயில்ராவணனை தடுத்து நாயஞ்சொல்வான்</div>
<div style="margin-bottom: 6px; margin-top: 6px;">
அதிவர்ண மாலையான ராசுப்பையன்</div>
<div style="margin-bottom: 6px; margin-top: 6px;">
குற்றங்கடிந்து நீட்டும் அச்சுட்டுவிரல் கண்</div>
<div style="margin-bottom: 6px; margin-top: 6px;">
ஒளிந்திருக்கும் ஆயிரமாயிரம் சித்ரவித்தை</div>
<div style="margin-bottom: 6px; margin-top: 6px;">
குறி சொல்லும் நேர்த்தியில் குறத்தி தோற்பாள்</div>
<div style="margin-bottom: 6px; margin-top: 6px;">
எத்தனையெத்தனை பாவங்கள் வேண்டுமுங்களுக்கு</div>
<div style="margin-bottom: 6px; margin-top: 6px;">
கல்லெல்லாம் மாணிக்கமல்ல சொல்லெல்லாம் அச்சரமல்ல</div>
<div style="margin-bottom: 6px; margin-top: 6px;">
அரங்காடும் நல்லத்தங்காள் பொம்மையைக் கேட்டுப்பாருங்கள்</div>
<div style="margin-bottom: 6px; margin-top: 6px;">
சோமப்பானம் சுராப்பானம் தேவர்களுக்கு</div>
<div style="margin-bottom: 6px; margin-top: 6px;">
பீ மூத்திரமொன்றாய் பிசைந்துண்டும் புத்தி வரவில்லை</div>
<div style="margin-bottom: 6px; margin-top: 6px;">
ஓரவஞ்சனை பாராமுகம் லாரிமுன் தீப்பாய்ந்தது சீதை</div>
<div style="margin-bottom: 6px; margin-top: 6px;">
வேடப்பையின் ஓட்டை வழி தொங்கும்</div>
<div style="margin-bottom: 6px; margin-top: 6px;">
ஒற்றைச்சதங்கை குரலெடுத்து அரற்றுகிறது</div>
<div style="margin-bottom: 6px; margin-top: 6px;">
யாகச்சேனை வேசமினி ஆர் கட்டுவது</div>
</div>
<div style="background-color: white; margin-bottom: 6px; margin-top: 6px;">
<span style="color: #141823; font-family: Helvetica, Arial, lucida grande, tahoma, verdana, arial, sans-serif;"><span style="font-size: 14px; line-height: 19.31999969482422px;"><br /></span></span></div>
<div style="background-color: white; margin-bottom: 6px; margin-top: 6px;">
<span style="color: #141823; font-family: Helvetica, Arial, lucida grande, tahoma, verdana, arial, sans-serif;"><span style="font-size: 14px; line-height: 19.31999969482422px;"><br /></span></span></div>
<div style="background-color: white; margin-bottom: 6px; margin-top: 6px;">
<span style="color: #141823; font-family: Helvetica, Arial, lucida grande, tahoma, verdana, arial, sans-serif;"><span style="font-size: 14px; line-height: 19.31999969482422px;"><br /></span></span></div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.31999969482422px; margin-bottom: 6px;">
காலனக்கென்ன தாகம் மரியாதைக்குரியவர்களின் உயிரை எல்லாம் குடிக்கிறான்</div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.31999969482422px; margin-bottom: 6px; margin-top: 6px;">
..கூத்து கலைஞர் கொம்பாடிப்பட்டி ராஜு அகால மரணம் ...22-10-2014</div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.31999969482422px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 20px;">
<br /></div>
</div>
manalveeduhttp://www.blogger.com/profile/11701810894595985945noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-891272482416127046.post-63962516354728040002014-11-03T21:20:00.002-08:002014-11-03T21:21:23.527-08:00நாயி வாயிச்சீல<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.7999992370605px;">
<br /></div>
<div style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.7999992370605px;">
<br /></div>
<div style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.7999992370605px;">
<br /></div>
<div style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.7999992370605px;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhf1uYZ09nMJqQ1rps6QsMtXEAy0XqzWkiA-5vlHnPpok_pfho9ADVDG9skltlwmUDoKCbxDFno8rsWXzPNg28-nGcMD17f9Dg72oyPJcpHceJwHprOwLcHhUDohgpKF8UdxU-L_pZYu_EF/s1600/4.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhf1uYZ09nMJqQ1rps6QsMtXEAy0XqzWkiA-5vlHnPpok_pfho9ADVDG9skltlwmUDoKCbxDFno8rsWXzPNg28-nGcMD17f9Dg72oyPJcpHceJwHprOwLcHhUDohgpKF8UdxU-L_pZYu_EF/s1600/4.jpg" height="640" width="628" /></a></div>
<div style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.7999992370605px;">
<br /></div>
<div style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.7999992370605px;">
<br /></div>
<div style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.7999992370605px;">
<br /></div>
<div style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.7999992370605px;">
தெரட்டி முடிஞ்சதும் பொறப்படலாமுன்னா எங்க முடியிது? சொணையான இன்னுமே வரிக்கல, மணி பதனொன்னாவுதோ’ பன்னண்டாவுதா’ தெரில. ஆட்டத்துக்கும் போயிகிட்டு அலங்காரத்துக்கும் போறதுன்னா சாமானியமா?கயிட்டத்தப் பாத்தா காச கண்லக் காங்கறதெப்பிடி? நாமக் கைதொட்ட காரியமாவறதெப்பிடி?<br />
<br />
<br />
எரநூறு வருதோ- முன்னூறு வருதோ நாயனக்காரன இருந்து வாங்கியாடான்னு நாம்ப நம்ப தொந்தரவுக்குப் போயிரலாந்தான். ஆனா இண்டம் புடிச்சவன் அதக்கொண்டி எங்கியாச்சும் கூத கீதப்போட்டுக்கிட்டு வந்துட்டான்னா ஒரே ஒத்தப்பைசாவ திலுப்பி வாங்க முடியாது.<br />
<br />
<br />
பொட்டைங்கன்னு அவனுக்கு மட்டுமில்ல, இந்த வையகத்துச்சனம் முச்சூட்டுக்குமே எளக்காரந்தான். பெறத்தியார ஏஞ்சொல்லணும்? பெத்தவளே நம்ப தலமேல கொலாய வெச்சி தேக்கிறா, அபிராமிப்பிள்ள இருந்தவரிக்கும் ஓரேடத்துக்குப் போவ வர பேசப் புடிக்க பக்கத்தொணையாயிருந்தா, அவளத்தா அனாமுத்தா மண்ணுக்கு வாரிக்குடுத்துட்டமே.<br />
<br />
<br />
பொம்பளயாப் பொறக்க வேண்டியவ, ஆம்பளயாப் பெறந்து அவ அடஞ்ச சிறும கொஞ்சமா? நஞ்சமா? பொன்ன உருக்கி பூமியில வாத்தாப்பிடி’ தங்கத்த உருக்கி தரையில வாத்தாப்பிடி’ தகதகன்னு ஆளும் அவ அழவும் பிள்ளய கண்ல பாத்தாப் பசியாறும். பாதியில போறதுக்குத்தாம் பாவிமுண்ட அப்பிடியிருந்தாளோ என்னம்மோ’<br />
<br />
சாவற வயசா சண்டாளிக்கி?<br />
<br />
ஆடிக்காத்துல பூளப்பூவு பறக்குமே அப்பிடி ஓடி ஓடிச் சம்பாரிச்ச சொத்தும் அவளக் காப்பாத்தல, பிருசனே இவந்தான்னு நம்பி பூசப்போட்டுக் கும்புட்டுக்கிட்டிருந்தாளே தேவூரு கவுண்டம் மவன் அவனும் அவளக் காப்பாத்தல.<br />
<br />
<br />
ஒக்கிலிப்பட்டி சாமியாருக்கிட்டதான் நானும் அவளுங் கூத்துப் படிச்சம். கூத்துப்படிச்சமில்ல அதுக்கும் மிந்தியே அபிராமி தாயம்மாளிண்ட கைபோட்டு பச்சச்சீலக்கட்டி போத்திராசி மாதாளுக்குப் பாலுக்கொடம் எடுத்துப்புட்டு வந்துட்டா.<br />
<br />
பாலுக்கொடம் எடுத்தாளில்ல, அந்தவொரு மண்டலம் நாப்பத்தியெட்டு நாளும் அவப்பட்ட வாதயச் சொன்னா கல்லுங்கரையும், மண்ணும் உருகும்.<br />
<br />
<br />
அப்பன், ஆயா, பெத்து, பொறப்பு அத்தனப் பேத்துக்கும் விரோதமாகி, அடிப்பட்டு, துணிப்பொறுக்கி, அனாதியாட்டம் ஊட்டவுட்டு பம்பாயிக்கி ஓடிபூக்கார ஆயா சமாத்துல சேந்து, பைட்டேண்டுக்கு வைட்டேண்டு, வீதிக்கி வீதி, சந்துக்கு சந்து, அல்லெடுத்து அங்கயிருக்கற பொட்டைங்களுக்கு எல்லாம் ஒரு வருசம், ஆறு மாசம் ராத்திரிப் பகலா ஊழியஞ் செஞ்சா.<br />
<br />
<br />
ஊழியஞ்செஞ்சவளுக்கு கைபோட்டுத் துப்புரவு பண்டறமின்னுச் சொன்னவிங்க, பேச்சி சுத்தமா இருக்கணுமா வேண்டாமா?<br />
<br />
இன்னைக்கி, நாளைக்கின்னு சாக்குப் போக்குச் சொல்றாங்களே தவர ஒரேவொரு தாயம்மாக்கூட இவளுக்கு கைபோடற மாதரயில்ல. வாக்கியங்கெட்ட கழுதைங்களப் போக்குல வுட்டுப் புடிக்கலாமின்னு இவளிருக்க, மறுபடியுமொரு மூணுமாசம் இழுக்கடிச்சி, அதும் பொறவு வடக்க வேண்டாந் தெக்க போலாமின்னு நம்ப உளுந்தூருப்பேட்டைக்கிக் கூட்டிக்கிட்டு வந்தாங்க. கூட்டிக்கிட்டு வந்தவிங்க அங்கியும் ஒரு மாசஞ் சும்மாவே குந்தவெச்சிருந்தாங்க.<br />
<br />
<br />
குந்தவெச்சிருக்கும்பிடி இவ பொறுக்க மாண்டாம,<br />
<br />
“கோத்தியாவே” திரிய இன்னும்மேயெனக்கு விதியா? முடியுமின்னா முடியுமின்னுச் சொல்லுங்க. இல்ல முடியலியா, பம்பாயிக்கி தாட்டிவுடுங்க வழுது சமாத்த அண்டி எனக்கானத நானேப் பாத்துக்கறேன்”னு கேக்க, கேட்டவளுக்கு “ஊக்கியிலக் குத்தி இடுக்கியில முள்ளு எடுக்கற சங்கிதியா இது? கைபோட்டு பொம்பளை யாவறதுன்னா உனக்கு அவ்ள ரேசா? அதுக்கெல்லாஞ் செட்யானப்படிக்கி தெகிரியம் வேணும் நீ செத்த பொறுமையா இருடி தாயி”ன்னு தேறுதலச் சொல்லி ஆத்தூருக்குக் கூட்டிப்போயி அங்கியுமொரு அஞ்சாறு நாளாட்டம் வெச்சிருந்தாங்க.<br />
<br />
<br />
ஆறாந் நாளு நெறஞ்ச வெள்ளிக்கெழம’ அன்னைக்கி அந்தியோட ஆயாமாருங்க “எல்லாரும் சேலாமாருங்க” எல்லாரும் ஒண்ணாச்சேந்து ஒரேத்துருவா கடவீதிக்கிப் போனாங்க.<br />
<br />
போனவிங்க இன்னதுதானில்ல இஷ்டப்பட்ட திம்பண்டத்த நீயி திங்கறமுட்டும் தின்னுடின்னு அபிராமிக்கி வாங்கிக் குடுத்துத் திங்கடிச்சாங்க.<br />
<br />
திங்கடிச்சிப்புட்டு அன்னராவு மொதாட்டஞ் சினிமாவுக்குங் கூட்டிப் போனாங்க. போயிட்டு வந்து, கண்ணாறத் தூங்கு மவளே’ இன்னைக்கி விடியறதுக்குள்ள உனுக்கு உறுதியா கைபோடறம்மின்னுச் சொன்னாங்க. சொன்னவிங்கச் சொன்ன மாதர ரெண்டுமணி சுமாருக்கு இவளையெழுப்பி சுத்தம் பத்தம் பண்டி, சுனிக்கி சரட்லச் சுருக்கு வெச்சி, சுத்தியும் வெள்ளத் துணி சுத்திவுட்டாங்க. சுத்திவுட்டவங்க அதும்பொற வொரே அரச்சணங்கூட தூங்கவேப்படாதுன்னு இவுளுக்குக் காவலிருந்தாங்க.<br />
<br />
<br />
விடிகாலம் நாலுமணிக்கெல்லாம் பாத்துக்க’ ச்சும்மா தடபுடலா மாதாளுக்கு முப்பூசயாவுது. பூச ஆவக்குள்ளயே சாமிக்கி மின்ன நெறம்மணம்மா இவள நிக்க வெச்சாங்க.<br />
<br />
நிக்க வெச்சதும் அந்தல்லயிந்தல்ல திமறுதுக்கில்லாம கையரெண்டயும் பிந்தாயம்மா இறுக்கிப் புடிச்சிக்கிட்டா. அவ இறுக்கிப் புடிச்சதும் தலமசுத்த சுருட்டி வாயில துருத்தி, மனசார மாதாவ வருந்தடியம்மான்னுப் புட்டு, ‘மாதா... மாதா...’ன்னு இவ வருந்த, வருந்த கண்ணமூடி முழிக்கறதுக்குள்ள மானியப்புடிச்சி பறக்குனு அறுத்துப்புட்டா இன்னொரு தாயம்மா. அப்பிடி அறுத்ததும் அடேயெங் கொண்டாலா’ காலடியில உதரம் போவுது தானா காவேரி ஆறாட்டம்.<br />
<br />
<br />
செவுத்தச் சாத்தி ஒக்காரவெச்சி உதரத்த வழிச்சி, வழிச்சி, இவ உச்சந்தல மொதக்கொண்டு உள்ளங்காலு ஒருக்கோடியா சொதம்பப் பூசிவுட்டா தாயம்மா.<br />
<br />
தாயம்மா பூசப்பூச தம்பட ரத்தத்த தானே காங்கும்பிடி, அபிராமி அடி அம்மான்னு மயக்கம் போட்டுட்டா. அம்மான்னு சொல்லாதடி மாதான்னுச் சொல்லுடின்னா, அவ எருப்பு தாழமாண்டாம எரியிதே’ எரியிதேன்னு தன்னப்பால பெணாத்தறா, தன்னப்பால பெணாத்தும்படி அந்த தாயம்மா நல்லெண்ணய கொதிக்கக் கொதிக்கக் காயவச்சிக் கைபொறுக்க கொண்டாந்து அந்த பச்சப் புண்ணு வாப்பாட்டச் சுத்தியும் பலாசனா ஊத்தியுட்டா.<br />
<br />
ஊத்த ஊத்த வாட்டமாக் காட்டிக்கிட்டிருந்தவ ஒருச்சித்தய கழிச்சி ச்சுறு ச்சுறுன்னு நோவு திலும்பும்பிடி அந்நேரம் அய்யய்யோ எங்கடவுளயே’ன்னு அந்தப் பிள்ள ஒரு கத்துதுதாங் கத்தனாப்பாரு’ கடகால் மட்டத்துலயிருந்து அந்தக் கட்டடமே கிடுகிடுன்னு நடுங்குது’<br />
<br />
<br />
<br />
அருவாளோ, கொடுவாளோ தப்பத்தவற நம்ப மேலுலப்பட்டு அதால வொரு காயமாயிப் போச்சின்னா அதுக்கு எத்தன ஊசிப் போடறம்? எவ்ள மாத்தரத் திங்கறம்? கப்புப் போட்டு, சோக்கேத்தி, ஆத்துக்குப்போயி, தீர்த்தம் எடுத்தாந்து, ஆலாத்திச் சுத்தி, மாதா மொகம் பாத்த பிற்பாடும் ஆறாத ரணத்துக்கொரு மருந்துமில்ல, மாயமுமில்ல.<br />
<br />
வலின்னு வாயத்தொறந்துப்புட்டா, மோரியிலக் குந்த வச்சி ஓலத் தண்ணிய மூட்டு மூட்டு காவு மேல அடிச்சி வுடறதோடச்சேரி’ அத மீறனா வெத்தலயில நல்லெண்ணயத் தடவிப் பத்து போடறதோடச் சேரி’<br />
<br />
ஒடம்போக்காக் கூடப்போயி பக்கத்துலயிருந்து இந்த பாதரவு எல்லாத்தையும் பாத்துக்கிட்டுருந்த எனக்கு, கைபோட்டா தாயம்மா கிட்டதாங் கைபோட்டுக்கணு மின்னிருந்த வைராக்கியம் எங்கப் போச்சின்னே தெரில.<br />
<br />
அத இன்னைக்கி நெனச்சாலும் கை காலு தொவண்டு, கிறுகிறுப்பு பதபதன்னு வந்துரும், காலோட தொறத் தொறன்னு மல்லும் முட்டிக்கும், அந்தப் பயத்திலியே நாங்கையும் போட்டுக்கல கிய்யும் போட்க்கல சொல்லாமப் புடிக்காம அபிராமிக்கி மின்ன திருட்டு வண்டியேறி ஊருக்கு வந்துட்டன்.<br />
<br />
<br />
<br />
உதரக்கட்டு நிக்காம, காஞ்சப்புண்ணு பாதி, காயாத புண்ணுப் பாதின்னு அப்படியே கோமணத்துமேல கோமணங்கட்டி, கட கடயாப் பிச்சையெடுத்து, குருவுக்குப்பட்ட கடங்கட்டிப்புட்டு தாயிப்புள்ளயோட வந்து அவளும் எடஞ்சேந்தா. மரத்தவெட்டி ஆராச்சும் மாருமேல சாச்சிக்கிவாங்களா? எதுக்குயிந்த சித்ரவத? எதனாலயிந்த கந்தரக்கோலமின்னு கேக்கற சனத்துக்கு வதுலுஞ் சொல்ல முடியல? ஆதியில பகவாம் படச்சபண்டம்’ அப்பிடியே இருந்து தொலையட்டுமின்னு இருந்தாலும், மூக்கு மேல பீயப்பனாப்ல இந்த அருகருப்ப வெச்சிக்கிட்டுந் திரிய முடியல....<br />
<br />
பவானி குட்டமுனியப்பங் கோலுதான் நாம் பொறந்த ஊரு. யெங்கப்பம் பழனிச்சக்கிலிக்கிம், ங்காயா பச்சாயா சக்கிலிக்கும் நாம் பொறந்தது ஒரேப்பையன். எனக்கொரு பொறந்தவ, அவபேரு அழிஞ்சிகண்ணி, பொறக்கும்போது உருப்படியாதாம் பொறந்தன். பத்து வயசாச்சோ இல்லியோ இந்தப் பித்து புடிச்சிட்டுது.<br />
<br />
கண்ணுக்கு மையெழுதி, மண்டையில பூவசொருவி, கவுனுமாட்டி, கண்ணாடி மின்ன ஆட்டம் போட்டு, ஊட்ல பொம்பளச் சட்டியின்னுப் பேரெடுத்து ஊருலப் பேரெடுத்து, கூலிநாலிக்கிப் போற எடத்துலயும் பேரெடுத்து கரும்பு வெட்டப்போனத்தாவுல காட்டுக்காரன் கையக்கால கட்டிப்போட்டு, கடவாயிக்கி கல்லையும் நடுவாயிக்கி புழுலுயும் வெக்க, பத்துப்பேரு அதப்பாத்து சிரிச்சாங்களே அன்னிக்கி ங்கொக்கா பாவாடயோட ஓடி பூதப்பாடி கல்பனா ஆயா காலடியில வுழுந்தவதான், திலும்பி வூட்டுக்குப் போகவேயில்ல<br />
<br />
<br />
. வவுத்துக்கு திங்கற சோத்துக்கும் இடுப்புக்கு கட்ற துணிக்கும் வஞ்சன வெக்காம வளத்தனா ங்காயா புண்ணியவதி’ மூக்கு குத்தியுட்டு ‘தொளசி’ன்னு அவதான் எனக்குப் பேரு வச்சா. தந்தாவும் வேண்டாண்டி’ ஒரு கிந்தாவும் வேண்டாண்டி’ அலேய் ஆதமுத்து முண்டைங்களா உருவா சம்பாரிக்கலாமின்னு பத்துப் பேரோடப் படுத்து நோவு கீவு வாங்கிக்கிட்டம்னா அந்த வெனய எங்கக் கொண்டுப்போயி தீக்கறது?<br />
<br />
<br />
<br />
ஆடுமாடுங்களுக்கு கூட ஆசிப்பத்திரியிருக்குது’ நாயிம் தம்புண்ண தானே நக்கி ஆத்திக்கிது. அதோட கேவலண்டி நம்ப பொழப்பு. கண்ணக் கெடுத்தாலுங் கோல குடுத்தாங்ககறாப்பிடி மாதா நம்புளுக்கு ஒழச்சிப் பொழைக்க மாளாத தெம்பு குடுத்துக்கிறா. வாங்கடி கைய ஊனி கரணம் போடலாமின்னு அம்பரு, நூறு பொட்டைங்களை ஒண்ணாச்சேத்திக்கிட்டுப் போயி கலைக்கிட்ருக்கிட்ட,<br />
<br />
<br />
“சாரு, சாரு இந்த மாதர, இந்த மாதர நாங்க சொந்தமா பாடுபட்டு தின்னுக்கறம், எங்களுக்கு எதனா ரோனு கீனு ஏப்பாடு பண்டி வுடுங்க”ன்னு பிட்டிசனு எழுதிக்குடுத்தா, அவிங்க என்னங்கறாங்க... வூடு வாச இருக்குதா? உங்க பேருலச் சொத்து பத்து இருக்குதா? சர்க்காரு வேங்குல ரொக்கம் ரோஜனம் கணக்கு வழக்கு இருக்குதாங்கறாங்க...<br />
<br />
உங்க சோல இல்ல, ஒதுங்கவொரு வெவுலடி பாத்தியம் இல்ல, எங்ககிட்ட எதுவுமேயில்ல அத்தாந்தரமா நிக்கறம். எதோ நீங்க பாத்துவொரு ஒத்தாசப் பண்டுங்கன்னு கெஞ்சனா, அட்ரசீ இல்லாதவங்களுக்கு ரோனு குடுக்க சட்டத்துல எடமில்லங்கறானுங்கவொரு தலயெடுப்பா... போங்கடா எம்பட்டைங்களான்னு திலும்பி வந்துட்டம்.<br />
<br />
ஆளாளுக்கு ஒரு தொழுவாடு கத்துக்கங்கடின்னு ஆயா சாமியாருகிட்ட கூத்துப்படிக்க கைகாட்டியுட்டா. சும்மா எப்பிடிச் சொல்றது? சாமியாரப்பன் வெட்டு வெடுக்குனு ஒரு வார்த்தப் பேசனதில்ல. பெத்த பிள்ளைங்களுக்கு மேல ஆச அம்பா வெச்சிருந்தாரு. அக்குசா தொழில கத்துக்குடுத்தாரு.<br />
<br />
அபிராமி கண்ணாலந்தான் மொதல்ல படிச்சம். அப்பதான் இவளுக்கு அபிராமின்னு பேரு வௌங்கனது.<br />
<br />
<br />
செரியான வுனுப்புக்காரி. எதச்சொன்னாலும் புடிச்சாலும் கப்பூரமாட்டம், ஆட்டம் அப்பிடித்தான், பாட்டும் அப்பிடித்தான். என்னாவெண்ணு சாரீரம் மட்லுங் கொஞ்ச கட்ட சாரீரம். நெட்டையோ, குட்டையோ சாமியாரு செட்டுக்கு, மொகாம, மெயினு வேசக்காரி இவதாங்ககிறாப்பிடி ஆயிட்டா.<br />
<br />
சரிங் சரிங்கறாப்பல தொழிலுஞ் செஞ்சா. நாத்து வௌஞ்சி பயிராவறதுக்குள்ள மத்தளக்காரம் பூமுடியூர் ராசி அவள குத்தவதோட்டம் ஓட்டறதுக்கு ஆரம்பிச்சிக்கிட்டான். வூடு வாச அண்டாம, செலவுக்கு அஞ்சிப்பத்து வரும்பிடிய குடுக்காம ஒராம்பள கண்டயெடம் மேஞ்சிக்கிட்டிருந்தா பொட்டப்பொம்பள பிள்ளைங்க குட்டிங்கள வெச்சிக்கிட்டு என்னாப் பண்டுவா? ஒண்டி ஓரியா அவளால சம்சாரத்த சுதாரிக்க முடியுமா? செட்டாளுங்க ஆளாளுக்கு கூடி கூடி நாயம்பேசி, குசலஞ்சொல்லி அவளுக்கு உடுக்கயடிக்க,<br />
<br />
<br />
“உன்னையொரு பெரிய மனுசன், வாத்தியாருன்னு நம்பி செட்டு மத்தாளத்துக்கு வுட்டா, எம்பிருசனுக்கும் அந்தப் பொட்டையனுக்கும் வௌக்கு புடிச்சி, என்ற வேரப்பறிச்சி வெந்தண்ணி வாக்கற, பரவால்லடா மாப்ள உன்ற பண்ணாட்டு”ன்னு ராசுப் பொண்டாட்டி வந்து பேயாடிப்புட்டு போனா.<br />
<br />
“அல்லாருக்கும் எட்டெழுத்து, நம்புளுக்குப் பத்து எழுத்துலே அலே பறமுண்ட’ என்னா பாவம் பண்டனமோ, ஆணுக்காவமே, பொண்ணுக்கு ஆவாம, இந்த மானங்கெட்ட பொறப்பெடுத்து, போற வாரப்பக்கமெல்லாஞ் சின்னப்பட்டு சீரழியறம். ஒருக்குத்தமும் பண்டாத மின்னியே நம்பள தேவிடியாப்பட்டங்கட்டி பல்லுமேல நாக்க போட்டு மந்தைங்க பலவெதமாப் பேசுதுங்க. எச்செலைக்கி வீங்கறப்பொழப்ப இன்னையோட தல முழுவிடி ஆயான்னு உள்ள நாயத்த நானு எடுத்துச் சொல்ல வாத்தியாரும் ரெண்டு வார்த்த நல்ல பித்தி சென்னாரு.<br />
<br />
<br />
<br />
சரீன்னு அபிராமியுங் கம்முன்னிருந்தா ராசு வழிக்கிப் போகாம. ஆடி நோம்பிக்கி கூத்தாட தேவுரு செட்டிப் பட்டிக்கிப் போனாம்பாரு அங்கவொரு எத்துக்காரவான் வந்துச் சேந்தான் அவுளுக்கு எமனா.<br />
<br />
களரிக்கூட்டுமிந்தியே வந்தவம்பா’ விடியவிடிய சுத்தி விடிஞ்சும் அபிராமிய வுட்டுட்டு அந்தல்ல நவரல. இவ என்றான்னா அவஞ்சொல்ற பாட்ட பாடறா. அந்தப் பாட்டுக்கு பதனஞ்சி சீல மாத்தறா, ச்சும்மா பறந்து பறந்து ஆடறாப்பா. அந்த திருவாத்தான் ஆளுமேல ஆளவுட்டு இவளுக்கு நோட்டு நோட்டாப் பின்னுக் குத்தறாஞ் சலிக்காம. எப்பிடியும் அன்னைக்கி அனாமுத்தா சேந்தது உருவா ஏழ்நூத்தம்பதுக்கு மேலியே இருக்கும்.<br />
<br />
<br />
அலங்காரம் முடிஞ்சதும் எங்கடா பிள்ளையின்னு தொழவுனா ரெண்டுபேரும் எவத்தயிருக்கறாங்கன்னு ஒண்ணுந்துப்பே இல்ல. அப்பறம் பாத்துக்க எந்த பிருசம் பொண்டாட்டி அந்த மாதர ஒத்துமையாயருப்பாங்க’ அவிங்க திங்கறதும் ஒரே வட்டலு படுக்கறதும் ஒரே கட்டலு. ஒண்ணும் மண்ணாப் பொழங்கிக்கிட்டிருந்தாங்க. நாளாவ ஆவ இந்த பிள்ளைக்கி சுத்தமா நெப்புக்கெட்டுக்கிச்சி. மாப்ள பெரும கண்ண மூடிக்கிம் பிடி அஞ்சாறு அலங்காரத்துக்கு ஆளு வரல<br />
<br />
<br />
. கூத்து படு பாணி சாமியாரு கூப்புட்டு கண்டாற கழுத, ங்கோயா, ங்கொம்மான்னு ரவுசுப் பண்டும்பிடி மாப்ளக்காரனுக்கு ச்செட்யான ரோசம் வந்துட்டது.<br />
<br />
அவனப்பத்தி அனாவசியம்’ அவனென்ன உன்ன அடிப்புடிங்கறது? நானாச்சி வா உனக்கு தனியா செட்டுக் கட்டித்தாரமின்னு ஒரே ரெண்டு நாளயில ஆளுங்களுக்கு மூவாயிரம், நாலாயிரம் மிம்பணங்குடுத்து சாமியாரு செட்டக்கலைச்சி அபிராமிக்கி தனிச்செட்டு கட்டிக்குடுத்துட்டான்.<br />
<br />
<br />
இந்த ஆடுகாலிப் போனவ, குருவுக்கிட்டவொரு வார்த்தச் சொல்லிப்புட்டு நல்ல வாக்குசம் வாங்கிக் கிட்டுப் போவக்கூடாதா? போடா பிலக்காப் பையான்னு போவக்குள்ள சாமியாரு குடுத்து வெச்சிருந்த பொதுப்பணம் நாப்பதாயிரத்தையும் வாயிலப் போட்டுக்கிட்டுப் போயிட்டா. ஒரு கூத்தன்னைக்கி இந்த மனுசன் தண்ணிதாசனூர் அம்மங்கோயிலண்ட நின்னு,<br />
<br />
<br />
“அடியே குருத்துரோகி’ எண்ணி வொரேவொரு வருசத்துக்குள்ள என்ன கும்பி பத்தறாப்பல பத்தி யெரிஞ்சி போயிருவடி”ன்னு மண்ணவாரி வாரி தூத்த வாச்சொல்லுப் பலிச்சிட்டுது. அந்த ஆளிட்ட சாபனையோ’ அடிநாளு தீவெனையோ கவுண்டமவங்கூட சோடிப் போட்டுகிட்டு அங்கயிங்க சுத்தி ஆட்டம் போட்டது பத்தாதுன்னு இந்த கடகெட்ட மூளி அவனைக் கூட்டிக்கிட்டு வூட்டுக்கேப்போயி கும்மாளம் போடறதா?<br />
<br />
<br />
<br />
அவிங்கம்மாக்காரி பாக்கறவரிக்கும் பாத்துட்டு, “எங்கித்தி பாமனையோ என்னு வவுத்துல வந்து பொறந்து இப்பிடி ஈனப்பானமில்லாம திரியற’ நீதாம் புளுத்துச் சாவற’ எங்கியாச்சும் கண்ணுக்கு மறப்பாப் போயி சாவு’ இங்கேண்டி வூட்ட கந்தறப் பண்டற? கூடப்பொறந்த பொறப்பு ஒரு வயசிப்பிள்ள இருக்கற வூட்ல இந்த மாதர அக்குறும்புல அழியறீங்களே நல்லாயிருப்பீங்களா? நாசமுத்து வேசமாரிப் போவிங்களா?”ன்னு ச்சும்மா வுட்டு வணக்கு வணக்குன்னு வணக்கி கடதாம்பு கட்டும்பிடி, கவுண்டம் மவன் போக்கு வரத்த அறுதியா நிறுத்திக்கிட்டான்.<br />
<br />
<br />
இவ மாப்ள வந்து பாக்கறதில்லையின்னு அலமோதி கெட்டலைஞ்சி சோறுதண்ணி கூட குடிக்காம கூத்துக்கு போறது, வந்து கூதப்போட்டுக்கிட்டுப் படுத்துக்கிறது. பங்கினி மாசம் ச்செட்யானப்படிக்கி சீசனு’ வருசக்கூத்தா வருது’ வர்ற கூத்த வாண்டாங்கலாமா? போற எடத்துலியே தங்குமடம். போட்டுக் கூத்தாடிக்கிட்டு தப்படியா வூட்டுக்கு வந்து போயிக்கிட்டிருந்தா.<br />
<br />
அந்தப் பிரகாரம் பூலாம்பட்டி சித்தூருல நோம்பிக் கூத்து வொண்ணு தானாவதி மழைக்கி நிக்கிம்படி வூட்டுக்கு போவலாம்னு வந்தவ நட்ட நடு தாவாரத்திலேயே மாப்ளக்காரனும் அம்மாக்காரியுங் கொண்டி மாட்டிக்கிட்டு கெடக்கறதப் பாத்துருக்கறா.<br />
<br />
<br />
அப்பிடியே அங்கம் பதற அடிவவுறுக்காந்த ச்சட்டங்குன்ன, ச்சரிகலம் நடுநடுங்க நின்னவ “அடியே உத்தமபத்தின எனக்கு பித்தி சொன்னியே இப்ப நீயேண்டி அவுசேரிப் போன”ன்னு ஒரோயொரு வார்த்தையின்னாலும் நாண்டுகிட்டுச் சாவும்பிடி கேட்டுப்புட்டு, கடகடன்னு கண்ணுத்தண்ணிய வுட்டுட்டு அந்தாண்ட வந்துட்டா.<br />
<br />
அவ்வளதான் மக்யாவது வாரமெல்லாம், பன்னிக்கறியவறுத்து அதல பாசனத்த கலந்துக் குடுத்து அபிராமிய கொன்னுப்புட்டா அவிங்கம்மாக்காரி.<br />
<br />
<br />
நெருப்பூரு நாவமரைக்கி சீருக்கு போயிட்டு தகோலு தெரிஞ்சி வரதுக்குள்ள எடுத்துக்கொண்டி எரிச்சுப்புட்டாங்க. எளம்பிள்ளி கூடுகாட்டுல. மவ மூஞ்சியப் பாக்கக்கூட ரொணமில்ல. ஆவுசந் தாங்காம குழிமேட்டுக்குப் போயி சாம்பல நவ்வாலு வாயி அள்ளித் தின்னுப்புட்டு வந்தம்.<br />
<br />
<br />
நாங்க ஆருக்கு என்னா தீம்புச் செஞ்சம்?<br />
<br />
தாயப் பழிச்சமா? தண்ணிய தடுத்தமா?<br />
<br />
ஏழய அடிச்சமா?<br />
<br />
எளஞ்சாதம் உண்டமா?<br />
<br />
<br />
எனத்துக்கிந்த ஆண்டவனுக்கு எங்கமேல இத்தன கூரியம்?<br />
<br />
<br />
கூனுக் குருடு, மொண்டி, மொடம் இப்பிடி ஒடம்புல வொரு ஒச்சமின்னாக்கூட மயிராச்சி, அதப்பத்தி காரியமில்ல. பாழாப்போன பொறப்புல கோளாறுபண்டி வேடிக்கப் பாக்குதேயந்த நொள்ளக்கண்ணுச் சாமி..<br />
<br />
<br />
<br />
அபிராமிப்பிள்ளய நெனச்சிட்டம்னா அன்ன பொழுதுக்கும் அன்னந்தண்ணி ஆகாரம் எதுவுமே உள்ள எறங்காது. நாம்ப அழுதகண்ணுஞ் சிந்தன மூக்குமாயிருந்தா மாண்டவிங்க பொழைக்கப் போறாங்களா? மறிச்சி மண்ணவுட்டு மேல வரப்போறாங்களா? இல்ல அன்னைக்கியெழுதன எழுத்த பிரம்மன் அழிச்சி எழுதப்போறானா?<br />
<br />
<br />
உச்சியத்தாண்டி ஒருமாறுப் பொழுதாச்சி சம்பளம் பிரிக்க, செங்கமா முனியப்பங் கோயில்ல எறங்கி பொடுபொடுன்னு வூட்டுக்குப் போயி, துணிமணிய அலசிப் போட்டுட்டு ஒருவாச் சோத்தக் குடிச்சதும் களப்பாயிருக்குதேன்னு செத்த படுத்தம்பாரு, எந்திரிக்கும்போது மணி ஏழு’<br />
<br />
எஸ்.டூ.எ.பஸ்சு சங்கிரி வந்துட்டு திலும்பி பவனி போயிரிச்சி. அதும்பொறவு ஆதியா பாதியா கௌம்பி அம்மாபேட்ட வாரதுக்குள்ள மணி ஒம்பதர, அலங்கார கறவத்தானுங்க ஒருத்தங்கூட வூட்ல இல்ல, எட்டுமணி முட்டும் பாத்துட்டு மினிவண்டி பேசி எடுத்துக்கிட்டுப் போயிட்டாங்களாம். வூடு வூடா அவிங்களத் தொழாவிப்புட்டு வரதுக்குள்ள பத்துமணி கடைசி பஸ்சும் போயிட்டுது.<br />
<br />
<br />
<br />
பக்கமாயிருந்தாலுந் தேவல. நாகனூரு வாத்தியாரூட்டு கூத்து. மெயினு ரோட்லயிருந்து பழையூரு, முழியனூரு மேல நடந்துப்போனா ஏழு மைலுக்கும் மேல சேரும். எந்நேரம் போறது? நேரங்காலமா வந்துருந்தா எதோவொரு வண்டி கிண்டி புடிச்சிப் போயிருக்கலாம் அத்துவானத்துல வந்து மாட்டிக்கிட்டமே என்னாப் பண்டறது?<br />
<br />
<br />
செட்ல சாரி வேசமே இல்ல. அந்த சிறுத்த கண்ணஞ் சேவுருப் பையன் இப்பத்தான் புதுப்பழக்கம். சந்து அடைக்கத் தானாவும், பெருங்கொண்ட ஆக்கிட்டு கட்டிச் செலுத்த மாண்டான்.<br />
<br />
மிந்தியாச்சும் சுப்ரமணி இருந்தாப்ல. பொண்ணு வேசத்துக்குப் பஞ்சமில்ல. போனப்பூட்லயே ஆளு அலங்காரத்துக்கு வரல. அவரெண்ணாப் பண்டுவாரு? பத்திருவது வருசமா செட்டுக்கு அவருப்பட்ட பாடு அந்தப்பஞ்சும் பட்டுருக்காது. அப்பிடி ஒழைச்ச ஒழப்புக்கு கைமேல கண்ட பலனா இன்னைக்கி ஒவித்தியப்பட்டுக்கிட்டு கெடக்கறாரு.<br />
<br />
<br />
குஞ்சாண்டியூருக்கு அந்தாண்ட ஆண்டிக்கர காக்காயந்தெருவுக்கு ஒராட்டத்துக்குப் போயிருந்தம் மூணாம் வருசம் கூம்புக்கு கூத்துவுட்டவிங்க “வக்ரகேது பலி”தான் ஆடனுமின்னுப்புட்டாங்க. எந்த அலங்காரமா யிருந்தாலுஞ்சேரி சுப்ரமணி எத்து வரிசையாதான் தொழிலுப்பண்டுவாரு. அன்னைக்கிம் அவரு விலோச்சனா வேசம் போட்டுருந்தாரு.<br />
<br />
<br />
<br />
அம்மாபேட்ட கணேசண்ணன் எரிகண்டங் கட்டியிருந்தாரு. வேகாத திரேகமும், போவாத உசுரும், நீங்காத சேம்பரமும் வேணுமின்னு வரம் வாங்க எரிகண்டன் வக்ரகேதுவ ரணகாளிக்கி பலி குடுக்க கூட்டிப்போறாள். மவன் உசுர மாய்யக்க வேண்டாமின்னு விலோச்சனா அழுது பொலம்பறா. மின்ன வச்ச கால பின்ன வெக்க மாண்டேன்னு சூரனொருபக்கம் இழுக்க, வுடமாண்டேன்னு பொண்டாட்டி குறுக்க வுழுந்து தடுக்க ஓரியாட்டத்துல சூர வேசக்காரன் அவள எட்டி ஒதச்சி தள்ளி, அந்தாண்ட தாட்டி போவானில்ல. அந்த கட்டத்துல, கணேசன் ஒதச்ச ஒதயிலே, ஏமாந்தாப்பிடி அழுதுக்கிட்டிருந்த சுப்ரமணி முதுவுல ஈடுதாங்கி போச்சி. சும்மா ரெண்டு நாளு மூச்சுத்தப்பு வுழுந்ததுதாங் காரணம். பொறவு மனுசன் வாயத்தொறந்து பாட முடியல. எங்கயெங்கியோப் போயி, அளவத்த பணம் செலவு பண்டியும் நோவு நல்லாவது. பொறுக்கித் திங்கற கோழிக்கி மூக்கத் தறிச்சாப்ல, நல்ல தொழிலாளிக்கி நேந்த கதியப் பாரு’ வவுத்துப்பாட்டுக்கு இப்ப ஊரு ஊரா ஈயம் பூசிக்கிட்டு திரியறாரு.<br />
<br />
<br />
<br />
அவருமில்ல நானும் போவலைன்னா கனகராசி வாத்தியாரு கொஞ்சொத்தாப் பேசுவாரு. கெடயில காலு தங்காம அங்கயும் இங்கயும் ஏண்டா காலாந்திரியா திரியற? செட்டுக்கே வந்துர்றா’ ஆத்தர அவசரத்துக்கு வேணுமின்னா பணங்கினம் கூட வாங்கிக்கிவியாமின்னு அவருதாம் பொணையாயிருந்து ஆபரேசம் பண்ட செட்டு பணத்துலயிருந்து எட்டாயிரம் தாரமின்னு சொல்லி மிம்பணம் மூவாயிரத்த கையோட குடுத்தாரு.<br />
<br />
ஆச்சி, ஆச்சி இந்த எட்டு பூர்த்தியா ஆடனா வேணுங்கற பணந்தெரண்டுக்கும், ராயவேலூருலியே டாக்கிட்ருமாருங்க கைபோடறாங்களாம். நோவு இல்லாம போயி செஞ்சிக்கிட்டு வந்துர்லாம் நிம்மிதியா’<br />
<br />
<br />
கல்பனா ஆயா கூட முடிஞ்சத தாரமின்னிருக்குது. எப்பிடிப் பாத்தாலும் போவ வர மேஞ்செலவ ஆயாப் பாத்துக்குவா. ஆசுபத்திரி சமாச்சாரம் செலவு இவ்ளதான் ஆவுமின்னு ஆரு கண்டது? முன்ன பின்னகூட ஆவும். எதுக்கும் உண்டுன்னா காசிருந்தா ஒதாரணைக்கி ஆவுமின்னுதான் நானு கரவாட்டத்துக்கும், கூத்துக்குங் கைகுடுத்துட்டு இப்பிடி பட்டழியறன்.<br />
<br />
கனகராசிச் சமாவையுஞ் சும்மாச் சொல்லக்கூடாது, மனசார காங்காம ஏவிடியம் பேசுவாங்களோ என்னமோ தெரியாது. கண்டுவொரு நாளும் எச்சி எடுப்பு பேசனதில்ல. நாலுபேத்து தொழிலு நம்பளப் பத்தி வாதிக்கக்கூடாது. ரோட்டுக்கால்ல நின்னு பாலமாதர பொந்தியப் போட்டு ஒழம்பிக்கிட்டு போறவர ஒண்ணுரெண்டு வண்டிங்கள நாங்குறுக்காட்ட ஒருத்தங்கூட நிக்கல.<br />
<br />
நேரம் எந்நேரமோ அம்மாபேட்ட ஊரே அடங்கிப்போச்சி, வவுநேரங்கழிச்சி, தொலையா ஆரோவொரு ஆளு வாட்டசாட்டமா நடமாடற மாதர தெம்பட்டது. ஆராயிருந்தா நமக்கென்ன? கூத்துக்குப் போவ முடியாத வெசனத்துல எம்பாட்ல நானிருக்க, கிட்ட வரச்சொல்லி அவங் கைசாடப் பண்றானே’ இதென்றா தும்பமின்னு பக்கம் போயிப்பாத்தா அவனெங்கியோ வொரு போலிசு ஏட்டு.<br />
<br />
சிப்பமோ சீமச்சரக்கோ என்னான்னுந் தெரில. ஆளுக்குப் பதமான போத. சீப்பு வண்டிமேல அட்னகாலுப் போட்டு படுத்துகிட்டிருந்தாஞ் சிவரெட்டுப் பத்தவெச்சிக்கிட்டு.<br />
<br />
“என்னாங்க கூப்ட்டது”ன்னு நாங்கேக்க எடுத்த எடுப்பில<br />
<br />
<br />
“வர்றியா”ங்கறானே ஒரு துடியா.<br />
<br />
<br />
தடி எடுக்கறப்பவே அடி எங்க வுழுவுமின்னு எனக்கா தெரியாது. இருந்தாலும் இவன் நம்மள வெச்சி தெரிஞ்சி கூப்டறானா? தெரியாம கூட்றானான்னு அறிகொழப்பம்’ எப்பிடியோ இருந்து சாட்டாவுது. இதுக்கு மேல்பட்டு நாங்கூத்துக்கு போறது நெசமில்ல. வளச்சிக்கிட்டு வூட்டுக்குட்ப போவலாமின்னாலும் பவானி வரிக்கும் காரு இருக்கும். அந்தாண்ட வண்டியுமில்ல, பைபாஸ்ல போயி பொழுது விடியந்தின்னியும் குந்தியிருக்கணும்.<br />
<br />
அவுத்தப்போயி ஏப்பா அவுதிப்பட்டுக்கிட்டு கெடக்கணும்? இப்பிடிப்போயி சித்தங்கூறியும் இவங்கிட்ட தடுமாறிப்புட்டு வந்தா என்னாக் கெட்டுப்போச்சி? இருந்தாப்பிடியிருந்து எனக்கு தெங்கற நெனப்பெடுத்துக்கிச்சி.<br />
<br />
<br />
ஆம்பள தெரண்டு ஆளானா ஒடனே கண்ணாலங் கார்த்தி. அவனுக்குண்டான குடும்பங்குட்டி உற்பந்தி ஆவுது. அப்பிடியதுக்கு வசிதிப் பத்தலைன்னா அததுக்கு பொண்டுங்க இருக்கறாங்க அங்கபோயி அம்பதுன்னும் நூறுன்னுங் கடஞ்சொல்லிக்கூட அறுப்பத் தீத்துக்கறாங்க. பொம்பள சமைஞ்சா பெத்தவிங்க கபம்பட்டு, ஒடம்பட்டு ஒருத்தங் கையில புடிச்சிக் குடுக்கறாங்க. அதுச் சுத்தப்படலியா, அவப்பாத்து துணிஞ்சா, அவ பொச்சி பொறன ஆணாகப்பட்ட அத்த சீவனுங்களுக்கும் காரோடத்து நாயி மாதர காசுங்கையுமா சுத்தறாங்க.<br />
<br />
<br />
இந்த நிக்கற ஆத்துமாவுக்கு ஊத்த ஒடம்புல பிப்பு எடுத்தா அதக்கண்டு ஆத்த மருந்துண்டா? நம்பள அரிசின்னு அள்ளிப் பாப்பாருமில்ல, உமின்னு ஊதிப் பாப்பாருமில்ல. பிரியப்பட்டு வலியினா வர்றங்கறவன ஏம்பா வாண்டான்னுச் சொல்லனுமின்னு நானு அவன அப்பிடிவுட்டுட்டு, இப்பிடி இநதாண்ட வந்து ரோசனப் பண்டிக்கிட்டிருக்கவே அவஞ்சீப்பு வண்டி ஆள ஓரங்கட்டி நிக்குது. வந்து ஏறுன்னு அவஞ்சொல்லுமிந்தி நானு மின்னித்தி சீட்டேறி குந்திக்கிட்டன்.<br />
<br />
ஒரே அழுத்துல வண்டி எட்டிப் புடிச்சாப்ல கொடம்பையூரு கரட்டுக்கு வந்துட்டது. அடிக்கரட்ல வட்டப் பாறையும் பாழியும் இருக்கும்பாரு’ அவுத்த வண்டிய நிப்பாட்னான். பாறமேல மழக்காயித்த விரிச்சுட்டுட்டு வண்டியிலந்து நாலஞ்சி பொட்ணத்த எடுத்துப் பிரிச்சி வெச்சாம்பாரு’ எந்த சோத்துக்கடையிலே வாங்கனதோ’ கறிசோத்துப் பொட்ணமாட்டயிருக்குது வட்ட வாகறயே நெய்யி மணக்குது.<br />
<br />
<br />
<br />
மூக்குல பருக்க வர தின்னுப்புட்டு எந்திரிச்சன். அன்னந்தினியும் வாயே பேசாமாயிருந்தவன், “சரக்கு சாப்டுறியா”ன்னு ரெண்டு வெராந்தி பாட்லயும் எடுத்து மின்ன வெச்சான் ஏட்டு.<br />
<br />
அதயுஞ் சைசா மண்டயத்திருவி வாயில ஊத்திக்கிட்டன். வீதக்கட்ட வவுறு தூக்கங்கேட்டுது. அதோட அளவான போத, ஆடியாடி அலண்ட ஒடம்புக்கு தோதா யிருந்தது. குளுங்காத்துச் சிலுச்சிலுங்க, மேலுப் பசபசங்க எனக்கு ஏனா தெப்ளச்சுத்தி புரு புருங்குதே’ அப்பிடியே கட்டய கீழசாச்சி கண்ண மூடனம்பாரு. ஏட்டும் எம்மேல சாஞ்சான்.<br />
<br />
<br />
சாவலு நல்ல பெருஞ்சாதி சாவலு. அணைய அணைய ஒணக்கையா இருந்திச்சி. இப்பிடியே கதய ஒப்பேத்தி, ஓட்டி, கூத்த கொண்டயத்துக்கு கொண்டு போயி, மங்களம் பாடிப்புடலாமுன்னு நாங்கெனாக் கண்ட மாயத்துல, மின்னாம மொழங்காம எண்ணத்துல இடி எறங்குதே’<br />
<br />
ஏப்பா உரியேறன சாத்ரீகப் பூன தயிரிருக்க சட்டிய எத்தன நேரம் நக்கும்? வெறியெடுத்து ஆவு ஆவுன்னு என்ற அடிமடிய தொழவனவனுக்கு ஆட்டு ஒதப்பை யாட்டம் எம் புடுக்குச் சிக்கும்பிடி அவம் மொவற நறவல்ல கையுட்டாப்ல சுண்டிப்போச்சி. “த்தூ”ன்னு காறித் துப்புனவங் காது, காதா அப்பறாஞ் சடையாம.<br />
<br />
ஓரடியா? ரெண்டடியா? “அய்யோ சாமி நானு அறியாத பித்தியிலே தெரியாம தப்புப் பண்டிப்புட்டன். வுட்டுறு சாமி நானு ஓடிப் பொழச்சிக்கிறன்”னு அழுது பரிதவிக்கிறன் அவங்காலப் புடிச்சிக் கெஞ்சறன் அவங்காயா காதறந்தப் புண்டமேல ஓக்க’ அதயெதயுங் காதுலப் போட்டுக்கவேயில்ல. “மி யெம்மா பூக்குல தெங்கோ’ ஓரி நிக்கற நீ பணியின காமிச்சேவு”ன்னு மயித்த வளச்சிப்போட்டு ச்சும்மா குப்பு குப்புனு குப்பி, என்னய மிங்கட்டு பிங்கட்டு கட்டி சீப்பு வண்டியில தூக்கிப்போட்டு, கண்ணாடியச் சாத்தி, கதவுச்சந்துல எங்காலு ரெண்டையும் வெளியே இழுத்து, ஒரட்டாங்கையிலப் புடிச்சிக்கிட்டான்.<br />
<br />
<br />
சோத்தாங்கையில அடிப்போன பூணோட அத்தச்சோட்டு குண்டாந்தடியப் புடிச்சி, எல்லப்பன்னியக் குத்தறாப்ல என்ற உசுரு நெலயில ஒரேக்குத்து’ ஆண்டவங் குடுத்த அந்த ஆதாரப்பொருளு கொழண்டு கலங்கிப் போச்சி. இன்னும் நாலீடுப்போட்டு அப்பையே அடிச்சிக் கொன்னிருந்தா ஆயிருக்கும் வதவதயான வதப்பண்டி, வாய்க்கா கரையில வாரிச் சூறையிட்டுப்புட்டுப் போயிட்டான்,<br />
<br />
ராவெல்லாம் எங்க கெடந்தன்? எப்பிடி பூதப்பாடி வந்தன்? ஆருக்கொண்டாந்து ஆயாவூட்ல போட்டது. ஒரு பிருவுந் தெரில. நாம் பொழச்சது மாதா புண்ணியம்’ மறுசென்மம்<br />
<br />
. “பொறப்படு ஆயா வேலூருக்கு, போயி டாக்டரிண்ட கைபோட்டுக்கிட்டு வந்தரலா”மின்னு கண்ணு முழிச்சதும் மொதக்காரியமா ஆயாள <span style="color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">ஆயாள கூப்புட்டுச் சொன்னன்.</span></div>
<div>
<span style="color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;"><br /></span></div>
<br style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.7999992370605px;" />
<div style="background-color: white; color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20.7999992370605px;">
<br /></div>
</div>
manalveeduhttp://www.blogger.com/profile/11701810894595985945noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-891272482416127046.post-16091847911853651572014-11-03T03:29:00.002-08:002014-11-03T03:29:47.321-08:00ஆதமத்த நாடு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEihz8Kk-S8lqR6MzoSP0IkPHSE9PtY1o-m5ALCZ9dyQGFE1fKWy3usimSQgefAiEyOaa-m2_x93-u5EZMzEUE3E88ilVL5955hUQutwRB6A7nZaKRaf5UQHoDBd5apJ7GAYHEVCEkTmGOx6/s1600/myImage41676173.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEihz8Kk-S8lqR6MzoSP0IkPHSE9PtY1o-m5ALCZ9dyQGFE1fKWy3usimSQgefAiEyOaa-m2_x93-u5EZMzEUE3E88ilVL5955hUQutwRB6A7nZaKRaf5UQHoDBd5apJ7GAYHEVCEkTmGOx6/s1600/myImage41676173.JPG" height="320" width="319" /></a></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
போடுவாசி மவ சம்புநதிக்கி குமிஞ்சி நாட்டையில எழக்கட்ட முடியில. ரெண்டு தக்கம் குதுக்குகுதுக்குன்னு உதரம் புடுங்கித் தீட்டாப் பட்டுக்கிட்டிருந்திச்சி. வூட்டுக்குத் தூரம் போறன்னைக்கிப் பாழாப்போனப் பொம்பளச் சென்மத்துக்கு ஒடம்பு ஒடம்பாட்டமா இருக்குது கருமாந்தரம்? மேலப்பூராஞ் சீலையாட்டந் தொவண்டுக்குது. கசகசன்னு ஈரம், ஒரே கசாட்டு. அந்தாண்ட இந்தாண்ட அக்கற எழுய ஓடிப் பொணைக்கவுங் கைலாவல, இன்னைக்கி கோனு எட வேற கொறஞ்சிப் போவும், சின்னச் சேட்டுக்கிட்ட ஆரு பாட்டு வாங்கறதுன்னு பிள்ளைக்கிச் செட்யான வெசனம்.</div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
பெத்தமனம் பித்து பிள்ள மனங் கல்லுன்னு எந்த கேனப்புண்ட சொன்னது? </div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
சம்புப் பிள்ள அவிங்கம்மா லங்கலாடி அரிசியத்துக்கிட்ட கொண்டாந்து அவன வுட்டடிக்கணும். அப்பவே இந்தப் பிள்ள விடியாந்தரம் அடிவவுறு கடுக்குது. அள்ளவவுத்த நோவுதிடி மூளின்னா, கேட்டாளா அவ? குண்டு முத்தம்மா கடயில புளிச்ச ரவ்வோத் தண்ணிய ஒரு முழுங்கு வாங்கிக்குடுத்து ஓடுறீ முட்டக்கண்ணின்னு தொரத்தியுட்டுட்டா. அவ வெசனம் அவுளுக்குப் பாவம்.</div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
பேரு வௌங்குதேங்கப்பன் எம்.சி.யாருப் பேரு, சனங்காலு நீட்டிப்படுக்க முடியாதபடிக்கி அவங் கட்டிக் குடுத்தானே, காரவூடு அதுக்குப் பட்ட கடனக் கட்டமுடியாம அவப் பிருசந் தாட்டியம்பட்டியாம் போடுவாசி கூதமுட்டிச் செத்துப்போயிட்டான். செத்ததுதாஞ் செத்தாந் தாயாலி சும்மாச் செத்தானா? வருசத்திக்கி ஒண்ணு வருசத்திக்கு ஒண்ணுன்னு சம்புப்பிள்ளைக்கி மின்ன நாலுப் பொட்டப்பிள்ளைங்க. காட்டுப்பீயப் பேழும் மிந்தியே கருஞ்செவாப்பு வந்து அதலவொரு ரெண்டன்னத்த மண்ணுக்கு வாரிக் குடுத்துட்டாங்க.</div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
கொங்கநாக் குட்டிப்போட்டு குப்பங்கொசவஞ் சூள வெச்சாப்பிடி, அனாமுத்த பிள்ளைங்களப் பெத்துட்டுட்டு அப்பங்காரந்தான் புளுக்க மண்டிப் போட்டுட்டானே, அம்மாக்காரியாச்சிம் பொழப்பு மேல கருத்தா இருக்கணுமா வேண்டாமா?</div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
அரிசியம்பிள் ஒரு தாந்தோனி. பொம்பளைக்கி சேலம் ஒருக்கோடியா தெனஞ் சீனிமாப் பாக்கணும். ஆரியமோ, கம்போ, அரிசியோ, சாமையோ அது எதாயிருக்கட்டும் அன்னக்கி வூட்ல உண்டானத கொடையமூட்டு ரட்சிமிக்கிட்ட அளந்துட்டுப்புட்டு வாங்கித் திங்கனும். பிள்ளைங்களுக்கு பாவம் படுக்கப் பாயில்ல. ஆயாக்காரி ஒருபக்கம் பெரும்போக்காத் திரிய, பிள்ளைங்க ஒரு பக்கம் அறங்கையும் பொறங்கையும் நக்கிக்கிட்டு எத்தன நாளைக்கி கெடக்குங்க? பாத்துட்டு அதுஅதுங்களே ஆளுக்கொரு மாப்பளைங்களத் தேடிக்கிட்டுப் போயி பொழைக்கிதுங்க, ஒருத்தி டெய்லருப் பையனொருத்தனக் கட்டிக்கிட்டு பொம்மிடி டேனிசிப்பேட்டையில இருக்கறா. இன்னோருத்தி ராரி டைவரொருத்தனச் சேத்திக்கிட்டு பூசாரிப்பட்டி தீவிட்டிப்பட்டியிலே இருக்கறா, சொத்தாப் பொழைச்சா வந்துப் போறதோடச் சேரி மிச்சப்படி எதிலியும் பட்டுக்கறதில்ல.</div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
வாத்துரூம்புலப் போயி மூஞ்சி கைகாலு கழுவிக்கிட்டு வந்தா களப்புக்குச் செத்த நல்லாயிருக்கும். மூணுத் தரத்துக்கு மேல மூத்தரத்துக்குப் போனாவே இந்த வாச்சிமேனு கெழவாடி பேரெழுதிக்கொண்டு சூப்ரேசுருப் பசங்கக்கிட்ட குடுத்துர்றான். அவிங்க அங்கென்னாப் புடுங்கற வேலைங்கறாங்க? ஆம்பளைங்கக்கிட்ட இப்பிடித்தான் ஆயிப்போச்சின்னு இந்த சமாச்சாரத்தப் போயிச் சொல்லமுடியிமா?</div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
சேட்டு அவிங்கப்பன் பெரிய சேட்டு இருக்கந்தினியும் ரவ்வு வேல கெடயாது, பவுலு மத்தியானம் ரெண்டே சிப்ட்டுத்தான். கோனு வைண்டிங்கி ரீலிங்கி ரெண்டுத்துக்கும் பொட்டப்பிள்ளைங்கதாஞ் சூப்ரேசுரு. அப்பிடி அல்லியும் வேணியும் அதுக்குமின்ன கோமிதியும் இருந்தப்ப இத்தன கெடுபிடி இல்ல. கோனு எட இல்லையின்னாக்கூட எதோ நேந்து நெரவுவாங்க. டாக்கு எடுக்கனும், லோடு ஏத்தனுமின்னு அவீங்கள நேரங்கெட்ட நேரத்துல வரச்சொல்லி ஆபிசிலவுட்டுச் செனையேறுனா எவ ஒத்துக்குவா? நேர்றவிங்களுக்குத்தாம்பா இது சேரும், எல்லாத்துக்குமாச் சேரும்?</div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
நல்ல மவராசருக்கு அடையாளஞ் சொல்லாமப் பொறப்பட்டுருனுமில்ல? சேட்டுக்குப் பயந்துக்கிட்டு ரெண்டபேரும் வேலைக்கே வர்ரதில்ல, நின்னுக்கிட்டாங்க. அவிங்க கத அப்பிடி ஆயிப்போச்சா, கோமிதியும், ஒயருமேனு கந்தசாமியும் பாத்த தாவுலப் பேசப் புடிக்க ஒருத்தரு மேலே ஒருத்தரு பிரியமாயிருந்தாங்க, அத எப்பிடியோ துப்புகண்டு பின்னிங்கி பிட்டரு செலுவராசு, கோமிதிப்பிள்ளையக் காங்கறப்பெல்லாம் கரண்டுக்காரன்னுது மட்லுமென்னா ஒசித்தி? மண்ணுத் திங்கற பண்டத்த ஆருத் தின்னா என்னா? நானுந்தா ஒரீடு பதம் பாக்கறனேன்னு ச்சும்மா எரண்டிக்கிட்டேயிருக்க, இவளும் போனாப்போவுதுப் போனாப்போவுதுன்னுப் பொறுத்துக்கிட்டிருந்தா வவுநாளா. </div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
ஒரு நாங்கறப்பெட்டுக்கு டெசுட்டு எடுத்துக்கிட்டுப் போனப்பிள்ளய லேப்புலவுட்டு செலுவராசு சீலய உருவ, அவ குய்யோமுய்யோன்னுக் கத்திப்பாரிக்கிட்டு வெளியே ஓடியாந்துக்கறா. ஓடியாந்தவளக் குறுக்காட்டி இன்னைக்கிச் சும்மா பிசுக்கு, வாயத் தொறந்து வெளிய இத யெங்கியாச்சுஞ் சொல்லிப்புட்டையின்னு வெய்யி, சேட்டு வண்டியில தூக்கிப்போட்டுக் கொண்டு கந்தப்பட்டி ஏரியிலவுட்டுச் சின்னம் பண்டிப்புடுவ மின்னு மெரட்ட, அந்தப்பிள்ள பத்து பதனஞ்சி நாளாட்டம் மில்லுப்பக்கம் தல வெச்சிப் படுக்கல, ஒழுக்கமா வேலைக்கி வந்துக்கிட்டிருந்தவ, வாரக்கணக்குல ஆளு அட்ரசியே காணமே, மேலுக்கு கீலுக்கு எதனாலுஞ் சவிரியமில்லியோ, என்னமோன்னு ஒயருமேனு, தனசேவுரு, கோவாலு, பின்னிங்கி முருகேசன்னு அஞ்சாறு பசங்கப் போயி அவளப்பாக்க, இப்பிடி இப்பிடித்தான் நாயமின்னு எல்லாத்தையும் பூர்த்தியா புட்டுபுட்டு வெச்சிட்டா. </div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
இன்னைக்கி எலய அறுக்கறவன் நாளைக்கி கொலய ஏண்டா அறுக்கமாண்டான்? இந்த சங்கிதிய இப்பிடியே வுடக்கூடாதுன்னு பசங்கெல்லாம் ஒட்டுக்காச் சேந்துப்போயி சேட்டு காதுல இதப்போட்டு, பிட்ரு செலுவராசு, கோமிதிப்பிள்ளைக்கிட்ட தாஞ்செஞ்சது தப்புன்னு கால்ல வுழுந்து மாப்புக் கேக்குனுமின்னுச் சொல்ல, அவனிருந்துக்கிட்டு, ஒண்ணுமில்லாத விசியத்த ஆரு ஊதிப் பெரிசிப் பண்டனது? மில்லுப்பேருக் கெட்டுப்போவும், அப்பிடியிப்படி, அங்கயிங்கன்னு தபாய்க்கிறாந்தட்டி கழிக்கிறாஞ் சும்மா. அவ்ளதாஞ்சண்ட, பெருத்த சண்ட மூண்டுக்கிச்சி, பத்துப்பேரு பண்ணயம் பண்ற எடத்துல ஒருத்தன்மேல மட்லும் சேட்டுக்கு கருசனமின்னா அதுக்குங் காரணமில்லாம இல்ல.</div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
சின்னப்பட்ட கழதைக்கி செனக்கழத கூத்தியாளாம், சேட்டு பண்ற கோளாறுக்கெல்லாஞ் செலுவராசி உள்ளொளவுக்காரன். ஏமாந்தப் பிள்ளைங்களக் கூட்டிவுட்டு அவுனுக்கு வௌக்குப் புடிக்கிறவனும் அவனே. </div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
ஆதியிலே சேட்டவிங்கப்பனும், செலுவராசி அவிங்கப்பனும் கொண்டலாம்பட்டி, மகுடஞ்சாவடி, எஸ்ப்பாலம், எளம்பிள்ளியக் கட்டி பழயத்துணிப் பொறுக்கி வித்தாங்க. பிற்பாடு தறி ஓட்டப்போயி, தானே தறிபோட்டு, அப்பறம் நூலுமண்டி வெச்சி, படிப்படியா மின்ன வந்து பெரியச் சேட்டுக்கு நாலஞ்சி மில்லுஞ் சொந்தமாச்சி. நல்லது கெட்டது எல்லாத்துக்கும் கூடவேயிருந்து கடைசிமுட்டும் ஒத்தாசிப் பண்டுனானில்ல செலுவராசி அவிங்கப்பன், அந்த நன்னிக்கோசரம், மாளியக்கட்டி மரநாயக்குடிவெச்சாம் பெரிய சேட்டு.</div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
மில்லுவாசல்லே மீட்டிங் பேசி, சின்னசேட்டு வண்டி மேல செருப்பக் கழட்டி வீசும்படி நாலுநாளா டைக்கி பண்ட, வேªறுதுந் தோதுப் பத்தாம பிட்ரு செலுவராசி கோமிதிப் பிள்ளையிண்ட மாப்புக் கேக்க அவ என்னா நெனச்சாளோ மறுக்க மில்லுக்கே வரல. அன்னைக்கி வெஞ்சம் வெச்சாஞ்சேட்டு, ஆராருக்கு ஓடையடிக்கணுமின்னு. மொதல்ல அவங்கண்ல சிக்கனது ஒயருமேனு கந்தசாமி. அந்த சமாச்சாரத்த என்னான்னுச் சொல்றங் கேளுங்க...</div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
காருவள்ளி கஞ்சநாயக்கம்பட்டியிலருந்து சக்திவேலு, சக்திவேலுன்னு ஒருப்பையன் மில்லு வேலைக்கி வந்துக்கிட்ருந்தானப்பா அஞ்சாறு வருசமா. நாளுமேல ஒரு சிப்ட்டு ஒன்ரச் சிப்ட்டுன்னாலும் நல்லாக் கவடத்து பஞ்சித் திம்பாஞ் சலிக்காம, புளோரூமு,காடிங்கியொரு தொங்கல்ல இருந்து கோனு வைண்டிங்கி முட்டும் ஈரக்காத்து பதமா வேணுமின்னு ஏசி பிளாண்டு போட்டுருந்தாம் பக்கமா. பின்னிங்கில ஏறனா அவுத்தவுத்த பொட்டியில அண்டியிருக்கற பஞ்சிக்குப்பய வௌக்குமாத்துல அடிச்சிக் கூட்டணுஞ் சுத்தமா, உள்றப் போறப்ப பவுரு ஆபிசிலச் சொல்லி பீசுக்கட்டய மறக்காம புடுங்கி வெச்சிட்டுப் போவாந் தெனந்தப்பாம.</div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
சேட்டுவூட்டாரு மாதரவொரு பிக்கேரிங்க ஆரும் இருக்க மாட்டாங்க. அப்பனாயா, பெத்துப்பொறப்பு, மாமம்மச்சான் ஒருத்தரு தொச்சமில்லாம வூட்டுச்சனமே மில்லுக்குள்றக் குடியாயிருக்கும். அன்னைக்கிங்கறப்ப பெட்டுக்கு சேட்டுப் பொண்டாட்டியந்தச் சொட்டப் பெருக்கான் விடிஞ்சிம் விடியாதமின்ன மில்லுக்கு வந்துட்டா குப்பூரு சொசைட்டியில பாலூட்டிப்புட்டுப் போவ. மில்லச் சுத்தி வர ஆர்லுக்குள்ள ஆறேக்கரா கொறங்காடு கெடந்தது. அதயேஞ் சும்மாவுடனமின்னு சோளத்தட்டும், சீமத் தட்டும் ராசிப்பண்டி அத திங்கடிக்க பத்து உருப்பிடி சீம மாடு வளத்தனாங்க. அன்னாடம் அதுங்க அம்பதுப்படி, அறுவுதுப்படி பாலு பீச்சும். அதலவொரு வரும்பிடிப் பாத்துக்க அவிங்களுக்கு. சொட்டச்சி வந்தவ வந்தச் சோலியப் பாத்துக்கிட்டு போயிருக்கப்படாதா? ரவ்வுச் சிப்ட்டுக்காரப் பசங்க, பிள்ளைங்க யாராச்சிம் தூங்கறாங்களான்னுத் துப்பெடுக்க உள்ற வந்து ஒவ்வோரு எடமா நோட்டம் போட்டாப்பிடிச் சுத்திக்கிட்டிருந்தா. வாச்சிமேனு பாலு பீச்சிக் குடுக்கந்தினியும், அக்காளுக்கு உப்புசந்தாக்குப் புடிக்க முடியல. வேத்தூத்துதுன்னு சேட்டு மச்சனன் இ.எஸ்.சி என்னா பண்டுனான், சத்திப்பையன் பிளாண்டுள்ள இருக்கவே பீசுப்போட்டு மோட்டாரச் சாட்டுப் பண்டிவுட்டுட்டாம்பா.</div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
ஏப்பா சின்னவெல மோட்டாரா? பதனாறயிட்டம் பூராம் இருவுது எம்.சி.பி மோட்டாரு. காத்தாச் சொழண்டடிக்க இந்த சத்தி மூச்சி வுடமாண்டாம மூணாளு ஒசக்கயிருந்து சுருண்டு வுழந்தாங் கீழ. சோத்தாங்கையி மூட்டு வெலவிக்கிச்சி. கீழவுழுந்தவனத் தூக்கியொரு தண்யி தப்பு குடுத்துத் தேக்கந் தேத்தாம, ஆரக் கேட்றா பிளாண்டுக்குள்றப் போனன்னு காதோடச் சேத்தி அப்புறானே இ.எஸ்.சி ஒரு அக்குறும்பு. பசங்களும் பிள்ளைங்களும் நிமுசம் பையனத் தூக்கி சேட்டு வண்டியில வெச்சி புத்தூருக்குக் கொண்டு போனாங்க கட்டுப்போட. அன்னராவு வுட்டுட்டு விடிஞ்சி மக்யாநாளு பசங்க வந்து ஆரிந்த அலும்புப் பண்டனது?ன்னுக் கேக்கும்பிடி, இ.எஸ்.சி எனுக்கு எதும் தெரியாதுன்னே சாதிக்கறாம்பா வொரு அநியாயம்.</div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
கந்தசாமி உம்மய ஒடச்சி சொல்லிப்புட்டான். ஓவ் இவங்கொல்ல வந்த மாத்தான். வுன்னமாலும் இவன் ஒரே அரச்சணம் மில்லுல இருக்கப்படாதுன்னு மேத்திரிப் பசங்கச் சொல்ல சேட்டு மச்சாங்காரனுக்கு சப்போடு நாயம், மொழுக்கு நாயம் பேச இவிங்க விலுக்கோலு ஒத்துக்க மாட்டேனுப்புட்டாங்க. கிறுக்கு முறுக்குங்காம மச்சாங்காரன மில்லுக்கு வரவேண்டான்னுப்புட்டு, பையங் கையி எலும்புங்கூடி வருந்தினியும் சம்பளத்தோட ஆசிப்பத்திரி செலவையுஞ் சேத்திக் குடுத்துக்கிட்டிருந்தாஞ் சேட்டு. மூணு மாசங்கழிச்சி பண்டாத திருக்குசுப்பண்டி திலிப்பியும் மில்லுக்கு வந்துக்கிட்டிருந்தானப்பா இ.எஸ்.சி சேட்டு புண்ணியத்துல. ஒருநாளு அளவத்த போதையோட ரவ்வு சிப்ட்டு பாத்துக்கிட்டிருந்த கந்தசாமியிண்டப் பேசி பழசக் கௌறுகௌறுன்னுக் கௌறி அகராதிப்பேசி வலிவந்தமா சண்டைக்கி இழுக்க, இவனொண்ணுப்பேச அவனொண்ணுப்பேச ஒண்ணுமேல ஒண்ணுப்போட்டு தகலாறு முத்தி கந்தசாமி, இ.எஸ்.சி மண்டய அடிச்சி ஒழுக்கிப்புட்டான். இதுதாண்டா சமயமின்னு சேட்டு ஓமலூரு டேசன்ல போயி கொலக்கேசி எழுதிக்குடுத்து ஒயருமேன உள்றத் தள்ளிப்புட்டான். நாயம் நெகாருன்னு ஒருத்தரும் வாயத் தொறக்க முடியல.</div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
இதெல்லாம் ஒருபக்கங்கெடக்க, மூணு வருசத்துல பரமெண்டு பண்டறமின்னு சொன்னவிங்க ஏழு வருசமாவியும் ஒரே குஞ்சான குஞ்சிக்கி கார்டுக் குடுத்து பரமெண்டு பண்டல. பி.எப்பு, ஈயெஸ்சு ஒரு சுடுகாடுங் கெடயாது. தீபாவளிக்கி தீவாளி பிச்சப் போடறாப்ல முந்நூறு, நானூறு மிச்சமாப் போனா ஐநூறு உருவாதாம் போனசி. வருசமொருக்கா என்னமோ சாங்கியத்துக்கு ரெண்டுருவா சம்பளத்துல ஏத்துவான். அதுக்கு உண்டான வேலையுஞ் சேத்தி வாங்கிக்குவாங் கணக்கா.</div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
ஏப்பா மூக்குமுடி புடுங்கனா ஆளு பாரங் கொறயுமா? அவனவனுக்கு தக்க சம்சாரமில்ல, சம்பளமே கட்டுப்பிடி ஆவலையின்னா எதவெச்சி சுதாதரிப்ப? புளோரூமு கொமாரு, காடிங்கி கணேசன், சிம்பலக்சி தனசேவுரு மொகாமையில மேட்டூரு சீரங்கனப் பாத்து ஊனியனு ஆரம்பிக்கலாமின்னு கலந்துப் பேசனதுதாங் காரணம், ஏப்பா சேலம் கிச்சிப்பாளையத்துலயிருந்து ரவிடிங்களக் கூட்டியாந்து, பசங்கள பஞ்சிக் கொடோன்லவுட்டு அடிச்சா அடியா அது. மூக்குவாயெல்லாம் ரத்தமா கொப்பிளிக்கிது. ஆளு தப்புனாலும் அடி தப்புல. ஓரடிப் பாக்கியில்லாம பூராம் உள்ளடி. தனசேவுருக்குத்தான் மீறன அடி. தறிக்காருக்கு கோனு திருடி வித்தாங்கன்னு திருட்டுப்பட்டங் கட்டி, போலிசிக்காரனுங்களே வண்டி போட்டுக் கொண்டி அவரவரு வூட்ல துள்ளத் துடிக்க எறிஞ்சிப்புட்டுப் போனாங்க அத்தாந்தரமா.</div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
அதும்பொறவு உள்ளூரு ஆளுங்க ஒரே பசங்க இல்லாம துப்புரவா வேலயவுட்டு நிறுத்தி ராமநாதபொரம், மதரப் பக்கம்போயி, வெறும் பொட்டப்பிள்ளைங்களாவே மூணுவருசம் யெக்ரிமெண்டு முப்பதாயிரந் தாறம், நாலு யெக்ரிமெண்டு நாப்பதாயிரந் தாறம், அதோதட மாசச் சம்பளம், குடியிருக்க வூடு, போவ வர வண்டி, வசிதின்னு படல்படலாக் கூட்டியாந்து கோட்ரசிக் கட்டிக்குடி வெச்சாங்க. நரிமின்ன நண்டுக் கரணமடிச்சாப்ல இவிங்கக் விட்ட அவிங்க வந்த எனத்தக்கழட்ட முடியிம்? வந்த மாதரயே மாசமொரு கும்புலுச் சொல்லாமப் புடிக்காமப் பொறப்பட்டுச்சிங்க, மிச்சமீதி ஒண்ணு ரெண்டு தாக்குப்புடிச்சித் தடுமாறி மூணு வருசஞ் செலுத்தனவங்களுக்கும் அது நோனி இது நோனின்னு ஒரே அஞ்சிப்பிசா கை நட்டமில்லாமத் தொரத்தியுட்டுட்டாங்க. அப்பிடித்தாம் பட்டூம் இந்தச் சனந் திருந்திச்சா? மதரக்காரன் வல்லையின்னா தரும்பிரிக்காரஞ் சும்மாவே வர்ரங்கறான், நாயங்கண்டுப் பேசச்செட்யானப்படிக்கி மொகறயில மீசவெச்ச ஆம்பளையுமில்ல, மொழங்கால்ல மீச வெச்ச பொம்பளையுமில்ல.</div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
சேட்டு மில்ல வெச்சி இன்னொரு வெவகாரமென்னுன்னா ஒராளு ஒரு வேலச் செய்யிதா அந்தவொரு வேல மட்லுந் தாங்கற கட்டுத்திட்டம் எதுங் கெடயாது. கரண்டு இல்லாம சென்ரேட்ல ஏழு வைண்டிங்கி மிசினுக்குப் பருத்தியா நாலுதான் ஓடுதா, மிச்சப்பேருப் போயி பின்னிங்கில சைடு கட்டணும், மிசுனுத் தொடைக்கனும், ஏப்ரான் ஒட்டுனும், அரியா எடுக்கணும், இதெதுமில்லியா புளோரூம்புக்குப் போயி மிச்சிங்ல பஞ்சள்ளிப் போடுணும்.</div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
இன்னைக்கி காத்தால வந்தப்பத்தொட்டு ஏழாடங் கரண்டுப்போயி பஞ்சிக் கொடோன்லியேப் பழிக் கெடக்க விதியாச்சி. </div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
மத்தியான வெயிலு உக்கரம் புழுங்க ஒரே வேக்காடு, அதுல ஒடம்பு ஒடஞ்சிதான் இப்பிடி திரேகமே ரணமாயிட்டுது. கண்ணு இருண்டு, காது ரெண்டும் பஞ்சடஞ்சி, மேலு வெலவெலத்து, பிள்ள ரெக்கிரியாட்டம் வதங்கிப் போயிட்டா. நின்னு நின்னு இடுப்பு நோவெடுக்க, காலுந்தானா மடியிது. வதயான வதப்பட்டுக்கிட்டு இவளிருக்க பொழுது மணி மூன்றயாச்சி. இவளவுட்டுட்டு மித்த பிள்ளைங்கெல்லாம் வேரவரு எடுத்த கோனக் கொண்டி சேட்டுக்கிட்ட கணக்கு ஒப்படைக்க, இவ கடைச்சியாப் போயி மேலுக்கு சவிரியமில்ல, நாளைக்கி சேத்தி ஓட்டிக் குடுக்கறன்னு தவுமானஞ் சொல்லிக் குடுத்துட்டுப் போவலாமின்னுருந்தா.</div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
ரட்சக்கணக்குல மொதுலுப் போட்டு மில்லோட்ற மொதலாளி, எரநூறு முந்நூறுப் பேத்துக்கு மாசம் முப்புது நாளும் படியளக்குற கருத்தா, ஆளு மேல ஆளு ரெண்டாளு வுட்டப் பொறவும் அவங்கிட்ட கையேந்தி கூலி வாங்கறவொரு பொட்டப்பிள்ள, கெட்டக்கேடு, இந்த மாதரவொரு மதியாத்தனத்துல ரஸ்பீட்டு மயிரா நின்னுக்கிட்டிருந்தா, அந்த இஸ்பேட் புளுத்திக்கி ஏப்பா நோப்பாளம் வராது? எடுத்துக்கிட்டிருந்த கணக்க அப்பிடி அப்பிடியே வுட்டுட்டு, நெனச்சாப்பிடி குந்தியிருந்த சீட்டிய கிடீர்னு பொறவுத் தள்ளி எந்திரிச்சவன், திடுதிடுன்னு அந்தப் பிள்ளையிண்ட ஓட்டமா ஓடி </div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
‘ஏப் பொம்பளே, சேட்டு கூப்பர்றாந் தெர்லே? எர்மே மாரி நிக்றே ராஸ்கோல், கித்தனா கோன்? பொம்பிளே, கித்தனா கோன்?’ன்னு ஒரு அதட்டு அதட்டுனாம் பாரு... விலுக்குன்னு துள்ளிவுழுந்தப் பிள்ள மெரண்டுட்டுதா, அந்தப்பயத்திலேயே இன்னோராடம் தீட்டாயிப்போச்சி.</div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
ஒட்னக்கால எட்ட வெக்கறதுக்கில்லாமப் பட்டுக்கிட்டிருந்த சித்தரவதயில பிள்ளைக்கிப் பேச நாவே எந்திரிக்கல. மொள்ள டேண்டு மேலயிருந்து கோனு எடுத்து சேட்டு மின்ன வெச்சா. எக், தோ, தீன்னு எண்ணிப்பாத்தவனுக்கு, எட்டேயெட்டு கோனுயிருக்கும்பிடி ª----- சுண்டி, படீர் படீர்னு நோங்கிநோங்கி பிள்ள தலமேலத்தட்டி, ‘ஏப் பொம்பளே, எட்டவர் ஷிப்ட்லே, இவ்ளோதாங் கோனா? வயறு சோற் சாப்ட தெர்தூ, வாங்கறே பைசாக்கு வேலே செய்னும் தெர்லே’ன்னு கொரைக்க, உச்சியில ஈடுத்தாங்கி பிள்ளைக்கி நெருப்பு பருத்தி வெச்ச மாதர மேலேப்பூராம் த்திகு த்திகுன்னு எரிய அவுளுக்கும் மச திலிம்பிட்டுது. </div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
ஏந்திக்கிட்டிருந்த கோன நின்ன வாக்குல விசிறி எஞ்சவ, ‘டேய்ய் ஆர்ரா மேலே வெக்கிறவந் தாயாலி, குடுக்கறத மட்லும் எண்ணி கணக்கு வெய்யிஇ மிச்சப்பிடி கை தீண்டற வேலகீல வெச்சிக்கிட்ட மரியாதி கிரியாதியெல்லாங் கெட்டுப் போயிருஞ் சாக்கிரிதி’ன்னு இடுப்புல கட்டியிருந்த பையயிம், தலயிலக்கட்டியிருந்த வேடயும் அவுத்துச் சுருட்டி அவம் மொவரையில யிட்டுப்புட்டு கொண்டயத் தட்டி, முடிஞ்சிக்கிட்டு வேடிக்கப் பாத்தவிங்கப் பாத்தப்படியிருக்க, படப்படன்னு கேட்டு வாசலுக்கே வந்துட்டா.</div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
வாசக்காலத் தாண்டி இந்தண்ட வந்ததும், அஞ்சி வருசமா அவள புடிச்ச பீடவுட்ட மாதரயிருந்திச்சி. பின்னயென்னாப் பின்ன இன்னைக்கி நேத்தா அவ சேட்டு மில்லுல குப்பப் போடறா? எண்ணி எட்டுவயசில மில்லுல அடியெடுத்து வெச்சவ, ஆயிப்போச்சி அவுளுக்கு பதிமூணு வயசி, மொதவொரு மூணுமாசம் சேட்டுவூட்டாருக்கு சிக்கனம்பட்டி குதரக்குத்திப் பள்ளத்தலயிருந்து காப்பித் தண்ணி டீத்தண்ணி, ஜர்தாப்பொயில வாங்கிக் குடுத்துக்கிட்டிருந்தா. அதும்பொறவு கெண்டத் தூக்கப் போட்டாங்க.</div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
மூணுநாளு, நாலு நாளு கெடையா தொட்டியில ஊறனது. மக்கேரி நம்ப அள்ளி சும்மாடு கோலித் தூக்கி வெக்கையில அத்த பாரத்துக்கு மனுசரு செத்த ஏமாந்தப்பிடி யிருந்தா கை சோட்டு விட்டய அலுங்காம போட்டுட்டு சத்தமில்லாம ஓடிப் போயிருனும். ஓஞ்சி நிக்கறதுண்டா? உஸ்சின்னு சித்த குந்தறதுக்குண்டா? சும்மாயிருக்கறதக் கண்டுட்டான்னா பிஞ்சின்னும் மாருன்னும் வெச்சிப் பாக்கமாண்டாஞ் சேட்டு. அத எடு, இத எடு, அங்க ஓடு, இங்க ஓடுன்னு முடுக்கியேயிருப்பான். உள்ளங்காலுத்தேய ஓவத்து வேலச் செஞ்சாலும் மனசே மோவாதுச் சனியனுக்கு. நீ கொடலியே உருவி கைலக் காட்டு, அதயும் வெறும் வாழநாருன்னுப்புடுவாந் தாயாலி. </div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
ஆறுமாசம், ஒரு வருசமாட்டம் கெண்டச் சொமக்கப் போட்டுட்டு, பொறவு காடிங்கிக்கும் ட்ராயிங்கிக்கும் சிலைவருக்கேனு தள்ளப் போட்டாங்க. அப்பிடியிப்பிடி எதனாலுந்துளி அசந்து ரோலுல பஞ்சி கிஞ்சி ஏறிப்போயிட்டா நறுவுசுப் பண்டனது பணிக்கில்லையின்னு அந்தச்சோட்டு ரோலுக்கட்டையிலியே மண்ட மண்டயா இறுக்குவானந்த ட்ராயிங்கிப் பிட்ரு. மொள்ள பின்னிங்கிக்கி பாபினு மாத்தியுட்டுட்டு ஆறூசி, ஏழுசி எழக்கட்டச் சொன்னாங்க. இந்தப்பிள்ளைஞ் சூட்டுப்பா பத்தூசி, பன்னண்டூசிக் கட்டிச்சி. அப்பிடியிருந்தும் முழுசாவொரு மிசினி அண்டியிருக்க முடியாது. அதுவுமிந்த ஆயரமூசி வளத்திப் பிரேமு வாங்கிப் பூட்னப்பொறவு சிப்ட்டுக்கு இருவுது அரியா, இருவத்திரெண்டு அரியா எடுத்தது எடுத் மாதரயேயிருக்கணும்.</div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
இந்தச் சீரெழவெல்லாம் பத்தாதுன்னு இன்னோரு பேரெழவுக்கும் பிள்ளைங்க கைக்குடுக்கனும். நெனைச் சிக்கிட்டாப்போதும் மூணுக்கொருக்கா, ஆறுக்கொருக்கா இநத் லேபரு ஆபிசிரு, பேட்ரி இனிசிப்பெட்ரு இவிங்கயெல்லாம் மில்லு மில்லா அல்லெடுக்க வருவாங்க என்னம்மோ அவிங்க அவிங்களுக்கு எள்ளும் பொரியும் எறச்சி, கொண்டுப்போயி ஓமலூரு மலையாளத்தாஞ் சோத்துக்கடையில சீமச்சாராயத்தோட ஆட்டுக்கெடாயுங் காவுக்குடுத்து, அவுத்த அந்த பாடமாத்தியில தேர திலுப்பி வழிக்கூட்டி அனுப்பமுட்டும் பிள்ளைங்க பாவம் பஞ்சிக்குழியில ஒண்டிக்கிட்டு மறப்பாப் படுத்துருக்கணும்.</div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
காத்துண்டா? ஒரு வெளிச்சமுண்டா? பங்கினி மாசம், சித்தர மாசமாயிருந்து, அந்த அடப்பாசறத்துல ஒண்ணுமேல ஒண்ணா பொணமாட்டம்டந்துட்டு எந்திரிச்சா, அந்த ஜூட்டுக்கு ஒவ்வோருப் பிள்ளைங்களுக்கு அக்கி வந்தாப்பிடி மேலே கொந்திப் போயிரும். ஒவ்வொண்ணுங்களுக்கு தொடச்சந்துலியும், சூத்தாம்பட்டையிலையும் நல்லா இத்தத்தச்சோடு செலந்தி புட்ரிச்சிக்கிட்டு முட்டி, ஈ மிக்க ச்சும்மா சலமா ஊறும். செலந்தி ஒடஞ்சி மொளப்பு வாரந்தின்னியும் நடக்கறதுக்கில்லாம நாத்தமெடுத்துக்கிட்டு திரியினும். எப்பிடியோ ரெண்டு வருசமா பிரிப்பேட்தியிலியும், பின்னிங்கியிலியும் ஓரியாடிப்புட்டு, மூணாம் வருசந் தொட்டுத்தான் இந்த கோனு வைண்டிங்கிக்கி வந்தா, கூலிக்கித் தக்கன வேல வாங்கறாங்க, அதுக்கு எச்சாவும் நம்ம பாட்டத் திங்கறாங்க. பாடுப்பட பால்மார்ற பிள்ளயில்ல இவ. ஊத்த வாயில வெரு வார்த்தயச் சொல்லிப்புட்டு அந்த சொல்லு அழிய றாங்களே, அதக்கண்டாதானே, மனுசருக்கு வேவறது. </div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
பேச்சிச் சுத்தம் இல்லாக்காட்டி அந்தெடத்துல எப்பிடிப்பா பிரியமா பண்ணயம் பண்டறது? அட விசியம் வேறொண்ணுமில்ல, போனப்பூட்டு தீவாளீக்கி சேட்டு என்னான்னுச் சொன்னானிங்கற, வருசம் முந்நூத்தி அறுவத்தஞ்சி நாளும் நிக்காம வேலைக்கி வாரவிங்களுக்கு, அடுத்த நோம்பிக்கி சைக்கிளு வாங்கித் தாறமின்னு சொன்னதுதாஞ் சாக்கு, இவ நோவா நொடியா, நோம்பியா கீம்பியா ஒரு கல்லெடுப்பையுங் கண்டப் பாவியில்ல, அவுளுண்டு மில்லுண்டுன்னு கிருமமா வேலைக்கிப் போயிக்கிட்டிருந்தா. எப்பாவொரு பொட்டப்பிள்ள நாம்ப யின்னைக்கி வயிசிக்கி வாரமின்னுக் கண்டா வெச்சிருப்பா? சமஞ்சவளுக்கு தெரட்டிச்சுத்தி வூட்டுக்குக் கூப்படறாங்கயில்ல, அந்தேழு நாளு மட்டும் பிள்ள மில்லுக்குப் போவல.</div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
மறிச்சி அந்த வருசந் தீவாளி வந்தது. அல்லாருஞ் சேட்டு நோம்பிக்கி அவுக்கறான்னு ஆளுமேல ஆளு ஏறிக்கிட்டுப் போயி வாங்கிக்கிட்டிருக்க, சம்புநதிப்பிள்ள அதயெதயுஞ்சட்டையேப் பண்டல. சைக்கிளு வாங்கறத்துலியே குறியாயிருந்தா. பின்ன ஊரேத் துடும்படிச்சிக்கிட்டுத் திரிஞ்சாளே, வெறுங்கையோட போனா பெருத்த பங்கமில்ல. ரவுசடங்கனதும் போயி இவ, இப்பிடித்தாஞ் சங்கிதி, சைக்கிளு வாங்கிக் குடுங்க சாருன்னு கேக்க...</div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
‘ஏழ்நாள் ஆப்ஜெண்ட் எந்த கணக்குல குடுக்கறது? கண்டதுக்கு வாரியெறைக்க இதுவொண்ணும் அனாதிங்க சொத்தில்ல’ங்கறானே வாயே கூசாம, இல்லாதவச் சொல்லு சவ ஏறுமா? மவ மருவறா மருவறா அப்பிடி மருவறா, மாடாட்டம் அழுவறா. ஆண்டியூம்பச் சொன்னா தாசப்பனுக்கு எங்கப் போச்சி பித்தி? இவுளுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணுமின்னு மில்லே ஏவிடியும் பேசுது. புதுவருசம் பொங்கலுன்னு எத்தன ரீவு நாள்ல வேலக்கிப் போயிருப்பா? வந்த கணக்கவுட்டுட்டு வராத கணக்கச் சொல்லி வேல வுட்டுட்டானில்ல. இந்த அலுப்பநாயி சாவகேசம் நம்புளுக்கு அரமாலுமே வேண்டாமின்னு அன்னக்கி நெஞ்சில வைராக்கியத்த வெச்சா, எண்ணம் இன்னக்கித்தான் ஈடேறுது.</div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
கசந்து வந்தவ கண்ணத் தொடச்சி அனுசரிச்சி, ரெண்ட வார்த்த தேறுதலா சொல்லாக்காட்டிப் போவுது, எங்கியோ காத்தடிக்கிது, எவுத்திலியோ மழப் பேயிதுன்னே இருக்குறாளே இந்த அரிசியம்பிள்ள, மொதநாளு அந்தியோட வந்து மூலையிலச் சுருண்டப் பிள்ள, மொடங்கனது மொடங்கனாப்பிடியே கெடக்குதே, என்னாயிருக்கும் ஏதாயிருக்குமின்னு பெத்த வவுறு ரவையாச்சிம் பதைக்கிமா பதைக்காதா? </div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
இந்தம்மாளுக்குப் பொந்தியில என்னா கருத்து ஓடுது...</div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
இதேதறா, இந்தப்பிள்ள மில்லுக்குப் போவாம, டிமிக்கிக் குடுப்பாளாட்டமிருக்குதே... அம்மா இப்பிடியே மலத்திப் அரியா ஒய்யாரமாப் படுத்துக்கிட்டிருந்தா, அத வெச்சி போயி ரெண்டுநா சம்பளத்துள கிம்பளத்துல எதனாலுந் துண்டுகிண்டு வுழுத்துப்போச்சின்னா, பண்ணாடிமாருங்க பஞ்சாயத்துல முகவா விக்கிறாங்களே டீவிப்பொட்டி, அத வாங்கற வழியெப்பிடின்னு ச்செட்யான கருக்கட வுழுந்துட்டுது. அந்த ஆவுசந் தாக்கு புடிக்க மாட்டாம தாம் பொம்பள, மறாநாளு கோழிக் கூப்ட்டுச்சோ, இல்லியோ ‘ஏண்டி மில்லுக்குப் போவுலியா? மில்லுக்குப் போவுலியா’ன்னு மவள அரியா அரிச்சிப் புடுங்கறாளே வுடாம. </div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
அம்மாக்காரி சம்பஞ் சாலாக்கெல்லாம் மவக்கிட்ட ஒண்ணுஞ் செல்லுப்பிடியாவல. சம்புப்பிள்ள புடிவாதமா, படுத்தது படுத்தவாக்குலயிருக்கா. ஓஹோ யிந்த சண்டிமாடு ஆட்டம் பழக்கப் பாக்குது, அதயெப்பிடி நொகத்துல பொணைக்கிறதுன்னு எனக்கா தெரியாது? தீனியெடுக்காம புணிச்சிக்கிட்டுருவனிண்ட ஒரேடியா வாட்லாட்டியம் போட்டா காரியங் கந்தராயாயிப் போயிரும். எங்கப் போயிரப் போறா? ஒருச்சித்தய வுட்டுப்புடிக்கலாமுன்னு நெனக்கங்கட்டு பழயச் சோத்துதண்ணி நேரத்திக்கெல்லாம் அரிசியம்பிள்ள பொறுக்கலுக்குத் திலும்பிக்கிட்டா. </div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
<br /></div>
<div style="background-color: white; color: #141823; font-family: 'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size: 13.63636302948px; line-height: 20px;">
பொறுக்கலுக்குத் திலும்புனவ, முட்டப் போண்டா திங்கலாமின்னு ஒரேத்துருவா காமலாப்பொரம் பெருமாளாசாரி கடைக்கேப் போயிட்டா. முட்டப்போண்டா திங்கப் போனாளில்ல ஆசாரிக்கடைக்கி, அவுத்தத்தான் எங்கியோ மில்லு நாயந் துப்புத் தெரிஞ்சிப் போச்சி. அவ்ளதாம்பா, படப்படன்னு சூரிக்காத்தாட்டம் வூட்டுக்கு வந்தவ, வந்தும் வராதமின்ன அலுப்பா கவுத்துக் கட்டுல்லத் தூங்கிக்கிட்டிருந்தப் பிள்ளை, வெடுக்குன்னுத் தூக்கி கீழப்போட்டு மிதிச்சி ஏண்டி ஓலீ, சோறுப் போடற மவராசன், ஒருச்சொல்லு சொன்னாயென்னா? ரெண்டு ஈடுதான் வெச்சாயென்னா? ஒண்ணுமில்லாதப் பொத்துலு, உனக்கெதுக்கிடி ரோசமின்னு குமுறுகுமுறுன்னுக் குமுறி, மசத்தப் புடிச்சி தரத்தரன்னு இவள அடிச்சி வேல வாங்குங்க சாமீன்னு, சொல்லிவுட்டுட்டு வந்தப்பொறவுதான், அரிசியம் பிள்ளைக்கி மனசாறி, மத்தியானச் சோறேக் குடிச்சா.</div>
</div>
manalveeduhttp://www.blogger.com/profile/11701810894595985945noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-891272482416127046.post-10830368105136420372014-11-02T18:11:00.002-08:002014-11-02T18:11:35.008-08:00வாயிக்கி வணங்காத பூவும் பல்லுக்கு மெதுவான கல்லும்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjZe2h4gS7I2RMVapmNcuk7uEifcKOczlRd6aKWyosLgxofwz0KI0pmEGxk_alB6Pm2CXQ3aCLvE0X2j2CnzkVmSDg3TWwhVcKwOJ4ctbGAfuTVvQK1exZ609jd3Tpdn3w3GUNCqNiBFmQW/s1600/131617425333.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjZe2h4gS7I2RMVapmNcuk7uEifcKOczlRd6aKWyosLgxofwz0KI0pmEGxk_alB6Pm2CXQ3aCLvE0X2j2CnzkVmSDg3TWwhVcKwOJ4ctbGAfuTVvQK1exZ609jd3Tpdn3w3GUNCqNiBFmQW/s1600/131617425333.jpg" height="320" width="264" /></a></div>
<br />
<br />
பட்டும் பாவியானன் நானு நட்டுஞ்சாவியானன் அடியே ஆயா<br />
எங்கியாச்சுங் கண்டுக்கறமா இந்தமாரி அநியாயத்த ?தெனம் பத்து தரமுன்னாலும் காட்டுக்கும் ஊட்டுக்கும் நடயா நடந்து, கடன ஒடன வாங்கி முட்டுவழிப்போட்டு, இடுப்பொடிய பாடுபட்டு பண்ணயம் பண்டுனாலும் இந்த எலவெடுத்த வூட்ல இந்தாடி உனுக்கொரு அஞ்சிப்பசா காசின்னு நம்புளுக்கு அவுப்பாரு ஆருமில்ல.<br />
<br />
இப்ப அள்ளாமக் கிள்ளாம ஆரூத்தின்னப்பாடுமில்லாம மூணு ஏக்கரா நெலத்த அந்த கொரங்குத் தேவிடியாளுக்கு இந்த ஏத்தி கூத்தியாருப் பெத்த பையன் பட்டா பண்ணி வெக்கப் போறானாமே......<br />
<br />
இப்படி கண்டவங்கத் தின்னுப்புட்டு போறதுக்கா அந்த கெழுட்டுமுண்ட வவுத்துக்குக்கூடத் திங்காம வாயிலப் பொயிலக்குச்சிய அடக்கிக்கிட்டு சந்த சந்தயா அரிசிவித்துச் சொத்து சம்பாரிச்சி வெச்விட்டுப்போனா?<br />
<br />
மேலுக்கூடைக்கு தக்காளி பத்தல. பெருஞ்சாதிப்பழமா ஒரு பத்துக் கொட்டாப்புட்டி பொறுக்கி, சின்னப் பொடியிண்ட குடுத்துர்றா மாப்பளைன்னு காட்டுக்குப் போவச் சொன்னன். பாலூத்திக் கடஞ்ச பண்ண ரெக்கிரியும் மூணு ருண்டகளியையும் முழுங்கிப்புட்டு போனவம் போனவனே......<br />
<br />
<br />
பொதஞ்சந்தக்கி போற பாரவண்டிய நிறுத்தி வெச்சிக்கிட்டு நானும் வருவான் வருவான்னு பாத்துக்கிட்டு இங்க கெடக்கறன்.<br />
எங்கயிருந்து வருவாம் மாப்ள?<br />
மூணுநாளா அந்த மூளியூட்லயில்ல குடியிருந்துக்கிறான். அப்பயே என்று அங்கம் பதயாப் பதச்சது’ என்னமோ எடஞ்சலு வருதுன்னு நெனச்சன் இப்படிப் பண்ணிப்புட்டானே...<br />
<br />
படுத்தா ரவயில தூக்கம் வந்தா? பாழும் வவுத்துக்கு ஒரு ஒழுங்கு நீசுத்தண்ணிய நிம்மதியா குடிக்க முடியிதா? அடி எனக்கு ஆளுன்னாலும் ஆறல’ தீருன்னாலும் தீரல, நெஞ்சில ஒரே ரவ அஞ்சிக்க இல்லாம அவனும் உசுரோடத்திரியறான். ஏனா ஆம்பளயின்னு அத்தச்சோட்டு மீசய வெச்சிக்கிட்டு..<br />
<br />
<br />
ஏண்டா மொன்னயா ஊரே சிரிச்சி சீலப்பேனு குத்துதே. உன்னு மொவறையில காரிக்காரித் துப்புதே இன்னும் எதுக்குடா பொன்னயை அந்த மானங்கெட்ட உசுர வெச்சிக்கிட்டுருக்கற? ஏண்டா உனக்கு ஒருச்சார குறண மருந்து சிக்கல’ ஒருச்சாணு கவுறு சிக்கல’ ஹூம் நல்லவங்க எல்லாஞ் சாவுறாங்களே அட ஆண்டவனே’ இவன நீட்டி நீருப்பூசி வெக்கக்கூடாதா? ஆடிமா குடிவெட்டி நீளமாப் பொதைக்கக் கூடாதா?<br />
<br />
கெடக்குது வுடுறா’ கெடக்குது வுடுறா’ இதா இன்னிக்கு வந்துரும் நல்லபித்தி’ இத நாளைக்கி வந்துரும் நல்ல பித்தின்னு நானும் எட்டு வருசமா உன்னுகிட்ட ஓரியாடிப்பாத்துட்டன், நீயும் திருந்தி நல்லவழி போறதக்காணம். எப்ப என்னய அறியாம அந்த காதறுந்த மூளிக்கி காட்ட எழுதிவெக்க துணிஞ்சிட்டியோ, வுன்னுமாலும் உனக்கும் எனக்கும் என்ன இருக்குது?<br />
<br />
<br />
கருத்ததெல்லாந் தண்ணி வெளுத்ததெல்லாம் பாலுன்னு உன்ன அண்டி கெடந்தனே’ அதெல்லாம் அந்தக்காலஞ்சாமி அந்தக்காலம்’ இதாவொரு பையன பெத்துவுட்ருக்கறன் மரியேதியா அவுனுக்கும் எனக்கும் பொழைக்கவொரு தடங்காட்டு, பொறவு நீயி, என்னமோச் செஞ்சி எப்படியோ நாசமாப்போ’<br />
<br />
இவ்வள ஆனப்பொறன ஒங்கிட்ட இருந்த பொழைக்கிறதுல அர்த்தமில்ல. கெதியத்தவ, கேட்க ஆளு இல்லாதவன்னுதான நீயி இப்பிடி தில்லுமாரித்தனம் பண்ணிக்கிட்டுத் திரியற... எனக்கும் சாதி சனம் ஊரு நம்பக்கெடக்குது ...செரக்கப் பொறந்து நெறக்க பொழச்சதுங்க போறேன்<br />
போயி, அவங்கள கூட்டியாரன்.<br />
<br />
பத்துப்பேர வெச்சி பஞ்சாயம்பேசி துரும்புக் கிள்ளி போட்டுர்ரா சாமி. உன்னு வழிய நீப்பாத்துக்க என்னுவழிய நாம் பாத்துக்கறன் ஆமா.<br />
ஒரே ஒரு நிமிசம் இந்தவூட்ல நானு இருக்க மாண்டன், இங்கயிருக்க எனக்கு சுத்தப்படாதுன்னா சுத்தப்படாது.<br />
ஹூம் நானாப்பிள்ள பொறந்தன் உன்னுக்கிட்ட சின்னப்பட்டு சீரழிய....<br />
<br />
டே கண்ணு சின்ராசு’ கண்டார வோலி பையனே’ எங்கடாப்போயி தொலஞ்ச? உன்னாலத்தாண்டா என்னுசுருப்போவப் போவுது? வாடா இங்க.. இந்துரா ரெண்டுருவா போயி சளி மிட்டாயி வாங்கித்தின்னு.<br />
<br />
ஒழுங்கா பள்ளியோடம் போ’<br />
வௌயாட்டுப் பெறாக்குல வூட்ட தொறப்பு போடாம போயி ராத. இந்தா தொறப்புக்குச்சி’ செத்தாலுந் திலும்பி வர மாட்டேன்னு<br />
புண்ட வாயங்கிட்டச் சொல்லிப்புடுன்னு ஒரே முடுவா அப்பமூட்டுக்கு திலும்பிக்கிட்டா பஞ்சவர்ணம்.<br />
<br />
<br />
<br />
தடத்துல போற வர்றதுங்க தாம்பாத்துருக்கப் பொறந்தது, இன்னும் ஒழுங்கா கழுவத் தெரியாததுங்கயெல்லாம் பஞ்சவர்ணத்தோட தொகக் கண்டுட்டுப்போற போக்குல அப்படியே ரெவலா தலவ கிள்ளி நெருப்ப பருத்தி வெச்சிருக்குங்க. அதான் இப்பிடி வேட்டு வெடிச்சி பொக கௌம்புது’<br />
எட்டுக்கு ஒருக்க, பத்துக்கு ஒருக்க எப்பயும் நடக்கிற கொச வழக்குத்தான்னாலும் இந்தப் பயணம் எதோ முத்திப்போன சமாச்சாரமாட்டமிருக்குது. இல்லைன்னா பஸ்சு ஏர்றவளா பஞ்சவர்ணம்?<br />
<br />
<br />
மீறி மீறிப் போனா வண்டி மேட்டுக்குப்போயி பொழுதடைய அவபொறந்தவ வூட்ல கதய ஓட்டிப்புட்டு துப்பன எச்சி காயறதுக்குள்ள ஓடியாந்துருவா’<br />
கொண்டுகிட்டு கொலம்பாக்கறது நல்லாயில்லத்தான் என்னாப் பண்டறது? அவளா பச்சமுத்த கட்டிக்கிறேங் கட்டிக்கிறேன்னு அடிப்பறிக்கிட்டு நின்னா?<br />
<br />
<br />
<br />
ஹூம் அவங்கப்பன் இருக்கறானே திரியோதனன், ராசமுத்து கவுண்டன். பொழித்தகராறுல பங்காளி கையவெட்ப்புட்டு போலிசில சிக்கி சேலஞ் செயில்ல கம்பி எண்ணிக்கட்டிருந்தாம் பாவம். இவந்தாம்பாத்துட்டு அட அக்காப்பிருசஞ் செயில்ல களித்தின்னுக்கிட்டுக் கெடக்கறானேன்னு சீனிவாச வக்கீலு வெச்சி சே வாதாடி செவச்சி மாமங்காரன விங்கிணிச்சி வெளியக் கொண்டாந்தான். அப்ப பஞ்சவர்ணம் வயிச்சிக்கி வந்த புதுசி அதும்பொறவு பாத்துக்க ச்சும்மா கருவாட்டுக்கூடய பூனச் சுத்தனா ப்புல அவங்கூட்ட இவஞ்சுத்த ராசமுத்து மவள இவுனுக்குக் கட்டிக் குடுத்தாங்க கடன கழிச்சான்.<br />
<br />
<br />
தாலியேறுன நாளு மொதக்கொண்டு தண்ணியில எழுதுன எழுத்து அழிஞ்சாலும் தம்பிருசன் சொல்லு அழியமாண்டான்னு நம்பித்தான் பஞ்சவர்ணம் அவங்கிட்ட வாழ்க்கச் செஞ்சா. அவளாட்டம் உஸ்தியமான பொம்பள கருத்துள்ள பொம்பள ஊருக்கு ஒருத்தருமில்ல. காலா காலத்துல அவுனுக்கு தெல்லுமணியாட்டம் ஒருப்பையன பெத்துக்குடுத்தா.<br />
<br />
<br />
அவ மாசமாயிருந்தாளே அந்தச்சமயத்துலதான அவுனுக்கு இந்த வெங்காயத்தானோட வள்ளலுமயிரு முச்சூடுந் தெரிஞ்சது.<br />
எவத்தத்திலும்புனாலும் இவங்கூத்தியா, வெக்கிற நாயந்தான். அவுத்தப்பாத்தன்’ இவுத்தப் பாத்தன்’ சனிச்சந்தயிலப்பாத்தன், ஞாயிதுச் சந்தயிலப் பாத்தன், அவளோடப் பாத்தன், இவளோடப் பாத்தன்னு பலரும் பலவிதமா சொன்னப்பக்கூட பஞ்சவர்ணம் அது காது குடுத்துக் கேக்கல.<br />
அவளா ஆள பொடனிமேல கைபோட்டுப் புடிச்சப்பறந்தான் உம்மயான நெலவரத்தக் கண்டுக்கிட்டா.<br />
<br />
]<br />
தாரண வருசமோ, கீரண வருசமோ,<br />
ஒருப்பூட்டு<br />
அப்பசி மாசம் செரியான அடமழ’<br />
இப்ப இந்தசின்னராசு பையன் ஆறுமாசமோ தென்னமோ அவ வவுத்துல இருந்தான்.<br />
ஒருநா எங்கியோ காட்டுக்குப் போவலாமுன்னு திலும்புவை,<br />
“இதென்னாடி அநியாயம் இந்தாளு போனா போன எடம்’ வந்தா வந்த எடம்’ காத்தால ஒருக்குண்டாம் பழயச்சோத்துத் தண்ணிய குடிச்சிப்புட்டு போன மனுசன், இன்னும் வூடு வந்து சேரல, வந்தா ஒருவாச்சோத்தப் போட்டுட்டு காட்டண்டி ஒரு வேலவெட்டி பண்ணலாமுன்னா எங்க போறது? ஒராளுக்கு ஊழியங்செய்யவே நேரஞ்செரியா இருக்குது, அந்திப்பாலு வேறப்பீச்சணும், மாட்டுக்கு பருத்திக்கொட்ட ஆட்டணும். ஊர¬ வெச்சது அப்பிடியே உசுரோடக் கெடக்குது.<br />
<br />
<br />
இந்த முட்டக்கண்ணி வர்ரன்னா திருட்டு முண்டய இன்னுங் காணம். ஒரு மனிசி எத்தன வேலயச் செஞ்சி நாசமாப் போறது. எப்பப்பாத்தாலும் ஊரெலவாம் பேரெலவாமுன்னு பஞ்சாயம் பேசிக்கிட்டுருந்தாச் சோத்துக்கு வந்துருமா? தெச்சத்துக்கு பண்ணாடி அதச்சொன்னாரு இதச்சொன்னாருன்னு வீம்பொல்லாப் புத்தாம் மிச்சம் வேண்டாஞ்சாமி இந்தி எச்சிப்பண்ணாட்டுன்னுச் சொன்னா இந்த மொடமசுருப்புடிச்சவங் கேட்க்றானா”ன்னு போன வனக்காணமுன்னு கோவத்துல சாமானஞ் சட்டெல்லாம் பொழங்கறாப்புல பொழங்கிப் போட்டு நொறுக்கிக்கிட்டிருந்தா அப்பத்தாம் பூட்ல பூந்த பச்சமுத்து,<br />
“என்னாடிப்பிள்ள வூட்ல ரவுசு”ன்னு ஒரு அதட்டு அதட்டும்பிடி பண்ணாடிச்சி சத்தங்கித்தமெல்லாங் கைலப் புடிச்சாப்புல டக்குன்னு நின்னுப்போச்சி.<br />
<br />
<br />
<br />
<br />
“யேமாமா ஆளுமேல ஆளு உனுக்கு எத்தன ஆளு வுடறது, வந்து ஒருவாச்சோறு தின்னுப்புட்டு போறதுக்கென்னா? ஓரெடத்துக்கு போனா மலாருன்னு திலும்பற வேலயே இல்ல. பேஞ்சப் பாடுமில்ல காஞ்சப்பாடுமில்ல சிணுங்கு சிணுங்குன்னு விடிய விடிய தூறுது விடிஞ்சுந் தூறுது’ மொழுங்காலு வதியில எந்நேரங்காட்டுக்குப் போறது? அந்தக்காரியுஞ் செவலையுங் கத்திக்கிட்டு கெடக்குங்க. ரூ£ம் போனாத்தானே ரெண்டு தட்டுகிட்டு அறுத்து அதுங்க வவுத்துக்குப் போடமுடியும் எதோ அரப்படி ஒருப்படி பாலுகறக்குது அதயுங்கூட வெச்சிருவ மாட்டமிருக்குது”ன்னு ஒரேமுட்டா அவ அலுத்துக்கும்படி<br />
“அதயேஞ்சொல்றப்பிள்ள போப்பிள்ள பொழுது மொளச்சும் மொளைக்காத மிந்தியே எவனாச்சும் ஒருத்தன் நாயங்கொண்டாந்துர்றான். அக்கப்போர எடுக்க முடியல”ன்னு இவுனுஞ் சலிச்சிக்கிட்டான்.<br />
<br />
<br />
<br />
“அவுங்களுக்குத்தாம் பொழப்பில்ல உனுக்குமா? வா வா வந்து இதக்குடி”ன்னு ஒன்றப்படி எருமத்தயிர்ல ஒரு வெண்ணத்தாழி பச்ச நெல்லஞ் சோத்த போட்டு நைப்பா கறச்சி ஊத்துனா பஞ்சவர்ணம். பச்ச மொளவாயக் கடிச்சிக்கிட்டு மொடக்கு மொடக்குன்ன குடிச்சக் கையோட கட்டுல்ல மல்லாந்துக்கிட்டாம் பச்சமுத்து.<br />
<br />
<br />
“படுத்தமாயத்துல கொறட்ட வுட்றாத மாமா, ங்கெம்மாளுக்கும் ங்கெப்னுக்கும் நோம்பிக்கி வர்றாங்க வூட்ல ஒருச்செலவான செலவில்ல சந்தக்கிப் போவுனும் நெனப்பிருக்குதான்னா” அவ,<br />
<br />
<br />
<br />
“நாலுமணி நாவநாதனுக்குப் போறம்பிள்ளச் சும்மா தொணதொணன்னு பேசாதப்பிள்ள”ன்னான் இவன்.<br />
<br />
<br />
“ச்சேரி, அப்பிடின்னா சித்தங்கூறியத்துல கெத்தலோடம் மருமவவருவா அந்தப் பருத்திக்கொட்டய ஆட்டி எடுத்துக்கிட்டு நானு மாட்டுக்கு தண்ணிக்காட்றதுக்குள்ள நிமுசம் ஓடியாரச் சொல்லு. அங்கயிங்க நீட்டி நெளிச்சிக்கிட்டு நிப்பா சட்னு தொறத்திவுடு சந்தைக்கு போறப்ப மறக்காம வூட்ட தொறப்பு போட்டுட்டு தொறப்புக்குச்சிய தங்கம்மா அப்பாயிக்கிட்ட குடுத்துட்டு போம்மாமா”ன்னு<br />
<br />
<br />
பஞ்சவர்ணம் பக்குவஞ்சொல்லும்பிடி,<br />
<br />
<br />
“ச்சேரிப்பிள்ள நீ மழைக்கிமின்ன கௌம்பு ரவைக்கி வந்து அடுப்பு பத்த வெக்கினும்மில்ல”<br />
<br />
ன்னு பொண்டாட்டிய காட்டுக்குத் தாட்டிவுட்டாம் பச்சமுத்து.<br />
<br />
<br />
வழி வழிய அலுமினியச்சருவத்துல தீனிய எடுத்துக்கிட்டு பஞ்சவர்ணம் காட்டுக்குப் பொறப்புட்டா. ஊருக்னெத்த தாண்டி சின்னப்பொன்னி பூட்டு தென்னந்தோப்பத்தாண்டி இட்டேரிமேல ஏறுனா ஏமாந்தப்பிடி எட்டி அடிவெச்சதுல முட்டுக்கல்லுல நெக்குனு மோதி ‘ச்சளக்குனு’ சருவத் ருந்த தீனித்தண்ணி மேல வழிஞ்சோட,<br />
<br />
“என்னாடி இட்டேரி எங்கொலாயிலயிருந்த இட்டேரி’ ஓராளு உள்றபூந்து போவமுடியிதா புண்டத்தலயெரிங்க ஓட்டு வாங்க க்குள்ள மட்லும் வந்து வந்து பொச்ச நக்கனானுங்க. காரிய மானபின்ன அப்பரம் எதயுங் கண்டுக்கிறதில்ல..........கட்டியத்தின்னிங்க நம்புளுக்குத்தாஞ் “சங்களவம்” மின்னு ஊரு பெரியத்தனக்காரனங் ரெண்டு எத்தி ஏலம்போடுட்டு மாத்துடப்பு மாத்திக்கலாம்ன்னு ஆட்டுக்கே திருப்பியும் நடந்தா, தீனிக்கவிச்சி ஒண்ணுஞ்சொல்லிக்க முடியல<br />
<br />
.<br />
“திக்கத்தப்பான என்னா நாத்தம் நாறுது பாரு கழுதமுண்டைங்கக்கிட்ட தீனியில கறிச்சாத்த ஊத்தாதிங்கடி ஊத்தாதிங்கடின்னா எந்த வெள்ளாச்சி கேக்கறா நம்புளுக்கே நாத்தம் தாக்குப்பிடிக்க முடியிலியே அந்த வாயிலாச் சீவனுங்க எப்பிடி தண்ணி குடிக்குங்க”ன்னு தீனி ஊத்தற பொம்பளங்களையும் வுட்டு ரெண்டு வெளாசு வெளாசுன்னு வெளாசுனா<br />
<br />
<br />
<br />
ஏதுரா பொடக்கலிப்பக்கம் பொண்டாட்டி ரவுசு கேட்குதுன்னு குட்லுமேல படுத்துக்கிட்டிருந்த பச்சமுத்து அரக்கப்பறக்க எந்திரிச்சி ஓடியாந்து,<br />
“அதயேங்கேட்கற மாமா, அந்த இட்டேரி முட்டுக்கல்லு இடிச்சி கீழவுழுந்து மண்ட ஒடஞ்சிக்கும் நல்லவேள தப்பிச்சேன். புளிச்ச தண்ணி தெறிச்சி மேலுப்பூரா ஒரே சலதாரக்கப்பு அப்படியே ஒக்காளிச்சிக்கிட்டு வந்து”ன்னு அவ இட்டேரியில வுழுந்த கதயச் சொன்னா பஞ்சவர்ணம்.<br />
<br />
<br />
“அடடா ஏப்பிள்ள பாத்துபோவக்கூடாதா”ன்னுச் சாங்கியத்துக்கு என்னும்மோ ரெண்டுச்சொல்லு வெசாரிச்சியும் வெசாரிக்காத மின்ன,<br />
<br />
“ச்சேரி சேரி நாலுடப்பா தண்ணிய வாத்து கழுவிக்கிட்டு ஒடுப்பிள்ள சீக்கர”முன்னு பறவா பறந்தாம் பச்சமுத்து.<br />
<br />
<br />
<br />
“அடயிரு மாமா துணி மாத்திக்கிட்டு போறன்”னா அவ.<br />
<br />
<br />
<br />
“இவுத்தியே அல்லாட்டம் போட்டுக்கிட்டிருந்தா சொசைட்டிக்கி பாலு ஊத்தனாப்பலதாம்போ”ன்னு வாசக்கால்ல குறுக்க நின்னுக்கிட்டு பொண்டாட்டிய உள்ற வுடாம வளைச்சி முடுக்கிறதிலியே குறியா இருந்தான் ...<br />
<br />
<br />
“இதா மாமா சித்தி நவுர்ரியா சீலயும் லவுக்கவும் நனஞ்சிச் சதசதன்னு போயிரிச்சி. ஈரத்தோட அப்படியே என்னமுட்டும் இருக்கறது? ஒருநேரம் பாலு ஊத்தாட்டிப் போவுது மோருக்கடஞ்சிக் குடிச்சிப்புட்டுப் போறது’ இப்படியெல்லாம் உசாராப் பொழச்சிருந்தா இந்நேரம் நம்ப பொழப்பு கொண்டயத்துக்கு போயிருக்காது ஹூம்”ன்னு<br />
<br />
<br />
புருசன ஒரு போடு போட்டவ பண்ணாடி படுத்திருந்த உள்ளூட்ல பூந்து பொட்டியத் தொறந்து சாக்கிட்டு ஒண்ண எடுத்தா போட்டுக்கிட்டுருந்தத அவுத்து தூக்குமேல போட்டுட்டு மாராப்ப வாயிலக் கடிச்சிக்கிட்டு சோத்தாங்கையச் சாக்கிட்டுக்குள்ளவுட்டா பாக்காத பண்டமாட்டம் பச்சமுத்து பொண்டாட்டிய பொடக்கு பொடக்குன்னு பாத்துக்கிட்டிருந்தான். சனியம்புடிச்ச முந்தி நழுவி ரவுக்குனு கீழ வுழுவ ஐயய்யோன்னுப் பதச்சி அவ குமிஞ்சி முந்திய அள்ள கட்லடிய ச்சர ச்சரக்க என்னமோ ஏதோன்னு இவ உத்தப்பாக்க அவுத்த செத்த ஆட்டுக் கண்ணாட்டம் ரெண்டு முட்டக் கண்ணு பிதுக்கா பிதுக்கான்னு முழிச்சிக்கிட்டிருந்திச்சி.<br />
என்னாப்பண்டுவ?<br />
<br />
<br />
<br />
கற கறன்னு கண்ல பிச்சிக்கிட்டு வந்த கண்ணுத்தண்ணி வெரல்ல வழிச்சி சுண்டியெஞ்சிப்புட்டு வாயிப்போசம கப்புனு இந்துக்கிட்டா இன்னிக்கி இருக்கிற நெனப்பு அன்னிக்கி இருந்துருந்தா ரெண்டுபேத்தயும் செக்கப்புழிஞ்சி செனாருக் கௌப்பியிருப்பா முழுக்க நனஞ்சபொறவு முக்காடு எதுக்குங்கறாப்ல பச்சமுத்துக்கு பின்னியுங் குளுருவுட்டுப்போச்சி ஹூம் இன்னிக்கி நேத்தா அவம்பித்தியப் பாக்கறம்?<br />
<br />
<br />
<br />
என்னிக்கி மீச மொளச்சி தொண்டக் கட்ச்சோ அப்பப்புடுச்சி அவுனுக்கு இதே தொழுவாடுதான். எத்தன வூட்ல கூரயப் பிரிச்சிருப்பான்? எத்தனவூட்டு செவுரு ஏறிக்குதிச்சி ஈடு தின்னுட்டு வந்துருப்பாந்தெரியுமா?<br />
<br />
<br />
<br />
ஓராடங் கழுத்த கத்திரிச்சிப் போறப்புலக் கூட ஆயிருக்குது’<br />
இந்த குட்டக்கரமேட்ல சம்புநதி, சம்புநதின்னு ஒரு பொம்பள இருந்தா. எந்நேரமும் அவுளுக்கு பத்துப்பேரோட தொடுப்பு’ அதும் இந்த சிறுவயசிப் பசங்கன்னா அவுளுக்கு இன்னும் நொம்போ பிரியம். கூட்டிக்கிட்டுப்போயி நேரு, கூறு, நெளுவு, சுளுவுத் தொச்சமில்லாமச் சொல்லிக் குடுப்பா. சூது வாது தெரியாதவ ஒரு கவுடத்தவப் பாவம்.<br />
<br />
<br />
<br />
இந்தப்பழம எப்பிடி இவுனுக்கு தெரிஞ்சிதோ இல்ல ஆருச் சொன்னாங்களோ. நெனப்பெடுத்துக்கிட்டு பையன் ஒருநாள் தண்டு கட்டிக்கிட்டு அஞ்சாறு வலசுப்பசங்களோக் கூட்டிக்கிட்டு அவ வூட்டுக் கொட்டாயிக்கிப் போயிட்டாம்ப்பா கொட்டாயின்னா ஒசக்க செவுரேத்தி தூளம் போட்டு ஓடு மேஞ்சதில்ல. நெடுக்குவார குறுக்கு வார ஓட்டி பனவோலையில மேஞ்சி எறவாணத்தச் சும்மா ரெண்டு மூணடி செவுத்துமேல எறக்கிவெச் சிருக்கறது இவமபோயி வூட்டுக்கு மின்னப்பாக்க கதவு உள்தாழுப்போட்டுருந்தது. அப்பரம் இவம்பொறனபோயி எறவானத்தப் பிடிச்சி அப்படியே அலாக்காத்தூக்கி சந்துல தலயவுட்டு முட்டி “அக்கா அக்கா”ன்னு நல்லாப்பெருத்த ஒரவுட்டுக் கூப்புடும்படி அந்நேரம் அவெங்கியோ ஒரு குருவிக்காரப்பீத்துலோட முசுவா பண்ணயம் பண்டிக்கிட்டிருந்தா ...<br />
<br />
சிவப்பூசயில இதென்றா கரடிக்கத்துதுன்னு அவன் குருவிச் சுடற டுவாக்கிய எடுத்து ‘டொப்புனு’ச்சுட்டு “ஆர்ராவன் ங்கோயால இன்னேரத்துல’ தெகிரியமிருந்தா எம்மின்னால வாங்கடாப் பாக்கலாமுன்னு கருவனாம் பாத்துக்க இந்த கூட வந்த கொலவாரிங்க.<br />
<br />
எரவானத்த இவம்பொடனிமேலயே வுட்டுட்டு திக்காலிக்க ஒண்ணாச்சும்மா பிச்சிக்கிட்டு ஓட்டம்பிடிச்சிவுட்ருச்சிங்க. கீழு நடுவார இவம் பெறங்கழுத்துல நல்லாப்பொருத்தி ஒக்காந்திக்கிச்சி. தலய வுள்ள வுட்டு எடுக்கறதா? வெளியவுட்டு எடுக்கறதான்னு பையங் கதவடிய சிக்கன பெருச்சாளியாட்டம் தெணறி, திண்டாடி தவுளிச்சி நெண்டி, நெளிஞ்சி ஒராழு குழிப்பறிச்சி மொள்ள விங்கிணிச்சி எடுக்கறதுக்குள்ள நரம்பு பெரண்டு கழுத்துப் பெசகிக்கிச்சி.<br />
<br />
அத்தன ஒவுத்தினியத்திலியும் வூட்டுக்கு திலும்பி வருவானா ......... பையன்?<br />
ஆளு ஒசரம் வெவசாயக் கொட்டமரம் கிர்ருன்னு மொளச்சிக் கெடந்தது. அதுல இவம் ஒட்டுமூட் நாயி கூலுக்கு காத்தாப்ல காத்துக்கிட்டு கெடந்துட்டு சாமத்துல போயி சம்புநதிய என்னாச் சேதின்னு கேட்டப்பொறவுதான் வந்து தாவுச் சேந்தான்.<br />
மலமழுங்கி மாரியப்பனுக்கு ஒரளுக்கல்லு எங்கித்தி மூல? இப்பேருப்பட்ட வல்லாளக் கண்டனுக்கு பொண்டாட்டி பேசறதும் புடிக்கறதும் பொச்சி மேல ஒட்ன மண்ணு’ ச்சும்மா தட்டிவுட்டுட்டு அவம்பாட்டுக்கு ஊருமேயப் போயிக்கிட்டே இருப்பாம் பாத்துக்க<br />
<br />
<br />
<br />
<br />
இவங்கோளாற கண்டப்பின்னா இரும்புப்பூணு மாட்டாத கொறையா பஞ்சவர்ணம் என்ன என்னாவோ கண்டுக்கல மேல கண்டுசனு போட்டா. கட்டுமானமும் பண்டிப்பாத்தா, ஒண்ணும் அவங்கிட்ட பொட்டு நவுத்த முடியல. திருடனுக்கு காவுலு இருக்க முடியிமா?<br />
என்னமோ ஆத்ரந்தாங்காம அப்பமூட்டுக்கு போயிட்டாளே ஒழிய அவுளுக்கு அங்க காலு கெடயில தங்கல. <br />
<br />
ஆளு இருந்தாலே “ஊரே கேளு’ நாடே கேளு’ன்னு திரியறவன் ஆளு இல்லாத நேரத்துல கையக்கால வெச்சிக்கிட்டு சும்மா இருப்பானா? அவன் நெனப்பு எடுத்துக்கும்படி பஞ்சவர்ணம் சொல்லாம கொள்ளாம பிருசமூட்டுக்கு மூட்டயக் கட்டனா.<br />
என்னத்த நெனச்சி என்னா ஆவப்போது? மவனாட ஆசைக்கு பச்சமுத்து நேத்த ராவே கொடம் ஒடச்சி கொள்ளி வெச்சிட்டான். வண்டியச்சும் முறிஞ்சிப்போச்சி’ ஆயக்காலும் கழண்டுக்கிச்சி. எந்தண்ட நவறதுக்கும் வாட்டமில்ல.<br />
<br />
<br />
இருக்க எடந்தெரியாம அவணுண்டு அவனோட வேலவுண்டுன்னு பொட்டாட்டந்தாங் கெடந்தாஞ் சின்ராசு ஒரு மூலையில.<br />
அதும்போவ அவனுக்கு இந்தப் பொட்டப் புள்ளைங்க சமாச்சாரமே துப்பரவாப் புடிக்கவே புடிக்காது. எங்கியாச்சும் பசங்களோடச் சுத்தயில போறது வாரதுங்கள நின்னுச் சித்த வேடிக்கப் பாக்கறானே அதோடச் சேரி மித்தது எதிலியும் தலப்பட்டுக்க மாட்டான். ஏன்னுக் கேளு’<br />
ராசாமணி, ராசாமணின்னு அவனுக்கொரு கூட்டாளி குட்டப்பட்டி புதூருல இருந்தான். அந்த ராசாமணிக்கி வடிவேலு, வடிவேலுன்னு ஒரு சேத்தாளி அந்தூருலியே. வூட்டுக்கு போவ, வர வடிவேலுப் பையந் தங்கச்சி அன்னக்கிளிக்கு ராசாமணி மேல ஒருக்கண்ணு’ இவுனுக்கும் அவமேல ஒருக்கண்ணு’<br />
<br />
<br />
ரெண்டுங்களும் அவுத்த இவுத்த சேந்த வாக்குல திரிய வெவகாரம் முத்தி விசியம் வெளியத் தெரிஞ்சிப்போச்சி. ரெண்டு வூட்டாளுங்கள இதுங்களச் சித்த வுட்டுப்புடிச்சிருந்தா ஆயிருக்கும்’ ஒரேடியா கிடுக்கிபோட்டு நெருக்கும்படி அதுங்க இதுதாஞ்சாக்குன்னு ஒப்புடிச்சுட்டுருச்சிங்க ஈரோட்டு கொடுமுடிக்கி.<br />
பையமூடு அப்பிடியொண்ணும் வசதி வாய்ப்புள்ளவிங்க இல்ல. என்னமோ அவிங்க பொழப்பு அன்னாடங்காச்சி’ வண்ணாம்மாத்து ராசாமணியவிக சித்தப்பங்காரனும் சின்னாயாளுந்தான் நின்னு ச்சேரி பையன் பிரியப்படறாம், பொழச்சிட்டுப் போவுடும்னு ப்ளசரு காரு கொண்டாந்து ஏத்தி தாட்டிவுட்டாங்க. அதுங்க பாட்டுக்கு அதுங்க போயிரிச்சிங்களா, பொறவு பிள்ளய பெத்தவிங்களும், பையனப் பெத்தவிங்களும் விடிய விடிய தேடி விடிஞ்சிம் ஒரு வாரந்தேடனாங்க.<br />
<br />
சோடி கைக்கிச் சிக்கல போயிச் சாட்டாவுதுன்னு கம்முனு வுட்டுட்டு இருந்து கிட்டாங்க.<br />
<br />
<br />
இந்த எடவெளியில ராசாமணியவிக சின்னாயிக்காரி அன்னக்கிளியவிக அம்மாளுக்கும் தடவழியில என்னம்மோ தகராறு பேச்சி மேல பேச்சி முத்தி, ஒண்ணு மேல ஒண்ணு போட்டு சண்ட வலுத்துக்கிச்சி.<br />
<br />
<br />
“ஓடுகாலி முண்டயப் பெத்துப்புட்டு உனக்கென்னடி இவ்வளவு ஏத்தமின்னு” ஒருச்சொல்லு இவங்கேக்க, அவச் சொல்லு பொறுக்க மாட்டாம,<br />
<br />
“பாழும் பிள்ளயப் பத்திதான இந்தப்பேரு’ லட்சம் உருவா செலவானாலுஞ்சேரி... பிள்ளய கொண்டாந்து தாவுச்சேத்தங்கடா’ எங்கையால அவக்கழுத்ததிருவி எஞ்சிப்புடறன்”னு மாரியம்மா சாமியாட, அப்பறம் பாத்துக்க’ மூல மூலைக்கு ஆளு பறக்குது.<br />
முசுவா தேடி, துப்புக்கண்டு பிள்ளைக் கொண்டாந்து. குட்டப்பட்டியில போட்டு குப்பு குப்புன்னு குப்பி, கையோடக் கையா இன்னொருப் பையனச் சல்லுசாப் பிடிச்சி கட்டி வெச்சிட்டாங்க. வூட்டவுட்டுப்போயி ஒரு வாரமா திரிஞ்சவிங்களுக்குள்ள எதனாலும் கசமுசா நடக்காமியா இருந்துருக்கும்?<br />
<br />
<br />
அதயெதயும் நெனச்சிப்பாக்காம பிருசன அத்தவ புதுப்பொண்ணுங்கறாப்பிடி அத்தப்பிள்ளை கட்டனவனோட பொழைக்கப் பொயிட்டா. இந்த ராசாமணி அவள நெனச்சி தண்ணி வண்டியாவ ஊரு ஊருக்கு அல்லு எடுத்துக்கிட்டு திரியறான்.<br />
அதப்பத்தி சின்ராசுக்கு பிள்ளைங்கன்னாவே செரியான கருக்கடப்பாலம்.<br />
இந்தக்கூட இருக்கற சொலவாரிங்கதான் எதுத்தூட்டுப்பிள்ள உன்னப் பாக்குதுடா, எதுத்தூட்டுப்பிள்ள உன்னப் பாக்குதுடான்னு சும்மாயிருந்தவனஞ்...... சுக்க வெச்சி ஊதி வுட்டுட்டுடானுங்க இருக்க மாண்டாம இவுனும் ஒருநாளு அந்த பிள்ளய வெறுக்கு வெறுக்குன்னுப் பாக்க பட்டுக்கிச்சி.ஒரு வயசிப் பையனுக்கும் ஒரு வயசிப் பிள்ளைக்கும் ஒருத்தருமேல ஒருத்தருக்கு நெனப்பு எடுத்துக்கிச்சின்னா, அவிக பண்ற ரோலாயத்துக்கு அளவே இல்ல. மொதல்ல அதுங்களுக்கு காலு தலையில பாவுதா? எதுக்க வர்£ரது இன்னதுதான்னு ஒரு பிருவு, நெதானந் தெரியிதா? அதும் இந்தக் காலத்துப் பிள்ளைங்க இருக்குதுங்களே சுத்த மோசம். அப்பிடியே தலகீழ நிக்கிதுங்க.<br />
<br />
<br />
<br />
நெவுலடியா ஒரு மறப்புச் சிக்கறதுக்கில்ல ஒரு ஈடு பொரன்டு எந்திரிச்சித்தாம் போவுதுங்க. ஆரு இருக்கறாங்க? ஆரு பாக்கறாங்கன்னு துளிக்கூட ஒரு அஞ்சிக்க கெடயாது அந்த வாக்குலதான் இவுனும் அந்த வசந்தாப்பிள்ளய எவுத்திக்காலி கண்டாலுஞ்சோ... சந்து பொந்து, இண்டு இடுக்குன்னு நிக்காம அந்தட்ல ஒரடி தாண்டமாட்டான். அதென்ன நாயம் பேசுவாங்களோ மணிக்கணக்கா. கேனம்புடிச்சவன் வளச்சி, வளச்சி ஒரே நாயம் பேசறாப்ல ஒண்னுக்குமத்த நாயத்த வாயி நோவ பேசுவாங்க.<br />
<br />
<br />
<br />
தெக்க, வடக்க பாத்தமாதர எதுரெதுரு வூடுங்கறதனால என்னிக்கி எந்த வூடு தொறப்பு போட்டுருந்தாலுஞ்சேரி அன்னிக்கி அவுத்தான் ரெண்டுபேத்துக்கும் படுக்க தப்பு தண்டாவுக்கு துணிஞ்சதில்ல, ஆனா முன்னித்தி வௌயாட்டு உண்டு. இப்பிடி புருசன் பொண்டாட்டி மாதர ஒண்ணும் மண்ணா பொழங்கிக்கிட்டு இருந்ததுங்க கத்திரிக்கா தெரண்டுப்போச்சின்னா பெறவு சந்தைக்கு வந்துத்தானே ஆவுணும்?<br />
<br />
<br />
பழம ஊருக்கே தெரிஞ்சிப் போச்சி. பொரட்டாசி கடக்கெடிம சோரவப் பெருமாக் கோயிலுக்குப் போனதுங்க சாமியக் கும்புட்டுட்டு, மெரமணயச் சுத்திபுட்டு, வந்துருந்தா ஆயிருக்கும்? பாலிப்பாறப் பொரட்டுல ஒருத்தரு மேல ஒருத்தரு சாஞ்சிக்கிட்டு ரெண்டுப்பேரும் ஒட்டுக்கா குந்தி பேசிக்கிட்டிருந்தத பச்சமுத்து நேருக்கு நேரா பாத்துட்டான்.<br />
சண்ட கிண்ட புடிக்கல, வூட்டுக்கு வந்தவம் பையங்கிட்ட கூப்ட்டுச் சொல்லிப்புட்டான்.<br />
<br />
“அடே அந்தப்பிள்ள நம்ம வூட்டுக்கு ஆவாது, அப்பிடி எங்கள மீறி எதனாலும் ஏடா கூடம் நடந்ததுன்னு வையி ங்கோயாளும் நானும் கவுறுப் போட்டுக்குவஞ் சாக்கிரிதி”ன்னு அறுதிகட்டி ஒரே தீருமானமாச் சொல்லிப்புட்டான்.என்னாப் பண்டுவ? சின்ராசு ஒருவாரம் பத்து நாளா சோறுத் தண்ணி ஒண்ணும் எதயே எடுக்கல. அப்பிடியே நாளுப்பட்ட நோவுக்காரனாட்டம் கெடயில வுழுந்துட்டான். இன்னதுதான் அவம்புத்தியில ஓடுதுன்னு இல்ல பலமாதிரியா ரோசன.<br />
<br />
<br />
“இந்தாளு எதுக்கு அந்தப்பிள்ளய வேண்டாங்கறான்? <br />
<br />
<br />
அவளுக்கென்னா கொறச்சலு? கோணயா? மானயா? இல்ல ஒட்ட ஒடுசலாச்செவ ச்செவன்னு தக்கோளி பழமாட்டம்பள்ள’ கொணம் மனமும் சும்மாச் சொல்றதுக்கில்ல. பச்சத்தங்கம் அதும் போவ பிள்ள என்னா அன்னி அசலா? தூரத் தொலயா?<br />
எடுத்துப்போட்டங் கழுத்த முறிச்சன்னு ஒரு மனுசன் இப்பிடி அரமாலும் ஒருப்பிள்ளய வேண்டாம்னா அதுக்குவொரு காரணம் வேணுமில்ல. இவனா வெச்சிப் பொழைக்கறான்? இன்னும் பத்து வருசமோ பதனஞ்சி வருசமோ ஓல வாங்கிட்டு மேலப்போயிருவான். எசவில்லாத தாவுல மாட்டிக்கிட்டு பொறனாட்டுக்கு நானுத்தான நமுக்கப்படனு”மின்னு பொடம் பொடன்னு சடஞ்சிக்கிட்டிருந்தப் பையன். முந்தா நேத்து<br />
“ஏண்டா அப்பம்பையா அந்தப்பிள்ளய வேண்டாங்கற”ன்னு ச்சும்மா புடி புடின்னு எதுக்குப் புடிச்சிக்கும்படி பச்சமுத்து அந்தண்ட இந்தண்ட இண்ணும் திமிர முடியல.<br />
<br />
<br />
<br />
<br />
பையங்கேக்ற கேள்விக்கி வருலச் சொல்லணுமா? வாண்டாமா? செத்து பொணமாட்டம் வெரைச்சிப்போயி ஒக்காந்தியிருந்தவன் பாக்கற முட்டும் பாத்துட்டு படக்குன்னு குட்ட ஒடச்சாம் பாத்துக்க சின்ராசுக்கு அண்ட சராச்சரமெல்லம் காலடியில புடுங்குது.<br />
அவனொண்ணுஞ் சொல்லல,<br />
<br />
“இப்படித்தாண்ட மவனே உன்னையாட்டஞ் சிறுவயசுல அவங்கம்மாக்காரியிண்ட நாங்கொஞ்ச நாளு தடுமாறிக்கிட்டுருந்தண்டா அப்பா’ அவ ஒனக்கு தங்கச்சி மொற வேணுன்டா பால பாக்காட்டிப் போவுது சட்டிய பார்ராச் சீத்த சாமி”யின்னான்.<br />
<br />
<br />
<br />
பையனுக்கு காலுக்கையெல்லாம் வெலவெலன்னு போயிரிச்சி வந்து கட்ட மேல வுழுந்த வந்தாம்பா. இன்னையோட ரெண்டு நாளு ஆவுது மேல எந்திரிக்கவேயில்ல. நெனச்சி நெனச்சி மருவறான் மருவறான் அப்பிடி மருவறாந் தன்னப்பா பீத்தநாயி அதச்சொல்லாம இருந்துருந்தா ஆயிருக்கும் ஹூம் வட்டி நம்ம சோத்தப்போட்டுட்டு அதுல துளி நறவல வெச்சாப்ல. ச்சை’ இந்தப் பையனுக்கு மனசே ஒம்பல.<br />
<br />
<br />
இப்பேருபட்ட அப்பனுக்கு மவனா பொறந்துட்டு இன்னமேட்டும் உசுரோடத் திரியதுல அர்த்தமில்ல”ன்னு படபடன்னு எந்திரிச்சாம்பா.<br />
எந்திரிச்சப்பையம் போயி எரவானத்துல சொருவி வெச்சிருந்த பயத்த மருந்தப் பொட்னத்த எடுத்துப்பிரிச்சி தண்ணி வாத்துக்கற டப்பாவுலக் கொட்டி கொடி கொடின்னுன்னு டப்பா வழிய கரைச்சி தவுக்னு வாயில ஊத்த அண்ணாந்தாம்ப்பா அந்நேரம் எங்கியோ இந்த விருப்புக்கு மல்லலாமின்னு பொக்காலிக்கி வந்த பஞ்சவர்ணங் கண்ல இந்த சமாச்சாரம் பட வெடுக்குனு கையத் தட்டிவுட்டவ<br />
<br />
<br />
“ஐயோ மவனே இதென்ன வேல” ஆர்ரா உனுக்கு இந்தப்பித்திய படிச்சிக் குடுத்தது?”ன்னு அவன மடியில போட்டுக்கிட்டு கண்ணீருவுட்டா “அம்மாப்பிள்ள வசந்தாள நாங்கண்ணாலம் பண்டிக்கிலைன்னாக் கூட தொலையிது’ அதப்பத்தி காரியமில்ல’ இந்த அப்பம்பையன நெனச்சிட்டா தாம்பிள்ள எனக்கு சாவலாமின்னே இருக்குது” ன்னு<br />
<br />
சின்ராசு பொலம்ப,<br />
<br />
“அவங்கெடக்கறாண்டா ஆகாவழி’ அஞ்சாறு மொறக் கண்டவனா? அவனுக்கென்னா தெரியும்? மயிராத் தெரியும் “நாஞ்சொல்றன் நீக்கோளு’ அந்தப்பிள்ள உனுக்கு கொளுத்த மொற இழுத்து கொண்டி தாலிக்கட்றா”ன்னு பையன வழிக்கூட்டி அனுப்பி வெச்சா.</div>
manalveeduhttp://www.blogger.com/profile/11701810894595985945noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-891272482416127046.post-2339730648984462002014-10-26T04:03:00.000-07:002014-10-26T04:03:22.655-07:00<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div align="right" class="MsoNormal" style="text-align: right;">
<span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt;">நாள்கிழமை</span><span style="font-size: 9.0pt;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt;">நல்லது</span><span style="font-size: 9.0pt;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt;">கெட்டது</span><span style="font-size: 9.0pt;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt;">நோம்பி</span><span style="font-size: 9.0pt;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt;">நொடி</span><span style="font-size: 9.0pt;"> <o:p></o:p></span></div>
<div align="right" class="MsoNormal" style="text-align: right;">
<span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt;">ஊரு</span><span style="font-size: 9.0pt;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt;">சேதி</span><span style="font-size: 9.0pt;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt;">போக்குவரத்து</span><span style="font-size: 9.0pt;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt;">பயணம்</span><span style="font-size: 9.0pt;"> <o:p></o:p></span></div>
<div align="right" class="MsoNormal" style="text-align: right;">
<span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt;">ஒருத்தி</span><span style="font-size: 9.0pt;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt;">இருக்கிறாளேயென்ற</span><span style="font-size: 9.0pt;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt;">ஓணத்தி</span><span style="font-size: 9.0pt;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt;">துளியுங்</span><span style="font-size: 9.0pt;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt;">கிடையாது</span><span style="font-size: 9.0pt;"> <o:p></o:p></span></div>
<div align="right" class="MsoNormal" style="text-align: right;">
<span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt;">தாரைவாத்த</span><span style="font-size: 9.0pt;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt;">கைப்பேசிக்கு</span><span style="font-size: 9.0pt;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt;">எப்படி</span><span style="font-size: 9.0pt;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt;">மனமுடைந்து</span><span style="font-size: 9.0pt;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt;">போகிறோம்</span><span style="font-size: 9.0pt;"> <o:p></o:p></span></div>
<div align="right" class="MsoNormal" style="text-align: right;">
<span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt;">செங்கோட்டய்யனென்பது</span><span style="font-size: 9.0pt;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt;">பேருக்குத்தான்</span><span style="font-size: 9.0pt;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt;">சொல்லாமல்</span><span style="font-size: 9.0pt;"> <o:p></o:p></span></div>
<div align="right" class="MsoNormal" style="text-align: right;">
<span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt;">கொள்ளாமல்</span><span style="font-size: 9.0pt;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt;">பாதி</span><span style="font-size: 9.0pt;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt;">ஆயுள்</span><span style="font-size: 9.0pt;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt;">பறந்தோடிவிட்டது</span><span style="font-size: 9.0pt;"> <o:p></o:p></span></div>
<div align="right" class="MsoNormal" style="text-align: right;">
<span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt;">கூடிகலவி</span><span style="font-size: 9.0pt;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt;">புரிந்த</span><span style="font-size: 9.0pt;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt;">பொழுதுகளில்</span><span style="font-size: 9.0pt;"> <o:p></o:p></span></div>
<div align="right" class="MsoNormal" style="text-align: right;">
<span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt;">அப்படியொன்றும்</span><span style="font-size: 9.0pt;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt;">மகத்துவமில்லை</span><span style="font-size: 9.0pt;"><o:p></o:p></span></div>
<div align="right" class="MsoNormal" style="text-align: right;">
<span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt;">ஆண்டுக்குள்ளொரு</span><span style="font-size: 9.0pt;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt;">பேறு</span><span style="font-size: 9.0pt;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt;">அதுவும்</span><span style="font-size: 9.0pt;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt;">சமைந்துவிட்டது</span><span style="font-size: 9.0pt;"> <o:p></o:p></span></div>
<div align="right" class="MsoNormal" style="text-align: right;">
<span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt;">பணிமூப்பு</span><span style="font-size: 9.0pt;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt;">திறன்</span><span style="font-size: 9.0pt;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt;">நயந்து</span><span style="font-size: 9.0pt;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt;">வாழ்க்கை</span><span style="font-size: 9.0pt;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt;">துணைநலம்</span><span style="font-size: 9.0pt;"> <o:p></o:p></span></div>
<div align="right" class="MsoNormal" style="text-align: right;">
<span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt;">அபிவிருத்தி</span><span style="font-size: 9.0pt;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt;">துறையில்</span><span style="font-size: 9.0pt;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt;">கூடுதல்</span><span style="font-size: 9.0pt;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt;">பொறுப்பு</span><span style="font-size: 9.0pt;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt;">வேறு</span><span style="font-size: 9.0pt;"> <o:p></o:p></span></div>
<div align="right" class="MsoNormal" style="text-align: right;">
<span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt;">முதுகுக்கு</span><span style="font-size: 9.0pt;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt;">சோப்பு</span><span style="font-size: 9.0pt;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt;">போட</span><span style="font-size: 9.0pt;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt;">கால்வழியும்</span><span style="font-size: 9.0pt;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt;">உள்ளாடையை</span><span style="font-size: 9.0pt;"><o:p></o:p></span></div>
<div align="right" class="MsoNormal" style="text-align: right;">
<span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt;">கசக்கிப்பிழிய</span><span style="font-size: 9.0pt;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt;">வேட்டி</span><span style="font-size: 9.0pt;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt;">சட்டை</span><span style="font-size: 9.0pt;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt;">வெளுத்துகொடுக்க</span><span style="font-size: 9.0pt;"> <o:p></o:p></span></div>
<div align="right" class="MsoNormal" style="text-align: right;">
<span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt;">கடன்வாங்கி</span><span style="font-size: 9.0pt;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt;">உடன்</span><span style="font-size: 9.0pt;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt;">வாங்கி</span><span style="font-size: 9.0pt;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt;">பச்சை</span><span style="font-size: 9.0pt;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt;">வைக்க</span><span style="font-size: 9.0pt;"> <o:p></o:p></span></div>
<div align="right" class="MsoNormal" style="text-align: right;">
<span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt;">பெத்து</span><span style="font-size: 9.0pt;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt;">பிறப்பு</span><span style="font-size: 9.0pt;"> -</span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt;">அண்ணன்</span><span style="font-size: 9.0pt;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt;">தம்பி</span><span style="font-size: 9.0pt;"> -</span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt;">மாமன்</span><span style="font-size: 9.0pt;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt;">மைத்துனன்</span><span style="font-size: 9.0pt;"> <o:p></o:p></span></div>
<div align="right" class="MsoNormal" style="text-align: right;">
<span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt;">வந்தால்</span><span style="font-size: 9.0pt;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt;">போனால்</span><span style="font-size: 9.0pt;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt;">வடித்துக்கொட்ட</span><span style="font-size: 9.0pt;"> <o:p></o:p></span></div>
<div align="right" class="MsoNormal" style="text-align: right;">
<span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt;">வாடிக்கையாளர்</span><span style="font-size: 9.0pt;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt;">சேவைக்கட்டணம்</span><span style="font-size: 9.0pt;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt;">சகாயம்தான்</span><span style="font-size: 9.0pt;"> <o:p></o:p></span></div>
<div align="right" class="MsoNormal" style="text-align: right;">
<span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt;">தீவாளி</span><span style="font-size: 9.0pt;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt;">தள்ளுபடி</span><span style="font-size: 9.0pt;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt;">சீலை</span><span style="font-size: 9.0pt;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt;">ரெண்டு</span><span style="font-size: 9.0pt;"> <o:p></o:p></span></div>
<div align="right" class="MsoNormal" style="text-align: right;">
<span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt;">கிள்ளுச்சரம்</span><span style="font-size: 9.0pt;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt;">முழம்</span><span style="font-size: 9.0pt;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt;">பத்து</span><span style="font-size: 9.0pt;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt;">உருவா</span><span style="font-size: 9.0pt;"> <o:p></o:p></span></div>
<div align="right" class="MsoNormal" style="text-align: right;">
<span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt;">அவளன்றி</span><span style="font-size: 9.0pt;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt;">ஓர்</span><span style="font-size: 9.0pt;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt;">அணுவும்</span><span style="font-size: 9.0pt;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt;">அசையாது</span><span style="font-size: 9.0pt;"> <o:p></o:p></span></div>
<div align="right" class="MsoNormal" style="text-align: right;">
<span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt;">ஏர்ப்</span><span style="font-size: 9.0pt;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt;">பிடித்தவன்</span><span style="font-size: 9.0pt;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt;">என்</span><span style="font-size: 9.0pt;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt;">செய்வான்</span><span style="font-size: 9.0pt;"> <o:p></o:p></span></div>
<br />
<div align="right" class="MsoNormal" style="text-align: right;">
<span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt;">பானை</span><span style="font-size: 9.0pt;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt;">பிடித்தவள்</span><span style="font-size: 9.0pt;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt;">பாக்கியசாலி</span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhOsiguo6RLNBpcaF79-EFM6SvoQP6CY2zvmRV6QvJ_y_ogBS5sEpdFmXRxjZeC27VAYb2tnj48HORMVLU0K8fWt1fQkziM8JMwPeMcYWvfqVUpN4egEi1y1pbdnhhTl0rQ5G7Lc5SRXCPJ/s1600/1366008529KLG-01-K.+Laxma+Goud-Untitled-13in+x+10in-(33cm%2Bx%2B25.4cm)-Acrylic%2BOn%2BGlass.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhOsiguo6RLNBpcaF79-EFM6SvoQP6CY2zvmRV6QvJ_y_ogBS5sEpdFmXRxjZeC27VAYb2tnj48HORMVLU0K8fWt1fQkziM8JMwPeMcYWvfqVUpN4egEi1y1pbdnhhTl0rQ5G7Lc5SRXCPJ/s1600/1366008529KLG-01-K.+Laxma+Goud-Untitled-13in+x+10in-(33cm%2Bx%2B25.4cm)-Acrylic%2BOn%2BGlass.jpg" height="320" width="256" /></a></div>
<span style="font-size: 9.0pt;"> <o:p></o:p></span></div>
manalveeduhttp://www.blogger.com/profile/11701810894595985945noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-891272482416127046.post-75015777260690629682014-10-23T19:48:00.003-07:002014-10-23T19:48:49.095-07:00<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div align="right" class="MsoNormal" style="text-align: right;">
<span style="background-color: white; font-family: Latha; font-size: 9pt;">கல்யாணத்தில் மணமகன் இழவு வீட்டில் பிணம்<o:p></o:p></span></div>
<div align="right" class="MsoNormal" style="text-align: right;">
<span style="background-color: white; font-family: Latha; font-size: 9pt;">பார்த்திருக்க தின்று முழித்திருக்க கை
துடைக்கும்<o:p></o:p></span></div>
<div align="right" class="MsoNormal" style="text-align: right;">
<span style="background-color: white; font-family: Latha; font-size: 9pt;">வெள்ளித்திரை பிரும்மாக்கள் ஏரி வேலைக்கு<o:p></o:p></span></div>
<div align="right" class="MsoNormal" style="text-align: right;">
<span style="background-color: white; font-family: Latha; font-size: 9pt;">போனால் என்ன - சோத்துக்கு வழியில்லை<o:p></o:p></span></div>
<div align="right" class="MsoNormal" style="text-align: right;">
<span style="background-color: white; font-family: Latha; font-size: 9pt;">கலைத் தாகமென்றுச் சும்மா புலம்பித் திரிவது<o:p></o:p></span></div>
<div align="right" class="MsoNormal" style="text-align: right;">
<span style="background-color: white; font-family: Latha; font-size: 9pt;">ஒட்டுத்திண்ணை வாசிகள் மேய்த்தால் மதனியைமேய்ப்பார்கள்<o:p></o:p></span></div>
<div align="right" class="MsoNormal" style="text-align: right;">
<span style="background-color: white; font-family: Latha; font-size: 9pt;">இல்லையென்றால் பரதேசம் போவார்கள்<o:p></o:p></span></div>
<div align="right" class="MsoNormal" style="text-align: right;">
<span style="background-color: white; font-family: Latha; font-size: 9pt;">காடு வீடிழந்த குடியானவன் ரோட்டுக்கடையில்<o:p></o:p></span></div>
<div align="right" class="MsoNormal" style="text-align: right;">
<span style="background-color: white; font-family: Latha; font-size: 9pt;">இவன் திங்க பிட்டுச்சுட்டு விற்கிறான்<o:p></o:p></span></div>
<div align="right" class="MsoNormal" style="text-align: right;">
<span style="background-color: white; font-family: Latha; font-size: 9pt;">தொட்டுக்கொள்ள எண்ணையில் சுட்ட கறிகோழியும்<o:p></o:p></span></div>
<div align="right" class="MsoNormal" style="text-align: right;">
<span style="background-color: white; font-family: Latha; font-size: 9pt;">கையில் பணமிருக்கிறதாவென்றால் <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: right;">
<span style="background-color: white; font-family: Latha; font-size: 9pt;">பணமிருந்த கையிருக்கிறதென்பது<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: right;">
<span style="background-color: white; font-family: Latha; font-size: 9pt;">மண்டையிலிருக்கும் மயிரும் சொந்தமில்லை<o:p></o:p></span></div>
<div align="right" class="MsoNormal" style="text-align: right;">
<span style="background-color: white; font-family: Latha; font-size: 9pt;">எடுப்புச்சாப்பாட்டுக்கு எகத்தாளம் கொஞ்சமல்ல
மிக அதிகம்<o:p></o:p></span></div>
<div align="right" class="MsoNormal" style="text-align: right;">
<span style="background-color: white; font-family: Latha; font-size: 9pt;">இளக்காரம் கண்டு பூலுக்கு பூண் கட்டச்சொல்வது<o:p></o:p></span></div>
<div align="right" class="MsoNormal" style="text-align: right;">
<span style="background-color: white; font-family: Latha; font-size: 9pt;">ஈரைப்பேன் ஆக்குவது பேனை பெருமாளாக்குவது<o:p></o:p></span></div>
<div align="right" class="MsoNormal" style="text-align: right;">
<span style="background-color: white; font-family: Latha; font-size: 9pt;">எந்நேரமும் அடுத்தவன் வலப்பையை சுரண்டுகிறது<o:p></o:p></span></div>
<div align="right" class="MsoNormal" style="text-align: right;">
<span style="background-color: white; font-family: Latha; font-size: 9pt;">தன் காலில் பூ போட்டுக்கொள்வது<o:p></o:p></span></div>
<div align="right" class="MsoNormal" style="text-align: right;">
<span style="background-color: white; font-family: Latha; font-size: 9pt;">வராத நாயை கயிறு போட்டு இழுப்பது<o:p></o:p></span></div>
<div align="right" class="MsoNormal" style="text-align: right;">
<span style="background-color: white; font-family: Latha; font-size: 9pt;">கைகொடுத்துக்கொண்டே கடையாணி
பிடுங்குவது <o:p></o:p></span></div>
<div align="right" class="MsoNormal" style="text-align: right;">
<span style="background-color: white; font-family: Latha; font-size: 9pt;">ஈரத்துணி போட்டு கழுத்தை அறுப்பது<o:p></o:p></span></div>
<div align="right" class="MsoNormal" style="text-align: right;">
<span style="background-color: white; font-family: Latha; font-size: 9pt;">அண்டப்புளுகு ஆகாசப்புளுகு பச்சைச்சிரிப்பு
நீலிக்கண்ணீர்<o:p></o:p></span></div>
<div align="right" class="MsoNormal" style="text-align: right;">
<span style="background-color: white; font-family: Latha; font-size: 9pt;">அவனியெங்கும் மணக்குது கனவுபட்டறை நாத்தம்<o:p></o:p></span></div>
<div align="right" class="MsoNormal" style="text-align: right;">
<span style="font-family: Latha; font-size: 9pt;"><span style="background-color: white;">கதவச்சாத்துங்க ஊசக்காத்தடிக்கிது உசுருக்கே
கேடு</span><span style="background-color: #0b5394;"><o:p></o:p></span></span></div>
<br />
<div class="MsoNormal">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiDwVxDyKjd4sSO-CAOyy4sRe89GEoYr1yj9XVGpbBvhrWw_x0kiL8gp68JKfeFa46fn-86p18LnxE_BX5kvZ2itPCEc38Z0xBujS20GYjDAT-SvpuoIOGfIfzJkviXY7xFvRy4NzWnb_Fm/s1600/myImage202782399.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiDwVxDyKjd4sSO-CAOyy4sRe89GEoYr1yj9XVGpbBvhrWw_x0kiL8gp68JKfeFa46fn-86p18LnxE_BX5kvZ2itPCEc38Z0xBujS20GYjDAT-SvpuoIOGfIfzJkviXY7xFvRy4NzWnb_Fm/s1600/myImage202782399.jpg" height="320" width="266" /></a></div>
</div>
manalveeduhttp://www.blogger.com/profile/11701810894595985945noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-891272482416127046.post-64589040406451473482014-10-19T07:13:00.001-07:002014-10-19T07:13:20.003-07:00மோரளந்து வாத்ததுக்கு முந்தளந்து போட்ட கத - தவசிக்கருப்புசாமி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="color: #134f5c; font-size: x-small;">நம்ப வவானிக்கி தெக்க அந்தியூரு அத்தானிக்கிட்ட ஆத்துக்கு அந்தல்ல மேவானி, இந்தல்ல கீவானி. மேவானி ஊருக்கவுண்டனுக்கு ஒரு மவன். தவமா தவமிருந்து வேண்டாத தெய்வத்த வேண்டி வெக்காத கோயிலுக்கு வேண்டுதல வெச்சி பொறந்தபையன். என்னமோச் சொல்லுவாங்களே ஒருத்திக்கி ஒரு மவனாம் அவம் பருத்திக்காட்ல புளுத்திக்கிட்டு செத்தானங்கறாப்பிடி ஒண்ணும் உருப்படியில்ல. பரமதொண்டு.</span><br />
<span style="color: #134f5c; font-size: x-small;"><br /></span>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgCKWvAKy_Tu2ye1ln5RNqMdJfra8TY-FtDhHZysg73twF1vrMEr5SC-g1BmJ0OFGIfIYRwksZBRrKVh53-rJDvbGoDX3wnlIDkeMK8JYJQ3vcC2qXx01JcofwtoXl7NIiMwHFGNqQDPnLw/s1600/5a6c60034a787eb9441f2574b908c8ff.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgCKWvAKy_Tu2ye1ln5RNqMdJfra8TY-FtDhHZysg73twF1vrMEr5SC-g1BmJ0OFGIfIYRwksZBRrKVh53-rJDvbGoDX3wnlIDkeMK8JYJQ3vcC2qXx01JcofwtoXl7NIiMwHFGNqQDPnLw/s1600/5a6c60034a787eb9441f2574b908c8ff.jpg" height="320" width="209" /></a></div>
<span style="color: #134f5c; font-size: x-small;"><br /></span>
<span style="color: #134f5c; font-size: x-small;">எந்நேரம் பாத்தாலும் குடி கூத்தியா சீட்டாட்டம். அப்பனாயா ரெண்டுபேரும் பையனுக்கு சொல்லாதப் பித்தியில்ல. அவந்திருந்தி நல்ல வழிக்கி போற மாதர இல்ல. கேனந்தெனிஞ்சா கண்ணாலம் பண்டலாம் கண்ணாலம் பண்டனா கேனந்தெளியிமின்னு மவங்காரனுக்கு எங்கியாச்சும் ஒருப்பிள்ளய பாத்து கட்டிவெச்சா அதும்பொறவு அவனாச்சி அவங்குடம்பங் குட்டியாச்சின்னு திருந்தி வருவானாப் பாக்குலாம்முன்னு கட்டுச் சோத்தக் கட்டிக்கிட்டு ஊரு ஊராப் பொண்ணு தேடனாங்க, தேடனாங்க அப்பிடித் தேடனாங்க.</span><br />
<span style="color: #134f5c; font-size: x-small;"><br /></span>
<span style="color: #134f5c; font-size: x-small;"><br /></span>
<span style="color: #134f5c; font-size: x-small;">எங்கியுஞ்சிக்கல. சிவனேன்னு வந்து இக்கரைக்கு பரசத்தாட்ட அக்கரையில குந்தியிருந்தாங்க. அக்கரையில இவிங்களாட்டமே ஒரு கவுண்டமூட்டாரு தம்பட மவளுக்கு மாப்பளப் பாக்க இக்கரைக்கி வரலாமின்னு பரசத்தாட்ட குந்தியிருக்க, ஒருத்தரோட ஒருத்த ஆர எவடம் என்னாச் சமாச்சாரமின்னு பேச்சி குடுக்க, ஒண்ணோட ஒண்ணு கலந்துக்கிட்டாங்க. பையனுக்கு பொண்ணு குடுப்பீங்களான்னு இவிக்க கேக்க, பொண்ணு இருக்குது கண்ணாலம் மூச்சிக்கிறீங்களான்னு அவிங்க கேக்க ரெண்டூட்டாரும் கொள்ளலாங் கொடுக்கலாமுன்னு ஒரு மனசா தீருமானம் பண்டிக்கிட்டாங்க.</span><br />
<span style="color: #134f5c; font-size: x-small;"><br /></span>
<span style="color: #134f5c; font-size: x-small;">பொண்ணப் பெத்தவிக பிள்ளய ஒருச்சித்ரமா எழுதி மாப்பிள்ளயப் பெத்தவிங்கக்கிட்ட குடுக்க, இவிங்க வாங்கிட்டு மவங்கிட்ட காட்டலாமுன்னு கொண்டாந்தா மவங்காரன் வூட்ல இல்ல. ஆறேழு மாசமாட்டம் அறுதியா வூட்டுப்பக்கம் வாரதில்ல, கூத்தியா வூட்ல சூதாடிக்கிட்டிருந்தான். இவிங்க வருவான் வருவான்னு பாத்துக்கிட்டுருந்து பொறவு ஆளுக்காரங்கிட்ட கொண்டி பொண்ணுப் புள்ள மூஞ்சியவாச்சுங் காட்டிப்புட்டு வாடான்னு குடுத்துட்டாங்க.</span><br />
<span style="color: #134f5c; font-size: x-small;"><br /></span>
<span style="color: #134f5c; font-size: x-small;"><br /></span>
<span style="color: #134f5c; font-size: x-small;">இந்தத் திருவாத்தாம்போயி கவுண்டங்கூத்தியாருக்கிட்ட அதக் குடுத்துட்டு வந்துட்டான்.</span><br />
<span style="color: #134f5c; font-size: x-small;"><br /></span>
<span style="color: #134f5c; font-size: x-small;"> சித்தரத்தப் பாத்ததுதாஞ் சாக்கு அந்த தேவிடியாளுக்கு அங்கம் பதைக்கிது அடிவவுறு காந்துது.</span><br />
<span style="color: #134f5c; font-size: x-small;"><br /></span>
<span style="color: #134f5c; font-size: x-small;">சூரிய சந்தரனாட்டம் இத்தன அழவா இருக்கறாளே பொம்பளய அந்த மாப்ள கண்ல கண்டுட்டான்னா நம்பளத் திலும்பிப் பாப்பானா?ன்னு மனசுல கூரயத்த வெச்சுக்கிட்டு அடுப்புக்கரிய எடுத்து சித்ரம் முச்சூடுங்கோடு இழுத்து கண்ணையும் இழுக்கி வுட்டு,</span><br />
<span style="color: #134f5c; font-size: x-small;"><br /></span>
<span style="color: #134f5c; font-size: x-small;"><br /></span>
<span style="color: #134f5c; font-size: x-small;"> ‘இந்தா ங்கொப்பனும் ங்கொம்மாளும் எந்த ரட்சணத்துல உனக்கு பொண்ணு பாத்துக்கிறாங்க பாரு’ன்னு</span><br />
<span style="color: #134f5c; font-size: x-small;"><br /></span>
<span style="color: #134f5c; font-size: x-small;"><br /></span>
<span style="color: #134f5c; font-size: x-small;"> கொண்டி மாப்ளகிட்ட குடுத்தா, அந்த தெல்லவாரி நாயி அத என்னன்னுங் கண்டுக்கல. வாங்கி பொச்சிக்கடியில வெச்சிட்டு மும்மரமா சூதாடறாம்பா. அங்க, கவுண்டனும் கவுண்டம்பொண்டாட்டியும் மவங் கண்ணாலத்துக்கு முகூர்த்தக்காலு நட்டுப்புட்டாங்க. பந்தலன்னைக்கி கூட மவராசன் வூட்டுக்கு வரல. பாத்துட்டு அப்பனாத்த ரெண்டு பேரும் தாசியிண்ட போயி</span><br />
<span style="color: #134f5c; font-size: x-small;"><br /></span>
<span style="color: #134f5c; font-size: x-small;">‘எங்கவூட்ல வௌக்கு பொருத்தி வையிடி ஆயா மவராசி. நாளைக்கி ஒரு பொழுது என்ற மவன வூட்டுக்குத் தாட்டிவுடு! அவுனுக்கும் ஒரு கண்ணாலங்கார்த்தி முடியட்டும் பொறவு அவ எங்க கெடந்தாலும் நாங்கேக்கல’ன்னு</span><br />
<span style="color: #134f5c; font-size: x-small;"><br /></span>
<span style="color: #134f5c; font-size: x-small;"><br /></span>
<span style="color: #134f5c; font-size: x-small;"> கெஞ்சி கொறமாட அந்த தாசி, காலுப்பெருவெரலப் பாத்துக்கிட்டே பொண்டாட்டிக்கி தாலி கட்டிப்புட்டு கட்ன அடுத்த சனம் இங்கயிருக்கனுமின்னு கையடிச்சு சத்தியம் வாங்கிக்கிட்டு மாப்ளய தாட்டிவுட்டா.</span><br />
<span style="color: #134f5c; font-size: x-small;"><br /></span>
<span style="color: #134f5c; font-size: x-small;">கவுண்ட மவன் வந்தான் கண்ணாலமும் நடந்திச்சி. பெருவிரலப் பாத்துக்கிட்டு பொண்ணுப் பிள்ளைக்கி தாலி கட்டனான். கட்ன மறுச்சனம் குதுர வண்டியேறி கூத்தியா வூட்டுக்குத் திலும்பிக்கிட்டான். இதென்றா கந்தரகோலமின்னு புதுப்பொண்ணுக்கு ஒன்னும் நெட்டுசிக்கல.</span><br />
<span style="color: #134f5c; font-size: x-small;"><br /></span>
<span style="color: #134f5c; font-size: x-small;"> மறுதாலிக்கட்ல, மருமூச்சும் திலம்பல. போனவம் போனவனே. இன்னிக்கி வருவாம் மாப்ள நாளைக்கி வருவாம் மாப்ளன்னு இவ இங்க இருக்க அங்க புருசங்காரன் கொட்டு மொழக்கு போடறாந் தெனம். எத்தன நாளைக்கி பொறுப்பா ஒரு வயசிப்பிள்ள?</span><br />
<span style="color: #134f5c; font-size: x-small;"><br /></span>
<span style="color: #134f5c; font-size: x-small;">ஓகோ இதொன்னும் ரைனு வராதுன்னு தெரிஞ்சிக்கிட்டு கவுண்டம் மருமவ மாமியா மாமனாரிண்ட வந்து,</span><br />
<span style="color: #134f5c; font-size: x-small;"><br /></span>
<span style="color: #134f5c; font-size: x-small;">ஏம்மாமா ஒங்க மவங்காரம் பண்டறது தேவிலியா-ன்னு கேக்க,</span><br />
<span style="color: #134f5c; font-size: x-small;"><br /></span>
<span style="color: #134f5c; font-size: x-small;"> ஆயா கண்ணாலம் பண்டனதோட எங்க கடம முடிஞ்சிபோச்சி. குடி, சூதாட்டமின்னு ஒம்புருசங் கூத்தியா கொலாயிக்கி பிரமனையா இருக்கறான். அவன மீட்டு, வூட்டுக்கு கொண்டாருவியோ கொண்டாறமாட்டியோ எங்களுக்கு தெரியாது</span><br />
<span style="color: #134f5c; font-size: x-small;"><br /></span>
<span style="color: #134f5c; font-size: x-small;">-ன்னு நழுவிக்கிட்டாங்க.</span><br />
<span style="color: #134f5c; font-size: x-small;"><br /></span>
<span style="color: #134f5c; font-size: x-small;">அப்படியா சேதின்னு அத காதல வாங்கி வவுத்துலப் போட்டுக்கிட்டு கவுண்டம் மருமவ அப்பமூட்ல போயி நின்னு ஒரு பாலு மாட்டப் புடிச்சாந்தா.</span><br />
<span style="color: #134f5c; font-size: x-small;"><br /></span>
<span style="color: #134f5c; font-size: x-small;">அத மேச்சி பாங்கு பத்ரம் பண்டி பாலுபீச்சி மோருச்சிலுப்பி ஒருக்கூடயில வெச்சிக்கிட்டு அந்த தாசியிருக்கற வீதிய வுட்டுட்டு அந்தாண்ட எல்லா வீதியிலியுங் கொண்டி மோரு வித்துக்கிட்டு வந்தா.</span><br />
<span style="color: #134f5c; font-size: x-small;"><br /></span>
<span style="color: #134f5c; font-size: x-small;">இவ அந்த தெருவுக்குள்ள மோரு எடுத்துக்கிட்டுப் போயிட்டாப் போதும் கவுண்டமவங்கூட சூதாடறப் பசங்க எல்லாம் அப்பிடி அப்பிடியே ஆட்டத்த வுட்டுட்டு திப்புறு திப்புறுன்னு எந்திரிச்சு ஓடறதாம் மோருக்குடிக்க. இதென்றா கங்காச்சியா இருக்குது காணாத அதிசியமா இந்த மோரு? அதக்குடிக்கவா இந்த மந்தைங்க இப்பிடி ஓடுது? இப்பேருப்பட்ட மோரு ஊத்தறவ எப்பேருப்பட்டவளா இருப்பா. நாம்பளுந்தாம் பாக்கலாஞ் சித்தன்னு கவுண்ட மவனும் மோருக் குடிக்கப் போனான் வழுது தெருவுக்கு.</span><br />
<span style="color: #134f5c; font-size: x-small;"><br /></span>
<span style="color: #134f5c; font-size: x-small;"><br /></span>
<span style="color: #134f5c; font-size: x-small;">அட சாமி அங்கப் போயிப் பொம்பளயப் பாத்ததுதாஞ் சாக்கு அவனுக்கு ஒடம்பே பூராஞ் சிலுத்துப் போச்சாம்.</span><br />
<span style="color: #134f5c; font-size: x-small;"><br /></span>
<span style="color: #134f5c; font-size: x-small;"> அடோக் கண்டாரவோலியூட்டுப் பிள்ளய, பொம்பள பாரா ஒரு ரட்சணத்த பொம்மக் கட்டயாட்டமுன்னு இவம் பௌந்த வாய மூடவேயில்ல. ஓவ் இவந்தான் நம்ப பிருசன்னு அவக்கண்டுக்கிட்டா.</span><br />
<span style="color: #134f5c; font-size: x-small;"><br /></span>
<span style="color: #134f5c; font-size: x-small;">குட்டுவுடாம கம்முன அவபாட்டுக்கு அவ இருக்க,</span><br />
<span style="color: #134f5c; font-size: x-small;"><br /></span>
<span style="color: #134f5c; font-size: x-small;">‘இந்தா பொம்பள எனக்குந்தா ஒருச்சொம்பு மோரு வாரு’-ன்னு</span><br />
<span style="color: #134f5c; font-size: x-small;"><br /></span>
<span style="color: #134f5c; font-size: x-small;">இவங்கேக்க, அவளிருந்துக்கிட்டு</span><br />
<span style="color: #134f5c; font-size: x-small;"><br /></span>
<span style="color: #134f5c; font-size: x-small;"><br /></span>
<span style="color: #134f5c; font-size: x-small;"> ‘கேட்டதும் ஊத்திப்புட்டு போவ இதொன்னும் சின்ன வெல மோருல்ல. மூணுச்சொம்பு முத்தளந்தா ஒரு சொம்பு மோரு வாப்பன். ஒரு சொம்பு மோருக்கு ஒரு பொட்டு சிந்த மோருக்கூட வாக்க மாண்டே’-ன்னா அவ.</span><br />
<span style="color: #134f5c; font-size: x-small;"><br /></span>
<span style="color: #134f5c; font-size: x-small;">இதென்றா வலியனா மோருக்கேட்டதுக்கு இந்தப் பொம்பள நம்பள பல்லுப்புடிச்சி பதம்பாக்கறாளோ?-ன்னு</span><br />
<span style="color: #134f5c; font-size: x-small;"><br /></span>
<span style="color: #134f5c; font-size: x-small;">கவுண்டன் மவன் சின்னக் கவுண்டனுக்கு கருக்கட வுழுந்துட்டுது. இருந்தாலும் அவளிண்ட பேச்சி வெச்சிக்க பிரியப்பட்டு ஓடி அவங்கொண்டாந்து தாசியூட்ல கொட்னானே மாளாத சொத்து. அதல தாசிய காங்காம மூணுச்சொம்பு முத்த அள்ளியெடுத்தாந்து குடுத்துட்டு மோருக் குடிச்சான்.</span><br />
<span style="color: #134f5c; font-size: x-small;"><br /></span>
<span style="color: #134f5c; font-size: x-small;"><br /></span>
<span style="color: #134f5c; font-size: x-small;"> பாக்க / புடிக்க, பேச / பொழங்க அன்னாடம் மோருக்குடிக்கன்னு சின்ன கவுண்டனுக்கு இதோ தொழுவாடாப் போயிரிச்சி. இருந்தாலும் பொம்பளய வெரலு நவத்துலக்கூட தீண்ட முடியல. ஒரு மாசம் ரெண்டு மாசம்னு பொறுத்தான். இவுனுக்குன்னா நாளுக்கு நாளு பொழுதுக்குப் பொழுது பாக்கப் பாக்க பொண்டாட்டிமேலே ச்சும்மா வெறிக்கண்டுப் போச்சி.</span><br />
<span style="color: #134f5c; font-size: x-small;"><br /></span>
<span style="color: #134f5c; font-size: x-small;"> அவ கண்டுங்காணமயே இருக்க ஒருநாளிங்கறப்பெட்டுக்கு விசுக்குன்னு கையப்புடிச்சி இழுத்தவன்,</span><br />
<span style="color: #134f5c; font-size: x-small;"><br /></span>
<span style="color: #134f5c; font-size: x-small;">‘உசுரக்கூட வுட்டர்றேன் ஆயா ஒரே ஒருத்தரம்னு ....ன்னுப்புடறஞ்சித்த என்னாச் சொல்றே’-ன்னு கேக்க</span><br />
<span style="color: #134f5c; font-size: x-small;"><br /></span>
<span style="color: #134f5c; font-size: x-small;">ஆர்றாளு இந்த பண்ணாட்டெல்லாம் என்னிண்டச் செல்லுபடி ஆவாது. நானு அப்பேருகந்த பொம்பளையுமில்ல. ங்கெப்பன், ங்கெம்மா காதுல வுழுந்தா ஆரு என்னான்னு பாக்கா மாண்டாங்க கைய கால முறிச்சி சூத்துல சொருவிப்புடுவாங்க மாப்ள, அங்கயிங்க... அப்டிடா இப்பிடிடான்னும் சும்மா மெரட்ட ........</span><br />
<span style="color: #134f5c; font-size: x-small;"><br /></span>
<span style="color: #134f5c; font-size: x-small;">இவங்காலுல வுழுவாத கொடுமையா கெஞ்ச அவ மனசெறங்கி, கெடந்து சாட்டாவுது நாயாட்டங் கெஞ்சற, உன்ற ஆசப்பெரகாரம் நடக்கட்டும். ஆனா ஒரு விண்ணப்பம் பத்துப்பேரு அறிய தாலிக்கட்டி நீரு வெக்கிலின்னா போச்சாது. ஆத்தங்கரயில பச்சப் பந்தப்போட்டு அரச எல மேல மஞ்சப்புள்ளாருப் புடிச்சிவெச்சி மோதரமாத்தி கண்ணாலம் பண்டிக்கன்னா. இவனுஞ் சேரியின்னு பலான நாளு ஆத்து ஓரத்துக்கு நீ வந்துருன்னுச் சொன்னான்.</span><br />
<span style="color: #134f5c; font-size: x-small;"><br /></span>
<span style="color: #134f5c; font-size: x-small;">இவளும் வந்தா. ஊருக்குத் தெரியாம தாசிக்குத் தெரியாம அவுத்திகாலியே மோதரம் மாத்திக்கிட்டாங்க. அவுத்தயே சித்த நேரம் ஒண்ணாயிருந்தாங்க. அன்னயோடச் சேரி கவுண்டம் மருமவ தாசியிருக்கற வீதிக்ககி மோரு விக்கவேப் போவல. அந்த வாசத்த மறந்துட்டா.</span><br />
<span style="color: #134f5c; font-size: x-small;"><br /></span>
<span style="color: #134f5c; font-size: x-small;"><br /></span>
<span style="color: #134f5c; font-size: x-small;"> புருசங் கண்ணுக்கே சிக்கல. அவ பாட்டு அவ அங்கருக்க சின்ன கவுண்டனுக்கு பொம்பள நெனப்பெடுத்துக்கிச்சி. தெனமும் தெருவே ஒரு கோடியா தொழாவறது அவிங்க ரெண்டு பேரும் ன்னாங்களே அங்க போயிச்சித்த குந்தறது. இப்பிடியே ஆளு வவுத்துக்குக் கூட திங்காம பொம்பள பிரியம் எச்சாவி ஒரே ஆறு மாசத்துல சட்டங் கழண்டு சரீகலங்குண்ணிப் போயிட்டான்.</span><br />
<span style="color: #134f5c; font-size: x-small;"><br /></span>
<span style="color: #134f5c; font-size: x-small;">இவங்கத இப்பிடியிருக்க தாசிக் கண்டுக்கிட்டா. ஓவ் நம்ம கொலாய நக்கிக்கிட்டு கெடந்த மாப்ள இப்ப என்றான்னா எங்க கெடக்கற நாயேன்னுங் கண்டுக்கறதில்ல ஏறெடுத்தும் பாக்கறதில்ல உம்ம கிம்ம தெரிஞ்சி பொண்டாட்டியின்ட போ வர பொழக்காட்டம் போடறானோ என்னா கருமாந்தரமோன்னு ஒரு அறிகொழப்பத்துல கவுண்டமூட்டுக்கு ஒரு தந்தாள நேமிச்சி நோட்டம் பாத்துட்டு வரச்சொன்னா.</span><br />
<span style="color: #134f5c; font-size: x-small;"><br /></span>
<span style="color: #134f5c; font-size: x-small;"><br /></span>
<span style="color: #134f5c; font-size: x-small;"> போயிட்டு வந்து இப்பிடித்தான் இப்பிடித்தான் கவுண்டம் மருமவ வாயும் வவுறுமா இருந்தது, அன்னிக்கி பையம் பெத்து புள்ளயாரு கோயிலுக்கு பேரு வெக்க வந்ததுன்னு பூராம் புட்டு புட்டு சொல்லிப்புட்டா.</span><br />
<span style="color: #134f5c; font-size: x-small;"><br /></span>
<span style="color: #134f5c; font-size: x-small;">தாசிக்கிவொண்ணும் கையும் ஓடல காலும் ஓடல. இத இப்பிடியே வுட்டுட்டா கத வேற வேறயா போயிரும் பொறவு மொதலுக்கே மோசம் வந்திருமின்னு போன வெசயில சூதாடிக்கிட்டிருந்த மாப்ளகிட்ட</span><br />
<span style="color: #134f5c; font-size: x-small;"><br /></span>
<span style="color: #134f5c; font-size: x-small;">ஒல்காமாலையா ஒல்காமாலையா இங்கென்றா சூதாடிக்கிட்டு குந்தியிருக்கற? அங்க உம் பொண்டாட்டி எவங்கிட்டப் படுத்தாளோ ஆருக்கு முந்தி விரிச்சாளோ? புள்ளப் பெத்து எடுத்துக்கிட்டு புள்ளயாரு கோயிலுக்கு பெரு வெய்க்க எடுத்துக்கிட்டு போறாளாமடா? போயி தல வேற முண்டம் வேறயா வெட்டி சாய்க்காம இன்னும் ஏண்டா நீயில்லாம் ஒரு ஆம்பளையின்னு உசுரோட குந்தி இருக்கற?ன்னுச் சும்மா திந்நீரு கொழிச்சி வுடறா.</span><br />
<span style="color: #134f5c; font-size: x-small;"><br /></span>
<span style="color: #134f5c; font-size: x-small;"><br /></span>
<span style="color: #134f5c; font-size: x-small;">இவுனுக்கு சுருக்குனு கோவம் வந்துட்டது. தாசிவூடே கதின்னு நாம் இவுத்தக் குந்தியிருக்க பொண்டாட்டி எப்பிடி செனையாவியிருப்பா? ஆம்பள ஆயிரம் பேத்துக்கிட்ட போவான் வருவான் பொம்பளைக்கில்ல அடக்கச் சொடக்கம் வேணும். அதோட மோருக்காரி மேலிருந்த கோவமெல்லாம் பொண்டாட்டி மேல திலும்பிக்கும்பிடி, கொண்டாடி கொடுவாள அவள கொடல உருவி மால போட்டுகிட்டு வாரமின்னு புள்ளயாருக்கோயிலுக்கு ஓடனாஞ் சின்னகவுண்டன்.</span><br />
<span style="color: #134f5c; font-size: x-small;"><br /></span>
<span style="color: #134f5c; font-size: x-small;"><br /></span>
<span style="color: #134f5c; font-size: x-small;">தாசியாட்டமே இந்த கவுண்டம் பொண்டாட்டியும் தாசியூட்டுக்கு ஒரு தந்தாளு வெச்சிருந்தா ஔவு பாக்க. அவ தந்தாளு புருசங்காரன் பொண்டு, புள்ளய கொல்ல வர்ர பழமையச் சொல்ல புள்ளாருக்கோயில்ல புருசன் வரங்காட்டியும் மவனுக்கு பேரு வெச்சி ஒரே மின்னெட்டுல வூட்டுக்கு வந்து உள்தாழு போட்டுக்கிட்டா.</span><br />
<span style="color: #134f5c; font-size: x-small;"><br /></span>
<span style="color: #134f5c; font-size: x-small;">நடுவூட்டு உத்தரத்துல தூரி கட்டி பையன அதல போட்டு, அவ பொறந்து வளந்தது, புருசங்கட்டனது, அவந்தாசிவூட்டுக்குப் போனது, இவ மோரு விக்கப் போனது, பையம் பொறந்தது, அப்பங்காரங் கொல பண்ட வந்துருக்கறது பூர்த்திய ஒருப் பாட்டா பாடி கல்லு கரைய மண்ணுருவ அழவுறா.</span><br />
<span style="color: #134f5c; font-size: x-small;"><br /></span>
<span style="color: #134f5c; font-size: x-small;"> இந்த நாயத்த கதவுக்கு வெளியே தாவாரத்துல நின்னுக் கேட்டுக்கிட்டிருந்த சின்னக்கவுண்டனுக்கு நெசமும் பொய்யிந் தெரிய ஆஞ்சியோஞ்சிப் பாத்துட்டு போயி தாசிய வெட்டிச் சாச்சிபுட்டு வந்து பொண்டாட்டி புள்ளயோட நல்ல விதமாப் பொழச்சானாம்.</span><br />
<div>
<br /></div>
</div>
manalveeduhttp://www.blogger.com/profile/11701810894595985945noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-891272482416127046.post-46047045708915551922011-11-13T18:20:00.000-08:002011-11-13T18:38:44.862-08:00எங்கும் நிறைந்த பரம்பொருள் நானே!<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiBcET678L5Z55Q1uTRE7oLLu6l2HRJp0_HXs9f0vikJjAYyfNdbrU0UypGVHvYODHZxz76gCb8RA5cSn0uVepo6aT1ypJwZvVv-oTt1xvHx8l2yRDFYjCZ2aJd4dUGEwC4royDV3ef6PE-/s1600/IMG_6068.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5674674738670674498" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 214px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiBcET678L5Z55Q1uTRE7oLLu6l2HRJp0_HXs9f0vikJjAYyfNdbrU0UypGVHvYODHZxz76gCb8RA5cSn0uVepo6aT1ypJwZvVv-oTt1xvHx8l2yRDFYjCZ2aJd4dUGEwC4royDV3ef6PE-/s320/IMG_6068.jpg" border="0" /></a><br /><br /><div><strong><span style="color:#339999;"><br /><br />கூத்திசை மேதை- செல்லப்பன் அவர்களை குறித்த வாய்மொழி வாழ்வியல் பதிவு.</span></strong></div><br /><br /><br /><div><strong><span style="color:#339999;"></span></strong></div><br /><br /><br /><div><br /><strong><span style="color:#339999;">செல்லப்பன்:</span></strong></div><br /><br /><br /><div><strong><span style="color:#339999;">ஒப்பாரும் மிக்காருமில்லாத கூத்திசை மேதை. பாட்டனார் நரசனிடமும் தந்தையார் ராமசாமியிடமும் அவர் பயின்று பெற்ற நுண்ணிய மரபுக்கலை ஆதாரபடிவம் மாறாது கருத்துருவம் சேதமடையாமல் இன்று வரை நாளுக்குநாள் கூடிய செறிவுடனும் கூடுதல் பரிமாணங்களுடனும் கால் பாவியிருக்கிறது. ஆதி, அடவு, திருப்படை,ரூபகம், ஜம்பை, நொண்டிச்சிந்து,கும்மிதாளம் என்ற தாள வரிசைகளுக்கு நான்கு காலங்கள் வீதம் பகுத்தவர் வாசிக்கையில் மிளிரும் நூதனங்கள் வார்த்தைகளில் அடங்காது. உலக பிரபஞ்சத்தில் மாசுமருவற்றதும், கலப்படமற்றதும், கேட்கின்ற பேரை மனிதனாக பண்படுத்தும் இசையாகப்பட்டது கூத்தில் இடைவெளியை இட்டு நிரப்புவதற்கும், ஒட்டு போடுவதற்கும், கதை கட்டங்களை நிகழ்வுக்கோர்வையை, தளர்த்தி முறுக்குவதற்கும், வேடதாரிகள் பேசுகின்ற வசனங்களை அடிக்கோடிட்டு பார்வையாளர் இதயத்தில் அழுந்த பதிப்பதற்குமானதன்று! அது அம்பலக்கலையின் உயிர்த்தளம் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருக்கும் செல்லப்பனின் வாழ்பானுபங்களை வாசகர்களுக்கான பகிர்வாக இங்கு வைக்கிறோம்.</span></strong></div><br /><br /><br /><div><strong><span style="color:#339999;"></span></strong></div><br /><br /><br /><div><strong><span style="color:#339999;"></span></strong></div><br /><br /><br /><div><br /><strong><span style="color:#339999;">. எங்கப்பன பெத்த கெழவம்பேரு நரசன். அம்மாள பெத்த கெழவம்பேரு சென்றாயன். சம்பந்தியுஞ் சம்பந்தியும் கூத்தாடியூட்டாருங்கற வகையில ரெண்டூட்டாரும் ஒட்டா செட்டுக்கட்டி வவுநாளா பொம்மக்கூத்து நடத்தியிருக்கறாங்க. அம்மாள கட்டறதுக்கு முந்தியே அப்பனுக்கு ஒரு பொண்டாட்டி நம்ப கொளத்தூரு குரும்பனூருல. அந்தம்மா இவுருக்கிட்ட இருந்து வாழ்க்கச் செய்யல, அம்மாள கண்ணாலம் மூச்ச கையோட எங்கப்பா சின்னாயா காவேரியுங் கண்ணாலம் மூச்சிக்கிட்டாரு. அம்மாவூட்டாருக்கும் அப்பன பெத்த தாத்தனுக்கும் வரவு செலவுல போக்குவரத்துல மனஸ்தாபமாகி மவனன மாமனாரு மாமியாளோட வுட்டுட்டு தாத்தனும் பாட்டியும் பிரிஞ்சி, வேறயா ஒல வெச்சிக்கிட்டாங்க. போனவிங்க சும்மா போவல! பொம்ம பொட்டி, மத்தாளம், டெண்டு துணி, ஒருக்கோடியா சுத்தமா தொடச்சி எடுத்துக்கிட்டுப்போவ, அப்பனுக்கு சினேகதக்காரு ஓராளு உருவாய குடுத்து ஒத்தாச பண்டி பொம்மையாட்டி பொழைக்க தடங்காமிச்சாராம். அப்ப இந்த கெழநாடு ஆத்தூரு கள்ளக்குறிச்சிய கட்டி தோலுப்பொம்ம ஆட்டிக்கிட்டு திரிஞ்சவங்க வாழப்பாடி புத்தரகவுண்டம்பாளையம் வந்து சேந்தப்ப எங்கம்மாளுக்கு நானு வவுத்தலிருந்தனாம். </span></strong></div><br /><br /><br /><div><strong><span style="color:#339999;"></span></strong></div><br /><br /><br /><div><strong><span style="color:#339999;">பத்தாம் மாசம் பேறு மாசம்! அந்த கார வருசத்து பஞ்சத்துல மனசருக்கு திங்க கத்தாழ கெழங்கு கூட ஆப்படலையாம். வாயும் வவுறுமா இருக்கப்பட்ட பொம்பளய நீசுத்தண்ணிக்கி கெதியில்லாத தாவுல வெச்சிருந்து என்னாப் பண்டறருன்னு ஓசிச்சா ஒரு வழியுந் தெம்படல. இந்த பரிதாபத்த பாக்க முடியாத அந்தூரு வைத்தியரு ஒருத்தரு "மொட்டையா! மொட்டையா! பஞ்சத்துல அடிப்பட்டு சாவறதுக்கு ஓடி பொழைச்சிக்கலாம் வாடா"ன்னு ராமக்கல்லு மோகனூருல அந்தாளோட பொறந்தவள கட்டிக் குடுத்திருக்குது. கரவெளிதேசம் தண்ணியுள்ள தாவு, கூத்தாட்டனாலும் சேரி எதோ கூலியோ நாழியோ செஞ்சி பொழைச்சாலும் சேரின்னு கூட்டிப்போயி வுட்டாராம். </span></strong></div><br /><br /><br /><div><strong><span style="color:#339999;"></span></strong></div><br /><br /><br /><div><strong><span style="color:#339999;">அங்க போயி டெண்டக்கட்டி பொம்மக்கூத்து ஆட்டனா ஒருச்சனம் பாக்க வல்லியாம். அதோட அந்தூருல நாளைக்கி மூணு கொல வுழுவுமாம், வாய்க்கால்ல அடிச்சிக்கிட்டு வர்ர பொணத்துக்கு அளவே இல்லியாம். என்றாயிது வடச்சட்டிக்கி பயந்துக்கிட்டு அடுப்புல வுழுந்துட்டமே! எப்பிடிறா பொழைக்கற வழின்னு எங்கப்பன் அழுத கண்ணுஞ் சிந்தனையுமாயிருக்க அன்ன ராவே எங்கம்மாளுக்கு வலி புடிச்சிட்டுதாம். ரெண்டு ராத்திரி ஒரு பகலுமாயும் நானுப் பொறக்கவேயில்ல. அப்பன் பாத்தூட்டு மோகனூருக்கு அந்தாட்டவொரு அலங்காடு, ஆளு நடமாட்டம் அறுதி. ஒலக்க சத்தம், ஒரளு சத்தங்கூட கேக்க கூடாதுன்னுவொரு கட்டள, அவுத்த இருக்கப்பட்ட செல்லியம்மங்கோயிலு போனதும் அந்தம்மா காலடியில வுழுந்து திக்கத்துப் போயிட்டந் தாயே! நீதான் தொண!. புள்ள பொறந்துக்கிச்சி, தாயி வேற புள்ள வேறயா நல்லபடியா இருக்கறாங்கன்னு இந்து காதுல கேட்டா இந்த எடத்தவுட்டு எந்திரிப்பன்! இல்ல உன்ற காலடியில உசுர வுட்டுர்ரேன்னு நீண்டு படுத்துக்கிட்டாராம். </span></strong></div><br /><br /><br /><div><strong><span style="color:#339999;"></span></strong></div><br /><br /><br /><div><strong><span style="color:#339999;">விடியறதுக்குள்ள நாம் பொறந்த தகோல அந்த வைத்தியரு போயிச் சொல்ல சந்தோசமா எழுந்து தாயே உம்பேர பையனுக்கு வெக்கறேன்! உனக்கே மும்முடி குடுக்கறன்னு வேண்டுத்தல வெச்சிட்டு அதே பிரகாரம் எனக்கு செல்லப்பன்னு பேரு வெச்சாராம். இப்பிடி பஞ்சத்துல நானுப் பொறந்திருக்க, பத்து வருசங் கழிஞ்சது. எடவெளியில முள்ளுவாடி பள்ளியோடத்துல ரெண்டு வருசம் படிச்சன். அதயும் பூர்த்தியா படிக்கல. ஊரு ஊரா தேசாந்தரம் போறவிங்களுக்கு படிப்பு ஒரு கேடா? மொள்ள பஞ்சுபட்டி பாளையம் போயிச் சேந்தம். எங்கம்மாளுக்கு தாயாரு வாத்து பெரிய ரோதன. ஆளு கெடயில படுத்தாச்சி. பாட்டியாள காவுலுக்குப் போட்டுட்டு பாட்டனும் நானும், அப்பனும் சின்னாயாளும் மாரண்டள்ளி சத்தரத்திண்ட பொம்ம கூத்து ஆட்ட வந்தம்.</span></strong></div><br /><br /><br /><div><strong><span style="color:#339999;"></span></strong></div><br /><br /><br /><div><strong><span style="color:#339999;">மக்யா நாத்தெல்லாம், எனக்கு, சின்னாயாளுக்கு, எங்க தங்கச்சி காளியம்மாளுக்கு குடும்பம் முச்சூடும் அம்ம வாத்துக்கிச்சி. மாத்துக்கட்டுல பிள்ளைங்களுக்கு வைத்தியம் பாத்து எங்க தாத்தனுக்கு கண்ணாமுழி பிதுங்கிப்போச்சி. இப்பிடியிருக்கப்பட்ட சந்தர்ப்பத்துல எங்கூட்டுக்காரியும் (ஜெயா) அவிங்கம்மா, அப்பன், பொறந்தவமாரோட மாரண்டள்ளி சத்தரத்துக்கு வந்து சேந்தாங்க. பூர்வீகத்துல எங்கப்பனுக்கு அவிங்க மாமம் மச்சனன் மொற. இவிங்கப்பன் பொம்மக்கூத்துல கற கண்ட வித்துவான், பெருங்கொண்ட ஆசாமி. அந்தாளும் எங்கப்பனும் சேந்துக்கிட்டு சாராயங் குடிக்கப்போன தாவுல செத்த குறம்பையாட்டுக்கறி ஆரோ கூறுகட்டி விக்க, பாட்லோட ரெண்டு கூறு கறியும் எடுத்தாந்து, அந்தச் சணமே வறுத்துக் குடுக்கச் சொல்லி, தாந்தின்னதுமில்லாம எங்கூட்டுக்காரியோட அம்மாளுக்கும் குடுத்துட்டாங்க. </span></strong></div><br /><br /><br /><div><strong><span style="color:#339999;"></span></strong></div><br /><br /><br /><div><strong><span style="color:#339999;">தின்ன மாயத்துல அந்தம்மாளுக்கு சேத்துமாங்கட்டியாட்டம் வந்து ஆளு விடிஞ்சிம் விடியாதமின்ன புளுக்கய விசிறிபுட்டா. ஊருக்கார படவாப் பசங்க இந்தண்ட அந்தண்ட ஒருத்தரையும் நவர வுடமாண்டேங்கறாங்க. அதே சமயம் எனக்கு அம்ம வாத்து நாஞ் செத்துப்போயிட்டன்னு ஆரோ எங்கம்மாளுக்கு தாக்கலுச் சொல்ல, அத்தன காச வெறியிலியும் ஆவுசந் தாங்காம, கட்லுக்கு தொணயாப் படுத்திருந்த பொம்பள ராவோட ராவா போக்கு மாட்டு வண்டியப் புடிச்சி, சத்தரத்துக்கு வந்துட்டா. அந்நேரம் இவிங்களும் எங்கத்தக்காரிய தொட்லுக்கட்டி தூக்கிப் போயி, கறண்டி காம்புல ஒண்ணா ரெண்டா குழியப் பறிச்சி, மூடிப்புட்டு வர, அதப்பாத்ததும் மெரளு வந்தாப்பிடி எங்கம்மா மண்ணு மேல பொரண்டழுவ, ஆளுக்கு ரொம்ப அனதுடியாகி, மேலுக்கு உண்டுன்னா வருத்தமாச்சி. நானு எங்கம்மாள தூக்கி நிறுத்தி, குடிக்க தண்ணி குடுத்து, மொகங்கழுவி அம்மா நானுன்னுஞ் சாவல! உசுரோடத்தான் இருக்கறன்னு தேறுதல சொன்னப்பொறவுதான் அம்மாக்காரி மனசாரி கட்டுல்ல படுத்தா. படுத்தவ திலுப்பி எந்திரிக்க முடியல, மேலு நூலாட்டம் தொவண்டுக்கிச்சி. ஒடம்புல கண்ணு மயிரூண்டு எடம் பாக்கியில்லாம, அச்சரம்! பொண்டு புள்ளைங்க இப்பிடி சின்னப்பட்டு சீரழியறம், அப்பங்காரன் அன்னராவு தம்பட சித்தப்பனொருத்தன் விருந்தாட வந்தவனோட சாராயக்கடைக்கி போனவன், போனவனே!அவனென்ன சொல்லிக் குடுத்தானோ தெரியல! ஆளு எங்கப் போனான்? எவத்திருக்கறான்னு ஒரு துப்புஞ் சிக்கவேயில்ல.<br />படாதபாடுபட்டு பண்ண ரெக்கிரி பொறிச்சித் தின்னுப்புட்டம். தாத்தம் மேச்சேரிக்கி கூட்டிப் போனாரு.</span></strong></div><br /><br /><br /><div><strong><span style="color:#339999;"></span></strong></div><br /><br /><br /><div><strong><span style="color:#339999;">அங்க இந்த சீரெழவ கண்ல பாக்க முடியாம, அம்மாளோட தாயி மாமனொருத்தரு சின்னான் சின்னான்னு பட்டாளத்துல இருந்தவரு, இங்கிருந்தா சுத்தப்படாது உங்ககிட்ட தொழிலு திறமயிருக்குது, வாழ வழியிருக்குதுன்னு கொல்லிமல சார்புக்கு கூட்டிப்போனாரு!. அங்க ஊருப்பாட்டுப்பாடி வவுறு வளத்தம். ஊருப்பாட்டுங்கறது என்னான்னு கேட்டிங்கன்னா பொட்டி, மத்தாளத்தோட ஓராளு வேசம் போட்டுக்கிட்டு ராவுல ஊடு, ஊடா பிச்சைக்கி ஆட்டம் ஆடறது. இப்பிடியே நாங்க காலந்தள்ள அங்கவொரு ஜமா டெண்டுக் கூத்தாட வந்திச்சி. அதுலவொரு பொம்பள முத்தி, முத்தின்னி அவள அண்டி எங்கம்மா வேசங்கட்ட பழவ, நானுஞ்சேந்து சில்லற வேசமாட பழவனன்.</span></strong></div><br /><br /><br /><div><strong><span style="color:#339999;"></span></strong></div><br /><br /><br /><div><strong><span style="color:#339999;">அவிங்களோட கொஞ்ச நாளு, வவுத்துக்கு பஞ்சமில்லாம, காலந் தள்ளிப்புட்டு மறுக்க தாத்தா வூட்டுக்கு மேச்சேரி வந்தம். அப்ப மேச்சேரியில சடையங் கொறவன் ஜமாவும், அவிங்க பங்காளி அர்ச்சுனஞ் ஜமாவும் கூத்துல கொடிகட்டி பறக்கறாங்க. காரிமங்கலம் காவேரிப்பட்டணத்துக்கு இந்தாண்ட மூணு மைலு தொலவுல குண்டலப்பட்டின்னு ஒரூரு. அந்தூருல ஒட்டுக்கா மூணு ராத்திரி கூத்தாடச் சொல்லி அர்ச்சுனஞ் ஜமாவுக்கு வெத்தல பாக்கு குடுத்துட்டாங்க.<br />அந்தச் சமயம் அவரு செட்ல ஆளுங்க கொஞ்சம் கட்ட!. ச்சேரி எங்கம்மாவொரு பெருங்கொண்ட வேசக்காரி! அக்கா மொற! நானும் நல்லா மத்தாளந் தட்டவும், சால்ரா போடவும், குடுமியுங் கொண்டையுமா துருதுருன்னு திரிய, எங்களோட பாப்பாரப்பட்டி சாமிநாதன்னு ஓராளையுஞ் சேத்து ஜமாக்கட்டி, அர்ச்சுனமூட்டாரு குண்டலப்பட்டியில கூத்தாடப்போனம். மொத நாளு சுந்தரி கல்யாணம்! சுந்தரி வேசம் போட்டன். ரெண்டாம் நாளு சைந்தவங் கர்வ பங்கம்! சகாதேவன் வேசம், மூணாம் நாளு பவளக் கொடி கல்யாணம்! புலேந்திரன் வேசம் போட்டன். பையம் பரவால்ல, நல்லாயிருக்குது வேசமுன்னாங்க. அப்பறம் அர்ச்சுனங் கூடவே கொஞ்ச நாளு கூத்தாடனம். சத்தரத்துல பிள்ளைங்கள பிள்ளைங்கன்னும், பொண்டாட்டிய பொண்டாட்டியின்னும் நெனச்சிப்பாக்காம,நெஞ்சில துளி ஈரமில்லாம, அனாதியா வுட்டுட்டு ஓடனானே, எங்கப்பந் தாயேலி! இங்கிருந்து போன மாப்ள ஒரு மீனுக்காரிய கட்டிக்கிட்டானாம். பெருமையில, புது பொண்டாட்டிக்கி எங்கம்மா நக நட்டு காலு காப்பு மொதலானதும் பூட்டி அழவு பாத்தானாம்! அவயெங்கியோ ஒரு அண்டப் பீத்தலு!.போனன்னைக்கி போயி, பொதங்கெழமையன்னைக்கி நக்க குடுத்துட்டு,திருவாணியக்கூட மிச்சம் வுடாம பெட்டிக்கிட்டு, போயிட்டு வாடா புண்ட வாயா!ன்னு அடிச்சாளாஞ் சவாரி! </span></strong></div><br /><br /><br /><div><strong><span style="color:#339999;"></span></strong></div><br /><br /><br /><div><strong><span style="color:#339999;">உள்ளதும் போச்சுடா நொள்ளக்கண்ணஆன்னு முக்காடு போட்டுக்கிட்டு ஒன்ற வருசமா ஊரு ஊரா எரந்து குடிச்சிக்கிட்டு திரிஞ்சிப்புட்டு கடைசியா குண்டலப்பட்டிக்கி வந்துருக்க, நாங்க அங்க கூத்தாடற சமாச்சாரந் தெரிஞ்சி, தந்தாளு ஒருத்தனவுட்டு பஞ்சாயம் பேச வந்தான். அர்ச்சுனனுக்கு எங்கப்பன் மத்தாளமுன்னா உசுரு!. ரெண்டுபேரும் ஒரு கையி!. பொறந்தவமாரு ரெண்டு பேத்துக்கும், பிள்ளைங்களுக்கும் காலமெல்லாம் நாம்ப வெச்சி கஞ்சியூத்த முடியிமா? போனது போவுட்டும்! மல மேல நெல்லு வௌஞ்சாலுங் குதுருக்கு வந்துதானே ஆவுனுங்கறாப்பிடி இவுனும் கெட்டழிஞ்சி வந்துருக்கறான். கசந்து வந்தவங் கண்ணத் தொடைக்கினுமுன்னு என்னும்மோ சாங்கியத்துக்கு மெரட்டிப்புட்டு அப்பங்காரன செட்டு மத்தாளத்துக்கு சேத்துக்கிட்டாப்ல.<br />அதும்பொறவு எங்க பெருமாளு பொறந்தான், தங்கா தனம்புள்ள, இந்த கணேசன்(அம்மாபேட்டை),அம்மிணி இப்பிடி பொறப்புங்க ஒவ்வொருத்தார பொறந்தாங்க. ஆளுங்க இருந்தா சடையனோட! இல்ல, அர்ச்சுனனோட கூத்து! ஆளுங்க தோதுப்படலியா தோலுப் பொம்ம கூத்து!. மாத்து கட்டுல தொழுவாடுப் பண்டிக்கிட்டிருந்தம். அப்பிடியே அக்கர பூனாச்சிக்கி போனம். குரும்பனூரு காளிக்கிட்ட சேந்தம். ஏழு வருசம் ஒட்டா கூத்தாடனம். அப்பத்தான் நானு ஆணு வேசம், பொண்ணு வேசம், கோமாளி வேசம் போட்டு பேரெடுத்தது. எனக்கு பதனெட்டு வருசம் முடிஞ்சது. காளி ஜமாவ வுட்டு, சடையஞ் ஜமாவுக்கு போனம். அங்க மாயவனும், கண்ணுப்பையனும் மூண்ட வாலிப்பம்! முசுவா கூத்தாடறாங்க!. நானும் போயிச் சேர, கூத்து தொழுவாடு கொண்டயம் பாத்துட்டுது. அந்தெட்டு ஆடி பதனெட்டன்னைக்கி கோனேரிப்பட்டியில கூத்துட்டுருந்தாங்க. அரவாங்களப்பலி வெச்சி, நானு திரியோதனன், மாயவன் அரவான், கண்ணுப்பையன் நாகக்கன்னி, சடையன் தருமரு! வெச்சி பொள பொளன்னு பொளந்து கட்டனம். கூத்து எத்து! ஆளு ஒசர கெடா, அரவாம் பதிக்கி வெட்டி, தோலுரிச்சி கூறுபோட்டுக்கிட்டிருந்தம். சடையம் பொண்டாட்டி மேச்சேரியில இருந்து பப்பாரிக்கிட்டு வந்தா. சமாச்சாரம் என்னான்னா, மம்பட்டியான், ஒம்போது பேத்த வெட்டி சாச்சதும், மாயவந் தங்கச்சி சங்கீதம் ஒரு படையாச்சியாள கூட்டிக்கிட்டு ஓடிப்போனதுந்தான். கறியாவுது! கசுராவுது! வேசத்த அழிச்சும், அழிக்காத மின்ன ஓடி, புள்ளையையும் பையனையும் எடப்பாடி பஸ் டேண்டிலியே புடிச்சிட்டம். </span></strong></div><br /><br /><br /><div><strong><span style="color:#339999;"></span></strong></div><br /><br /><br /><div><strong><span style="color:#339999;">கொண்டாந்து தாவுச் சேத்தனம். அங்கருந்து வந்தும் வராதமின்ன ரெண்டு வூட்டாரும் அந்தப் பிள்ளய எனக்கு சம்பந்தம் பேசறாங்க. சுத்தமா பிரியமில்ல எனக்கு. ஏன்னுக்கேளு! நானு முந்தியே இவுளோட (ஜெயா) பேச்சு வார்த்தையில இருந்தன். இவுளும் என்னய வுட்டு, வேறாளுக்கு கழுத்த நீட்ட மாண்டேன்னு சத்தியம் பண்ணிக்குடுத்துருந்தா. ஆனா அவிங்கப்பந் தாயேலி இவள எனக்கு தெரியாமியே, வேற ஒருத்தனுக்கு கண்ணாலஞ் செஞ்சிக் குடுத்துட்டான். இவுளும் எனக்கு எந்த சமாச்சாரத்தையும் சொல்லி வுடல. அதுலியே மனம் நொந்து போயிருந்தனா, அதனால சங்கீதத்த கட்டிக்க பிரியமில்ல.<br />அந்த ராவே சடையன் ஜமாவுல இருந்து பிரிஞ்சி, எடப்பாடி ஒட்டப்பட்டிக்கி டெண்டச்சுருட்டி தூக்கிட்டுப் போயிட்டம். அந்தியோட மாயவன் ஆளு அனுப்பிச்சான், செல்லப்பன வரச்சொல்லுன்னு. சேரி நாம்பவொன்னு மனசுல நெனச்சிக்கிட்டு இருக்க, அவிங்க பாவம் புள்ளய நம்பளுக்கு கட்டிக்குடுக்கற நெனப்புல இருக்க, பேசாம குட்டோட இருந்துட்டா, மூடிவெச்சி கழுத்தறுக்கற மாதர ஆயிரும். உள்ளத ஒடச்சி சொல்லிப்புட்டு வந்துருலாமுன்னு போயி, மாயவங்கிட்ட இப்பிடி இப்பிடித்தாண்டா மாயவா உன்ற பொறந்தவள கட்டிக்க எனக்கு சுத்தப்படாதுன்னு உம்மய சொன்னன், அவனும் அதப்பத்தி காரியமில்ல, பார்ரா வேலயன்னான். திருப்பி வூட்டுக்கு திரும்பிக்கிட்டன். வரக்குள்ள ஆலச்சம்பாளையம் மாரியாக்கோயில தாண்டயில பொட்டி மத்தாள சத்தங் கேட்டது. பாத்தா, இவளும் இவளோட அப்பனும் ஊருப்பாட்டு பாடிக்கிட்டிருந்தாங்க அவுத்த. இவள பாத்ததும் எனக்கு கால வாரியடிச்சாப்ல, பிதுமாரு கெட்டுப்போச்சி. மனசே சரியில்ல! போவலாமுன்னு நவந்தப்ப, இவளோட மாமங்காரன் என்னய பாத்துட்டு ஓட்டமா ஓடியாந்தான். </span></strong></div><br /><br /><br /><div><strong><span style="color:#339999;"></span></strong></div><br /><br /><br /><div><strong><span style="color:#339999;">சேரி வாடான்னு அவனையுஞ் சைக்கிள்ல குந்தவெச்சிக்கிட்டு ஒட்டப்பட்டிக்கு வந்து சேந்தன். எங்கப்பங்கிட்ட இவிங்கள ஆலச்சம்பாளையத்துல பாத்தத சொன்னன். சேரி அவன் ஏண்டா அங்க ஒண்டியா தடுமாறணும்? நம்பளோட சேந்து பொம்மக்கூத்து நடத்தட்டுமுன்னு எங்கப்பன் வண்டிக்கட்டிக்கிட்டுப் போயி, அந்த ராவே இவிங்கள கூட்டியாந்து எங்க செட்ல சேத்திக்கிட்டு ஒட்டா மறுபடி பொம்மக்கூத்து நடத்தனாரு. ஒட்டப்பட்டியில இருந்து சேலம் சீரகாப்பாடி போனம், ஜெயா அவ அப்பங்காரஞ் செஞ்ச கொடும கதய சொல்லி அழுதா, மனசௌவி, ஒத்து, ரெண்டுபேரும் கட்டிக்கறமின்னு ஒருமனசா வூட்ல சொன்னா, இந்தாண்ட எங்கம்மா முறுக்குறா, அந்தாண்ட அவிங்க அப்பம் முறுக்குறான். நாயம், அந்தூரு நாயக்காரன் துரியோதன கவுண்டரிண்ட போச்சி. அவரு கவலப்படாதடா செல்லப்பா! உன்ற கல்யாணம் எஞ்செலவு!ன்னு சொல்லி, அவரே முன்னயிருந்து எங்க கண்ணாலத்த செஞ்சி வெச்சாரு. இவிங்கப்பஞ் சும்மா குதிக்க, டேய் கூத்தாடி! சும்மா முறுக்காத! ஒழுங்காயிருந்தா, ஒரு நேரத்துச் சோறு திம்ப! பத்தஞ்சி பரியங்குடுத்தா ஒரு கெளாசு சாராயங் குடிப்ப! மீறி எதனா சத்தங் காட்ன ஈடுதாம் திம்பன்னு அந்தாளு கூப்புட்டுச் சொல்லிப்புடிச்சி., இந்தாளு பேச்சிக்கே எடமில்லாம போயிட்டுது. கடைசியா முக்கி மொனகி நாயக்காரங்கிட்ட எம்பிள்ள பொம்மையாட்ட, நாங்க இத்தனபேரு வவுறு வளக்கறம்! திடுதிப்புனு இவம்பாட்டுக்கு தனியா போயிட்டா பாக்கி இருக்கறவிங்க எப்பிடி பொழைக்கிறதுன்னு நாயங்கட்ட, துரியோதனக் கவுண்டன் நீ சொல்றது வாஸ்தவமான பேச்சி! இருந்தாலும் பொட்டப்புள்ளய பெத்து நாம்பளே வெச்சிக்க முடியுமா? அதுக்குன்னு பிருசன் ஆச! பிள்ள ஆச! தனக்குன்னு ஒரு குடும்பங்குட்டி வேணுமுன்னு ஆசயிருக்காதா? அதனால உம்புள்ளைய வேணுமுன்னா சிறுசு பெருசாவற வரைக்கும் ரெண்டு வருசத்திக்கி உங்கூட வெச்சிக்க! அவ, பொம்மையாட்டட்டும் கூட மருமவனயுங் கூட வெச்சிக்க! பொறவு அவிங்கவிங்க பொழைக்கிற வழியெப்பிடியோ அதப் பாத்துக்கங்கன்னு சொல்ல, நானு அந்த பேச்ச ஒப்பிக்கிட்டு ரெண்டு வருசம் மாமானாருக்கூட இருக்கறன்னு வாக்கு குடுத்துட்டன்.<br />அங்கயிருந்து பனமரத்துப்பட்டி சந்தப்பேட்டைக்கி போனம். அஞ்சாறு ராத்திரி கூத்து நடத்தனம்.</span></strong></div><br /><br /><br /><div><strong><span style="color:#339999;"></span></strong></div><br /><br /><br /><div><strong><span style="color:#339999;">கடைசி நாளுக்கு மொதநாளு, சந்தைப் பேட்டைக்கி பக்கத்துல பெரிய மாளிக! அந்தூட்டு பண்ணாடிச்சியம்மா பண்ணையக்காரனவுட்டு விடிஞ்சும் விடியாதமின்ன, அந்த பொம்ம ஆட்டன ஆளு, மத்தாளமடிச்ச ஆளு, பொட்டி மீட்டன ஆளு மூணு பேத்தயும் கைப்புடியா கூட்டியான்னு கூப்புட்டது. நாங்களும் போனம். "யாருப்பா பொம்மையாட்னது", "இவதாங்க எம் பொண்டாட்டி", "மத்தாளமடிச்சது ஆரு", "நாந்தானுங்க", பொட்டி வாசிச்சது ஆரு", "அதா அந்தாளுங்க என்ற மாமானாரு", ன்னு நாஞ் சொல்ல அந்தம்மா நானு ஆருன்னு தெரியுமான்னு கேக்க, தெரியலீங்களேன்னன்.<br />"சம்பூர்ண ராமாயணம் படம் பாத்தீங்களா"<br />"சேலத்துல அந்த படம் புடிச்சாங்களே! அந்த சூட்டிங்கே பாத்துருக்கறங்க! ஒரு நாளு பொழுதுக்கும் சோறு தண்ணியில்லாம. சிவாஜி பரதன், டி.கே.பகவதி ராவணன். பத்மினியம்மா சீத"<br />"அந்த டி.கே. பகவதி ஆருன்னு நெனச்சிங்க எங்க அக்கா புருசன்தான், நான் அவரோட கொளுந்தியா!. எங்க மாமனுக்கு ட்ராமா கம்பினி இருக்குது, சினிமாவுலயும் அவரு நடிக்கிறாரு. இப்பிடி திறம வெச்சிருக்கற நீங்க இனிமே தெருவுல இருக்க வேண்டிய தேவ இல்ல. காத்தால அஞ்சி மணிக்கி சேலத்துக்கு ரயிலு! அங்கிருந்து பதினொரு மணிக்கு மெட்ராசிக்கி ரயிலு! எங்கூட வாங்க! உங்களுக்கு சகல சம்பத்தும் நாஞ்செஞ்சிக் குடுக்கறன். ஒடனே சொல்லணுமுன்னு இல்ல போயி தூங்கி எந்திரிச்சி நல்லா யோசன செஞ்சி சொல்லுங்க",ன்னு அந்தம்மா ரெண்டு வலப்பையி நெறயா செலவு சாமானம், ஒரு வாரத்துக்கே தாட்டும்படி அரிசி, பருப்பு எல்லாங் குடுத்துட்டுச்சி. நானும் பெரியவங்கள ஒரு வார்த்த கலந்துக்கிட்டுச் சொல்றன்னு டெண்டுக்கு வருமுந்தியே, அங்க சமாச்சாரந் தெரிஞ்சி, எங்கப்பனும் அம்மாளும் ஒருபக்கம்! பொண்டாட்டியோட அப்பனும் அம்மாளும் ஒருபக்கம்! சும்மா எதுரு ஒப்பேரி வெச்சிக்கிட்டு அழுவறாங்க.</span></strong></div><br /><br /><br /><div><strong><span style="color:#339999;"></span></strong></div><br /><br /><br /><div><strong><span style="color:#339999;">நீங்க மெட்ராசி போயிட்டீங்கன்னா நம்பியிருக்கற எங்க கெதி என்னா ஆவறதுன்னு பொலம்பலான பொலம்பலு!. என்னா செய்யறது, அந்தம்மாகிட்ட போயி என்னா வதுல சொல்றது? விரும்புத்தி பிடிச்சிச்கிச்சி. பேசாம ஒன்ற பாட்லு சாராயத்த குடிச்சிப்புட்டு, குப்புற அடிச்சி படுத்துக்கிட்டன்.<br />பொழுது விடிஞ்சதோ இல்லியோ, எம்மாமனாரு ஒவ் இதேதுறா புள்ளய இவனோடவுட்டா இவ காரேறி ஊரு பெரயாணம் போயிருவாளாட்டமிருக்குதுன்னு மனசுல கெட்டபுத்தி வெச்சிருந்தானோ என்னம்மோ, மக்காயநாத்து டெண்டப் பிரிச்சிக்கிட்டு பனமரத்துப்பட்டியிலிருந்து அந்தாட்ட நாலுமைலு தொலவுல செந்தாரப்பட்டி மார்க்கத்துல ஒரூருக்கு குடியோடிப்போயிட்டான். நானும் வாக்கு குடுத்துட்டமேன்னு அப்பனம்மா, பொறந்தவமார வுட்டுட்டு அவங்கூடவே போனேன். அன்னிக்கி அந்தியோட எங்கம்மா வந்து, செல்லப்பா, செல்லப்பா பொம்மக்கூத்தாடச் சொல்லி ஊருல கேட்டாங்க, நானு ஒப்பிக்கிட்டன். இன்னிக்கி ஒருநாளு மாத்ரம் வந்து செத்த மத்தாளந் தட்டறா! நாள வாரத்துக்கு வேணுமுன்னா வேற ஆராச்சும் புடியாளப் புடிச்சி செட்டுக்கு சேத்திக்கறன்னு கேக்க, பெத்த தாயி வந்து இப்பிடி பிச்சக்காரி மாதர கெஞ்சறாளேன்னு. எனக்கு அஞ்சுசுரும் பதைக்கிது!. அம்மா அங்கியுங் கூத்து இல்ல! இங்கியுங் கூத்தில்ல! வந்தா ரெண்டுபக்கமும் சுதாரிச்சிக்கலாமின்னுதான் இவிங்ககூட வந்துட்டன். மத்தாளத்துக்கு கொஞ்சம் கரண தேக்கிணும். தேச்சிக்கிட்டு பொறைக்கி வந்தர்றன்னு அம்மாள அனுப்பிச்சி வெச்சன். அந்தியோட தண்ணி கிண்ணி வாத்துக்கிட்டு பனமரத்துப்பட்டிக்கி நானு பொறப்பட, பொறன வூட்டுக்காரியும் பொறப்பட்டா. அன்னமுட்டும் வாயி பேசாமயிருந்தவன், என்னய முன்னவுட்டு, பொறன அவள "எங்க புள்ள போற",ன்னு குறுக்காட்டறானே மாமனாரு! எங்கூட்டுக்காரி எங்க போறன்? மாமம் கூத்துக்குப் போவுது! கூட நானும் போறங்க, அதுக்கு அவனிருந்துக்கிட்டு உம்புருசன் வேணுமுன்னா போவுட்டும், நீ போறதுக்கில்லங்கறானேவொரு சாமார்த்தியம்!.<br />இவளிருந்துக்கிட்டு, அப்பிடியா நானு போவாம இருக்கறதுக்கில்லன்னு சொல்லிப்புட்டு எம்பொறனையே வந்துட்டா. கூத்து முடிஞ்சதும் நானு எங்கூட்டுக்காரிக்கிட்ட கூப்புட்டுச் சொல்லிப்புட்டன். புள்ள ங்கொப்பன் புத்தி செரியில்ல! இன்னைக்கி எம்பொறன போவ வேண்டாமுன்னு சொல்றவன், நாளைக்கி நம்பள ஒண்ணா பொழைக்க வுடுவானா? நானு அவங்கிட்ட இருந்து தொழிலு செய்ய இனிமேட்டு லாயிக்கப்படாது. நானு வேணுமுன்னா, போயி மரியாதிக்கி உங்கப்பங்கிட்ட ஒருவார்த்த சொல்லிப்புட்டு நீ வா! வேண்டாமுன்னாலும் ஒங்கப்பனோட மவராசியா இருந்துப் பொழ!....<br />காத்தால போனவ சாயந்தரம் பொட்டியோட வந்துட்டா. பொறவு ரெண்டு புள்ளைங்க பொறக்கந்திண்ணியும் அப்பன், அம்மா பெத்து பொறப்போட நல்ல மொறையா குடித்தனம் பண்டனம். அந்த சமயம் நம்ம வாழப்பாடி முத்தம்பட்டியில வீரப்பன், வீரப்பன்னு ஓராளு. அந்தாளு டெண்டக்கூத்து ஏலத்துக்கு எடுத்து பத்து ராத்திரி கூத்து வுட்டுருந்தாரு. என்னையும் இவளையுஞ் சம்பளத்துக்கு கூப்புட்டாங்க, சேரின்னு போனம். </span></strong></div><br /><br /><br /><div><strong><span style="color:#339999;"></span></strong></div><br /><br /><br /><div><br /><strong><span style="color:#339999;">தூளு வரிச்சிப்புட்டு குந்தியிருந்தம்பாரு! மாமனாரு கணுக்கால்ல இருந்து மொழங்காலு முட்டும் பெரிய்ய கட்டா போட்டுக்கிட்டு கால செண்டி செண்டி வந்தான்.<br />ஜெயா, ஜெயா, ரெண்டு நாளு பொம்மக்கூத்தாடறன்னு வெத்தலப்பாக்கு வாங்கிப்புட்டன். தம்பிகாரனையும் என்னையும் நாயி கடிச்சிப்புடிச்சி. இந்த நொண்டி காலோட எப்பிடி கூத்தாட்டறது? வந்து ரெண்டு நாளைக்கி பொம்மையாட்டு பொறவு வந்துருவியாமின்னு கேக்க, இவுளுக்கு திடீருனு பொறந்தவம்மேல பாசம் பொத்துக்கிச்சி. நானு போயிட்டு வர்றன் ஓரெட்டுன்னு என்னய உத்தரவு கேட்டா. எனக்குன்னா மாமனாரு மேல சந்தேகம், நாயி கடிச்சிதுக்கா ங்கொக்காளவோலிக்கி இத்தச்சோட்டு கட்டு? இதுல என்னமோ வில்லங்கமிருக்குதுன்னு வூட்டுக்காரிய தனியா கூப்புட்டு, பிள்ள பிள்ள ங்கொப்பன மொதல்ல கால்ல இருக்கற கட்ட அவுக்கச்சொல்லு! உம்மையிலியே நாயி கடிச்சிருக்குதான்னு பாப்பம், நாயி கடிச்சிருந்தா நானும் கூட வர்றன். ரெண்டுபேரும் போவலாம். இல்ல ங்கப்பன் தக்கிடித்தனம் எதனாலும் பண்டிக்கிட்டு ஆள வேல வுடலாமுன்னு வந்துருந்தா, ஒததாம் திம்பாம் பாருன்னு சொல்ல, இவ ஒரே குதியா குதிக்கிறா.<br />போவ வாண்டமுன்னு சொல்ல முடியாம, எங்கப்பன் மேல பாடா வழி போடறியா? நம்பாதவம் பீய நாயிக்கூட திங்காது! எம்பொறந்தவன பாக்க, நானு போயித்தான் ஆவுணுங்கறா. அப்பிடின்னா சேரி, எம்பேச்ச மீறி நீயி போவத்தாம் வேணுமுன்னா, நாங்கட்ன தாலியோட போவக்கூடாதுன்னு நாஞ் சொல்ல, அப்படியா சமாச்சாரம் ஆருக்கு வேணும் தாலி! இந்தா நீ கட்ன தாலிய நீயே எடுத்துக்குன்னு லவுக்க மறப்புல இருந்த தாலிய படக்குனு எடுத்து வெளிய காட்டனாப்பாரு. நானு வெடுக்குன்னு புடிச்சி அத்துப்புட்டன். தாலியத்த மறுநிமுசம் இவிங்கப்பங்காரன் ஒரு மஞ்சப்பையி கொண்டாந்தாம்பாரு அதலிருந்து நானு கண்ணாலத்துக்கு எடுத்த மாமி சீல! பரியம் உரூவா நூறு! ரெண்டயும் எடுத்து எம்மின்ன வெச்சி, இன்னையோட எம்பிள்ளைக்கும் உனக்கும் ஒறவந்துப்போச்சி! செத்தாப் பொழைச்சா எதுவுங் கெடயாதுன்னு துரும்பு கிள்ளி போடறானே. </span></strong></div><br /><br /><br /><div><strong><span style="color:#339999;"></span></strong></div><br /><br /><br /><div><strong><span style="color:#339999;">கூத்துக்கு கூப்புட வந்தவன் </span></strong></div><br /><br /><br /><div><strong><span style="color:#339999;">பரியத்து உருவாயும் மாமி சீலயும் எதுக்கு எடுத்துக்கிட்டு வந்துருப்பான்னு இந்த கண்டாரோலி அப்பக்கூட ஆஞ்சியோஞ்சி பாக்கல. அங்க கூத்து ஆரம்பிச்சி நடத்துக்கிட்டு இருக்குது இங்கவொரு கூத்து நடந்துக்கிட்டிருக்குது. வேசம் போட ஆளில்லன்னு தொலாவிக்கிட்டு கூத்துட்டவன் வர, இந்த சமாச்சாரத்த காதுல கேட்டவன், புருசனோட போவியோ, அப்பனோட போவியோ, எனக்கு தெரியாது. கைநீட்டி வாங்கன உருவாயிக்கி விண்ணமில்லாம ஒழுங்கு மரியேதியா கூத்தாடிப்புட்டு போன்னு இவள புடிச்சிக்கிட்டான். இப்பிடி வாட்டலாட்டியத்திலியே ரெண்டு புள்ளைங்க பெத்தம். பொறவு அப்பன், அம்மா, தம்பிமாரெல்லாம் ஒட்டா செட்டுக்கட்ட நானும் இவுளுந் தனியா பொம்மக்கூத்து ஆட்ட செட்டு கட்டனம். ஓகோன்னு தொழிலு நடத்தனம். உளுந்தூருப்பேட்ட பாவந்துருல காடுதோட்டம் வாங்கணம். அத கருத்தா வெச்சிப் பொழைக்க துப்புக்கெட்டு ஒரு நாதேரிக்கிட்ட தோத்தம். அந்த வெசனம் புடிச்சே பதனாலு வருசம் குடிபோதையில திரிஞ்சன். </span></strong></div><br /><br /><br /><div><strong><span style="color:#339999;"></span></strong></div><br /><br /><br /><div><strong><span style="color:#339999;">சும்மா சொல்லக்கூடாது எங்க பொம்பளைய தனியா ஓராளா சுதாரிச்சி இந்த குடும்பத்த முன்னுக்கு கொண்டாந்தா. அத்தன மொடாக்குடிக்கி ஒடம்பு தாங்கல, வவுத்து நோவு! வாந்தி பேதி!, சுத்தமா சாரீரங் கெட்டு சாவற நெலமைக்கிப்போயி உசுரு பொழைச்சன். மறுபடி வேசம் போட்டாட, முடியல! பொம்மையாட்ட முடியல! ஓஞ்சி ஒக்காருவனா? ம்பொண்டாட்டிய நண்டு கடிக்க! அடிறா மத்தாளத்தன்னு ஆரம்பிச்சன்! நாப்பது வருசமாச்சி!. சாவளவும் அடிச்சிப்புட்டுத்தாஞ் சாவன்.</span></strong></div>manalveeduhttp://www.blogger.com/profile/11701810894595985945noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-891272482416127046.post-76053370800211181882011-06-29T19:24:00.000-07:002011-06-29T19:33:02.740-07:00குடிநாசுவன்<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEisE2Pd5fwM7A7uJaQnR9QxnovOqjAWw0kElquqTgjpT0ec_8WE8kvWh914AmBTiawRgiEJ1Ut9Smp_eMrsahXKTunLKCbS6jLqc4_sOpbQeAcF0o5bmWZStBu-Ir7F-M7TT6eADlTMs7FJ/s1600/IMG_0084.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5623834043802528082" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEisE2Pd5fwM7A7uJaQnR9QxnovOqjAWw0kElquqTgjpT0ec_8WE8kvWh914AmBTiawRgiEJ1Ut9Smp_eMrsahXKTunLKCbS6jLqc4_sOpbQeAcF0o5bmWZStBu-Ir7F-M7TT6eADlTMs7FJ/s320/IMG_0084.jpg" border="0" /></a><br /><br /><div><strong><span style="color:#339999;"><span class=""></span><br />கோழிக்கூப்டமித்தியே கண்ணுமுழிச்சவ பாழாப்போன கொலநோவுல எந்திரிக்க கையிலாவாம இன்னுஞ்செத்த விடியிட்டும், இன்னுஞ்செத்த விடியிட்டுமின்னு பாயோடப் பாயாச் சுருண்டுக் கெடந்துட்டு, நெனச்சாப்ல ஓவ்வுனுமேட்டுஞ் சும்மா வெட்டியாப் படுத்துருந்தா வேலைக்காவாது, வாசக்கூட்டி சாணியாச்சந்தொளிக்கலாமின்னு வவுநேரங் கழிச்சி அழவம்மா எந்திரிச்சி வெளிய வந்தா. அந்நேரம் குபேர மூலையக்காட்டி ஒரளான்ட வெள்ளவெளேருன்னு என்னும்மோ நின்னுக்கிட்டுக்கறாப்ல தெம்பட்டதும் நெப்புத் தெரியாமப் பயந்துக்கிட்டு போயி பிருசன எழுப்பலாமின் வந்த வெசயில திலுப்பியும் வூட்டுக்குள்ற ஓட்டம் புடிச்சா. “நாசூத்தி... நாசூத்தி... கேன நாசுவன் எங்கடி?ன்னு கொலுச் சத்தங்கேட்கும்பிடி அவத்திருந்த ஆளு இன்னாருன்னு அவுளுக்குச் சத்தமாப் பிருவாயிப்போச்சி. இந்த தம்பியிண்ணமூட்டு சில்லிவண்டு செகதாப்பிள்ளத்தான்’ வெள்ள வேட்டிய காலுவழியப் போத்திக்கிட்டு கொள்ளிவாவி பெசாதாட்டம் செஞ்செவிக்க நின்னுக்கிட்டிருந்திச்சி. ‘இவ ஆளு எவ்ளுண்டு பொம்பள எவ்ளுண்டு இழுத்துப் புடிச்சி அளந்தா ஒருச்சாண் இருக்கமாட்டா. விடிஞ்சும் விடியாதமின்ன நம்பூட்டு சால்ல வந்து நின்னு தலமேல அடிச்சாப்ல அத்தச்சோடு அம்பளய பேரச் சொல்லிக் கூப்டறாப்பாரு’ன்னு அழவம்மாளுக்கு ச்செட்யான கோவம் வந்துட்டுது. “அதெங்கியோ பீச்சூத்தி, நானென்னத்தக் கண்டன். அவனெஙகப் போனானோ”ன்னு காலாச்சட்டயா ரெண்டொரு வார்த்தயில வதுலச் சொல்லியுஞ் சொல்லாம வத் வேலய மறந்து அடுப்புச் சாம்புலு அள்ளப் போயிட்டா அழவம்மா. பீச்சூத்தின்னுச் சொன்னதுதாம் மாயம், இந்தச் செங்காநண்டு அழுதுக்கிட்டே ஓடி அவங்காயாக்கிட்ட குசலஞ்சொல்ல அவள கையோடக் கூட்டியாந்துட்டா. ஊருக்கவுண்டம் மருமவ ரட்சிமாயி, வௌஞ்சகாட்டுக்குருவி’ மீறுனப்பண்ணாட்டுக்காரி’ பாக்கறதுக்கு பொட்டப் பொம்பளதான், மன்னக்குட்டி வாயத் தொறந்துப் புட்டான்னா அவ்வளதான். சலதாரக் கப்பு எங்கித்தி மூல? அவப் பேச ஆரம்பிச்ச் ஒருப்புளுத்த நாயுங்குறுக்கப்பூதாது. “ஆர்ரிவ பொம்பள வூட்ல? வெளிய வாடி’ உனுக்கு எவ்வள மண்டத்திமுரு இருந்தா எம்பிள்ளையப் பீச்சூத்தின்னு பட்டப்பேரு வெச்சிக்கூட்புடுவ? உன்னு நாசுவக்கிருச என்னுக்கிட்டயேக் காட்ரியா? கூண்டி நாலு வூடு எறந்துக்குடிச்சி வவுறு வளக்கறப்பவே உங்களுக்கு இத்தன நீரேத்தமா? ஆர்ரிவ, கூப்ட கூட்ப குந்தியிருக்கறவ, நீயி வெளிய வரியா, இல்ல நானு உள்ற வந்து உம்மயிர அறுக்குட்டுமா”ன்னு ரட்சிமாயி ச்சும்மா மேலுக்குங்கீழுக்குங் குதிக்கும்பிடி அழவம்மாளுக்கும் ஆத்தரத்தாக்குபுடிக்க முடியல. “இங்கப்பாராயா, காலங்காத்தால வூட்டண்ட வந்து மயித்தறுக்கரன் கயித்தறக்கரன்னு அனாவசியமா பேசற வேல வெச்சிக்காத’ உம்மவ வயசென்ன எம்பிருசன் வயசென்னா? ஒரு கேள்விமொற மனசருங்கற மட்டு மரியாதி இல்ல. வந்து என்னம்மோ ‘நாசூத்தி நாசூத்தி நாசுவன் எங்க’ன்னு கேட்கறா? எங்களக்கண்டா அத்தன எளக்காரமா”ன்னு அவளுந் திலுப்பிப் பேச புடுச்சது பிளுபிளுன்னு அடமழயாட்டம் நாசுவமூட்டாண்டச் சண்ட. “பட்டத்துக்கு பவிசி வந்ததும் பாக்க முடியிலியாம், பட்டுச்சீலக் கிழிஞ்ச்ப்போனா தெய்க்க முடியிலியாம், அடியே டிங்குமாரி டவுனுக்கேப்மாரி, உம்பிருசன் பெரீய்ய கிலுட்டி அவங்காலுக்கு பூப்போட்டு கும்புட்டு தட்டு வருசவெச்சி வாடா மாப்ள வந்துச் செயிடான்னு அழைக்கணுமா? செய்யறதுச் செரைக்கற வேல. அவன நாசுவங்காமப் பெறவு வேற எப்டீறீங்கறது? உமூட்டு வாசல்ல வந்து கூட்புட்டா வெக்கமாயிருக் குதுங்கறவ, அடி மானரோசக்காரி’ வீர்சக்காரி’மழமாரி பேயாம மானங்காஞ்சாலும்வெள்ளாம வௌஞ்சாலும் வௌயாட்டியும் எஞ்சாண்ட வருசம் பத்துவள்ளம் அளந்துட்டு உனுக்கு வாக்கரிச்சி போடறனே’ தூமக்கட்டி எடுத்துக்கிட்டு வந்து திங்கறறேஇ அப்ப இருக்கணும்டி இந்த ஒணவு. குடிநாசுவமூடுன்னு ஊருல உங்க குடிவெச்சிருக்கறது கவுண்டிங்கத்தனம் பண்றதுக்கா? ஏண்டி அய்யனாட்டம் நெதஞ்செரச்சிக்கிட்டு ஒம்பிருசன் ஊருமெரமன வருவான்’ எமூட்டு ஆம்பளைங்க மட்லுஞ் சிண்டும் முடியுமா தாடியுந்தப்புமா பஞ்சத்துல அடிப்பட்ட பரதேசிங்களாட்டந் திரியினுமா? ஒழுங்கா மரியாதியா உம்பிருசன இன்னிக்கி காட்டுக்கப் போயிக் கிருமமாச் சவரம் பண்டச் சொல்லு. நாளைக்கி திலுப்பியொருக்க அவங்கள அப்பிடியே பாத்தன், பொம்பள நடக்கறதே வேற”ன்னு ரட்சிமாயிப் போட்ட போடு பூட்ட வாங்குது’<br />குளுருக்கு மொடங்கிக் கெடந்தவன் இந்த மூளி அலங்காரி தொறந்த தொறப்புல கண்ணு முழிச்சி அரத்தூக்கத்துல எந்திரிச்சி வந்து, இத இப்பிடியே வுட்ட வெவகாரம் வேற வேறயாப்போயிருமுன்னு ‘ஆ’ன்னு தொறக்கவுட்டாம அழவம்மாள வாயடக்கி அவள உள்ற தள்ளிவுட்டு தாளுப்போட்டு, “ரவுசுப் பண்டாதீங்க ஆயா’ அவக்கெடக்கறா கழுத’ அவளோட உங்குளுக்கு என்னா வாட்லாட்டியம்? சிங்க ஊட்டுக்குப் போங்க, இதா இப்பபோயி பண்ணாடிங்களுக்கு நாம்பாத்துச் செஞ்சிவுடறன்”ன்னு அங்கமுத்து தொஙகுச்சலாம் போட்டு நாலாடம் பல்லக்கெஞ்சி தலய தலய சொறிஞ்சப் பொறவுதான் ரட்சிமாயி அந்த எடத்தவுட்டு அந்தல்லப் போனா. தெனம் பொழுது விடிஞ்சாப் போதும் அங்கமுத்துக்கு ஓரியாட்டம் ஓயறதில்ல. ஊரு நாயிங்க வூட்ல வுழுந்தப் பொணத்துக்கு ஒரு நாப்பொழுதுக்கும் நிமுசு, வுழுவாதப் பொணத்துக்கு அது புளுக்கய விசுறமுட்டும் ஒக்குலு காத்துக்கிட்டு குந்தியிருக்கணும். செத்தா பொழச்சா எங்கியும் போவமுடியாது. அவந்தான் என்னாப் பண்டுவாம் பாவம்’ நூறூட்டுக் கவுண்டமூட்டாருக்கு ஒருத்தஞ் சேவிக்கறதுன்னா சாமானியப்பட்டக் காரியமா? கெழக்க வெளுக்காதமின்ன அடப்பத்தயுங்கத்தியயுங் கமக்கட்டையில அடக்கிட்டுப் பொறப்பட்டான்னா மவராசன் இருட்ட தலமேலப் போட்டுக்கிட்டு வூட்டுக்குத திலும்புமட்டும் காடு கண்டப்பக்கம் பண்ணாடிங்கள கல்லுமேலக் குந்தவெச்சி வெட்னது வெட்னவாக்குல, செறச்சது செறச்ச வாக்குலியே இருந்தாலும், எதோ ஒண்ணு ரெண்டு இப்பிடி தவுறிப் போவுது. கண்ணு வெளிச்சங்கொறஞ்சி மிமிகங்கது, காதும் மத்துவமாயிக்கிச்சி, முடியலையின்னு கருமாத்தரத்த வுடமுடியிதா’ திங்கறச் சோத்துல மண்ணள்ளிப்போட்டுட்டு, பொறவு ரெண்டுகரு சீவிக்கற வழி? புட்டுச்சுட்டு வித்துக்கிட்டுருந்த வேலப்பமூட்டு பாப்பா மேச்சேரியில ஓட்லுக்கட வெச்சிட்டா, கல்கோனா, சவ்வுமுட்டாயி, சளிமுட்டாயி, சோளக்கருது, பேரிக்கா, பனங்கெழங்கு, குச்சிக்கெழங்கு, கொழிஞ்சி முட்டாயின்னு போட்டு கட்லுக்கட வெச்சிருந்த எளயா மூட்டு கிட்ணப்பன் பலசரக்கு கட வெச்சிட்டான் காடு கற களவெட்டிக்கிட்டு, பயிரு நட்டுக்கிட்டு, அவுத்த யிவுத்த சிக்கனத்தாவுலு குததவைக்கிப்புடிச்சி ஒருக்குட்ட ரெண்டுக்குட்ட வெள்ளாமப் பண்டிக்கிட்டிருந்த மண்டமூக்கு ஆண்டியப்பன் ஏரியோரத்துல கங்காணிய்ட்டு நெலத்த வாங்கி வயலடிக்கிறான். சட்லக்கா, புட்லக்கான்ன தறிநேசிக்கிட்டிருந்த செட்டுக்கார கோவாலு சேலத்துல பெரிய்ய சவுளிக்கட வெச்சிட்டான். இந்த அங்கமுத்து நாசுவனும், செங்கோடவண்ணானும் கொட்டுக்கொட்ட நடேசந்தோட்டியும், செருப்பு தெக்கிற செம்மூஞ்சியூட்டாரும் அன்னிக்கிப் பொழச்ச பொழப்ப இன்னிக்கும் அச்சுக்கொலயாம அப்பிடியேத்தான் பொழைக்கறாங்க. எப்பிடி மின்னேறது? என்னிக்கி வந்த தாவு சேர்றது? ச்சேரி. னுத்தன நாளைக்கி இவங்கப் பாடய திலுப்பறது? நாலுப் பேராட்டம் நாம்பளுஞ் சரீங்கறாப்புல பொழைக்கனுமின்னுதான் ஓடி மேட்டுருல இவஞ்சாப்புக்கட வெச்சான். அவன் வாங்கியாந்த வரம்’ தலையெழுத்து’ அவுனுக்குப் பொறந்தது நாலுந் தெல்லவாரிங்க. தாம் பொழைக்கவுந் துப்பு இல்லாம அப்பனாயாளுக்கு ரெண்டுச் சம்பாரிச்சிப் போட்டுத் திங்கடிச்சிக் கெவுணிக்கவுங்கருத்து இல்லாம, கடய ஒரே வருசத்துல வித்து பொறுக்கித் தின்னுப்புட்டு ஆளாளுக்கு ஒவ்வொரு ஊரா அல்லு எடுக்கப் போயிரிச்சிங்க. ஊம்... ஒண்ணப் பெத்தா உரியிலச் சோறு, நாலப் பெத்தா நடுத்தெருவுலச் சோறுங்கறது செரியாப் போச்சி எவ்வளவெடுப்பா, எவ்வளவிறாப்பா குச்சப் புடுங்கிக்கிட்டு ஊரவுட்டுப் போனானோ, அத்தச் சின்னப்பட்டு, சீப்பரத்து, ரோலாயப்பட்டு, திலும்பி வர வேண்டியதாப்போச்சி. அதும்பொறவு ஊருல அவனுக்கு கொஞ்ச நஞ்சமிருந்த யோக்கிதியும் தொச்சமில்லாமக் கெட்டுப்போச்சி. தெனஞ் சித்ரவத ஊத்தவாயக் கழுவாமஇ ஒரு முழுங்கு நீசுத்தண்ணிக்கூட குடிக்காம காத்தாலங்காட்டியும் பண்ணாடியத்தேடித் திலும்புனான் அங்கமுத்து. “எங்கன்னு கண்டு தொழாவுறது? புளிச்சக் கள்ளக் குடிச்சிப்புட்டு தம்பி பண்ணாடி காமாடு தலமாடு தெரியாம எங்கக் கெடக்கறானோ’ இலல எத்த மப்பு எறங்காம இருக்க, சின்னப் பையஞ் சாணனோட கொய்யாமரத்துக்காடு ஒருகோடியா தொப்பலாமூட்டு தோப்புமுட்டும் பனஞ்சாரி எங்க திரியறானோ? மனுசங் கைக்கிச்சிக்கறது அவ்ள லேசுப்பட்ட சமாச்சாரமா, ஆராலடா கடவுளே ஆவறது"ன்னு வெசனம் புடிச்சிக்கிட்டு அங்கமுத்து தேசிகமூட்டு கெணத்தான்டயிருந்து, அப்பிடியே நாயப்பமூட்டு காடு, மெமல யூட்டுக்காடு, மலையாமூட்டுக்காடு, குட்டக்கர, வளயச் செட்டியாமூட்டுக்காடு, முத்தண்ண மூட்டுக்காடு, தூங்கண்ணமூட்டுக்காடுன்னு ஆளத் தொழா அலமோதி கெட்டலஞ்சி கடச்சியா பழனியப்பமூட்டுத் தோப்புல அவனப் புடிச்சி சேத்தனான். “ஏண்டா கேனா, எள நேரத்துல வர்றதுக்கு உன்கென்றா கேடு? வெய்ய நேரத்துல வந்து ஏண்டா எந்தாலிய அறுக்கற? இனுமேட்டு நீ எப்ப செரக்கிறது, நானு எந்நேரந் தண்ணி வாத்துக்கிட்டுச் சோறுக்குடிக்கறது”ன்னு பண்ணாடிக்க அவன பாத்தும் பாக்காதமின்னன்னு நோப்பாளஞ் சீறிக்கிட்டு வந்துட்டது. சவரம் பண்டிக்க மாண்டேன்னு நொம்போ உலுக்கனாரு. அதா இதான்னு என்னான்னவோ தவுமானஞ்சொல்லி ஆளக்கூட்டியாந்து எடஞ்சேத்தறதுக்குள்ள அங்கமுத்து தெணறு தெணறுன்னு தெணறிப்புட்டான். அப்பிடியே சைசாப்பேசி நைசுப்பண்டி கவுண்டரக் குந்தவெச்சி, கத்தியத் தீட்டி மெவறயில வெச்சாம்பா, இருந்தாப்பிடி இருந்து பண்ணாடி சிவுக்குன்னு எழுந்து தென்னமரத்துலச் சாஞ்சி நின்னு வெடுக்குனு கோமணத்த அவுத்துவுட்டு ”அங்க கெடந்தா கெடக்கட்டும், அதவுடுறா, அப்புறம் பாத்துக்கலாம். இங்கப் பண்டுறா மொதல்ல”ன்னு முக்கிலியமான எடத்த காட்டும்பிடி வழுதுப்பேசல அங்கமுத்து. செத்துப்போன மொன்ன பாம்பாட்டம் தெவண்டுப்போயி தொங்கிக்கிட்டு இருந்த உசுரு நெலயச் சுத்தி அடபாசரம், முச மண்டலம், மூத்தர நாத்தம், ஓரேச் சீன்றம். மொடையடிக்கிது, சூரையடிக்கிது என்றனால முடியாதுடாச் செரைக்கன்னு சொல்ல முடியுமா? இல்ல ஏனோதானோ என்னம்மோ அப்பிடி ஒண்ணு ரெண்டாச் செஞ்சித் தப்பிக்க முடியுமா? மூச்... வழிச்சுட்ட வூடாட்டம் சுத்தமா இருக்குனும். வெரலவுட்டு நெரடிப்பாக்கையில எங்கியாச்சும் ஒருமுடி இந்துப்புடிச்சி பொறவு ஈடுதிங்க முடியாது. பண்ணாடி மாருங்களுக்கு கோவம் வந்திச்சி அவ்ளத்தான். புளியாமரத்துலக் கட்டிவெச்சி வெளுத்தா வெளுத்துப்புடுவாங்க. குமிஞ்சவாக்குல என்ன முட்டும் நிக்கறது? இடுப்பு நோவு வேற மின்னலு மின்றாப்லப் பளீர் பளீர்ருங்க மண்டிப்போட்டு வாட்டமா நின்னு நெதானமா பொறுத்து பொறுத்துச் சீருப்பாத்துச் செஞ்சி முடிக்கையில பண்ணாடிக்கு கண்ணச் சொருவிக்கிட்டு தூக்கம் வந்துட்டுது. “எந்திரிங்க சாமி”ன்னு இவந்தொட்டு எழுப்பும்பிடி பண்ணாடி நித்தரக்கலஞ்சி,“என்றா கேனா ஆச்சாடா”ன்னு கேட்டான். “ஆச்சுங்க சாமி”யின்னான் இவன். “என்னோட வந்தவேல முடிஞ்சிப்போச்சின்னு நீப்பாட்டுக்கு லயில்வே கேட்டுக்கு புட்டு திங்கப் போயிராத. அதா அவுத்தகொட்டாயில சின்ன பண்ணாடி இருக்கறாம் போயி அவுனுக்கும் பாத்துச் செஞ்சிப் புட்டுப்போ”ன்னு பண்ணாடிச் சொல்லும்பிடி. “சேரிங்கச் சாமி”ன்னுப்புட்டு. இவன் மொழங்காலு நோவோட மொள்ள எந்திரிச்சி ரெவலா நடந்து மின்ன போயி நின்னான். இவந்தலய கண்டுங்காங்காத மாதிரி கொட்டாயிக்குள்ள கட்டுல்ல படுத்துக்கிட்டு இருந்தான் தம்பியின்ன மவன் பழனியப்பன். இருந்து இருந்து சலிச்சி இருக்க மாட்டாம இவஞ், “சாமீ... சாமீ...”ன்னு ரெண்டுச் சொல்லுக் கூப்புடும்பிடி அந்த மொள்ளமாரி படுத்தவாக்குல கட்லடியக் கெடந்த நெத்துத் தேங்காய எடுத்து ‘ச்சுடேன்னு’ வாசக்காலப் பாத்து விர்ரன்னு வீசனாம் பாத்துக்க இந்த ஈனப்பானங்கெட்டது அடிக்கி தப்பிச்சி ஓரமா ஒதுங்கி நின்னுக்கிட்டு. “சாமீ, பண்ணாடி’ நாந்தாஞ்சாமி குடீநாசுவன் வந்துக்கிறஞ்சாமி”ன் பிருவா வௌம்பி விங்கிணிச்சி சொல்லிச்சி மறுக்க. அதுக்கு அந்த எறப்பாணி பெத்தது, “ஆரு அங்கமுத்து பண்ணாடியா? அடப்பகவானே’ பெரிய்யக் கருப்ராயா, நானு வேற இந்த மொண்டு வாலு நாயிதான் ஒலைக்குதோ தென்னமோன்னு தச்சோட்டு நெத்துக்காய எடுத்து இட்டுப் புட்டனே”ங்குது எகத்தாளமா. திலுப்பியும் இந்த கேடு கெட்ட அங்கமுத்து, “ஐய்யோ, குத்தஞ்சாமி குத்தம். நீங்கபோயி என்னயப் பண்ணாடிங்கறதா, வாண்டாஞ்சாமி வாண்டாம். பாவத்த எங்கப்போயி தொலப்பஞ்சாமி”ன்னு கெஞ்சறாங் கொணாய்க்கிறாஞ் சும்மா. “பின்ன என்றாப் பன்ன? கத இப்ப அப்பிடித்தாண்டா ஓடுது, கூச்சு கூச்சுன்னா வந்து மூஞ்ச நக்கறீங்க? ரேங்கண்டு நீங்களா வந்து செய்யறதில்ல. கெடஞ் சாவுதுன்னு வூட்டுக்கு ஆளுவுட்டுக் கூப்புட்டா பொட்டக்கழுதைங்கள வாயிபேசவுட்டு வேடிக்கப் பாக்கறீங்க. அது வேற ஒண்ணுமில்லீங்க, ராசாவு உங்குளுக்கு துளுரு வுட்டுப்போச்சி. மணிக் கட்டோட கைய நறுக்கி வுட்டுட்டா எல்லாஞ் செரியப் போவும்”மின்னு காதுல நத்தம் முட்றாப்ல பேச்சறான். இவுனும் அதல்லீங்கச்சாமி, இது இல்லீங்கச் சாமி, அது அப்பிடி ஆயிப்போச்சிங்கச்சாமி, இது இப்பிடி ஆயிப்போச்சிங்கச்சாமின்னு ஆயிரத்தெட்டு சாக்குச் சொல்லி அந்த சொட்டத்தலையில சீக்கட்றாப்ல சொறிஞ்சி புண்ணுப்பண்டி, அந்த ஒந்தறக்கண்ண சிமிட்டி, சிமிட்டி பல்ல இளிச்சி அவன சுதாரிச்சி கொண்டி நெல்லிக்கா மரத்தடிய நிறுப்துப்பிடி ஒட்கார தோதா ஒண்ணுஞ்சிக்கல்ல. பொறவு இவம் போயி கல்லுக்கட்டு மேலருந்து ஒரு கருங்கல்ல பேத்துக் கொண்டாந் துப்போட்டு பண்ணாடியக் குந்தவெச்சி தண்ணியத் தொட்டு தடவி மெதுவா அப்பிடியே பூப்பறிக்கறாப்ல துக்ளியூண்டு துக்ளியூண்டா செறயயும் வழிச்சி எடுத்தான். ஏனோ பழனியப்பன் அப்பைக்கும் உர்ர்ருன்னே குந்தியிருந்தான். இன்னும் ஏதாச்சிம் ரெண்டு சமாதானஞ்சொல்லி பண்ணாடியவிக கோவத்த ஆத்தி பொந்திய குளுர வெச்சா எதோ போடிபுட்டுக் காச்சும் காசாவுமுன்னு இந்த திருவாத்தான். “சாமி அறியாப்புள்ளயா இருந்தப்பப் புடிச்சி எத்தனையோத்தரம் உங்குளுக் கெராப்பு வெட்டி வுட்ருக்கறன், கள்ளிச் செதுக்கிவுட்ரு’கறன், மீசக் கத்திரிச்சி ஒதுக்கிவுட்ருக்கறன். ஆனானாக்கச் சாமீ, ஒரே ஒருத்தரங்கூட இன்னிக்கு அமஞ்ச ரட்சணம் உங்க மெவறயில என்னிக்குமே அமஞ்சதில்ல. இந்த கல்லோட ராசியோ என்னமோ ஆளும் உங்க மொகக் கூறும் நீங்க குந்தியிருக்ற கெம்பீரமும் பாத்தா அட அட என்னான்னுச் சொல்றது’ அப்பிடியே அந்த மைசூரு மவராசா தங்க சிங்காதனத்துல குந்தியிருக்கறாப்ல அத்தன அற்புதமா இருக்குதுப்போங்க”ன்னு ஒரு மிஞ்சனப் பழமய மெய்க்க மெய்க்கப் பேசும்பிடி, படக்குனு அந்தக் கவுண்டந் தூக்குடா கேனா கல்ல வூட்டுக்குன்னு உத்தரவு போட்டான் ஒரேடியா. ஹூம்... வெந்தது தின்னு விதி வந்தாச் சாவ கெழுட்டுத் தாயேலி, கல்லச் சொமந்துக்கிட்டு நொறத்தும்ப பண்ணாடிப் பொன பட்டி நாயாட்டம் ஓட்டமெடுத்தான்.<br /></span></strong></div>manalveeduhttp://www.blogger.com/profile/11701810894595985945noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-891272482416127046.post-62680358530059872552011-06-28T12:01:00.000-07:002011-06-28T12:24:16.373-07:00ஒருநா ஒருப்பொழுது<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg2y7-WsALqhaULXVGeA_AyVH6vpCK5r-5OAmcSoTxCmH7LDBgUG9Rj9VXdigVcoL7EfvI2bHRV9KcgwyzNVGNuxWbTxgs2olUl-hwdePUA9wZtEnByGYK21SnfHTZ1p4bTIv2g0CY6XW5z/s1600/IMG_0052.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5623349164538133362" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 240px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg2y7-WsALqhaULXVGeA_AyVH6vpCK5r-5OAmcSoTxCmH7LDBgUG9Rj9VXdigVcoL7EfvI2bHRV9KcgwyzNVGNuxWbTxgs2olUl-hwdePUA9wZtEnByGYK21SnfHTZ1p4bTIv2g0CY6XW5z/s320/IMG_0052.jpg" border="0" /></a><br /><br /><div><span style="color:#339999;"><strong>ஒருத்தன் ரெண்டு பேரா இருந்தாச் சமாளிக்கலாம்! அடவொரு ஐந்நூறு ஆயிரமுன்னாச் சுதாரிக்கலாம். நெனைச்சாப்பிடி ங்கொண்ணகாரம் பட்ட கடன் மூணு லட்சங்குடு நாலு லட்சங்குடுன்னா எங்கயிருந்து அவுக்கறது? இந்த நேரம் பாத்து இவ வேற வவுத்த நோவுதுன்னு மூணு நாலாப் பெணாத்திக்கிட்டு கெடக்கறா! ஒரேப் பிள்ள போதுண்டின்னுச் சொன்னன் கேட்டாளா? எச்சித்தண்ணிக்கு எதுத்தண்ணி வக்கு இல்ல மாளாத சொத்து வீணாப்போவுது பையன் வேணும், பையன் வேணுமின்னா, இப்ப பட்டுக்கிட்டுருக்கறா.<br />கூலிக¢காரம் பொழப்புல நோக்காடு ஒரு நோவு நோடியின்னா அந்தண்ட இந்தண்ட நவுர முடியிதா?ங்கொம்மாள கூட்டிக்கிட்டு வாடின்னா ஆயலோக்க அவளுக்கு சேலம் ராவு ஆசுபத்திரியிலதான் நொட்டணுமாம். ஜம்பஞ் ஜல ஜலங்குது மொள்ள மொளு மொளுங்குது.<br />இங்கு ஒவ்வொருத்தணும் அஞ்சி உருவா பச்ச நோட்ட கண்ல பாக்கறதுக்குள்ள குண்டியில சீக்கட்டிக்கிது. அவ அவ அப்பமூட்லயிருந்து அதக்கொண்டாரா, இதக்கொண்டாரா உப்பு புளி மொளவாக் காயிலயிருந்து சகலமுங் கொண்டாரா! நம¢பளுக்கு ஆத்தர அவசரத்துக்கு ஒரு பக்கம் போவ வர தொணக்கி ஒரு ஆளு வேணுமின்னா வெண்ண வெச்சி உருவணும். என்னைக்கும் கண்ட நாயந்தானே இது, கெடந்து தொலையிது.<br />ஒம்போதுப் பிள்ள பெத்தவளுக்கு தலச்சம் பிள்ளக்காரி மருத்துவம் பாத்த கதையா அந்த பாடமாத்திங்களுக்கு என்னா மயிரா தெரியிது? எதயும் அத்துப்படியா தித்துமானம் பண்டுதுங்களா? நாம்பு நாம்பா மாத்தர! கொலாயச் சுத்திச் சுத்தி வற ஊசி, ஏத்தி காசப்புடுங்கதாம் பாக்குதுங்க.<br />மட்டக்கார மாதுப்பிள்ள மவனுக்கு காசக்குளுரு வந்து எடப்பாடிக்கி கொண்டி ஒரு டாக்டரிண்ட ஊசி போட்டதுதாஞ் சாக்கு! ஏப்பா பையனுக்கு மேலுப்பூரா பத்துபத்தா தோலு உரிஞ்சிக்கிட்டு வருதே நல்லம்பாம்பு சட்டையாட்டம்! இங்கயிருந்து சேலம் நாலு ரோட்டுக்கு ஓடி சுந்தர்ராசி ஆசுப்பத்திரியில சேத்தி ஒன்ற லட்சம் செலவு பண்டனதுதான் தொச்சம் பையந் தெளிச்சியாவல. இன்னைக்கோ, நாளைக்கோன்னு இழுத்துக்கிட்டு கெடக்குது! இந்த ரட்சணத்துல ஊசி போட்ட மவராசன.<br />“என்றா தாயோலி இப்பிடி பண்டிப்புட்டி”ன்னு நாயங்கேட்டா.<br />“டேய் ஆசுபத்திரியிலிருந்து பையன உசுரோட கொண்டு போவ மாண்டிங்கடா”ன்னு ஆளு வெச்சி மெரட்டறானாம். காசக் குடுத்துட்டு காண்டுப்புண்டய பாத்தியா?<br />இவுத்த இருக்கற குருவா கெழவியிண்ட கையக் குடுத்தா வவுத்துல இருக்கறத ஆணா, பொண்ணான்னு கண்ட வெச்ச மாதர சொல்லிப்புடுவா... ம்... கொறத்திப் புள்ள பெத்தா கொற வந்தான காயந்திங்கனும்?<br />“பொறப்படறீப்பிள்ள சேலத்துக்கு”ன்னு<br />நானு எங்க கருவாச்சிய இழுத்துக்கிட்டு காரு ஏறி மேச்சேரி வர்ரதுக்குள்ள அவிங்க அம்மாக்காரி தகோலுத் தெரிஞ்சி பையிங் கையிமா மூட்டக்கட்டிக்கிட்டு வந்துட்டா, மவள என்னம்மோ ஆசுபத்திரியில கெடயில போடறாப்ல. இந்த திருடி மலயாமூட்லயிருந்து போனுபோட்டுச் சொல்லியிருப்பா<br />“வாடி ஆயா என்னப்பெத்தவளே! இந்த கால கண்ட ஐயன் சேலங்கூட்டிக்கிட்டு போறான். திலும்பி கூட்டியாரதுக்குள்ள என்னய கொன்னாலுங் கொன்னுப்புடுவாண்டி”ன்னு எங்க மாமியாளக் கண்டாவே எனக்கு பொச்சி வாயெல்லாம் எரியும். வவுத்துப்பிள்ள கீழ நழுவறாப்பல பேசுவாளே ஒழிய காரியத்துல ஒண்ணுமிருக்காது.<br />ஒரு ரெண்டு வருசத்திக்கு மிந்தி எங்கூட்டுக்காரி நெறமாசம், கட்டுச்சோறு ஆக்கிப்போட்டு அவிங்கப்பமூடு கூட்டிபோயிந்தாங்க. அந்தெட்டு எங்கூட்டாளி செந்திலான் வூடுகட்டி சம்ரட்ண வெச்சிருந்தான் திலுப்பூர்ல. நானு வர்லயின்னாலும் அவன் வுடல.வாடா வாடான்னு ஒரேத் தொந்தரவு. சேரி தெலையிது எங்கூட்டு அக்கப்போருலயிருந்து ஒருநா கண்ணுக்கு மறப்பா எங்கியாச்சும் இருந்துட்டு வர்லாமுன்னு கௌம்பனன்.<br />போற தடத்துல மேட்டூருக்குப் போயி இவளப் பாத்துட்டு ரெண்டு பழங்கிழம் வாங்கிக் குடுத்துட்டு போலாமின்னு போனா, ஏப்பா இந்த கொலவாரிங்க ஒண்ணுங்கூட வூட்ல இல்லப்பா. எங்கியோ பெரிய காரியம் ஆயிப்போச்சின்னு இவள ஒருத்தியும் தனியா வுட்டுட்டு போயிரிச்சிங்க. பொம்பள மேலு வேற மினுமினுன்னுருக்குது, மொவற வேற வெளுத்து சொரந்துக்கிட்டுருக்குது. எந்நேரம் வேணுமின்னாலும் புளள் பொறந்துக்கும் ஆருக்கண்டா?<br />எனக்குன்னா திலுப்பூரு போவ மனசே இல்ல. இருந்தாலுஞ் செந்திலாங்கிட்ட வர்ரன்னு சொல்லிப்புட்டமே... மடியிலிருந்த மூவாயிரத்த எடுத்து இந்த காமாலச்சிக்கிட்ட எதுக்கும் செலவுக்கு வெச்சிக்கடின்னு குடுத்துட்டு “பத்திரமாயிருப்புள்ள விடிஞ்சதும் ஓடியாந்துடறன் ”ன்னு வண்டியேறி நான் அந்தண்ட போவ, இவுளுக்கு இந்தண்ட புள்ள நோவு கண்டுருக்குது.<br />என்னாப்பண்டுவா? ஒரு சுடுதண்ணி வச்சிக்குடுக்கக்கூட ஆளு இல்லாம வூட்டுக்குள்ற குறுக்கு மறுக்கா நடந்துகிட்டே மவ நோவு பொறுக்கமாட்டாம துடியா துடிச்சிக்கிட்டு இருந்துருக்கறா. அவ சின்னப் பொறந்தவன் அக்காளச் சித்தய பாக்கறதாம் அழுவுறதாஞ் சித்தய! அவனுக்கு என்னாத் தெரியும் பாவம் அறியாப் பையனுக்கு? எந்தச்சாமி புண்ணியமோ! பக்கத்தூட்டு மாங்காக் காரம்மா இந்த தாக்கல கேட்டவ கடயப் போட்டது போட்ட வாக்குல வுட்டுட்டு மவங்காரன ஒரு வண்டி கொண்டாரச் சொல்லி இவள ஏத்திக்கொண்டி கவுருமெண்டு ஆசுபத்திரியில சேத்தியிருக்கறா.<br />விடிய, விடிய முக்கி பிள்ளப்பெத்த நோவுக்கூட எம்பொண்டாட்டிக்கி பெருசில்ல, இப்பிடி வாயும் வவுறுமா இருக்கறவள இட்டாந்து சீருப்பாக்கறதுக்கில்லாம ஒண்டி ஒரியா வுட்டுட்டு அப்பமூடு ஊருமேல போயிட்டாங்களே, அந்த மொடமசுரு புடிச்சவன் கண்டாரக் கழதையின்னு வந்து நேந்தப்படி பேசனா என்னா வதுல சொல்லறதுன்னு அழுது கிட்டிருந்திருக்கறா.<br />கெழக்கு வெளுக்கும் மிந்தியே நானும் ஓடியாந்துட்டேன். எம்மவள பாத்தன். கோவங்கீவமெல்லாம்போன எடந்தெரியல. ஆரையும் பேசல, எதயுஞ் சொல்லல.<br />அப்பறம் ரெண்டு நாளு கழிச்சி இவளோட ஆயாளும், பொறந்தவனும் மெட்ராசியிலிருந்து ஆடிக்கிட்டு வந்தாங்க. வந்தவுங்க எதோ ஆளு அம்பு இல்லாத தாவுல மவக்காரி நல்ல விதமா பிள்ள பெத்துக்கிட்டாளேன்னு சந்தோசப்படறத வுட்டுட்டு வந்த வெசயில.<br />டேய் ஆர்ரா பிள்ளய சீன்ரத்துல கொண்டாந்து தள்ளுனது? பூமா ஆசுபத்திரியில எம்மவ பிரசவத்துக்கு அஞ்சாயிரம் பணங்கட்டி டோக்கனு வாங்கியிருக்கறன். இந்த நாத்தத்துல வேண்டா, தூக்குங்க தூக்குங்க! காரக்கூப்புடுங்க பிளசரக் கூப்புடுங்க அங்கயிங்கன்னுச் சும்மா குதிக்கறாங்க. அதுவும் இவப்பெரிய பொறந்தவனுக்குன்னா இடுப்புல வேட்டியே நிக்கல. ஹும் இவிங்க புண்ட வருச எனக்கு தெரியாதா?<br />“பிள்ள கொலாய மூடிக்கிட்டு கம்முகு இருக்கச் சொல்லு! வலி பொறந்தா ஒதவி ஒத்தாசிக்கு எசவில்லாம என்னாப்பண்டுவான்னு துளிக்கூட கருக்கட இல்லாம தலச்சம்பிள்ளத்தாச்சிய வுட்டுட்டு அவிங்க ஊருபெரயாணம் போனதே பெரிய்ய குத்தம். பொறவு இங்க வந்து அது நோனி இது நோனின்னு எச்சாப் பேசனாங்க... செத்தாலும் இலல் பொழச்சாலும் இல்லன்னு ஒரேடியா கழிச்சிக்கட்டிப்புட்டு ஆசுபத்திரியிலயிருந்து இப்பிடியே உன்னய கூட்டிக்கிட்டுப் போயிருவஞ் சாக்கிரிதி! உன்னு மரிகேதிக் கோசரம் வேணும் வௌயனுமின்னு பாக்கறன்”னு நானு எங்கூட்டுக்காரியிண்ட ஒரே வார்த்தயாச் சொல்லிப்புட்டான்.<br />வெத்துவேட்டு நாயம், வெறும் பழம பேசறதுல மட்டுமில்ல எங்க மாமியா ஒரூட்ட ஒமபோது வூடாப் பண்றதலியும் கெட்டிக்காரி.<br />அண்ணந்தம்பி நாங்க அஞ்சாறுப்பேரு. ஆளுக்கு தக்கனப் பாடு! அவரவருச் சம்பாதன. ஓராளுப் பன்னாட்டு எல்லாம் ஒட்டுக்காத்தான் இருந்தம்.<br />எனக்கு கண்ணாலம் ஆன புதுசு. ஓகாதியோ என்ன கருமாந்தரமோ! மொத நோம்பிக்கி கூப்புட மாமியாக்காரியும், நங்கையாக்காரியும் வந்துருந்தாங்க. தவுசு நாடகத்துல வர்ற பேரண்டச்சி வேசமாட்டம் எம்பொண்டாட்டியோட அக்காக்காரி நல்லாப் பெருஞ்சாதிப்பொம்பள. கரும்புக்காட்டுக்கு நெருப்பு வச்ச மாதிரி நெறம். தண்ணியக் கழுவி நெவுலப் பூமியிலப் பொதைக்கிற ரகம். நோம்பிக்கின்னு வூடு வாசச் சுத்தம் பண்டி துணிமணி தொவச்சி சாமானஞ்சட்டெல்லாம் வௌக்கி கமுத்தி வெச்சிருந்தாங்க. வந்தவங்க ரெண்டுபேரும் ஒரு பக்கமாயிருந்து நோட்டம்போட்டாங்க. சனி மூலையில கோந்திருந்தவங்க இருந்தாப்பிடியிருந்து எங்கூட்டுகாரிய கட்டிப் படிச்சிக்கிட்டு அழுதாங்க பாரு ஒரு அழுவாச்சி ச்சும்மா ஏங்கி ஏங்கி அழுவறாங்கப்பா! அழுவாச்சியோட அழுவாச்சியா எங்க மாமியா “அய்யோ கண்ணு அல்லா வேலயும் நீயேத்தாஞ் செய்யணுமா? வஞ்சிக் கொடியாட்டம் வளத்தனனே! மாடா ஒழைச்ச் ஒடாத் தேயிறியே மவளே”ன்னு நீலிக்கண்ணீரு வடிச்சா.<br />கூடமாட வேல செஞ்சவிங்க காதுல இது வுழுந்தா அவிங்க வவுறு வாயி பத்துமா பத்தாதா? ஏப¢பா பத்தாயிரம் இருவதாயிரம் போட்டு கண்ணாலம் பண்டிகிட்டு வர்ரவன் பொம்பளைய சாமியூட்ல வெச்சி பூப்போட்டு பூசையா போடுவான்? ஒடம்பு வளையாம ஒரு வேல வெட்டி செய்யாம நெவுலடி நாத்தாட்டம் இவிங்க குந்தன தாவுல குந்திக்கிட்டு இருக்க ஆளு அம்பு வெச்சி வேலப்பண்ட நாம்பென்னா குபேரமூடா? நாஙகூப்புட்டுச் சொல்லிப்புட்டன. “விருந்தாட வந்தமா, வவுறாறத் தின்னமான்னு வந்த சோலியப் பாத்துக்கிட்டு போயிக்கிட்டேயிருக்கனும். நடுப்பற குசலம்பேசி வூட்ல குச்சி முறிச்சி போடற நெனப்போட ஆராச்சும் இந்தவூட்ல அடியெடுத்து வெச்சா மானங்கெட்டுப் போயிரு”மின்னு.<br />அப்புறம் ஆறு மாசம் ஒரு வருசம் நோம்பியாவுது நொடியாவுது ஒருத்தியும் எந்த விசேசத்துக்கும் எங்கூட்டுப்பக்கம் தல வச்சிப் படுக்கல. ஊரான ஊருக்கு மணிக்கி ஒம்போது வண்டி, பத்து வண்டி வந்து போனாலும் பாழாப் போன சந்தக் கூட்டத்துல சனம் பஸ்சுக்குள்ற ஏற முடியிதா? நல்ல நாளுலியே நெலத்துல கால ஊனி நடக்கமாண்டா, ஒடற பஸ்சிலியா இவ ஒவஞ்சி நிக்கப்போறா.<br />மிந்தி ஓராடம் மாமனாருக்கு வருசாந்தரங்கும்பட நானும் அவளும் எங்க குட்டிப்பிள்ளயும் மேட்டூருக்குப் போனம். பதனாறு கமானத்தாண்டி சேலம் கேம்ப்பு திலுப்பத்தல கிட்டு பஸ்சு டைவரு போட்டாம்பாரு பிரேக்கு! ரெண்டாளுச் சீட்டியிலக் குந்தியிருந்தவ பிள்ளயோடப் போயி படிக்கட்டுல வுழுந்தா. கண்ண மூடி கண்ண தொறக்கறதுக்குள்ள ரெண்டு உசுருங் காணாமப் போயிக்கும். நானோடி பிள்ளயத்தூக்கனதும் வுட்டன் இவுளுக்கொரு அப்பட்ட பொம்பளைக்கி அத்தன அசால்ட்டு மயிரு! புடிமானங் குடுத்து ஒக்காரத் தெரியாதா? உருசுப் போனாலும் போயிட்டுப்போவுது, ஒரு நாள்ல அழுது தொலச்சிப்புடலாம். காலு, கையி ஒடஞ்சி கட்லோடக் கெடந்தா பீயி, மூத்ரம் அள்ளி... அந்தச் சீரெழவ ஆரு கண்ல பாக்கறது?<br />நாலு பஸ்சு, அஞ்சி பஸ்ச வுட்டுட்டு அதுப் பொறவு ஒரு பஸ்சுல ஏறனம். எங்க பொடுசலையும் அவளையும், அவிக ஆயா¬யும் ஒருத்தாவுல குந்த வெச்சிட்டு நானுப்போயி தனியா ஓரெடம்பாத்து ஒக்காந்திக்கிட்டன். மடியில ங்கெண்ணங்காரங் கேம்பரா மூணன்னங் கெடந்தது. இந்தப்பிள்ள சில்லி வண்டு பண்ற ராவுடியில அதெயெங்கியாச்சும் உளுக்காட்டியுட்டுட்டா? ஒரு உருவா? ரெண்டு உருவாயா?<br />ஒவ்வொண்ணும் பத்தாயிரம், பாஞ்சாயிரம்! நேரங்கண்டு வவுத்துக்கு சோறு குடிக்காம, முடிச்சுப்போட்டு முடிச்சிப்போட்டு சேத்தி வெச்சி வாங்கனப்பண்டம். அத்தன வெலப் போட்டு வாங்கியொண்ணும் வீணாப்போவல. முட்டுவலிக்கி தவுந்த வருமானம். போன பக்கம் வந்த பக்கம், ஒரு கண்ணாலங் காரியம், சீருசெனத்தி, வூடு சம்ரட்ன எவுத்த திலம்புனாலும் சீத்தாராமம் போட்டாத்தான்.<br />அதோட நின்னிருந்தா இந்த அவகேடு வந்துருக்காது பாழாப்போன சீனிமா ஆச மவன பழி எடுத்துப்புடிச்சி. ஆறேழு வருசமா, அப்பனாயா, பெத்து பொறப்பு பொண்டாட்டி பிள்ளைங்கன்னு ஆரோடயும் ஒட்டு ஒறவு இல்லாம சேலத்துக்குப் போறது, மெட்ராசிக்கி போறது.. ஆரு ஆரையோ சினேகிதம் பண்டி பட முந்தா புடிச்சான். அதல ஒரு பத்தும் நூறும் சம்பாரிச்சான். படிப்படியா மின்னுக்கு வந்தான். மெட்ராசி பசாருல ஒரு வூடு வாங்கனான், ஆளு அம்பு சேந்தது. ஆருக்கண்ணு பட்டுச்சோ! எவுரு கண்ணுபட்டுச்சோ! இல்ல அந்த ஆண்டவனுக்கே பொறுக்கலையோ! ஆத்தூருக்கு அக்கட்ட பெரம்பலூரிண்ட சிமிட்டி ராரி அடிச்சி, துள்ள துள்ள போயிச்சேந்துட்டான். முப்பத்தியேழு வயசி ஒரு வயசா? பாழுஞ் சீவம் போவயில எப்பிடித் துடிச்சதோ! மவராசன் என்னான்னா நெனச்சானோ! தாயோலி ஊருக்கு வந்தா ஒரு நிமிசம் வூட்ல நிப்பானா? கூட்டாளிங்க கூட்டாளிங்க... அவிக கொலாயிப் பொறனச் சுத்துவானே ஒழிய அப்பனாத்தா, பொறந்தவ மாரு ஆரும் அவங்கண்ணுக்கு தெரியாது. ஒக்காந்து அவிங்களோட ஒரு வார்த்தப் பேச மாட்டான். வீதி வாசக்கால்ல நின்னு ங்கெம்மாக்காரி<br />“கண்ணு வந்து ஒருவாச் சோறு குடிச்சிபுட்டு போடா”ன்னு வேண்டாத நாளு இல்ல. நிக்க நேரமில்ல, நிக்க நேரமில்லன்னுப் பொட்டியத் துக்கிக்கிட்டு ஒடுவாஞ் சண்டாளன்.<br />செத்தவன வாரிக்கொண்டாந்து நடு வூட்லப் போட்டு எடுக்கல நிக்க நேரமில்ல நிக்க நேரமில்லன்னு எரிக்க கொண்டுப் போயிட்டாங்க.<br />தோளுமேலேயேத் தூக்கிக்கிட்டு திரிஞ்சானே அவம்பிள்ள! பாவம், அது அப்பங்காரன் மொவத்தவக் கூட பாக்கல தூங்கி முழிக்கறதுக்குள்ளே கட்ட வெந்துபோச்சி. இருக்கறமுட்டும் வாங்கித் தின்ன நாயிங்க இன்னைக்கி எங்கிட்ட லட்சம் வாங்கனான், கோடி வாங்கனான்னு கழுத்துக்கு துண்டு போடறாங்க. நம்ப பொழப்பே நாறிக்கிட்டு கெடக்குது. இதுல எங்கப்போயி கடந்தீக்கறது? சீட்டுக்காரம் பொண்டாட்டி பணம் வல்லையின்னா மருந்தக் குடிக்கறன், மாயத்தக் குடிக்கறன்னு நேத்து ராத்திரி ஒரே ஆர்ப்பாட்டம். நாயக்காரனங்க வந்து எதோ கொஞ்சங் கொஞ்சமா அவஞ்சொத்த வித்தாச்சும் கடங்கட்டுன்னு நாயஞ்சொல்லிப்புட்டு போயிட்டாங்க. எத விக்கிறது? அரநாக்கவுறு மொதக் கொண்டு அடமானமுன்னு அங்கபோயி பாத்தப்பறந்தாஞ் தெரிஞ்சது. என்னாப் பண்டுவ? எதக்கண்டு கடங்கட்டுவ? உள்ளது இந்த கேம்பரா. ரெண்டு மூணு டிவிப்பொட்டி. அதப்பத்தி நாம்பென்னதக் கண்டம்? தலமேல தூக்கி விக்காத கொறயா சுத்தாத எடமில்ல. அடிமாட்டு வெலைக்கி கேக்கறாங்க மனசொம்பல, பூராம்அவன் ரத்தமாச்சே...<br />புது பைட்டேண்டுல எறங்கி அவிங்கள ஆசுபத்திரிக்கி மொள்ள நவுத்திக்கிட்டு வர்றதுக்குள்ள கண்ணாமுழி பிதுங்கிப் போச்சி. சொந்த ஆசுபத்திரின்னு தாம் பேரு! ஊருப்பட்ட நோவுக்காரனெல்லாம் ஒட்டா வந்து குமியராங்கடாச் சாமி! அதத கெவுணிக்க தனித்தனி ஆளு.<br />இவளக்கொண்டி ஒரு பொம்பள டாக்டரிண்ட காட்னா,அவ ரத்தமும், மூதரமும் சோதிச்சக்கிட்டு வரச்சொல்லி சீட்டு எழுதிக் குடுத்துட்டா. அதும்பொறவு கேணு வேற எடுத்துப் பாக்கணுமாம்.<br />என்னாக் கல்லெடுப்பா! ஒவ்வொண்ணுக்கும் சாரியில நின்னு, நின்னு, காலே மரத்துப் போச்சி. எல்லாம் முடிஞ்சி கேணுப் போட்டு பாத்தா, படம் நல்லா வுழுவலியாம், வவுறு நம்ப தண்ணிக் குடிச்சப்பொறவு திலிப்பியொருக்க எடுக்கச் சொல்லிப்புட்டா அந்தப் பொம்பள. மறுக்கா படம் எடுக்கறவனப் போயி பாத்தா,<br />“என்னம்மா உங்களோட ஒரே ரச்ச போயிட்டு பொறைக்கி வாங்க”ன்னுப்புட்டான். அவனச்சொல்லியும் புண்ணியமில்ல. அவஞ் சூத்துப்பொறன அஞ்சாறு ரைனு.<br />சரிசரின்னு இவுளுக்கும் அவிகம்மாளுக்கும், பிள்ளைக்கும் அவுத்தியே ஆளுக்கொரு சோத்துப் பொட்டணமும், அதோட துளித் துளி மழக்காயிதத்துல சர்பத் வித்தாங்க அதயும் ரெண்டு வாங்க கையில துருத்தி,<br />சோத்தத் தின்னுப்புட்டு நெவுல்ல குந்தியிருங்க. நாம்போயி இந்த கேம்பரா எங்கியாச்சும் வெளையாவுமான்னு பாத்துட்டு வரன்னு சொல்லிப்புட்டு நானு சோட்டானுக்குப் போனு போட்டான். மேட்டூருல அய்ட்டி படிக்கக்குள்ள சேலங் கேம்ப்லயிருந்து எங்கூட ஒரு மலையாளத்தானும் படிச்சான். செரியான நெனப்புக்காரன். எதயும் அவங்கண்ணுப் பாத்திச்சின்னா கையி செய்யும். ஐயோன்னு போனா ஆருக்கும் ஒரு ஒதாரண நெனைக்கிறவன். அவந்தான் இவத்த சேலம் நாலுரோட்டுண்ட போட் டாக்கட, லேடியாக்கட, டேப்புக்கட வெச்சிருந்தான்.<br />எதனாலும் இந்தச் சாமானத்தப் பாத்து வித்தக்குடுறான்னு மிந்தியே ஒருநாக் கேட்டிருந்தன். அவனும் சேலம் வந்தா வாடான்னு சொல்லியிருந்தான். இவிக தின்னு கை கழுவறதுக்குள்ள பையன் பரோர்னு வண்டிப்போட்டுக்கிட்டு வந்துட்டான்.<br />பத்ரம் பத்ரமுன்னு<br />எங்கூட்டுக்காரியிண்டச் சொல்லிப்புட்டு, மாமியார்க்காரி என்னா ஏதுன்னு கேக்குமின்ன வண்டியேறிக் குந்திக்கிட்டான். வண்டியோட்ட எங்கப்படிச்சானோ ரோட்ட வழுக்கிக்கிட்டு சல்லுனு போவுது சக்கரம். அவங்கடைக்கிப் போயி சேர்றதுக்குள்ள பையனுக்கு அஞ்சாறு போனு வந்துட்டது. வண்டிக்கி எண்ணப் புடிக்கலாமுன்னு ஒரு பங்குல நிறுத்தனாம்பாரு அவுத்திக்காலியும் போனு கினிகினியிங்க<br />“பொட்டாப் பொழுதுக்கும் அடிச்சே இருக்குதே! அத எடுத்து பேசித் தெலையிடாச் சித்த“”ன்னு நானுச் சத்தம்போட, அவம் பேசிப்புட்டு வைக்குமிந்தி மொவற சுண்டிப்போச்சி.<br />“என்றா சமாச்சாரம் ஆர்ரா மாப்ள போனுல?” நாங் கேக்க<br />“நம்ப மணியவிங்க அம்மாதாண்டா பேசினிச்சு. நாமக்கல்லு மோகனூருல போன வாரந்தாண்டா அவனுக்கு பொண்ணு பாத்து உறுதி செஞ்சம். அந்தப்பிள்ளய வேண்டான்னுப்புட்டு, அதாரோ இன்னொருப்பிள்ளய கூட்டியாந்து வூட்ல வெச்சிக்கிட்டு அவளத்தாங் கண்ணாலஞ் செஞ்சிக்கவன்னு அடம் புடிச்சி ஆட்டங்கட்றானாம். அவிங்க சித்தப்பமூட்ல பஞ்சாயத்தாம். கையோட வர்றச் சொல்றாங்க. வர்றியா ஓரெட்டு போனதும் வந்தரலாம்”மின்னான்.<br />நானுங் சேரியிங்க வண்டித்திலுப்பி அன்னதானப்பட்டிக்கி வுட்டான். எங்களோட மணி, மணியின்னு இன்னோருப் பையனும் படிச்சான். மலையாளத்தாங்கூட அவனும் இரும்பாலைக்கி போயிக்கிட்டிருந்தான் வேலைக்கி. அவங்கூட்டு நல்லது கெட்டதுன்னா மலையாளத்தாந்தான் மொகாம எதயும் மின்ன இருந்துச் சேய்யிவான்.<br />அட அப்பா! அங்கப்போயிப் பாத்தா, அது வூடா சந்தக்கடையான்னே தெரியல. மணிப்பையனோட அப்பன் ஒருபக்கங் கத்தறான், அவிங்கம்மா ஒரு பக்கம் அழுவுறா, அவம்பொறந்தவன் ஒரு பக்கங் கத்தறான் அவஞ் சித்தப்பனும், சித்தியும் ஒரு பக்கம் பேசறாங்க, இவனொருபக்கம் நாம்போயி சாவறங்கறான். அவங்கூட்டியாந்தானே இஷ்டக்காரி அந்தப்பிள்ள ஒரு பக்கம் நாம்போயி கரண்டுல கைய வெக்கிறங்குது.<br />நாயங்கண்டு பேச முடியல. ஒண்ணுக்கு ஒண்ணு ஆரும் வுட்டுக் குடுக்கறாப்பல இல்ல. எரியறதத் தணிச்சா கொதிக்கறது அடங்குமின்னு அந்தப் பிள்ளய கூட்டிப்போயி சேட்டந் தனியாப் பேச்சிக் குடுத்தான். அதுவும் நாயம் மேல நாயம் போட்டதாட்மிருக்குது. ஒண்ணும் வேலைக்காவல வந்ததும்<br />“ஏண்டா ஒரு பொட்டப்புள்ள பாவத்த கையேந்தற”ன்னு மணிப்பையஞ் செவுனியக்கட்டி வுட்டாம் பொலிச்சின்னு ஒரு அர<br />“வராத நாய ஏங்கவுறு போட்டு இழுக்கணும்? வாண்டான்னா இவன வுட்ருங்க. பிரியமில்லாம அந்தப்பிள்ளய இவனுக்கு நாம்ப கட்டி வெச்சா மறுக்க திருட்டு நாயி எங்கியாச்சும் ஓட்டம் புடிச்சி வுட்டுட்டான்னா அந்தப்பிள்ள பொழப்பு பாழாப் போயிரும். நிச்சியத்தோட கண்ணாலத்த நிறுத்திப்புடுங்க. இந்தாம்மா பொண்ணு! பெரியவிங்க கோவந் தாழட்டும். அப்பறம் ஒரு நல்ல நாளாப்பாத்து கண்ணாலங் கார்த்திய வெச்சிக்கலாம் நீப்போயி தாயோடப் புள்ளயாச் சேரு. கொஞ்சம் வுட்டுப்புடி ஆயா மவராசி!” ன்னு ஆளாளுக்கு பித்தி சொல்லிப்புட்டு மணிப்பையனக் கொண்டி அந்தப்பிள்ளய பஸ்சு வெச்சுட்டுட்டு வரச்சொன்னம். போனவம் போனவனே! வவு நேரமாவியும் பையன் வரவேயில்ல.பையனும் பிள்ளயும் எங்கியாச்சும் எஸ்சு ஆயிட்டாங்களா என்னமோன்னு திலுப்பி அவனத் தேடிகிட்டு ரெண்டுபேரும் பைட்டேண்டுக்கு வந்தா டாப்பிங்குக்கு மின்ன ஒருக்கட்யா மரத்தடிய ரெண்டுங்களும் அழுத கண்ணும் சிந்துன மூக்குமா நிக்குதுங்க. ஆனமுட்டும் அவிங்களக்கு தேறுதலச் சொல்லி புள்ளய பஸ்சு ஏத்தி வுட வந்தமா, ஏப்பா அந்நேரம் ஒரு போலிசு வேனு எங்களத் தாண்டிப்புட்டு மேக்க புர்ர்ருன்னு பறந்து போனது, போன வெசயில திலும்பி கெழக்க வருதே! வண்டியில குந்தியிருந்த சர்க்கிளும் ஏட்டும் என்னா ஏதுன்னு நெதானிக்கிறதுக்கில்லாம, ஏறுங்கடா வண்டியில, ஏறுங்கடா வண்டியிலன்னு குண்டாந்தடியில முட்டி முட்டியா குடுக்கறாங்களே பெட்டு!<br />ஆன்னு வாயத்தொறக்க வுடல மவராசனுங்க. வண்டி நூறுல டேசனுக்குப் பறக்குது. அட வெட்டுப்பழி குத்துப்பழியின்னாக்கூட இத்தன கெடுபுடி இருக்காதேர எனத்துக்குடா இவுனுங்க மல்லுக்கூட்டி நாலுப்பேத்தயும் டேசனுக்கு கொண்டு போறாங்கன்னு ஒண்ணும் பிருவே சிக்கல.<br />அட அங்கப்போயி எறங்கனமா... வாரவம் போறவனெல்லாம் தாட்டுப்பூட்டுன்னு குதிக்கறான். ஐயா வரட்டும் ஒரு கேசு எழுதறங்கறான். அந்தப்பிள்ளய ஒருத்தரு மாத்தி ஒருத்தரு மொறச்ச் பாக்கறதும், மணிப்பையனுக்கு ஒரு ஈடு வைக்கிறதும், காரித்துப்பாத கொறயா எங்களப் பேசறுதுமாவே இருக்கறாங்க.<br />அவிங்கக்கிட்ட வாயத்தொறந்து பேச முடியல எதச்சொன்னாலும் அந்த கொலகாரப் பாவிங்க நம்பல. அடவொரு போலிச்சிக்காரன் வந்ததும் அந்தப்பிள்ளய “ஏண்டிப் பொம்பள உனக்கு எவ்ள ஏத்தமிருந்தா பொச்சிக்கடியில டேசன வெச்சிக்கிட்டு, நட்ட நடு பசாருல ரேட்டு பேசுவ? உனக்கெல்லாங் கொலுவ காய வச்சி சொறுவனாத்தாண்டி அடங்குவ”ன்னாம் பாத்துக்க அப்பத்தான் எனக்கு.<br />ஓஹோ இந்த மாமாப்பசங்க ஆளு நெலவரந் தெரியாம அத்தாந்தாரமா நம்ப நாலுப்பேத்த பிராத்தலு கேசுன்னு புடிச்சாந்துட்டாங்கடான்னு, ரெவலா நெப்புப்பட்டது. அட ஆண்டவனே சென்றாயா நாம்ப நெனச்சி வந்தது என்னா? இங்க நடக்கற காரியம் என்னா?ஆசுபத்திரியில பொண்டாட்டிக்காரிய தன்னப்பாலவுட்டுட்டு நம்பளுக்கு எனத்துக்கு இந்த வேல? அவக்காதுக்கு இதுபோனா என்னா நெனைப்பா? அட அவிங்கம்மாக்காரிதான் என்னாச் சொல்லுவா? நெனைக்க நெனைக்க எனக்குன்னா அப்பிடியே நெரிஞ்சி முள்ளு மேல நிக்கற மாதிரி இருக்குது.<br />என்னு ஆயுசுக்கும் நானு ரெண்டே ரெண்டு தக்கந்ததான் டேசனு படி ஏறியிருக்கறன்.<br />எங்கவூடு, குண்டியாமூடு, கங்காணியூடு மூணு வூடும் ஒட்டுச்செவுரு. அந்தக்காலத்துல ஒரூட்டுப் பங்காளிங்க அண்ணந்தம்பி மூணு பேரும் சேந்து ஒட்டா வூடு கட்டியிருந்துருக்கறாங்க. இதுல கங்காணியூடு மட்லுந்தான் ஆதிரியிலிருந்து குடியிருக்கறவங்க. நாங்களுங் குண்டியானும் அவரவுரு வெலக்குடுத்து வாங்கனது.<br />வூட்ட வெல பேசயில அதும்பேர்ல எதனாச்சும் வில்லங்கம் இருக்குதான்னு அவனுங் கண்டுக்கல, நாங்களுங் கண்டுக்கல. இருந்திருந்தாப்பிடி ஒருநாளு வந்து என்னூட்டு முட்டும் அத்துப் பிரிச்சி கூரையடி ரெண்டு அடி நெலம் உடுன்னா நடுவூட்ட இடிச்சிப்புட்டு நாங்க என்னாப் பண்றது?<br />இந்தக குண்டியான்ன...<br />சலதாரய அடைக்கிறான். தட வழியில விவசாய முள்ள வெட்டிப் போடாறான். ஆம்பளைங்க வூட்ல இல்லையின்னா பொம்பளைங்கள ஆயா, அம்மான்னு பேசறான். என்றாப் பண்றது? என்னிக்கி இருந்தாலுந் தலவலி தலவலிதாண்டா புள்ள இல்லாதவங்கிட்ட எனத்துக்குடா ஓரியாட்டம் தொலைஞ்சி போவுட்டும்! அவனுக்கு ரெண்டடி நெலம் வுட்டுத்தொலையிங்கடான்னு ங்கண்ணங்காரஞ் சொன்னதும் ச்சேரின்னு நாங்களும் ஒத்துக்கிட்டம். அந்த எட்டுல என்ற தங்கச் சிக்கி வேற கங்கணப்பொருத்தம் கூடிக்கிச்சி. சேரி கண்ணாலம் முடிஞ்சப்பொறவு வூட்ட இடிக்கலாமின்னு குண்டியாங்கிட்ட வாய்தா கேட்டம். அவனுஞ் செரியின்னுதாஞ் சொன்னான். அட ஆரு அவனுக்குச் சொல்லிக் குடுத்தாங்களோ, என்னாச் சமாச்சாரமோ ஏப்பா மாப்ள திடீருனு குறுக்கத் திலும்பிக்கிட்டாம்பா.ஒரு நாளு எங்க தாயி தண்ணி வாத்துக்கிட்டு இருக்க, குண்டியாங் குடிச் சிப்புட்டு வந்து போதையில ஏப்பா நல்லா இத்தாச்சோட்டு கருங்கல்ல பொடக்காலியில்ல தூக்கி போடறதா? எம் பொறந்தவ வீறுவீறுன்னு கத்தி பப்பார, அடுப்படியிலிருந்த எங்கூட்டுக்காரி ஓடி,<br />“ஏண்டா குடிகாரா, இப்டி கல்லெடுத்து எய்யற? படாத எடத்துல பட்ருந்தா வயசிப்பிள்ள கதி எனத்துக்காவறது? எதுக்குடா அக்குறும்புல அழியற”ன்னு கேட்டதுதாம் மாயம்...<br />ஏப்பா ஆசாரியூட்டு கரக்கட்டுல இருந்து கருங்கல்லு ச்சும்மா விர் விர்ருன்னு பறக்குதாம்.<br />பொம்பளைங்க விரும்புத்தி புடிச்சாப்ல நின்ன வாக்குல நிக்க, ஒருக்கல்லு எங்கம்மா பாதத்துல வுழுந்து நச்சிப்புடிச்சி. ராவு டூட்டிக்குப் போயிட்டு வந்து தூங்கிட்டிருந்தவன் என்றா ரவுசாவுதேன்னு அதற பதற எந்திரிச்சோடிப்பாத்தாங் கெம்மா காலடியில நத்தமா போவுது. எங்கயிருந்து வந்ததோ அத்தன வெறி, போன வெசயில குண்டியான கீழத்தள்ளி மிதி மிதின்னு மிதிச்சம்ப்பா.<br />அவ்வளவுதாங் குண்டியான் ஓடனதும் அவம் பங்காளி பொன்னுச்சாமி வாத்தியாரு மவன் செலுவராசயும், குட்டப்படி ரத்தனம் பிருசங்கிட்டுப்பைனையுங் கூட்டிக்கிட்டுப் போயி நங்கோலி டேசன்ல கேசு குடுத்துட்டான். அதோட வுட்டாங்களா? ஊடுநம்ப கல்லெடுத்து இட்டவன ஒருத்தேவிடியாப் பையனும் ஏஅ என்னான்னு கேக்கல.<br />ஒண்டி குடியா ஊரவுட்டுப் ஊரு பஞ்சம் பொழைக்க வந்தவிங்க எப்டிறா எங்க ஆள கை தீண்டலாமின்னு நாயம் வேற வெச்சிட்டாங்க. ஒன்ற மாசமா டேசனுக்கு இழுக்கடிச்சி உருவா மூவாயிரத்த வாங்கித் தின்னு வழிச்சி நக்கனப் பொறவு பிரச்சன முடிஞ்சது.<br />ரெண்டாவது தக்கம், எம்பொறந்தவ கண்ணாலத்துக்கு பதனஞ்சி நாளுக்கு மின்ன நங்கோலி கோவாலு வாத்தியாரூட்டு அச்சாபீஸ்ல பத்திரிக்க அடிக்கக் குடுத்துருந்தம். ஒருநாபொழுது முச்சூடும் குந்த வெச்சிட்டிருந்துட்டு அந்தியோடத்தான் அடிச்சிக் குடுத்தாங்க. அத வாங்கி வலப்பையில வெச்சிகிட்டு சந்தப்பேட்ட திலுப்பத்துல நானு பஸ்சுக்கு நின்னுக்கிட்டிருந்தன். அன்னிக்கிங்கறப்பெட்டுக்கு கரட்டிப்பட்டிக்காரன் எவனோவொரு நாதேரி கொள்ளிச்சட்டி கச்சிக்காரனாம். சேலம் சீலநாக்கம்பட்டி பைபாஸ்ல லாரி மோதி செத்துப்போயிட்டானாம். போனவன் அவம்பொச்சி மண்ணோடப் போயிட்டான். இங்க ஊரேப் பூராந்தெரண்டு பைட்டேண்டு முக்குல அவம்போட்டா படத்த வெச்சி பூசப்பண்டிக்கிட்டு போற வார காரு வண்டிங்கள நிறுத்தி, பிட்டு நோட்டீசு ஒட்டிக்கிட்டு ஒரே அமர்க்களம், அட்டகாச்ம், அக்கப்போர எடுக்க முடியல.<br />ஒரு ஆறுமணி சுமாருக்கு அவத்திக்கி சலண்டபுரம் நரசிம்மன் டாக்கிட்ரு மேட்டூரு போவ வந்தாரே இல்ல, மேச்சேரி போவ வந்தாரோ தெரில. காரு போட்டுக்கிட்டு வந்துக்கிட்டிருந்தாரு.<br />எங்க தம்பி லோகனுக்கு கூத ஆப்பரேசன் அவரிண்டதாஞ் செஞ்சம். போவ வர பழக்கம். நல்ல மனுசன். இல்லாதவங்களக் கண்டா எளவுற பித்தி. இந்தக கொலவாரிங்க கையக்காட்டி ப்ளசர நிறுத்தம்பிடி அவரு கட கன்னியத்தாட்டி அந்தால்ல பத்தடி தள்ளிப்போயி நிறுத்தனாரு.<br />அதுதாம்ப்பா காரணம் வேற ஒண்ணுமில்ல. பிளுபிளுன்னு பத்து பதினஞ்சி டிக்கிட்டுங்க ஓடி உள்றயிருந்த மனுசன வெளிய இழுத்துப் போட்டுக் குப்பு குப்புன்னு குப்பறாங்கப்பா. பக்கத்துல இருந்த போலிசுக்காரனுங்க அவிங்கள வேண்டான்னுந் தடுக்கல வெலக்கியும் வுடல. நின்னுக்கிட்டு மனசார அநியாயத்த வேடிக்கப்பாக்கறானுங்களே, நானு ஓடிப்போயி.<br />அடேய், சாமி சாமியா இருப்பீங்களாம். அவரு கெவுருமெண்டு டாக்கிட்ருடா, வுட்ருங்கடா, வுட்ருங்கடான்னு தொண்டத்தண்ணி வத்த முட்டுங் கத்றன். என்னயத் தூக்கி கொடிக்கம்பத்தடிய போட்டுட்டானுங்க. நரசிம்மனும் சாதாரண ஆளு இல்ல. நல்லக்கண்ணு ஒருக்கோடியா ராமதாசி மவன் அம்புமணி முட்டும் போனு போட்டு பேசறாரு.அங்கப்பேசி இங்கப்பேசி எங்கியெங்கியோப் பேசி கடைசியில எஸ்.பி.முத்துமாணிக்கத்துக்கு போனுப்போயி, அவரு அங்கயிருந்த போலிசிகாரனக் கூப்புட்டு என்னய்யா கலாட்டுன்னு கேட்டா,அடிமேல அடிவாங்கி ஒதடு பிஞ்சி நத்தம் ஒவமலக்கல்லாட்டம் ஒரு மனுசன் நின்னுக்கிட்டு இருக்க, ஒண்ணும்மே நடக்கலங்கறானே அந்த சண்டாளன். அயோக்கியப் பசங்கள சாமானியத்துல வுடக்கூடாதுன்னு போயி டேசன்ல பேசு எழுதிக் கொடுத்துட்டு வந்தம் மனுசனுக்கு பல்லு போயி பவுடுஒடஞ்சி கடவாயி கிழிஞ்சதுதாம் மிச்சம்.<br />மத்தியானம் மணி ஒண்ணுக்குப் போனவிங்க நின்னு சலிச்சிருக்க, ஊரு பாராவுக்கு போயிருந்த இனிசுபெட்டரும் இன்னும் நாலஞ்சி போலிசிக்காரனங்களும் இருட்டுக்கட்ட வந்தாங்க. அதுல ஒரு போலிசிக்காரன் மணிப்பையனுக்கு தெரிஞ்சவனாம்.<br />உள்ளத ஒண்ணுவுடாம அவங்கிட்டச் சொன்னம். அவம்போயி இனிசுபெட்டருக்கிட்ட என்னாப்பேசனானோ, மணியவிக அம்மாளையும், அப்பனையும், சித்தப்பங்காரனையும் வரச் சொல்லி, இதுதாஞ் சங்கதின்னு எழுதிக்குடுத்தப் பொறவு, மணியோட இஷ்ட்டக்காரிய ஓராளு அவங்க ஊர்ல வுட்டுட்டு அந்தூரு போலிசு டேசன்ல ஒப்பம் வாங்கியாரச் சொன்னாங்க. இந்த மட்டுஞ் சொன்னதே போதுண்டாஞ் சாமின்னு மணிப்பையன் அவிங்கம்மாளையும் அப்பனையும் அந்தப்பிள்ளயோட கருநாடகாவுக்கு போவ தாட்டிவுட்டுட்டு நானும், சேட்டனும், மணியும் பழைய பைட்டேண்டு வந்தம். எனக்குன்னா ஆத்ரம் அடங்கல.<br />“ஏங்க என்னாதாங் கெவுருமெண்டு உத்தியோகமின்னாலும் போலிசிக்காரனுங்களுக்கு இத்தன அகராதி ஆவாதுங்க. எதனாச்சும் மக்க மனசருன்னு ஒரு மரியாதி வெச்சி பாக்கறானுங்களா? ஒரு நாயம் நெகாருன்னு தீர்மானமா தெரிஞ்சி பேசறானுங்களா? ஒண்ணுமில்லாத பழமைக்கே இப்டி பங்கம் பண்டிப்புட்டாங்களே. பொறவு போலிசிக்காரன சனம் சாபிக்குதுன்னா ஏஞ்சாபிக்காது”ன்னு நானுப்பேச, அந்தப் போலிசி.<br />“நூத்துல ஒரு வார்த்தைங்க நீங்க சொல்றது. ஆனா மணிக்கேசுல நானாயிருந்தாலும் அப்பிடித்தாஞ் செஞ்சிருப்பன்”ங்கறான்.“என்னாங்க கேசு கேசுன்னு சும்மா மெரட்டறீங்க? எதுக்கு கேசு போடறதுன்னு வேண்டாம். கூட நாங்கயிருக்க அவனொரு தப்பு தண்டாவும் பண்டலீங்களே”ன்னு நானு வசூலுக்கு பேச.<br />“இப்ப பண்டலீங்க, போன மாசம் எட்டாந் தேதி ஏற்காட்டு ஓட்டல்ல வெச்சி இவனையும் அந்த பிள்ளயையும் பலான கேசுல புடிச்சாங்க. தந்தி பேப்பர்ல எல்லாம் போட்டு நாறிச்சே நீங்க பாக்கலீங்களா? மறுபிடி இங்க வந்து அந்த வேலய ஆரம்பிச்சிட்டாங்களோ என்னமோன்னு சந்தேவப்பட்டுத்தான் உங்களையுஞ்சேத்தி புடிச்சாந்துட்டாங்களாட்டமிருக்குது”ன்னு அவஞ் சொல்ல<br />எனக்குன்னா குப்புன்னு மேலெல்லாம் வேர்த்துப்போச்சி. ஒட்டிக்கிட்டிருந்த வண்டிய நிப்பாட்டி சேட்டன். “எறங்குடா ங்கோயா”ன்னு மணிப்பையங் காதக்கட்டி அப்பனாம் பாரு ஒரு அப்பு ஏழு சென்மத்துக்கும் இன்னும் நாலு ஈடு வெச்சான். பின்ன என்னாப் பின்ன? இத்தன கோளாறும் இவனக்கொண்டு நடந்துருக்குது.<br />நாம்ப பண்ணாத குத்தம் பண்டானாப்ல அஞ்சு உருசும் பதற பதற டேசன்ல நிக்க, ஒரே வொரு வார்த்தச் சொல்லாம புடிக்காம இவனும் ஒண்ணுந்தெரியாத சின்னக் கண்ணனாட்டம் குட்டு வுடாம நமப்ளோடயே நின்னுக்கிட்டு இருந்துப்புட்டானே படவா! இவன் ஆரு தலய திங்க மாட்டான்?<br />நடு ரோட்ல அவன வுட்டடிச்சிப்புட்டு நானும் மலையாளத்தானும் ராவு ஆசுபத்திரிக்கி வந்தம். கண்டதும் என்னய கட்டிப்புடிச்சிக்கிட்டு எங்கூட்டுக்காரி, சீத்துப்பூத்துன்னு அழுதா வவுறு எறங்கிப்போச்சாம், பாவம் ம்... நானு கோவணம் அவுத்த நேரஞ் செரியில்ல.<br /></strong></span></div>manalveeduhttp://www.blogger.com/profile/11701810894595985945noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-891272482416127046.post-10539741952910021212011-06-24T09:59:00.000-07:002011-06-24T10:05:53.048-07:00செல்வம் - முகவீணைக் கலைஞர்<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjBBB-mPnCFrEkmVsXGKctO-0MLHberYkuvV7F1TAxF0D0o-9HvZYQcKHSqeL-xryHozlmXkyDwEqe85TZeYXsjCEKLBfpSnt9uMzXLcC566iEEI3PdeGZ58RZ54jt7L5oSHLWoEXX8gJSc/s1600/kandar.selvam.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5621833461361847026" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 240px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjBBB-mPnCFrEkmVsXGKctO-0MLHberYkuvV7F1TAxF0D0o-9HvZYQcKHSqeL-xryHozlmXkyDwEqe85TZeYXsjCEKLBfpSnt9uMzXLcC566iEEI3PdeGZ58RZ54jt7L5oSHLWoEXX8gJSc/s320/kandar.selvam.jpg" border="0" /></a><br /><strong><span style="color:#993399;">ரெட்டிப்பாளையம் குப்பன் அவர்களையடுத்து வந்த தலைமுறையில் முதல்தரமான முகவீணைக் கலைஞர். நாபியில் பிறந்து கண்டத்தில் இழைந்து குழல் வழி வழிந்தோடும் நாதம் கேட்பவரை மனம் பேதலிக்க வைக்கும். அகவலிடுவது, அணுக்கள் கொடுப்பது, சரளி வரிசை என்று தேர்ந்த தெளிந்த இசைஞானம் இவருக்கென்றாலும், இழைத்து, இழைத்து நயமாக்கி அவர் வாசிக்கும் குழல் சோகத்தை, மந்தகாசத்தை, அதிகாரத்தை, ஆணவத்தை, அது எந்த உணர்ச்சி வெளிப்பாடாகயிருப்பினும் பிறழ்வு இன்றி பரிபூரணமாக நம்மை உணரவைக்கும் வித்தைகளையடக்கியது. உயிர் மூச்சை முதலாக்கி செய்யும் இந்த பிறப்புத் தொழிலுக்கு ஒவ்வொரு இரவும் ஒவ்வொரு பிரசவம். பிராணசங்கடமேற்று, மக்களை மகிழ்விக்கும் இசையை உற்பவனம் செய்யும் இவர்கள் கலைச் சேவை வெறும் புகழுரைக்கானது மட்டுமன்று!.<br /></span></strong>manalveeduhttp://www.blogger.com/profile/11701810894595985945noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-891272482416127046.post-6664251097515931772011-06-16T08:08:00.000-07:002011-06-16T08:23:51.261-07:00மட்டம்பட்டி பழனி<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiZfCNFRKc0ksaAyCIEf99KRKdYGfBE4PKKGGIDT9RkIOzDlt6Jy23hmEMxent4d8AufOQcVxIKIM62kQZArd3aQ691HQ0UhyphenhyphenY7tbrIJRZqcxAex-IHCftr7Bld2gMyf9detTi5Ljn3Uqf1/s1600/mattamppatti+palani.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5618835497889992962" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiZfCNFRKc0ksaAyCIEf99KRKdYGfBE4PKKGGIDT9RkIOzDlt6Jy23hmEMxent4d8AufOQcVxIKIM62kQZArd3aQ691HQ0UhyphenhyphenY7tbrIJRZqcxAex-IHCftr7Bld2gMyf9detTi5Ljn3Uqf1/s320/mattamppatti+palani.JPG" border="0" /></a><br /><br /><div><span style="color:#cc0000;"></span></div><br /><br /><br /><div><span style="color:#cc0000;"></span></div><br /><br /><div><span style="color:#cc0000;">அப்பனும் பாட்டனும் பண்ணையடிமைகள். ஆசை மகனுக்கோ கூத்தின் பேரில் மிகுதியான ஆவல். பகலில் ஆடு மாடு மேய்ப்பது, இரவல் பட்டி காவலுக்கு போவது என்று நடையொழியாத அல்லல் நிறைந்த வாழ்க்கை! தெக்கித்தி வளவுக்காரர்கள் ஆள் பொறுக்கி கூத்துப் பயில ஓரமாக நின்று வேடிக்கைப் பார்க்கக்கூட பழனிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. உயிர் தேடலும் ஊக்கமும் அந்த பாமர மனிதனுக்குள் ஊறிக்கிடந்த கலையார்வத்தை தூண்டிவிட ஓர் ஒத்திகையின்போது கோவலன் நாடகத்தில் கண்ணகி வேடதாரி பாட்டுத் தெரியாமல் தத்தளிக்க, வழக்கமாய் கேட்ட பழனிக்கு வாய்ப்பு கிடைக்க சிக்கென பிடித்துக்கொண்டுவிட்டாரவர். அந்த பிடியின்னும் தளரவில்லை. சதிராட்டத்தில் மாதவி, பின்வரும் பாண்டியன் சண்டையில் கண்ணகி எதிரும் புதிருமான இரும்பெரும் கதாபாத்திரங்கள், அவற்றிற்கிடையேயான முரண்பாடுகள், இவ்வேடப் புனைவு யாரையும் சற்று தயங்கவே செய்யும். பழனிக்கோ மாதவியும் கண்ணகியும் ஓருடலில் ஒட்டிப்பிறந்த இரட்டைப் பாத்திரங்கள். மாதவி வேடத்தில் பழனி சொல்லும் சாங்கிய சம்பிரதாயங்கள் பெண் மனப்பாங்கை ஆராயும் ஆர்வலர்களுக்கு ஆகச் சிறந்த உளவியல் தரவுகளாக அமையும். கண்ணகி வேடத்தில் அவர் காட்டும் பரிமாணங்கள் முற்றிலும் வேறுபட்டது. வேடத்தோடு பல்வேறு வாத்தியப் பயிற்சிகளை கற்றுத் தேர்ந்த பழனி பெண் வேடதாரிகளுக்கு மிகச் சிறந்த முன்மாதிரி.</span></div>manalveeduhttp://www.blogger.com/profile/11701810894595985945noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-891272482416127046.post-26679527308088250842011-06-12T19:25:00.000-07:002011-06-12T19:38:29.099-07:00வாத்தியார் இன்று வீடு திரும்புகிறார்<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjxPvsw_RLxjXihaWG-DfEvnVnoUPLmAWLygnKvHWs-s3aidFxlRTw5IIN-ZF7u4ip5scJE_GVai-Ez3kbBvXmLhZoYol0HIgUzuIE1u17JxPRjZjg9vqrgpfDvfFalzhc9KTelKjxORL3_/s1600/aganesh.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5617526786202700514" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 240px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjxPvsw_RLxjXihaWG-DfEvnVnoUPLmAWLygnKvHWs-s3aidFxlRTw5IIN-ZF7u4ip5scJE_GVai-Ez3kbBvXmLhZoYol0HIgUzuIE1u17JxPRjZjg9vqrgpfDvfFalzhc9KTelKjxORL3_/s320/aganesh.JPG" border="0" /></a><br /><br /><div>சேலம் செல்லப்பா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அம்மாபேட்டை கணேசன் வாத்தியார் இன்று வீடு திரும்புகிறார். கலைஞர் காப்பீட்டுத்திட்டத்தில் இலவசமாக ஆபரேசன் செய்து புருசன் பொண்டாட்டி இரண்டுபேர்களையும் சொஸ்தப்படுத்துவதாக சொன்ன டாக்கிட்ரு புனிதவதி அம்மையார் பெருங்கருணை காட்டி பில்லை முப்பத்தி நான்காயிரமாக குறைத்திருக்கிறாராம். கேசை எடுத்துக்கொண்ட வக்கீல் சாரிடம்( போலிஸ் ஸ்டேசனில் எல்லாம் தாம் பார்த்துக்கொள்வதாக மிழற்றியவர்) நேற்று இராவெல்லாம் மண்டியிட்டு பிச்சைகேட்டதில் ஒரு ஐயாயிரம் பிறந்திருக்கிறது. என்னிடமுள்ள பனிரெண்டாயிரம் போக கணேசன் மகள் வாணியிடம்( மேச்சேரி புதன் சந்தையில் காய் கசுறு வித்து புருசனுக்கு தெரியாமல் சீட்டு நாட்டு போட்டு சிறுவாடு சேர்த்து அப்பனிடமும் உடன் பிறந்தானிடமும் பறிகொடுப்பவள். தேள் கொடுக்கு நாக்குள்ள மாப்பிள்ளையின் ஏச்சும் பேச்சும் தம்பியின் கண்ணீரில் கரைந்துவிடும்) மூவாயிரம் இருக்கிறதாம். பாக்கி பணத்துக்கு என்னடா பண்டப்போறமென்று கையை பிசைந்து விட்டு லெனின் சாருக்கு காலையில் போன்போட்டேன். ஏழாயிரத்து எண்ணூறு பேங்கில் போடுவதாக சொல்லியிருக்கிறார். போக்குவரத்துக்கு நம்ப தக்கை பாபுவுக்கு ஒரு ரிங் வுட்டாபோதும். கடம்பட்டு ஒடம்பட்டு மனுச உசுர காப்பாற்றியாச்சு. வந்து பழையபடிக்கி நான் கண்டு அதியசிக்கும் ரெட்டடவு போட்டு ஆடுவாரா? கொளத்தூரில் கொள்முதல் செய்து குறிச்சி ஒலகடத்தில் அரைத்த மிளகாப்பொடியை கூவி விற்க சந்தை சந்தையாக போவாரா? தெரியவில்லை. </div>manalveeduhttp://www.blogger.com/profile/11701810894595985945noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-891272482416127046.post-29781487329613255572011-06-02T18:16:00.001-07:002011-06-02T18:35:51.496-07:00உனக்கின்னும் பேராசை உலகாள யிருக்குதே!<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgZ-N2eG3lgJ229hSYmiW-b4za-kylYe41vUBhwX4fy5Zwsn5dRsLpLXQoBlmTKwcUzIg8A4KhdJoV_0IveAwUXLjSxax9u-vgEy8PzZ-VeDzWQedfccYLy071gJ-8GLjlzSglpo1pv6Xvx/s1600/_MG_6180%5B1%5D.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5613799878488517090" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 214px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgZ-N2eG3lgJ229hSYmiW-b4za-kylYe41vUBhwX4fy5Zwsn5dRsLpLXQoBlmTKwcUzIg8A4KhdJoV_0IveAwUXLjSxax9u-vgEy8PzZ-VeDzWQedfccYLy071gJ-8GLjlzSglpo1pv6Xvx/s320/_MG_6180%255B1%255D.jpg" border="0" /></a><br /><br /><div>தோற்பாவை கட்டபொம்மலாட்ட தெருக்கூத்து கலைஞர் அம்மாபேட்டை கணேசன் அவர்களுடன் நேர்முகம்.</div><br /><br /><br /><div><br />சந்திப்பு: தவசிக்கருப்புசாமி, ர.தனபால். </div><br /><br /><br /><div></div><br /><br /><br /><div><span style="color:#990000;">அம்மாபேட்டை கணேசன்<br />அம்மாபேட்டை கணேசனுக்கு வயது ஐம்பத்தியேழு. ஏழு வயதில் தந்தையார் மொட்டயனுக்கு உதவியாக தோற்பாவைக்கூத்தில் பொம்மைப் பிடித்தாட்டத் துவங்கியவர், பதினைந்து வயதிற்கெல்லாம் அதன் நுட்பதிட்பங்கள், நுணுக்கங்கள் கைவந்த சூத்தரதாரியாகி தனி நிகழ்வுகள் நடத்தியிருக்கிறார். பதினாறாம் வயதில் தாய்வழிப் பாட்டனார் சடையன் அவர்களின் ஆசீர்வாதத்தில் கட்டியங்காரன் வேடங்கட்டவாரம்பித்தவர், அதன் பிறகான நாட்களில் சிச்சிறு வேடங்கள், தரித்து தேறியபின் ஓர் பத்தாண்டு காலங்கள் பெண் வேடங்களிட்டு ஆடியிருக்கிறார். கோரிய வாலிபத்தில் ராவணன், மயில் ராவணன், இரண்யன், கீசகன், துரியன், சைந்தவன் உள்ளிட்ட பெரும் கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கியவர், இன்றுவரை அத்தொல்கலையின் உயிரோட்டம் மாறாது நிகழ்த்தி வருவதோடு, அதன் செயல்முறையில் கொள்ளுவன கொண்டு, தள்ளுவன தள்ளி, புதிய அழகியலை, புதிய உடல் மொழியை, புதிய ஆட்ட வகைகளை, தொன்மக் கூறுகளை அதன் தன்மைகளின்று அடிபிறழாத வண்ணம் பிணைத்து தனது கூத்துக்களை நிகழ்த்தி வருகிறார். இராமாயண இலங்கேஸ்வரனோ, மகாபாரத துரியனோ இதுகாறும் நம் ஐம்புலனுக்கெட்டாத பாத்திரம் எந்த பாத்திரமாகயிருந்தாலும் தொகை நகைகள் மாட்டி சபைக்கு தர்பாராகி வந்து இதுதானய்யா, அந்த பாத்திரம் என்று அவர் தன் விருத்தாந்தங்களை சொல்லும்போது, ஐயம் என்பது தோன்றாதபடி அந்த வேடம் அத்தனை பொருத்தமாக முழுமை பெற்று அமைந்திருப்பதோடு காட்சி வனப்பு மிக்கதாகவுமிருக்கும்.<br />உருவம் மட்டுமல்லாது, ஒரு பாத்திரத்தின் உளப்பாங்கு, மனவோட்டம், எண்ணம், செயல்பாடு, நடத்தை என்று எதை எடுத்துக்கொண்டாலும் கணேசனின் பிரதிபலிப்பு, வார்ப்பு, மாற்றும் குறைந்திருக்காது. வேடங்கள் தரிப்பதோடு பக்க மேளமான மத்தளம் வாசிப்பது, பெட்டி வாசிப்பது, பாவைக்கூத்துக்கு வேண்டிய தோற்பாவைகள் செய்தல், கூத்தில் ஆண் வேடத்திற்குரிய தொழிற்கருவிகள், ஆடையணி வடிவமைத்தல் என்று கணேசனின் கலையாளுமை பன்முகத்தன்மை கொண்டது. ஏட்டுக் கல்வியொன்று வாய்க்கப்பெற்றிருந்தால், கணேசன் அவர்கள் நிகழ்த்துவெளியில் குறிப்பிடத் தகுந்த சிகர உயரங்களை தொட்டிருப்பார் என்பது கண்கூடு.. சங்கீத கலா அகாதமிக்காக களரியுடன் இணைந்து இரு நாள் பொம்மலாட்டம் நிகழ்த்துவதற்காக டெல்லி சென்ற பயணத்தின்போழ்து அவ்வப்போது கணேசன் அவர்களோடு உரையாடிய உரையாடலின் சுருங்கிய வடிவம் அவருடனான நேர்முகமாக இங்கு தரப்படுகிறது.</span></div><br /><br /><br /><div><span style="color:#990000;"></span></div><br /><br /><br /><div>தவசி:- ஆதியில இருந்த கத, அதே ஆட்டம் அதே பாட்டு! கொஞ்சம் மாத்தி புதுசா கூத்து நடத்துனா என்னா கெட்டுப் போகுது?</div><br /><br /><br /><div>கணேசன்:- மேட்டு மேல நின்னுக்கிட்டு நொட்ட சொல்லிக்கிட்டிருக்ககூடாது. கூத்த அத்துப்படியா கத்துக் கர கண்டவன் எவனுமில்ல, எல்லாமே கண்டு பாவனதான். அரகரா, சிவா சிவான்னாப் பத்தாது. அமுது படைக்கணும். ஒங்களமாதர படிச்ச டிக்கிட்டுங்க, உள்ற குதிக்கணும் அலங்காரத்த பூர்த்தியா படிச்சி தேறணும். அப்பிடி ஒராளு இருக்கறான்னா அவனாலக் கூட சட்டுனு கூத்த புதுமயா ஆட முடியாது. கருத்தா கவனிச்சி, உகத்தமா தொழில் செஞ்சிக்கிட்டே வந்தா எந்த பொருள கழிக்கிறது எந்த பொருள சேர்க்கறதுன்னு நெட்டு சிக்கும். மேமேச்சலுகாரங்கிட்ட கூத்து ஆப்புட்டா, அன்னநடை கத்துக்க போயி தன்னடையும் மறந்தாப்ல ஆயிரும். பாத்து, பாத்து பதனமா செய்ய வேண்டிய காரியமிது.</div><br /><br /><br /><div></div><br /><br /><br /><div>தனபால்:- பழம பலவிதம். கூத்துன்னா என்னா? உங்க அனுப்போகத்த வெச்சி சொல்லுங்க?</div><br /><br /><br /><div>கணேசன்:- கண்ணுக்கு வெளிச்சமா வேசங்கட்டி தாளம், காலம், சுதி எசவோட பாட்டுப்பாடி, ஆட்டமாடி, புத்திக்கு ஒறைக்கிற கத சொல்றதுதாங் கூத்து.</div><br /><br /><br /><div></div><br /><br /><br /><div>தவசி:- கூத்தாடுனா குடும்பங் கெடுதுங்கறாங்களே, அது உம்மையா பொய்யா?</div><br /><br /><br /><div>கணேசன்:- நீங்க சொன்னமாதர, கூத்தாடுனா குடும்பங் கெடுதுங்கறது உம்மதானுங்க. அதுயெப்பிடின்னு கேளுங்க! ஆம்பளையாகப்பட்ட கூத்தாடி அலங்காரத்துக்குன்னு பத்தூரு பஸ்ரேறி போறான், வாரான். அங்க இருக்கப்பட்ட பொண்டு புள்ளைங்ககிட்ட பேசாம புடிக்காம இருக்க முடியாது. ஆடன ஆட்டத்த மெச்சி உருவா குத்தறாங்களா, வாங்கியத சோபியில வச்சிமா அதோட அந்த சகவாசத்த வுட்டுத் தல முழுவணும். வுடாம நோட்டம் போட்டு மேயறதும், குத்தவத் தோட்டம் ஓட்டப்போறதுமா பொழக்காட்டம் வெச்சிக்கிறான் கூத்தாடி. கூத்தாடி அப்பிடியா! கூத்தாடி பொண்டாட்டி கூத்துக்கு போன புருசன் ஆடி களைச்சி அலுப்பு சலுப்பா வருவானேன்னு வெந்தண்ணி காயவெச்சி சோறோ, களியோ வூட்ல உண்டானதை ஒல வெச்சி ஆக்கி, தடத்த தடத்த எதுரு பாத்துக்கிட்டிருப்பா. இவந்தான் இங்க எச்செல பொறுக்க போயிட்டானே எப்பிடி வருவான்? நெரங்கண்டு போயி பொழுதிருக்க பொண்டாட்டிய அண்டுணா சீரு பாரு சேவுகம் நடக்கும். ஒரு நாளு, ரெண்டு நாளு பாப்பா! கட்னப் புருசஞ் சொல்ல மிஞ்சி சோரம்போனா பொம்பளயெத்தன நாளைக்கி தாக்குப் புடிப்பா? பொறவு ஒட்டத்தோண்டினாலும் அதுக்கொரு பீத்த கவுறு சிக்காம போவுமா? இப்பிடித்தாங் குடும்பங் கெட்டு குட்டிச் செவுராப் போறது. அதுக்குன்னு எல்லா கூத்தாடிங்களையும் ஒரே ராத்துலுல நிறுக்க முடியாது..பத்துப் பேச்சி என்னத்துக்கங்க? கரும்பு கட்டோடயிருந்தா எறும்பு என்னா செய்யும்? </div><br /><br /><br /><div></div><br /><br /><br /><div>தவசி:- கட்ட பொம்மலாட்டம் அதுக்குமுந்தி தோலு பொம்மலாட்டம் நடத்திக்கிட்டிருந்த நீங்க கூத்தாட வந்தது எப்பிடி? பாடு கஷ்டம் அதுல அதிகங்கறதுனாலயா? இல்ல வேறெதுங் காரணமா?</div><br /><br /><br /><div>கணேசன்:- விருப்பத்துலவொரு காரியஞ் செஞ்சா வருத்தம் பாரம் தெரியாது. அப்பிடி நெனச்சிதான் கட்ட பொம்மலாட்டமும் தோலு பொம்மலாட்டமும் நடத்திக்கிட்டிருந்தன். பொறவு மறப்புலேயே ஆட்டிக்கிட்டு இருக்கறமே வெளிச்சத்துல ஆடனாயென்னான்னு ஆசப்பட்டேன், அதுலயுமொரு சமாச்சாரமிருக்குது. பிருவம் நெரிக்கறதையும், கண்ண உருட்டி, சொழட்டி முழிக்கறதையும், மீச துடிக்கறதையும், ஆங்காரமா சிரிக்கறதையும் பொம்மலாட்டத்துல நெனச்சாலும் செய்ய முடியாது. இன்னோன்னு ஒரு வேசத்த எத்துவரிசையா செய்யும்போது நாலு சனம் கைத்தட்டறதையும், அலங்காரம் நல்லாயிருக்குதுன்னு சொல்றதையும் காதாற கேக்கலாமில்ல!. அதோட ஆட்டக்காரனுக்கு வவுத்துக்கு கஞ்சியில்லையின்னாலும் வாயி உபச்சாரம் தேவையாயிருக்குதே!.</div><br /><br /><br /><div></div><br /><br /><br /><div>தனபால்:- தெரைக்குள்ளயேயிருந்த நீங்க சவைக்கி மொதல்ல என்ன வேசங்கட்டிக்கிட்டு வந்தீங்க? கூச்ச நாச்சம், கோளாறு, கொளறுபடி இல்லாம பாகத்த செலுத்தனீங்களா? இல்ல பங்கப்பட்டீங்களா? அந்த அனுபோகத்த சொல்லுங்க சித்த?</div><br /><br /><br /><div>கணேசன்:- அந்த காலத்துல ஒராளு அத்தன சிலப்பமா வேசங்கட்டியாட முடியாது. பல படி தாண்டி வரணும். மின்ன பொட்டி மீட்டணும், சால்ரா போடணும், ஆசி கேக்கணும் அப்புறந்தாம் பவுடர கையில தீண்ட முடியும். ஓமலூரு கோட்ட கவுண்டம்பட்டியில எங்க மாமன் மாயவனும், தாத்தஞ் சடையங் கொறவனும், டெண்டுக் கூத்து ஆடிக்கிட்டிருந்தாங்கப்ப. நானு சால்ரா போட்டுக்கிட்டிருந்தன். கோமாளி வேசக்காரன் வரிச கூத்தாடனவன் வூட்டுக்கு பொண்டு புள்ளைங்கள பாத்துட்டு வரமுன்னு போனவன் அன்னைக்கி வரவேயில்ல. செட்டுல மத்த ஆளுங்களும் ஒருத்தரு ரெண்டுபேரு வரல. சடையனிருந்துக்கிட்டு என்னைய டேசிக்குள்ற கூப்புட்டு போடறா கண்ணு கோமாளி வேசமுன்னு வேசம் போட்டுவுட்டாரு. எனக்கோ பயத்துல நாக்கொழறுது, காலோட காலு பின்னுது! என்றா கூத்தாடி நீயி இப்பிடி மெரள்றன்னு தாத்தன் கொட்டாங்குச்சியில சாராயத்த ஊத்தி, குடிச்சிப்புட்டு தெகிரியமா வெளியப் போடான்னு சொல்ல, சாராயத்த குடிச்சும் எனக்கு நடுக்கமே நிக்கல. தெரய புடிச்சித் தடுமாறிக்கிட்டிருந்தம்பாரு! மத்தாளம் அடிச்சிக்கிட்டிருந்த செல்லப்பண்ணன் நோங்கி பொறங்கழுத்துல ஒரீடு போட்டு போடா வெளியன்னு தள்ளிவுட்டாரு! ஒரு வழியா பயம் தெளிஞ்சது. அன்னைக்கி புடிச்சி சரியா அஞ்சிவருசம் கோமாளி வேசம்! அப்பறம் சாரிவேசம்! இப்ப சூரவேசம்!.</div><br /><br /><br /><div><br />தவசி : ஏர்வ தாளம், துடியான ஆட்டம் டாய் டூய்னு கத்தியேச் சலிக்கணும்! சாரீரம் சீக்கிரம் மங்கிப் போயிடும். இப்பிடி எச்சி பாடு, ஒவித்திரியஞ் சாஸ்தி! கட்டனதாங் கட்டனீங்க, ஒரு கொண்டக்கட்டு வேசங்கட்டி பழவியிருக்கலாமில்ல. இன்னுமொரு அஞ்சாறு வருசம் சேத்தி தொழிலுச் செஞ்சிருக்கலாமே.<br />கணேசன் : சாப்பாட்டுக்கு ஆறு ருசி! சதுருக்கு ஒம்போது ருசி! கைபாகம் இருக்கப்பட்டவிங்க கொள்ளு கடுப்பனாட்டி, களி கிண்டனாலும் சேரி! கூட்டுமாவரைச்சி, கறிச்சாறு காச்சி களிக் கிண்டனாலும் சேரி! திங்க நல்லாயிருக்கும். சமத்து பத்தனவன் சாரி வேசம் கட்டனாயென்னா! சூர வேசம் கட்டனாயென்னா? இல்ல கொண்டகட்டு கட்டனாயென்னா? சனங் குந்திப் பாத்தா சேரி!. நம்பள ஆட்டிவெக்கிறானே ஆண்டவன் அவங் கவுத்த கீழபோடாம இருந்தான்னா, என்னு ரத்தஞ் சுண்டற வரைக்கும் இந்த சூர வேசமாடுவன், அப்பறம் என்ன கதி நேருதோ ஆரு கண்டா?<br /></div><br /><br /><br /><div>தனபால் : காசா பணமா? கணக்கில்லாத வரும்பிடி வருதா? மெனக்கெட்டு ஒக்காந்து எதுக்கு கூத்து பாக்கணும்?<br />கணேசன் : சோறு ஏந்திங்கறம்? செரிமானம் சீரணம் பண்டி அது ரத்தத்திலே கலந்து மனுசன் ஓடியாட, ஒரு வேலவெட்டி செய்ய சத்து வேணுமின்னுதான. பாடுபட்டு வர்ரவனுக்கு பலகாரஞ்சோறு தின்னாப்பல தெம்பு இந்த கூத்தால கெடைக்குது. அதோட மக்க மனுசரு, நாலுபேத்த பாக்க புடிக்க, மனசுட்டு பேச சிரிக்க, ஒரு தாவுல ஒண்ணு சேர்றம். மாடு கண்டா ஒதுங்காம மனுசன கண்டா பேசாம அதுயென்னா பொழப்பு?<br /></div><br /><br /><br /><div>தவசி : தரமான தொழிலாளின்னு பேரெடுத்துருக்கறீங்க. நீங்க சொல்லுங்க நடிப்புங்கறதோட உள்கூடு என்னா? பொருளுயென்னா?<br />கணேசன் : கலைத் தொழிலாளிக்கி,அடிப்படையான பொருளு இந்த நடிப்பு. இப்ப கீசக சம்பாரத்துல கீசகனா நானு வரிக்கறன்னு வையி, போதையில தாயுந் தெரியாது! செத்த நாயுந் தெரியாது!. அந்த நெதானத்துல நந்தாவனத்துல பூப்பொறுக்கற பாஞ்சாலியாகப் பட்ட சைலேந்திரிய கீசகந் தப்படியா பாக்கறான். மோகந் தலைக்கேறி அவளச் சேர தொரத்துறான். அந்தக் கட்டத்துல போதைக்காரன் கீசகன்னு நானு நெசமாலும் போதப் போட முடியுமா? ஆனா போதையிலிருக்கப்பட்டவன் என்னென்ன அகராதி, அக்குறும்பு, சேட்டப் பண்டறானோ அதயெல்லாம் அத்துப்படியா செய்யுணும். அப்பிடிச் செய்யும்போது பாக்கறவிங்க இந்த பாவி சண்டாளங்கிட்ட, இந்தப் பொம்பளை சிக்கி சீரழியறாளேன்னு பொன்னுவேசக்காரன நெனச்சிபரிதவிக்கணும். அவிங்க பொந்தியில ஈவிரக்கம், பொறக்கணும். கீசகனா வேசங்கட்டியிருக்கற எம்மேல கோவம் வருணும். ரண போர்க்களமா ரெண்டுபேரு கத்தி மொணையில சண்டச் செய்யறாங்காள அவிங்க ஆக்ரோசமா கத்தியச் சொழட்டற சொழட்டுல பாக்கறவங்க பொந்தியில ஐயோ எந்த தல துண்டாகி கீழ வுழுவுதோன்னு திகிலு, பதபதப்பு வரணும். ஆனா வேசக்காரங்கமேல துளி நவக்கீரலு படக்கூடாது. சோகக்கட்டமா, ஏழ்நாட்டாம் சனி புடிச்சி நளச்சக்கரவர்த்தி புஷ்கர்ணங்கிட்ட நாடு, நகரம், நவநீதச் செங்கோல், உப்புச்சட்டி வறயோடு மொதக்கொண்டு தோற்வையாகி, தமயந்திரிய கூட்டிக்கிட்டு வனம் வனாந்தரம் போறனில்ல, அந்த எடத்துல தமயந்தி வேசக்காரன், சாமி! ஆணிமுத்து கோட்டு, அங்கவஸ்திரம் உடுத்தி ராஜமகுடந் தரிச்சி உங்க தங்கசள்ளா தர பொரள அந்தப்புரத்துக்கு நீங்க வரும்போது, பாக்க ஆயிரங்கண்ணு வேணுமே!. பீத்த வேட்டித் துணிக்கும் வக்கத்து இப்பிடி ஒரே முண்ட உடுத்தியிருக்கறமே! இந்தகந்தறகோலத்துல உங்கள பாக்க எனக்கு விதியா? விதிவசமா? வராத வங்கொடும வந்து நேர,ஆருக்கு நாம்பயென்னாசாமி தீம்பு செஞ்சமுண்ணு கதறியழுதா, இப்பேருபட்ட அவகேடு நம்ப எதிரிக்கு கூட வரக்கூடாதுன்னு, சனமும் நம்பளோட சேந்து அழுவுணும்.சுபத்ர அர்ச்சுனந் சந்திப்பா, பிருசம் பொண்டாட்டி, பொணங்கறதும் கூடறதும், கூடறதும் பொணங்கறதும், அவிங்க சேர்க்க சேர்ற தோரணயில, பேசற நடவடிக்கய பாத்தா, ஆம்பளையாகப்பட்டவிங்க பார்ரா நம்பளுக்கு இப்பிடியொரு பொண்டாட்டி வாய்க்கலையே! ன்னு நெனைக்கணும். பொம்பளையாகப்பட்டவிங்க பார்ரா நம்பளுக்கு இப்பிடியொரு பிருசம் வாய்க்கலையேன்னு நெனைக்கணும்.இப்பிடி டூட்டி செஞ்சாதான் நடிப்பு.</div><br /><br /><br /><div></div><br /><br /><br /><div>தனபால் : சினிமாவுல நடிக்கிறாங்களே அந்த நடிப்புக்கும் நீங்க கூத்துல நடிக்கற நடிப்புக்கும் என்னா வித்தியாசம்?<br />கணேசன் :இவுத்த அம்மாபேட்ட ஆத்துல பொம்பளயொருத்தி பரிச தாட்டி படிஏர்றத அம்பது தக்கம் எடுத்தாங்க.சினிமாக்காரனுங்க நடிப்பு திண்ணப் பள்ளியோடத்துல மணல்ல எழுதறமே அந்த மாதர அழிச்சி அழிச்சி எழுதறது, சிலேட்டம். குறிவெச்சி அம்பெய்யறமாதர கூத்துல நடிக்கறது சிலமேல எழுத்து!.சுத்திய நோங்கி தட்டனா மொண முறிஞ்சி மொக்கையாகிப்போவும்.பொசான தட்டுனா அச்சுப் பதியாது. நேந்து நெரவி விசுவாசத்தோட பணிக்கச் செஞ்சா செல கண்தெறந்த சில்பமாவும்.<br /></div><br /><br /><br /><div>தவசி : வேசத்துக்கேத்த விருத்தம், கதைக்கேத்த கந்தார்த்தமுன்னு சொல்றாங்களே விருத்தத்துக்கும், கந்தார்த்ததுக்கும் கூத்துல பாத்தியமென்னா?<br />கணேசன் : மன்னாளுற ராசனுக்கு மகுடம் அழகு. அந்த மகுடத்துக்கு அழகு அதும்பட சிரசுல சொருவுற கல்துறா. அந்த மாதரத்தான் கூத்துக்கு லச்சணமான விசியம் ரெண்டு. ஒண்ணு விருத்தம், இன்ணோன்னு கந்தார்த்தம். சபைக்கு தர்பாரு ஆவுற ஒவ்வொரு வேசத்துக்கும் ஐதீகமான வரலாறு, விருத்தாந்தமிருக்குது அந்த விருத்தாந்தத்தச் சுருக்கிச் சொல்றது விருத்தம். கத காரணமிங்கறது முத்திப் பழுத்த கனியின்னா அதும்பட சாறுதாங் கந்தார்த்தம்.<br />மயில் ராவணஞ் சண்டையில் மயில் ராவணந் தர்பாரா வரும்போது இந்த விருத்தம்போட்டு வெளிய வருவான்.......</div><br /><br /><br /><div><br />அஷ்டகுல பருவதம்போல்புஜங்கள் மின்ன</div><br /><br /><br /><div>அணிந்ததோர் மணிமகுடம்கிரிபோல் ஓங்க</div><br /><br /><br /><div>இஷ்டமுள்ள மந்திரிமார்கள்சூழ்ந்து நிற்க</div><br /><br /><br /><div>ஈரேழு லோகமும் கிடு நடுங்க</div><br /><br /><br /><div>மச்ச கற்பகன் கரம்கூப்பி நிற்க</div><br /><br /><br /><div>மயில் ராவணன் வருகின்றேனே!<br />இன்ன இன்ன குணாச்சாரமுள்ள ஆளு, இந்த நாட்டுக்கதிபதி அவனோட நடத்த நடவடிக்க இப்பிடிங்கற ஐதீகத்த இந்த விருத்தஞ் சொல்லுது.சூர்ப்பனக கர்வபங்கத்துல,<br />வாதாடும் சூர்ப்பனகை தன்னை நோக்கி</div><br /><br /><br /><div>மதித்த ராகவனுக்குதான் மனையாள் சீதை </div><br /><br /><br /><div>போதாதே ஓரூறையுறைள் இருவாள்</div><br /><br /><br /><div>புறங்காக்கும் தம்பிக்குத்தான் மனையாலில்லை</div><br /><br /><br /><div>நீதான் போவெனவே போக</div><br /><br /><br /><div>லட்சுமணன் கூர் வாளேந்தி </div><br /><br /><br /><div>காதோடுமூக்கறுத்து முன்னும்பின்னும் பங்கம்<br /></div><br /><div>கருகுவாள் தன் உறவையெண்ணி புலம்புவாளே!<br />ன்னு கந்தார்த்தம் போட்டு<br />அருமை பிறப்பே அண்ணா</div><br /><br /><br /><div>ராவணா அண்ணா!</div><br /><br /><br /><div>சிங்கமிருக்க குட்டி பறி போகுமா</div><br /><br /><br /><div>உன் செல்வத் தங்கையொருவன் தொடலாகுமா?</div><br /><br /><br /><div>ஆனையிருக்க குட்டி மோசம் போகுமா</div><br /><br /><br /><div>அருமைத் தங்கையை ஒருவன் தொடலாகுமா? </div><br /><br /><br /><div>ன்னு பாட்டு பாடும்போது அந்த கதையோட முக்கிலியமான திலுப்பம் தெரியிது. ராவணந்தங்கச்சி சூர்ப்பனக மவன் ஜம்புகுமாரகன கொன்னவன தேடிக்கிட்டு வரும்போது அலங்காட்ல ராமன பாக்கறா. அவம் மேல ஆசப்படறா. ன்னு ரொம்ப நாளாச்சி! ஒரே ஒராடம் ங்கறியான்னு கேக்கறா.. ராமஞ்சொல்றான் அம்மா எனக்கு கண்ணாலமாயிப் போச்சி ! எங்கூட்டுக்காரி உசுரோடத்தான் இருக்கறா!.உன்ன பக்கம்போட்டு படுக்க என்னாலாகாது தாயே! அந்தாண்ட போயி பாரு! எங்காளு ஒராளு இருப்பான் அவனுக்குத்தான் இப்ப பொண்டாட்டியில்ல! எதோ அவம்பாத்து பண்ணயம் பண்டனாத்தான் உண்டு! அவன் அப்பிடி சொல்ல, இவ எதுக்கும் நீயொரு சிபார்சு பண்ணுங்கறா!. அதுக்கு இந்த அலுப்பநாயி தானும்படுக்காம தள்ளியும் படுக்காம தம்பிகாரங்கிட்ட கூட்டிக்குடுக்க, அந்த கையாலாவாத கேப்மாரி பொம்பளையின்னும் பாக்காம அவள சின்னம் பண்டியுட, அண்ணங்காரன நெனச்சி அழுதுப்புட்டு நெஞ்சில வஞ்சத்த வெக்கிறா, இந்த கறிமூஞ்சி பசங்கள கறுவறுக்க.அதத்தான் இந்த கந்தார்தஞ் சொல்லுது.<br /></div><br /><br /><br /><div>தனபால் : பத்து பேரு தொழிலாளிங்க, இருக்கையில வாத்தியாருங்கற பொறுப்ப ஆரு வசங்குடுக்கறது? அதயெப்பிடி தீர்மானம் பண்டறது?<br />கணேசன் : வெத்தலபாக்கு வாங்கறதும், வேசப்பொட்டி மேல புள்ளையார வெச்சி பூசப் போடறதும், போன வெசயில பேசி மறப்புல படுத்துக்கறதும் வாத்தியாரு தனமில்ல. எனங்கண்டு ஆளுங்க வேசத்த பிரிக்கறதும், ஒட்ட வேண்டி எடத்துல கதய ஒட்டி வெட்ட வேண்டிய எடத்துல வெட்டி கண்ணியக்காம கத பொருள கொண்டாந்து தாவு சேத்தணும். வேசம் ஒண்ணு வல்லையின்னா தாம் போட்டாடி சந்து அடைக்கனும். சுதியேத்த எறக்கம், கூத்துல எந்தவொரு கொறப்பாடு நேந்தாலும் முந்தியத சரிக்கட்ட தெரிஞ்சிக்கறதுதான் வாத்தியாருத்தனம். இந்த சாமார்த்தியம் இருக்கறவனெவனோ அவனாலதான் செட்டுக்கு வாத்தியாராக முடியும்.<br /></div><br /><br /><br /><div>தனபால் : இவ்ள புத்தி ஊகமாப் பேசறீங்க? நீங்க ஏஞ்செட்டு கட்டி ஆடல?<br />கணேசன் : ஆருச் சொன்னது நாஞ்செட்டு கட்டி ஆடலைன்னு. முப்பது வருசமா ஆத்துல அகப்பட்டு, சேத்துல சிக்கப்பட்டு இப்பத்தான் ஓரெடத்துல ஒலி சாவி குந்திக்கறன். பத்துபேர படதெரட்டி யுத்த களத்துக்குபோயி ஐசா பைசா பாத்துறலாம். இந்த கூத்தாடிங்கள ஒட்டுச்சேத்தி செட்டு வெச்சி சேவிக்கறது, தண்ணிமேல நடக்கற மாதர காரியம். வெத்தல பாக்கு ஒருரூல வாங்கன நிமுசம் மொதக் கொண்டு கண்ண மூடித் தூங்கமுடியாது. கொண்டக்கட்டுக்காரன் வருவானா? வரமாட்டானா? கொழலுக்காரன் வருவானா மாட்டானா?ன்னு தடத்த தடத்த எதுரு பாத்துக்கிட்டிருக்கணும். அப்பிடியெவனாவுது காம்ப காட்டிப்புட்டா ஊருக்குள்றயும் அவனில்லாம போவமுடியாது. கூத்துத்துட்டவுங் மொவறையில காறித் துப்பனாலும் தொடச்சிக்கிட்டு பொச்ச மூடிக்கிட்டு இருக்கணும். பத்துப்பேரு பண்ணாட்டு, ஒரு கையிதட்டனா ஓச வராது, தொழில கண்டு பொழைக்கறவன் அத கருதிப் புடிங்கடா, நேரங்காலமா ஆட்டத்துக்கு வாங்கடான்னு பாடி, பாடி குத்தனாலும் அந்த பதருங்க அரிசியாவற வழியக்காணம். சேரி நம்பளுக்கென்னா பொட்டியத் தூக்கிக்கிட்டு போனா எதோவொரு வேசம், விடிஞ்சா சம்பளம். இப்பதான் நிம்மதியா தூங்கறன்.<br /></div><br /><br /><br /><div>தவசி : விடிய அலங்காரம் வரிச்சிப்புட்டு விடிஞ்சி முகமழிக்கறீங்க இல்லியா, அதோட அந்த வேச நெனப்பு மறந்து போவுமா? இல்ல மறுக்க கனவுல, நடப்புல வந்து தொந்தரவு குடுக்குமா?<br />கணேசன் : எல்லா வேசத்துக்கும் அந்த சத்தி கெடயாது. 'வாலி சுக்ரீவன் சண்ட', அலங்காரம்!. வாலி உசுருடற கட்டம். ராமன் கேக்கறாப்பல வாலி இப்பவொண்ணுங் கெட்டுப்போவல. `ம்` முன்னு ஒரு வார்த்த சொல்லு உசுரகுடுத்து உன்ன எழுப்பறன்னு. அதுக்கு வாலி சொல்றான். ராமா நீ நாயம் அநியாயந் தெரியாதவன். எனக்குப் பொறன பொறந்த சிறுபையன்! இத்தன நாளா வாலி! வாலி! வீர வாலின்னு பேரெடுத்தவன் உங்கிட்ட உசுருபிச்ச வாங்கி குத்துப்பட்ட வாலின்னு சாவ எனக்கு பிரியமில்ல. எனக்கொரு யாசகம் கொடுக்கற யோக்கிதி உனக்கில்ல. ஓடிப்போயிரு தூரன்னு சொல்லிப்புட்டு தம்பிய கூப்புட்டு அவெனென்றா மனுச பூண்டு! உனக்கிந்த கிஷ்கிந்தாபுரிய மீட்டு குடுக்கறது, மனசார நாங்குடுக்கறண்டான்னு சுக்ரீவங்கையில நாட்ட ஒப்படைச்சிட்டு மண்ணுமேல சாயுது அந்த புண்ணியாத்துமா, நானு வாலி வேசங்கட்டிப்புட்டன்னா மாத்ரம் அவஞ்சாவ நெனச்சி, நெனச்சி மனசு மருவிக்கிட்டே கெடக்கும்.<br /></div><br /><br /><br /><div>தனபால் : பெத்து பொறப்பு ஆம்பளையாகப்பட்டவனுக்கு பொண்டாட்டி புள்ளைங்க அதுங்களோட நல்லது, கெட்டது, போக்குவரத்துன்னு ஒவ்வொண்ணுக்கு செலவு சாரி, கடங் கட்சி கட்டறது, சம்சாரத்த கொண்டாறதுன்னு ஆயிரெத்தெட்டு பிக்கு புடுங்கலு! கூத்தாடிக்கும் இந்த பிரச்சனை அதிகமுன்னு சொல்லலாம். இந்த வாதன வருத்தமெல்லாம் தொழில பாதிக்காதா?<br />கணேசன் : வித்தைக்கு சத்துரு வெசனம், ஆயிரம் வறும,சிறுமையிருக்கட்டும்! வருத்தம் வாட்டமிருக்கட்டும்! வெந்து நொந்து வேதனப்பட்டா கட்ட வெரலு சுண்டு வெரலு ஆவுமா? சுண்டு வெரலு கட்ட வெரலு ஆவுமா? எல்லாத்தையும் மென்னு முழுங்கி தண்ணிக் குடிச்சிப்புட்டு, வேசத்தப்போட்டு வெளிய வந்து, சபையில நின்னு சனத்த பாத்தா நோவு நோக்காடு போற எடந்தெரியாம தன்னாலபோயிரும். கவலைய மறக்கடிக்க கூத்தாடறவன் தானே கவலப்பட்டா காலத்த ஓட்ட முடியுமா?<br /></div><br /><br /><br /><div>தவசி : மெத்தப் படிச்சவன் மேதாவி. நீங்களும் பல வித்த கத்த வாத்தியாரு, தானுங்கற மண்டகணம் உங்களுக்கில்லையா?<br />கணேசன் : சேடக்கட்டி வயலடிச்சி, நாத்து நட்டு, பசுரு பச்சைக்கி பாதுகாப்பு பண்டி, வௌஞ்சத ராசிப்பண்டி பத்துசுரு பொழைக்கும்படி வெள்ளாம பண்டறானே அவங்கிட்ட இல்லாத வித்தையா? அடுக்குல இருக்கறது அரிசியோ, ஆரியமோ உள்ளத கொண்டு பக்குவமா சாதங்கறி வெச்சி பசியாத்தறாங்களே பொண்டுங்க, அவிங்களுக்கு தெரியாத வித்தையா? சொப்பு மொத! சூட்டடுப்பு கட! எத்தன ஆயிரம் பண்டஞ் செய்யறாங்க செட்டிமாருங்க! அவிங்களுக்கு தெரியாத வித்தையா? இதெல்லாம் நெனச்சிப்பாத்தா நம்ப கையி வெறுங்கையி. வெறுங்கையில மொழம்போட்டா மரியாதி இருக்குமா? வணக்கம் தனக்கழகு கண்ணு. </div><br /><br /><br /><div></div><br /><br /><br /><div>*கூடுவிட்டு கூடுபாய்கின்ற ஆற்றல் வாய்க்கப்பெற்றவன் கலைஞன். அந்த கூட்டுக்குள் ஆவியாய் குடிகொண்டிருக்கிறது கலையென்னும் பரம்பொருள்.<br />*<br /></div>manalveeduhttp://www.blogger.com/profile/11701810894595985945noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-891272482416127046.post-79117977410429546412011-04-13T00:07:00.000-07:002011-04-13T00:22:45.769-07:00தாய்க்கி பிள்ளையேதடாதண்ணி கெணத்துக்கு முறைமையேதடா சாரங்கதாரா!கூத்துக்கலைஞர் கொத்தாபாளையம் குருநாத வாத்தியார் குறித்தொரு பதிவு.<span class=""></span><span class=""></span><span class=""></span>சேலம் மாவட்டத்தில் பூரல்கோட்டை கருப்புசெட்டி என்றால் அழுதபிள்ளை வாய் மூடும்.வன்னிய சமூகத்தில் மாத்திரமல்ல,மற்ற இடைச்சாதியினர் மத்தியில் மேலதிக செல்வாக்கும், ஆதிக்கமும் பெற்றிருந்தவர்.கோனூர் பஞ்சாயத்தில் ஒரு குட்டி ராசாவாக கோலோச்சி வந்த அவர் வெள்ளைப் புரவி ஏறி ஊர் பவனி வருகையில் கைச்சொடுக்கும் சாட்டையொலி மக்களுக்கு அசீரிரி!.உதிர்க்குஞ் சொல் வேதவாக்கு!. மேச்சேரி பத்ரகாளியம்மன் கோயில் நிர்வாகப் பாத்தியதை சம்மந்தமாக நடைப்பெற்ற வழக்கொன்றில் அந்த ரணபத்ரகாளியே வந்து இவர்பட்சமாக சாட்சி சொன்னதாக பெருங்கதையாடல்கள் இங்குண்டு. மனிதனின் எச்சிப்பால் குடித்து வளர்ந்தது தான் சாதியென்றாலும் அதனின்று இப்பூலகில் ஜனித்தவன் அவன் எப்பேர்ப்பட்ட கொம்பனாக இருக்கட்டுமே! தப்பித்தல் அரிது.இதற்கு கருப்பு செட்டியும் விதி விலக்கல்ல!( பெற்ற பாசத்தைவிட வளர்த்த பாசம் பெரிதல்லவா?) பூரல்கோட்டையில் பிறக்கப்பட்ட பறையன், சக்கிலி, குறவன் (அவர்கள் சின்னச்சாதிகள் என்றே இட்டு வழங்கப்படுகிறார்கள்)மட்டுமல்ல உடுத்தியிருக்கும் இடுப்புவேட்டி, கால்செருப்பு ,தலைமுண்டாசு,மொட்டைக் கோமணம் முதற்கொண்டு அவர் ஆக்கிணையை சிரமேற்கொண்டொழுக வேண்டும். அன்றேல் மண்மேல் மனுசன் சீவிப்பது யதேஷ்டம்!இப்படியாகத்தானே கருப்புசெட்டியின் ராஜ்யபரிபாலனத்திற்கு உட்பட்ட பள்ளிப்பட்டி வேடமாரியம்மன் கோவிலில் சோமாரக்கிழமை ஊர் பெருந்தனக்காரர்கள் கெவுளி வாக்கு கேட்டுச் சொல்ல, இறங்கு பொழுதில் அன்றைக்கெல்லாம் ஒருசிந்தியிருந்த ஊர்தோட்டி வட்டப்பாறையில் நின்று நோம்பிச்சாட்டை துடும்படித்து அறிக்கைச் செய்தால் சுற்றியுள்ள ஆண்டிக்கரை, தானம்பட்டி,மேட்டுத்தானம்பட்டி, கந்தனூர், சாவடியூர்,குள்ளமுடையானூர்,நரியனூர்,மல்லிகுந்தம், பூரல்கோட்டை,காலாண்டியூர், கரட்டுப்பட்டி உள்ளிட்ட பதினெட்டு கிராமங்களில் உள்ள மாரியம்மனுக்கு அந்தந்த ஊருக்குண்டான வழமொறை,வாமூல் என்னென்னவோ அந்தப்படியே நோம்பி சாட்டிவிடுவார்கள். இந்தப்பிரகாரமாகத்தானே பூரல்கோட்டை மாரியம்மனுக்கு காதறுத்து* ,கம்பம் நட்டு*, கம்பளிக்கூத்தாடிச்* சாட்டிய பதினைந்து நாள் சாட்டுக்கு அன்றாடம் பனிரெண்டு வகை தாளத்திற்கு சாரிக்கு எவ்வேழுப்பேர், பதினாறு சாரியாக நின்று இளவட்டங்கள் ஆடும் மாரியாத்தா ஆட்டத்தில்(சேவாட்டம்) ஊரே அல்லோகலப்பட்டுக்கொண்டிருந்தது. பதிமூன்றாம் நாள் திங்கள் அம்மன் அழைப்பு, பதினான்காம் நாள் செவ்வாய் இராவிளக்கு, கடைசிநாள் புதன் பகல் விளக்கு, அந்தியில் அலகு குத்து,பூங்கரகம், அக்னி கரகத்தோடு வண்டிவேசம், குதிரை வேசம்,நரி வேசம், வாணவேடிக்கை என்று இந்த அமர்க்களம் போதாதென்று குருநாதவாத்தியாருக்கும் வெற்றிலைப்பாக்கு கொடுத்திருந்தார்கள் கூத்தாட. மூணேகால் உரூவா ஒத்திக்கு காந்த விளக்கை கொண்டுவரும் சேலத்துக்காரன் இன்னும் வந்துசேர்ந்திருக்கவில்லை. பார்க்கின்றவரைக்கும் பார்த்துவிட்டு கொடுவாள்முனையில் மேட்டூர் பழம் மல்லை சுற்றி பந்தம் முடைந்து சீமெண்ணையில் நனைத்து பற்ற வைத்து அதையிருவர் வாகாக பிடித்துக்கொண்டு நின்றிருந்தனர். அதிகாலையிலிருந்து அந்திவரை குடித்த ஒருமரக்கள்ளுக்கும் செலவுச்சாமான்கள் ஏதுமின்றி வெறும்குறுமிளகிட்டுப் பிரட்டிய வெள்ளாட்டுக்கறிக்கும் அமைந்த தோதில், இன்னும் துளி, இன்னும் துளியென ஒரம்பரை சரம்பரைகளை உற்றார் உறவினர் வஞ்சனையின்றி உபசரிக்க, அதில் நெகிழ்ந்து போய் நாலுவாய்ச்சோற்றினை எச்சாக உண்ட மயக்கத்தில் சனம் ஒருவிதமான கிறக்கத்துடனேதான் கூத்துப்பார்க்க காத்திருந்தார்கள்.பூசைப் போட்டாயிற்று, பொட்டி மத்தளத்தை வெளியே எடுத்து வைத்தாயிற்று, களரிக்கூட்டி கூத்தும் துவக்கமாயிற்று. பாத்திரங்களை பங்கு வைத்துப் பிரித்துக் கொடுத்தப்பின்பு வரிசைக்கூத்தாகயிருந்தால் குருநாதவாத்தியார் வேசங்கட்ட உக்காருவதற்கு முன்பு காற்றாட சற்றெங்காவது ஒதுக்குப்புறமாக துண்டை விரித்து கண் அயர்வது வழக்கம்.முந்தி தோன்றிய கோமாளி வேடதாரியும் உடன் தர்பாரான தலை வேடதாரியும் துருவதாளத்தில் ஆடிக்கொண்டிருக்க சபை அந்த ஆட்டத்தில் மெய்ம்மறந்து அமர்ந்திருந்தது. கூத்தாடிகளுக்கு ஆக்கிப்போடவா நான் தாலிக்கட்டி நீரு வைத்துக்கொண்டேன் என பெண்டாட்டிக்காரி பிணங்கிக்கொண்டுவிட்டதால் வந்திருந்த ஆட்டக்காரர்களை வீட்டிற்கு ஒருவராக சோத்துக்கு அனுப்பியதில் பந்தி விசாரிக்க முடியாமல் போயிற்று.அதும்போக ஊர் முகாமியாக தானிருக்க, உள்ளூரில் விசேசம் நடந்துக்கொண்டிருக்க கூத்தாடிகளுக்கு ஒரு நாலணாவோ, எட்டணாவோ எனாங்கொடுக்காமல், ஒரு வெற்றிலைப்பாக்கு பொகையிலை நறுக்கு வாங்கிக்கொடுக்காமல், கொட்டாங்குச்சியில் வார்த்துக்கொடுக்கும் டீத்தண்ணியோ, ஒரு சுக்குத்தண்ணியோ ஏற்பாடு பண்டாமல் இருந்துவிட்டால் இதுகாறும் செய்து வந்த பண்ணாட்டுத்தனத்திற்கு அதனாலொரு பின்னம் நேர்ந்துவிட்டால் எதைக்கொண்டு அதனை ஈடுக்கட்டுவது? கவுண்டா கவுண்டான்னா ஓய்ங்கிறான்! ஒராளுக்கு சோறுடான்னா ஊகூங்கறாண்டா இந்தூரு கவுண்டன்! என்று மணியக்காரர் வீட்டில் கை நனைத்துவிட்டு வருகையில் ஏவிடியம் பேசிய எடக்கு பிடித்த கூத்தாடியொருவன் அதை எத்தனை ஊரில் போய்ச்சொல்லுவானோ! என்ற விசனமும் சேர்ந்துகொள்ள, எதற்கும் ஓருப்பூட்டு எட்டி பார்த்துவிட்டு போகலாமென்ற கட்டாசாரத்தில் ஊர் மந்தைக்கு அவர் தனது சாரட்டுவண்டியை திருப்ப விளைந்தது வம்பு! முக்கியஸ்தர் உக்காருவதற்கென்று தருவிக்கப்பட்ட நாற்காலியில் தன் சரீகலத்தை ஓய்வாக சாய்த்திருக்க ஒருகணமுமவருக்கு இருப்புக்கொள்ளவில்லை. பத்துத்தலை ராவணேசன் கொலுவில் பதிக்கெட்ட குரங்கு வால்கோட்டையிட்டு அமர்ந்தாற்போல ஒண்ணானப்பட்ட பண்ணாடி தன் எதிரே மத்தளமடித்த பறையனும்,குழலூதிய பறையனும் பெஞ்சுப்போட்டு குந்தியிருப்பதா? காண மனம் ஒப்புமா? அண்ணாருக்கு கோபம் வந்து கண்கள் சிவந்தால் அடிப்பொடிகள் சும்மாயிருப்பார்களா? "ஆரடா கூத்தாடி? எவண்டா வாத்தியாரு? ஊளச்சாதி கழுதைங்களா! ஒங்க பொச்சிக்கெட்டக் கேட்டுக்கு அட்டாலிக் கேக்குதா? மண்ணுல குந்தி மத்தாளமடிக்கிறதுன்னாதாங் கூத்தாடும்! இல்ல தல தனியா முண்டந்தனியா கெடக்கும்!" என்று மிரட்ட மத்தாளக்காரர் பள்ளிப்பட்டி பெருமாளும், குழல்காரர் வேலாயுதமும், பெட்டிக்காரரோடு மூவரும் விரித்துப்போட்ட கோணிப்பைமேல் சத்தமில்லாமல் உட்கார்ந்து வாசிக்கலாயினர். இந்த அமளி துமளியில் தூக்கம் கெட்ட குருநாதன் முழித்தெழுந்தார். விசயம் தெரிந்தது, வேறுப் பேசவில்லை. மானம் மருவாதி கெட்டு கூத்தாடமாட்டேன்! என்று கூத்தை நிறுத்தி விட்டார். வந்தது சண்டை! கூடியது பஞ்சாயத்து! கண்டால் கையெடுக்கும்படி விதிக்கப்பட்ட ஒடுக்கப்பட்டவனின் குரல் கேட்க நாதியற்று காற்றில் கரைந்துப் போனது. தளரவில்லை குருநாதன்," சாமி நீங்க படியளக்கற பரமேஸ்பரனா இருக்கலாம்! பதனெட்டுப்பட்டிக்கி ராஜனா இருக்கலாம்! பெரிய்ய நாயாதிபதியா இருக்கலாம்! நீங்க தொட்டு இழுத்தாதான் மேச்சேரித்தேரு மறு அடி நகருங்கறது உம்மயாக்கூட இருக்கலாம்! அது பத்துப்பேரா ஒத்துக்கிட்ட சங்கதி! அதுல உங்களுக்கு பவுருண்டு! பங்கு பாத்தியமுண்டு! அவுத்த உங்க பேச்சி செல்லும்! கூத்து உங்களுக்கு தெரியாத பொருளு! அங்க என்னய படைச்ச பிரம்மாப் பேச்சின்னாக்கூட நானு வெச்சிக்கமாட்டன்! ஜதியும் சுதியும் புருசம் பொண்டாட்டி மாதர! புருசங் கட்லு மேலயும், பொண்டாட்டி பாயி மேலயும் படுத்திருந்தா சம்சாரம் நெறக்குமா?நானு நின்னுக்கிட்டுப் பாடி அவிங்க ஒக்காந்தி அடிச்சா மேளக்கட்டு நல்லாயிருக்குமா? ஆஞ்சியோஞ்சிப் பாக்காட்டி நாயஞ்செத்துப்போவுங்க! நேந்து நெரவுங்க செத்த!" என்க, அவருதவிக்கு எழுந்து நின்ற சனத்திரளைக்கண்டு கருப்புச்செட்டியாரும் தணிந்து நிதானித்து," டேய் இவனென்றா தெரிஞ்சப்பொருளு, தெரியாதப்பொருளுன்னு புது நாயம் போடறான்? ஒண்ணும் பிருவாத் தெரியிலியே! கூப்புடுறா வாயாடிப்பூசேரிய! வாக்கு கேட்டு அவஞ் சொல்ற மாதரச் செய்வம்." என்றுமருளாடியை அழைத்து சாமி வருந்தினர். உடனே அம்மன் பிரசண்டமாகி பூசாரி மீதிறங்கி,"எளச்சவிங்கன்னு எளக்காரமா நெனைக்காதீங்கடா! அவிங்களும் எம்மக்கமாருதாண்டா! ஒசக்க ஒக்காந்தி அடிக்கச் சொல்றா!" என்று தீர்க்கபிரச்சனை முடிவுக்கு வந்து அந்த இரவு மட்டுமல்ல, தொடர்ந்து அந்த வட்ட வாகறையில் ஏழு ராத்திரி கூத்தாடினாராம்!. கலைஞனுக்கு தன் சுயத்தை விட்டுக்கொடுக்காத மன உறுதி வேண்டும். குருநாதன் கலைஞர் மாத்திரமல்ல நல்ல மனிதரும் கூட.எடப்பாடி தாதாபுரம் காட்டுவளவைச் சேர்ந்த குருநாதனுக்கு உடன்பிறந்தோர் ஐந்துபேர். மூன்று தமையன்கள், இரண்டு தமக்கைகள்.தந்தை வீரய்யனுக்கும்,தாயார் பாவாயிக்கும் செல்லப்பிள்ளையாக வளர்ந்த குருநாதனின் பால்யகாலம் சேட்டைகளும், வாய்த்துடுக்கும், விளையாட்டுப் புத்தியும் நிரம்பியதாக இருந்ததினால் திண்ணைப்பள்ளிக்கூடமும் அங்கிருந்த முரட்டு வாத்தியாரும் அவருக்கு வேப்பங்காயாய் கசந்துப் போனதில் வியப்பேதுமில்லை.பிறகு தன் மாமன் மகனுடன் சேர்ந்து அரிச்சுவடிகளை தானே வாங்கிப் படித்துக்கொண்டு வந்தவருக்கு அதன் நீட்சியாக பிற்காலத்தில் கூத்துப்பிரதிகளை படைக்கும் அளவிற்கு அந்த கனமுள்ள வாசிப்பனுபவம் கைக்கொடுத்திருக்கிறது. பள்ளி நிழல்தானுறியாத தன் மகன் எண்ணற எழுத்தற துருசாகப் படிப்பதை பார்த்த தந்தையாருக்கு ஓரெட்டில் சந்தேகம் மண்டி பையனுக்கு பைத்தியமென்று ஊரெல்லாம் தூற்றிவிட, சொந்தக்கார பெரியவர்கள் இருவர் குருநாதனை சோதித்து அப்பாமர தகப்பனின் ஐயம் போக்கியுள்ளனர். தாதாபுரம் கரட்டுப்பெருமாள் கோயிலுக்கு செலவடை கொன்னவாயன்* அவர்கள் வந்து அலங்காரம் வரிக்க லைட்டு கம்பத்தடியிலிருந்து அதைப்பார்த்தவருக்கு கூத்தின் மேல் ஆர்வம் பிறந்திருக்கிறது. பிறகென்ன எந்த ஊரில் கூத்தென்றாலும் கிழடு கிண்டுகளோடுஅரையில் மொட்டக்கோவணம்,தோளில் மேல் சுண்டு சகிதமாக, நடைத்துணையாகச் செல்லும் வாத்தியாரையும் முதல் ஆளாக அங்கேப் பார்த்துக்கொள்ளலாம். கண்டதை காலாடிப்பார்க்க, காதால் கேட்டதை வாய்ப்பாட ஆடு மாடு மேய்க்குமிடமெல்லாம் குருநாதனுக்கு கூத்தாடும் சபையாகிப்போனது. ஆசை பித்தாகி ஆட்டுவிக்க, உள்ளூரில் குடியிருந்த பழைய கூத்தாடி பொன்னான் வாத்தியாரிடம் இவர் வேண்டியதற்கிணங்க, அவராடிய துரோபதை துயில் கூத்தில் முதன்முறையாக அர்ச்சுனன் வேடங்கிட்ட, கரட்டுப்பெருமாள் முன்னிலையில் குருநாதனவர்களினுடைய அரங்கேற்றம் நடந்தேறியிருக்கிறது.பின்தொடர்ந்த நாட்களில் சொந்தமுயற்சியில் தன் வயதொத்த சகாக்களுடன் சத்தியவதிக் கல்யாணம், கிருஷ்ணன் பிறப்பு,போகவதி கல்யாணம் போன்ற கூத்துக்களைப் பயின்று நிகழ்த்தி வந்தவருக்கு பதினாறு வயதில் மேச்சேரி சடையன் வாத்தியாரின் பாஞ்சாலக் குறவஞ்சி கூத்தைப் பார்த்தப் பிற்ப்பாடு ஓர் திருப்பம்! அதில் சடையன் புனைந்த குறத்தி வேடத்தாக்கத்தில் தானும் சிலவருடங்கள் பெருங்கொண்ட பெண் வேடங்களை விரும்பியேற்று அவைத்தோறுந் துலங்கி கோரிய வாலிபத்தில் மூண்ட இருபது வயதிலெல்லாம் தக்கப்படியான கூத்தாடி என்று பேர் எடுத்து விளங்கியிருக்கிறார். அன்று தொட்டு இன்று வரை அறுபதாண்டு காலங்களுக்கு மேலாகியும் இக்கலைச்சங்கின் சங்கநாதம் ஓயாது தொனித்தபடியேயிருக்கிறது. எனது விடலைபருவத்தில்தான் வாத்தியாரின் கூத்தைப் பார்க்க வாய்த்தது. அப்பொழுது எனக்கு பதினான்கு அல்லது பதினைந்து வயதிருக்கும். ஏர்வாடியிலிருந்து மாதநாயக்கன்பட்டிக்கு விருந்தாடப் போயிருந்தோம். காது குத்து- கல்யாணம், நோம்பி- நொடி,வீட்டுச்சாமி- காட்டுச்சாமி,தேரு-தெவம் என்று வந்துவிட்டால் மேச்சேரி பகுதிகளில் ஒரம்பரை அழைப்பு என்றவோர் சம்பிரதாயம் இன்றளவும் உண்டு. விருந்துக்கு கூப்பிடுவதென்றால் சும்மா அல்ல! ஒரு ஊரில் விசேசமென்றால் பெண்டுகள் பேசிவைத்து முப்பது நாற்பதுபேர் ஒன்றிணைந்து அக்கம்பக்கமோ, தூரந்தொலைவோ அதெங்கிருந்தாலும் உறவினர் வீட்டுக்கு கட்டெறும்புச்சாரிப்போல் படையெடுப்பார்கள்.ஒரு வீட்டில் எத்தனைப் பேரிருந்தாலும், சிட்டாமுட்டிகளானாலும் சரியே அவர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியே "நோம்பிக்கி வாங்க! நோம்பிக்கி வாங்க! என நெஞ்சார அழைத்து மனதார விருந்தளிப்பார்கள். அந்தச்சோலி, இந்தச்சோலி என்று சாக்குச்சொல்லி காரியத்தின் பேரில் விருந்துண்ண வாராதவர்களை "கொன்னவாயன் சமா- குருநாதன் சமா, சடையன் சமா- சின்னாளு சமா,பாப்பம்பாடி சமா- கன்னந்தேரி பச்சமுத்து சமா கூத்தாடுது சோத்துக்கு வராட்டிப்போவுது! கூத்துப்பாக்கவாச்சும் வந்துட்டு வருவீங்களாம் வாங்க" நோம்பி கும்பிடுவதின், விருந்திடுவதின் சிறப்புக்கூறாக கூத்தை முன்வைத்து அழைப்பதும் வழமை. ஆண்கள் கறிபோட, பெண்கள் சாந்தறைக்க என மாயாத வேலைகளை பகிர்ந்துக் கொள்ளும்போதே கோப தாபங்கள், குற்றம் குறைப்பாடுகள்,கஷ்ட நஷ்டங்கள், உதவி ஒத்தாசைகள் பரஸ்பரம் பரிமாறி ஒருவருக்குள் ஒருவர் இளைப்பாறிக்கொள்வார்கள். பேச்சு திசைத் தப்பி வார்த்தை தடித்து சண்டையிட்டு மண்டை உடைத்துக் கொள்வதும் நடக்கும்.குருநாதவாத்தியாரின் சமாவினரை வைத்து பள்ளத்து கட்டேறுப்பன்* தெவத்துக்கு அன்று "வன்னியன் பிறப்பு" கூத்து வைத்திருந்தார்கள். முன் வந்த பாத்திரங்கள் களைத்து ஓய்ந்த மூன்று மணி கருக்கல், அங்கமெலாம் தீயெரிய அதிவீரவன்னியனாக குருநாதன் சபையில் தோன்ற உக்கிரமாகி தகித்தது.சுமார் இரண்டரை மணிக்கூறுகள் ஆயிற்று அந்த பாத்திரத்தின் தர்பார் விருத்தாத்தங்கள் முடிவதற்கென்றாலும் கூடிய அச்சபையினின்று ஒருவரும் அசைந்தவர்களில்லை. பார்த்தகண் பூக்கவில்லை, கேட்ட காதடைக்கவில்லை! கைகள் பொத்தி, வாய் பதைக்க பக்தி சிரத்தையோடும், தொற்றவைத்த பதட்டத்தோடும் கூத்தை கண்டு களித்திருந்தோம்.இரண்டாம்முறை குருநாத வாத்தியாரைச் சந்தித்தது கரும்பு சாலியூர் ஊத்துக்கோம்பை மாரியம்மனுக்கு* 'சாரங்கதாரா ' கூத்தாட வந்தபோது. உடாங்கனை கனவு நிலையென்னும் 'வாணாசூரன் சண்டை' எனுமோர் கூத்தைப்போன்றே சாரங்கதாராவும் புழக்காட்டத்திலிருந்து அருகி மறைந்து வருமொரு கூத்து. அர்ச்சுனன் மகன் அபிமன்யு, அபிமன்யு மகன் பரிச்சித்து, பரிச்சித்து மகன் ஜனமேஜெயன், ஜெனமேஜெயன் மகன் சுரேந்திரன், சுரேந்திரன்மகன் நரேந்திரன். இந்த நரேந்திர மன்னன் சபையில் தோன்றுவது முதல் மகன் சாரங்கன் சித்திரத்தைக் காட்டி சித்ராங்கியை நயவஞ்சகமாக ஏமாற்றி மணம் முடிப்பது,அந்த ரகசியத்தை மைந்தனிடம் சொல்லப்படாதென்று மந்திரிகுமாரானாகிய சுபந்திரனை நிர்ப்பந்தஞ் செய்வது, மந்திரிகுமாரனும், சாரங்கனும் புறாப்பந்து விளையாடுவது, எதிர்பாரா சந்தர்ப்பத்தில் சாரங்கனின் மணிப்புறா சித்ராங்கி மடியில் தஞ்சமடைய, மீள புறாவைப் பெறும் பொருட்டு சாரங்கன் அந்தப்புறம் ஏகுவது, சித்திரத்தில் கண்டவன் இவனென துணிந்து சாரங்கனை சித்ராங்கி புணர்ச்சிக்கு அழைப்பது, மறுத்தவன் வெளியேற, வெஞ்சினங்கொண்டவள் சாரங்கன் மீது வீண்பழிப் போடுவது, மனையாட்டி சுமத்தும் குற்றத்தை ஆராயாமல் நரேந்திர மன்னன் மகனை மாறுகை, மாறுகால் வாங்குவது ஈறாக இந்த கட்டங்களெல்லாம் வாத்தியார் நடத்தும் சாரங்கதாரா கூத்தில் செறிவார்ந்தபகுதிகள். கதையோட்டத்தின் பல நிலைகளை குருநாதனும் அவர்தம் சகாக்களும் மெனக்கெடாமல், இயல்போட்டம் மாறாமல் அந்த புராதான காலத்தை கரைந்து நிற்றல் வழி அப்படியே கண்முன் நிறுத்தியப் பாங்கு அசாத்தியமானது.மூன்றாவது முறை நேரிட்ட சந்தர்ப்பத்தில் வாத்தியார் வல்லிய இடுங்கட்டில் மாட்டிக்கொண்டிருந்தார்.காப்புக்கட்டு முடிந்து தை பிறந்துவிட்டால் ஆடிமாதம் முடியும் மட்டும் ஊரில் இருக்கப்பட்ட சாமிகளுக்கு கொண்டாட்டத்திற்கு குறைவிருக்காது. காமாண்டாருக்கு* படையலிட்ட கரிநாளன்று சாட்டப்பெறும், ஏழு நாள் சாட்டென்றாளும் சரி, பதினைந்து நாள் சாட்டென்றாளும் சரி அதில்விழும் வியாழக்கிழமை மாமூலாக கூத்து நடத்தியே தீருவார்கள். ஊர்ப்பெரியத்தனக்காரர்கள் அவரவர்கள் நேமித்துக்கொண்ட ஜமாக்களுக்கும் இன்னும் பிறவுள்ள புதுமை விரும்பிகளுக்கும் அடிக்கடி மூளும் போட்டி பொறாமை, சண்டை சச்சரவுகளிடையே ஆனைச்சண்டையில் கொசு நசுங்குவதுப்போல வாத்தியார்கள் சிக்கி தத்தளிப்பார்கள். நெருக்கடி மிகுந்த இச்சூழலில் அம்மாபேட்டை சரஸ்வதி ஜமா பெரியத்தலைகளான கனகராஜி வாத்தியாரும், கணேசவாத்தியாரும் ஒருவருக்குத் தெரியாமல் ஒருவர் ஒரே நாளில் ஆரியக்கவுண்டனூரிலும், குருவரெட்டியூர் அண்ணாநகரிலும் ஆடும்படிக்கு வெற்றிலைப்பாக்கு வாங்கிவிட்டார்கள். சரியானபடிக்கு நிறைந்த தருணம் வேண்டி வேண்டி அழைத்தாலும் மாற்று ஜமாவிலிருந்து ஒரே ஒரு ஆளைப் பெயர்க்கமுடியவில்லை. முன்பணம் கொடுத்தவர்கள் அம்மாபேட்டை அந்தியூர் பிரிவு ரோட்டில் வண்டிப்போட்டுக்கொண்டு வந்து மணிக்கணக்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள். செய்வதறியாது கையைப் பிசைந்துக் கொண்டு நின்றிருந்தவர்களுக்கு முடை நீக்கிய ஆபத்தாந்தவனாக வந்துச் சேர்ந்தார் குருநாத வாத்தியார்! ஒரே (அபிமன்னன் சுந்தரி மாலை) கூத்தை இரண்டு நிகழ்விடங்களிலும் வைத்துக்கொள்ளலாமென்றும், வேடதாரிகளை மாத்துக்கட்டில் (இங்காடியவர் அங்கு, அங்காடியவர் இங்கு ) பாகமேற்கப் பண்டலாமென்றும், பின்னித்தி மேளத்தோடு இருப்பவர்களை தன்னோடுத் தாட்டிவிடுமாறு பணித்தவர், பன்னிருவர் இருக்குமிடத்தில் வெறும் அறுவரை இட்டுக்கொண்டு ஊர்போய்ச் சேர்கையில் இரவு மணி பத்து. கூத்துப் பார்க்கப் போன நான் ஓட்டை டிவியெஸ் வண்டியில் விடிய விடிய ஆரியக்கவுண்டனூருக்கும் அண்ணாநகருக்கும் சவாரியடித்து சலித்து ஓய்கையில் வாத்தியார்,அறம் புகழ் ஈன்ற நகர்அரசுக்கு உரிமையானஅபிமன்னராஜனிதோவந்தேன்சபையை நாடிஎன துடியாக தர்பாராகிக்கொண்டிருந்தார். என் உறக்கச்சடைவை கண்ட சுப்ரமணி(அம்மா பேட்டை கணேச வாத்தியாரின் சோதரர்) சுபத்திரை வேடமிட்டாடிக்கொண்டிருந்தவர் சுருக்கமாக தன் டூட்டியை முடித்துக்கொண்டு வந்த சுருக்கில் அங்கிருந்த இச்சிமரத்திட்டில் என்னை இளைப்பாறச்சொல்லிவிட்டு தான் ஒரு நடை ஆரியக்கவுண்டனூருக்கு போய் வருவதாக வண்டியை வாங்கிக்கொண்டார். தவிரவும் ஆடிமுடிக்கப்படாத சுபத்திரை பாகம் அவருக்கென்று அங்கு காத்திருந்தது. போனவர் போனவரே! வெகு நேரமாகியும் ஆள் துப்பே காணவில்லை! வரவேண்டிய மற்றொருவரும் வந்துச்சேரவில்லை! அபிமன்யு கானகத்தில் வேட்டையாடிக்கொண்டிருந்தவர் காதலியாம் மாமன் மகள் கமலச்சுந்தரி எட்டடுக்கு கற்கோட்டை! எறும்பேறா மண்டபம்! பத்தடுக்கு கற்கோட்டை! பாம்பேறா மண்டபத்தில் சிறையிடப்பட்ட சேதியை சுந்தரியெழுதிய நிருபம்கண்டு தெரிந்து சிறைமீட்க தாய் சுபத்திரையிடத்தில் உத்தாரம் பெற ஆனைக்குந்திப்பட்டணம் நோக்கி காற்றாய் பறந்துவந்துக்கொண்டிருந்தார். என்னாச்சோ, ஏதாச்சோ தம்பி எட்டிப்பாத்துட்டு வாங்க ஒருவிச, என்று குருநாதவாத்தியார் வேண்ட திரும்ப ஆரியக்கவுண்டனூருக்கு பயணம்போனேன்.எதிரே சுப்ரமணியை தேடிக்கொண்டு அங்கிருந்தொருவர் வரவே எனக்கோ பதட்டமான பதட்டம். கூடி இருவருந் துழாவியதில் பழையூர் முக்கில் எம்.பி நலநிதியில் வடிக்கட்டி எழுப்பிய பேருந்து நிழற்குடையினடியில் மனிதர் நாயொன்றிற்கும் தனக்கும் நடந்த அகோரயுத்தத்தில் மிஞ்சியிருந்த தாய்ச்சீலையினைக் கிழித்து கடிப்பட்ட இடத்தில் கட்டுப்போட்டப்படி விதியே என்று ஒடுங்கிப்போய்க் குந்தியிருந்தார். ஆண்வேடமோ, பெண் வேடமோ அதுவெந்த வேடமாகயிருந்தாலும் தரித்தவர் முகமழிக்காமல், கால்களிலிருக்கும் சதங்கைகளை அவிழ்க்காமல் ஆடரங்கை விட்டகலமாட்டார்கள். இட்ட வேடத்திற்கு எதாவதொரு விதத்தில் பங்கம் விளைந்தால் தன் வாழ்வில் ஏற்பட்ட மிகப்பெரிய அவகேடாக அதை எண்ணியெண்ணி வருந்துவார்கள். அன்றைக்கிருந்த இக்கட்டில் யாருக்கும் எதையும் பொந்தியிலிருத்த இயலவில்லை. அவதி பகுதியாக கிளம்பியவர் எண்ணை இல்லாமல் முண்டியடித்த வண்டியை நடைப்பழக்கிப்போயிருக்கிறார் தடத்தோர பஞ்சர் கடையில் எப்படியும் எண்ணையைப் பிடித்துக்கொள்ளலாமென்று துணிந்து!. கட்டுத்திட்டத்தை மீறி தனது காற்சதங்கையை அவிழ்க்காமல் சென்றதால் அந்த கலைவாணி சரஸ்வதியே நாயாக அவதாரமெடுத்து வந்து தன்னை தண்டித்துவிட்டதாக வருந்திய அந்த அப்பாவிக்கலைஞனை உடனடியாக பூதப்பாடி மருத்துவமனையில் அனுமதித்தப்பின் உடன் வந்தவரை ஆரியக்கவுண்டனூருக்கு அனுப்பிவிட்டு தக்க கலைஞர்களின்றி இரண்டு பக்க கூத்தும் என்ன கதியானதோ என்ற வாட்டம் மேலிட நான் அண்ணா நகருக்கு விரைந்தேன். குரு நாத வாத்தியார் நெடிது நீண்ட தன் சிகையை விரித்துப் போட்டு சுபத்திரை வேடத்தில் நின்று கண்ணனிடம்,உரிமைக்காரி நானிருக்கயாருக்கண்ணா பெண் கொடுத்தாய்சொந்தக்காரி நானிருக்கசுந்தரியை!தரலாமாஅவன் பாவி துரியனாச்சுதேஎன் ஆவி பதறலாச்சுதேஓ அண்ணா மாயக்கண்ணா!என்று அபிமன்னனுக்கு பெண் கேட்டது ஆச்சரியமென்றால் அதைவிட ஆச்சரியம், தங்கை மகனுக்கு பெண் தர மறுத்ததோடு தகாதமுறையில் அவமானப்படுத்தி கண்ணனும் அவன் மனைவி மலர்மங்கை லட்சுமியும் சுபத்திரையை விரட்டியடிக்க, தாயை அவமதித்த மாமனை கருவறுத்து கமலசுந்தரியை சிறைமீட்ட சபதங்கூறி புறப்படவேண்டிய இடத்தில் பெண் வேடத்தில் உள்ளே சென்றவர் மூன்றடி பாட்டு இடைவெளியில் மீண்டும் ஆண்வேடத்தில் வெளியில் வந்த சுருக்கு. மின்னல் வேக தோற்ற மாற்றம்! யாருக்கு வேண்டுமானாலும் சமயோசிதப் புத்தி வாய்க்கலாம், அது காரியமாவது கலைஞனிடமே! பத்தடிக்கு பத்தடி சதுரம், அம்மண் தரையே கொலுமண்டபம், சபாமண்டபம், அந்தப்புரம், ஆண்டவன் சந்நிதானம், ஆரண்யமான கானகம், படுகளம், பாடிக்கூடாரம்!!!நவீனகால காணூடகங்கள் கொண்டாட்டமாக கட்டமைக்கும் பிரம்மாண்டமான காட்சிப் பின்புலங்களுக்கு நிகரானதொரு காட்சிக்களத்தை தனியொரு கலைஞன் தனது தனித்த மெய்ப்பாடுகள் வழி நிகழ்த்திக்காட்டும் வன்மை குருநாதனவர்கள் நிகழ்த்தும் கூத்திலுள்ளது.. மற்றுமவர் ஆடும் கூத்துக்களில் சிறப்பம்சங்களென்று தருக்கள் விருத்தங்களைச் சொல்லலாம். (மரபுக்கலை வடிவமான கூத்து பாட்டுக்கள் வழி கதை நகர்த்தும் போக்கை கொண்டது) ஓர் பனுவலாக எழுத்துரு காணாத இப்பாடல்களை நாம் இன்றியமையாதனவொன்றாக கருதி படைப்பாக வடிக்கவேண்டிய காரணம் என்னவெனில் பாட்டன் பூட்டன் காலத்து பழைய சொத்து என்பதனால் மட்டுமல்ல,பொருளோடு புதைந்திருக்கும் கருத்துச்செழுமைக்கும்,வழி வழியாக பல தலைமுறை கண்டபோதும் வகைத்தூய்மை சிதையாத மூல மெட்டுக்கள்,அதன் கட்டுறுதி, இசைக்குந்தோறும் சலிக்காமல் கேட்பவரை மனங்கிறங்கடிக்கும் உள்ளுறைந்த அந்நூதனம்! சாரங்கதாரா கூத்தில் சித்ராங்கி சாரங்கன் சந்திப்பில் இருவருக்குமுண்டான தர்க்கத்தில் அமைந்த தருக்கள் இவை: சாரங்கன் சொல் தரு இங்குவந்த என்புறாவைமாதாவே தாயேஎடுத்திருந்தால் தந்திடம்மாமாதாவே தாயேமணிப்புறாவைத் தந்தீரானால்மாளிவிட்டுச் சென்றிடுவேன் சித்ராங்கி சொல் தரு மாராப்பு சீலைக்குள்ளேஎன் கண்ணாளாமானு ரெண்டு வெளையாடுதுமானை நீ பிடிப்பதெப்போஇந்த மங்கை குறைதீர்ப்பதெப்போசித்தாட சீலைக்குள்ளேஎன் கண்ணாளாசித்திரம் எழுதியிருக்குதுசித்திரத்த நீ பார்ப்பதெப்போஇந்த செல்லி குறைதீர்ப்பதெப்போ சாரங்கன் சொல் தரு விடு விடம்மா மடி விடம்மாநான் வீடு போய் சேரவேண்டும் சித்ராங்கி சொல் தரு விடுவதற்கா மடி பிடித்தேன்மெல்லியாளை என்னைச் சேரும் சாரங்கன் சொல் தருஎன் தந்தையாரும் வந்து கண்டால்தகுந்த பழி நேருமம்மா சித்ராங்கி சொல் தரு உந்தன் தந்தையாரும் வருகுமுன்னே தாட்டிடுவேன் என் மாளிவிட்டு சாரங்கன் சொல் தரு என்னை கணவன் என்று சொன்னால்அம்மாஉனக்கு கண்ணு தெரியுமோஎன்னை புருசன் என்று சொன்னால்அம்மாஉனக்கு புண்ணியம் கிட்டுமோ சித்ராங்கி சொல் தரு தாயிக்கி பிள்ளையேதடாசாரங்கதாராதண்ணி கெணத்துக்கு முறைமையேதடாசாரங்கதாராகோழிக்கி முறைமையேதடாசாரங்கதாராகொக்குக்கு முறைமையேதடாசாரங்கதாரா அச்சரப் பிழையற்ற வசனங்கள், அடிபிறழாத பாடல்கள், தாளம் தப்பாத அடவுகள், பாகத்திற்குண்டான ஒப்பனை, ஒன்றி இயைந்து பகட்டின்றி வெளிப்பட்ட நடிப்பு இவற்றின் மூலம் மட்டுமல்ல, அந்நேரமந்நேரம் தோன்றும் கற்பனையில் குருநாதனவர்கள் நிகழ்த்துதலில் உருவாக்கிய காட்சியற்புதம் அதன் தீவிரம் இன்றளவும் மனதைவிட்டகலவில்லை.தற்செயலாக திறமைசார்ந்த பற்பல அசாத்தியங்களை வெளிக்கிட்டுக்காட்டும் அளிக்கை குருநாதனவாத்தியாரின் கூத்தில் ஓர் தனித்த பண்பாகும். தொடர் ஒத்திகை, நெறியாள்கை முதலான அறிவுத்தளத்திலமைந்த செல்நெறிகளினின்றும் அதை தனித்தே இனங்காணலாம்.அறிவனுபவமாகவும், உணர்பனுவமாகவம் உள்ள படிமம் கவிதையை உன்னதமாக்கும் அத்தன்மைப்போல் அவர் பாத்திரத்தோடு பொருந்தி அதில் பற்பல மெய்ப்பாடுகளை பொதிந்து பார்வையாளனின் உள்ளத்தில் உணர்வெழுச்சியை உண்டுச்செய்யும் சமத்காரம் அவர்தம் ஆளுமையை கட்டியம் கூறும் பிரதான கூறு. கற்றலும் கற்பித்தலும் கலைஞனை புதுப்பிக்குமோர் பாரிய செயற்பாடு! நிகழ்வுதோறும் கற்றுதெளிந்ததோடு மெய்வேல்,நல்லூர் பெரிய மாது, சாத்தனூர் வெள்ளையன்,பொன்னான்,சோரகை மணி, மட்டம்பட்டி பழனி,போன்ற வளப்பமான சீடப்பிள்ளைகளை வளர்த்தி ஆளாக்கி நிகழ்த்து கலையுலகில் அழியாச்சுவடுகள் பதிக்க வைத்துள்ளார் வாத்தியார். இங்குகலைஞனென்றும் கலைவாழ்க்கையென்றும் பேதங்களில்லை.வறண்டபூமியில் பொங்கலிட்டு உண்டுகளித்த உடல் உழைப்பாளிக்கு, நாளுக்கு நாள் கூடிய உழைப்பில் பாடு ஏற்றிய சேகு ஆகச்சிறந்த கலைக்கூறுகளை அவனுள் உற்பவனம் செய்வதோடு அவனை வாதைகளை பகடியாக்கும் தேர்ந்த கலைஞன் ஆக்குகிறது. காதறுத்தல்:நோம்பி சாட்டும் முகமாக நடப்படும் கம்பத்திற்கு (மூன்றடிக்கு ஐந்தடி ஆழம்) வெள்ளாட்டு கிடாயின் காதறுத்து இரத்தப்பலி கொடுத்த அன்றைக்கு மரம் தேர்ந்து அக்கம்பத்தில் உருவம் வடித்தமைக்காக ஆசாரிமார்களுக்கு அக்கிடாய் இனாமாகக் கொடுக்கப்படும். கம்பம் நடுதல்:கம்பம் நடுவது நோம்பி சாட்டுதலில் முக்கியமான சம்பிரதாயமாகும். கார்த்த வீரியார்ச்சுனனை மனதிலெண்ணியது ஓரு குற்றமென வன்கொலை செய்யப்பட்ட ரேணுகா பத்தினி உருமாறி தெய்வமாக நின்றபோழ்து அம்மணி உனைப் பிரிந்து யாம் உய்வது எங்ஙகனம்? என்று ஜமதக்னி முனிவர் தம் பெண்டாட்டியை கேட்க, கலியுகத்தில் மக்கள் எனக்கு நோம்பி சாட்டி விழா எடுக்கும் அந்த பதினைந்து தினங்கள் மாத்திரம் கம்பத்தில் வனைந்த சிற்பமாக தன்னோடு உறையலாம் என அம்மன் சொன்ன ஐதீகப் பிரகாரம் முற்றிய பாலை மரத்தை தேர்ந்து ஆண் உருவை செதுக்கி தூய நீராட்டி மஞ்சள் சந்தனம் தடவி சிறப்பு பூசனையிட்டு கோயில் தலைவாசலில் அம்மன் முகம் பார்க்கும்படி நட்டு விடுவார்கள்.கம்பளிக்கூத்துமாமன் மைத்துனர் முறையுள்ள உறவுக்காரர்களிரண்டுபேர்களுக்கு உடலில் கம்பளி சுற்றி, முகத்திற்கு மாறுபட்ட ஒப்பனை செய்து தாளக்கட்டுக்கு ஏற்றவாறு அடவில் பகடி கலந்து ஆடும் ஆட்டம் கம்பளிக்கூத்து. இதற்கென்று பாடப்பெறும் தனிப்பாடல்களும் உண்டு. செலவடை கொன்னவாயன்சொந்த பெயர் குஞ்சிப்பையன்.தந்தையார் இராமசாமி படையாச்சி சேவாட்டத்தில் மிகச்சிறந்த விற்பன்னர். தகப்பன் வழி காலடவு ஆட்டங்களில் விஞ்சிய ஆட்டம் கொன்னவாயன் அவர்களுடையது. கூத்தில் தனக்கென்றுவோர் தனி பாணி அமைத்து அதையும் சிறப்பாக செய்து வந்தவர்.சாரங்கதாரா கூத்தில் அவரிட்டு விளையாடும் சாரங்கன் வேடம் மக்களிடையே வெகுவான மதிப்பை பெற்றது.கட்டேறுப்பன்( கட்டு ஏரியப்பன்):சேலம் ஜில்லா, மேட்டூர் வட்டார வன்னிய குடிகளின் காவல் தெய்வமாகிவிட்ட மூத்த குடித்தலைவன். முஸ்லீம் பெண்ணை சிறையெடுத்து (நங்கியம்மனாக) இணை சேர்த்து கொண்டதனால் வழிபாட்டு முறைகளும் இசுலாமிய வழிபாட்டு முறைகளையொட்டிய பழக்கங்கங்களாக உள்ளது. (அருள் வந்து சாமி பேசுகையில் உருது மொழியில் பேசுவதாக சொல்கிறார்கள். மண்டிபோட்டு வணங்குகிறார்கள்.) ஆதி பதி வாணியம்பாடி திருப்பத்தூரிலும், இன்ன பிற பதிகள் சேலம் கீரை பாப்பம்பாடி, மாதநாயக்கன் பட்டி, கொப்பம் புதூர் ஆகிய இடங்களில் கிளை பிரிந்து அமைந்திருக்கிறது. காமாண்டார்தைமாதம் மூன்றாம் கிழமை கரிநாளன்று காலை, பிள்ளை பிராயத்திலுள்ள இருபால் சிறார்கள் மணியடித்து பாட்டுப்பாடி ஊர் சோறெயெடுத்து பிள்ளையார் கோயில் முன்பதாக கூடியதை உண்ட பிற்பாடு அங்கிருந்து ஒரு அரை மைல் தூரத்திற்கு ஒட்டப்பந்தயம் விடுவார்கள். தோற்றவர்கள் ஆணோ பெண்ணோ அவர்களை காமாண்டார் பெண்டாட்டி என தெரிவு செய்துஅன்று மாலைபொழுது இறங்கியபின் ஆறோ, ஏரியோ, கிணறோ ஊர் எல்லையிலுள்ள நீர் நிலைக்கு சென்று களிமண் எடுத்து வந்து ஆணுரு (காமாண்டார்) பெண்ணுரு(காமாண்டார் பெண்டாட்டி) பிடித்து வைக்க அவரவர் பெற்றவர்கள தங்கள் குழந்தைகளுக்கு இட்டு அழகு பார்ப்பதுபோல வெள்ளியோ,தங்கமோ, பித்தளயோநகைகளை அப்பிரதிமைகளுக்கு போட்டு அலங்கரித்து கூடி நின்று கும்மியடித்து,மாவிளக்கோடு பழந்தேங்காய் படைத்து வழிபடுவார்கள். பெரும்பாலும் பிள்ளை வரம் கேட்டு வரும் கோரிக்கைகளே அதிகமுமிருக்கும். விடிந்தபின் அப்பொம்மைகளை மீண்டும் பிள்ளையார் கோயில் வாசலில் எரியூட்டிவிடுவார்கள்.manalveeduhttp://www.blogger.com/profile/11701810894595985945noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-891272482416127046.post-80850952577508951882009-05-22T11:24:00.001-07:002009-05-22T11:27:49.739-07:00பாதரவு - மு. ஹரிகிருஷ்ணன்<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjef9o5q79VCmf2xy-TRy5qi_bhTxbVDI65HIcYlMU_OE1U9A-l_IxBejQlsPbW-PHlHk-8TZondsz8VvHn-WeC34bLoWvdmk0MZxF3QOHeN-BPIZbnWd_rSvC5s2gH6nuNPjlil7wod6sD/s1600-h/patharavu.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5338716203785071714" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 314px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjef9o5q79VCmf2xy-TRy5qi_bhTxbVDI65HIcYlMU_OE1U9A-l_IxBejQlsPbW-PHlHk-8TZondsz8VvHn-WeC34bLoWvdmk0MZxF3QOHeN-BPIZbnWd_rSvC5s2gH6nuNPjlil7wod6sD/s320/patharavu.jpg" border="0" /></a><br /><div>சத்திப்பையன் வெச்சிருந்தது மொத்தம் எம்பது உருவாப் பின்னுக்குத்துக்காசு, ஒருப்பொட்டலங் குருணமருந்தும் ரெண்டு பாட்லு கோட்டரும் வாங்கி, ஒண்ண அப்பயே மூடிய திருவி வாயில ஊத்திக்கிட்டான், இன்னோன்ன வூட்டுக்கு கொண்டி ஒடச்சி அதோட இந்த குருண மருந்தையுங் கலக்கிக் குடிச்சிப்புடலாமுன்னு திட்டம், பின்ன என்னாப்பின்ன? இன்ன மேட்டும் அந்த உசுர வெச்சிருந்து ஆவப்போறதென்னா? சொத்து அழிஞ்சாலுஞ் சொல்லு அழியக்கூடாது, காத்தால ஒரு பேச்சி,மறுக்க மத்தியானம் ஒரு பேச்சா? <br />ஒடமையின்னு அவங்கிட்ட இந்தது அது ரெண்டுதான், அதுவும் அவஞ்சம்பாரிச்சதில்ல, அடமானம் வந்தது, நகுலூரு சுப்பனது அரப்பவுனு மோதரம், சௌரந்தரங் கோமாளியிது வாஸ்சு! நாளைக்கி ஒருநாளு குறுக்க, மறாநாளு ரெண்டு பேருந்சம்பந்தி, எதுப்பொண்ணு கட்டிக்கிறது. இந்தநாலு வருசமாக் கூத்தாடி அவந்தொச்சமா வெச்சிருந்தது அந்த மூவராயிரம் உருவா மொள்ளதான். அன்னிக்கி இருந்த பசையில ஆத்தர அவசரத்துக்கு கேட்க றாங்கன்னு ஈடுமானம் வாங்கிக்கிட்டுத்தான். காசக் குடுத்தான், அதயே தொழுவாடாப் பண்ற வள்ளலுமயிரு அவனுக்கு தெரியாது, அவன் அப்பேருகந்த ஆளுமில்ல, பழவுன தோசத்துக்கு ஒரு ஒதாரண நெனைக்கப்போயி பங்கம் வந்துட்டது.<br />வாங்கனவிகளச் சொல்லிக் குத்தமில்ல. அவிங்க குடுத்த தெல்லாம் ஒரு நாலணாப் பாக்கியில்லாம திலிப்பிக் குடுத்துட்டாங்க, இவனேத்தான் இவந்தலயில தட்டப்பொருத்தி வெச்சிக்கிட்டான், இந்தப் பித்தியா வாத்தியாருமாருங்க இவனுக்குச் சொல்லிக் குடுத்தாங்க?<br />மொதமொத பொன்னான் வாத்தியாரிண்டதான் இவங்கூத்துப் படிச்சது, கொன்னவாயனாக் கெடந்தவன வாய்கூட்டிப் பேச வெச்சி, பாட்டும், அடவுஞ் சொல்லிக் குடுத்தது அந்தப் புண்ணியவாந்தான்.! மவராசன குளுந்த நேரத்துல நெனைக்கனும்.! ராவுல கும்புட்டுட்டுப் படுக்கணும்.! என்னா அந்தாளுக்கிட்ட ஒருசிக்கலுன்னா எதயுத் திருத்தமாச் செய்யணும், இல்லையின்னா அவன் எதுப்புற நிக்க முடியாது. என்னாப் பண்டுவான். ஏதுப்பண்டுவான்னு அவனுக்கே தெரியாது. ஒரெட்டு ஆருலுப்பட்டி ஏரிக்கி அந்தாட்ட வெள்ளக்கல்லுப்பட்டியில முனியப்பந்தெவத்துக்கு கூத்துவுட்ருந்தாங்க, நளதமயேந்திரிக் கண்ணாலம் நாடகம்.! பொன்னாவிக தம்பிக்காரன் மணிப்பையன், நளச்சக்கரவர்த்தி வேசம்போட்டுக்கிட்டு வெளிய போனவனுக்கு சவய அடக்கிப் பேசத்தெரியில. அவம்பாட்டுக்கு என்னென்னம்மோ ஔப்பரிச்சிக்கிட்டுக் கெடந்தான், பொன்னானுக்கு கோவம் ஒண்ணுந் தாக்குப்புடிக்க முடியல, வலப்பையில வெச்சிருந்த பொறந்தவன் வேட்டிய எடுத்து ஒருப்பாட்டுக்கு ஒருக்க,<br />“கிழிஞ்சிப்போச்சிப்போ<br />கிழிஞ்சிப்போச்சிப்போ”!ன்னு<br />ஒருச்சாணுத்துணி மிச்சமில்லாம நூலு நூலாக் கிழிச்சியெஞ்சிப்புட்டான். விடிஞ்சி மணிப்பையன் முண்டக்கட்டயோட ஊரு மூப்பமூட்ல போயி பழைய வேட்டி வாங்கி கட்டிக்கிட்டு ஊடுபோயிச் சேந்தான். <br />இன்னோரெட்டு, பக்க நாட்டுச் செட்டுக்கு ஆளுப்பத்தலைன்னு பொன்னானும். அவம்பங்காளி பெரிய கூவானும் போயிந்தாங்க, கொழலுல கூவாம் பேரேடுத்த ஆளு! அபி மன்னஞ்சண்டயோ, அர்ச்சுனந் தேவப்பட்டமோ அதென்னமோவொரு அலங்காரம் வெச்சிருந்தாங்க, பொன்னானுக்கு விடியாலம் வேசம், சேரிச் செத்தபடுத்துக் கண்ணசரலாமுன்னு டேசிக்கிப்பொறன படுதாவ விரிச்சுட்டு படுத்துக்கிட்டிருந்தான். பக்கநாட்டுச் செட்டுல ஆனையப்பன் ஆனையப்பன்னு ஒரு படயாச்சி பொண்ணு வேசக்காரன், அவனொரு சனஞ்சேராத நாயி! பொறத்தியாருன்னா அவனுக்கு பேண்ட பீய திலிம்பிப்பாத்தாப்பல ஓக்காளம், தானுங்கற கெவுரத்தி.<br />“சீருடன் தொண்டர் நாவில்<br />செழித்து வளர்பவளே போற்றி!<br />நாரணன் ஈன்றெடுத்த நான்முகன்<br />தேவியாளே!<br />சரஸ்வதி சாரதாம்பா உன்<br />தாழ்வினை போற்றி! போற்றி! ன்னு”<br />மூணடி விருத்தத்த முழுசாப் போடல, ஆனையப்பந் தொண்ட பொட்டிய அப்பிடியே கண்ணாப்பின்னான்னு கலைச்சது, மும்பாட்டு பணிக்கில்லையின்னா பிம்பாட்டுத்தான அத நேந்து நெரவுணும். கூவான் நெட்டா ஒரு அகவலு ஊத, உள்றயிருந்த ஆனையப்பன்.<br />“ஆர்ராவங் ங்கோயா பரதேசிப் புண்டமேல ஒக்க! என்றா கொழலு ஊதற, புண்டக்கொழலு? எங்கயிருந்துடா வர்றீங்க பறத்தாயாலிங்களா எம்பட தாலியறுக்க? அப்பிடியிப்பிடின்னு இன்னும் என்னனென்னம்மோ எச்சா வார்த்த பேசும்பிடி பொறனப் படுத்திருந்த பொன்னானுக்கு ஒவ்வொருச் சொல்லும் இந்த அல்லையிலக் குத்தி அந்த அல்லையில வருது, பின்ன என்னாப்பின்ன தானாடலையின்னாலும் தஞ்சரிகலம் ஆடாதா? எப்பேருகந்த தொழிலாளி? என்னா சேதி? வையகத்துல அவன பழிக்க ஆளுண்டா? குசல நாடகத்துல<br />சாமியும் வந்தாரா<br />சண்டைகள் செய்தாரா?<br />அனுமந்தப் பாலா ன்னு<br />அவன் ஊதறானே அந்த ஒருப்பாட்டுக்கு ஈடாவானா?இந்த ங்கொக்காளவோலி!<br />அவங்கால்ல ஒட்ன தூசி! இவனுக்குப்பாருவொரு மண்டக்கணத்த இருக்கட்டுண்டா ஒறக்கழுட்டிமாப்ள!<br />விடியறதுக்குள்ள உன்ன சின்னம் பண்ணலைன்னா ங்கப்பனுக்கே நாம் பொறக்கலைடான்னு மனசுல வெச்சிருந்தாம் பொன்னான்.<br />ஆனையப்பங் கழதயாட்டங் குதிச்சிப்புட்டு தர்பார முடிச்சிக்கிட்டு உள்ற வந்தான். மண்டையச் சுத்தி வழிச்சாலும் அவந்தலையில ஒரே மூணு மசுருச் சிக்காது. அக்கியானம் புடிச்சவன், ரெண்டடி சவுரி நால ஓட்டுக்கா வரிஞ்சி அதயே பூவு கீவெல்லாஞ் சிங்காரிச்சி நெத்தியோடச் சேத்தி சடையாட்டங் கட்டிக்கிவான். குதிக்கற முட்டுங் குதிச்சிப் புட்டு வந்து அத அவுத்து வெச்சிருவான்.<br />அன்னிக்கும் வந்தவன் மசுத்த தளத்தி பட்டிக்குச்சியிலக் கட்டிப்புட்டு வேசம் போட்டுக்கிட்டிருந்த சீனாங்கிட்ட பீடி வாங்கி பத்த வெச்சிக்கிட்டுக் குந்தியிருந்தான்.<br /> மொழங்காலு குழி பொறிச்ச பொன்னான்,அலுங்காம அத அவுத்து குழிக்குள்ற போட்டு மண்ணத்தள்ளி மூடி,மேல படலப் பிரிச்சிப்போட்டு படுத்துக்கிட்டான், நாயம்பேசற முசுவுல ஆனையப்பனும் இதயெதயுங் கண்டுக்கல, அவஞ்சாயிண்டு வேசக்காரன் குஞ்சிப்பையன் தர்பாரு ஆவும்போதுதா எந்திரிச்சி சடயப் பார்த்தான், அது கட்ன தாவுல இல்ல.<br />“ஆயா ங்கொம்மா" ன்னு<br />பேசிக்கிட்டு தொழாவு, தொழாவுன்னு தொழாவுனா எங்கப்போயி அதுச் சிக்கப் போவுது? முடி இல்லாம மொட்டத்தலயோட எப்பிடி சவைக்கி வாறது? இவன் வேசத்த பொது வசனமாப் பேசி சரிக்கட்டிக்கிட்டாங் கு ஞ்சிப்பையன். இருந்தாலும் விடியாலம் ஒரு வேசம் வரவேயில்லைன்னு நூறு உருவாச் சொனயான ஆட்டமுட்டவங்க பாணிப்பண்டிப்புட்டாங்க.<br />அப்பேருகந்த ருஸ்தமான வாத்தியாரிண்ட வித்த கத்து என்னாப் பிரயோசனம்.?<br />அப்பறம்,<br />சிறுசுப் பெருசாச்சி, செட்டுங் கந்தறயாச்சி. பொன்னாங் கூப்புட்டுச் சொல்லிப்புட்டான்.<br />“அடே அடே சத்திப்பையா! இதப்பார்ராச் சாமி, உனக்கு பொழைக்க தடங்காட்டியுட்டுட்டன். நீயிப்போயி நெனப்பா பொழைச்சிக்கடாப்பா, இந்தச் செட்டயும். உங்களையும் கட்டி மாரடிச்சிக்கிட்டிருந்தா எம்பொண்டாட்டிப் பிள்ளைங்க கஞ்சிக்சிச் செத்து வீணாப் போயிருவாங்கடாப்பா”ன்னு.<br />கோழி, குஞ்சப் பிரிக்கறாப்பல பிரிச்சுட்டு அவரு கூப்புட்டப்பக்கம் கூத்துக்குப் போவ,,,,<br />சத்திப்பையன் அங்கயிருந்து எடப்பாடிக்கிப் போயி பொன்னியூட்டு மண்டயங்கிட்டச் சேந்தான், மண்டயன் ராவுலக் கூத்தாடி, பவல்ல சந்தப் பீச்சாண்டி.!<br />மொவங்கழுவி கண்ணாடிய எடுத்து, மின்ன வெச்சி வேசம் போட ஆரம்பிச்சா, அந்தக் கூறுமுஞ்சி காட்ற சேட்டைக்கிப் பயந்தே முக்காவாசிப்பேரு அந்த செட்லயிருந்து ஓட்டம் புடிச்சிருக்கறாங்க. நாயம் அநியாயங்கறது அவந்தலக் கட்டுக்கே தெரியாது, எல்லாந் சுதாரிச்சியிருந்தா எதோ ரெண்டு விசியஞ் தெரிஞ்சிக்கலாம்.<br />பேயிக்கி தாலிக்கட்னப்பொறவு சுடுகாட்டுக்கு பயந்தென்னா ஆவப்போவுது ? இவம் பாவம் படாத நிமுசுப் பட்டுக்கிட்டு அவனே கெதியின்னுக்கெடந்தான், மண்டயனுக்கு ஒரு கூத்தியா கந்தாயி, கந்தாயின்னு அவனோடவே இருந்தா கூத்தாடிக்கிட்டு. குஞ்சாம் பாளையத்துல ஒரு ஆட்டத்தன்னிக்கி சத்திப்பையந் தல கழுவிக்கிட்டு வந்துருந்தான்.<br />மைப்பந்துப்போட்டு ஊற வெச்ச எண்ணயப்பூசி பூசி அவனுக்கு மொழங்காலுமுட்லும் மசுரு, என்னதாஞ் சிக்கெடுத்துச் சீருப்பாத்தாலும் முடிஞ்சக்கொண்டய அவுத்தா அதோட மல்லுக்கட்டிதாம் படியவெக்கணும்!. வாக்கு அவ்வளச் சீக்கரம் பிரியாது. இவம்பாவம் கவடத்து<br />"கந்தாயிக்கா, கந்தாயிக்கா! இந்த தலயச் சித்த நேரெடுத்து ரெட்டச்சடப் போட்டுவுடுக்கா” ன்னு<br />கேக்க, அவளும் பாவஞ் சூதுவாது தெரியாம வாடா தம்பியின்னு ஒக்காரவெச்சி பெரும்பல்லுல நெவு நெவுன்னுச் சீவி ரெட்டச்சடப் பின்னிவுட்டா.<br />அன்னமுட்டும் மண்டயன் அவள நோட்டம் பாக்கறது ,பையன நோட்டம் பாக்கறது, வேசம் போடறதுன்னு கொறவனாட்டங் குந்தியிருந்தான். சத்திப்பையன் எந்திரிச்சி சீலயக்கட்டி சலங்காயக் கையிலெடுத்து,சாமிய வருந்தி கால்லச் சுத்திமுடிப்போட்டுக்கிட்டு, அரினனா,,,னா.ன்னு ராகம் போட்டான், கிடீர்னு ஒரு வொத கந்தாயிப்பிள்ள அல்ல வவுத்தக்கட்டி வுழுந்ததுப் பாரு, வடக்கத்தி படலோட அய்யோ யெஜ்ஜான்னு பொம்பள புழுதிக்காட்லப் போயி வுழுந்தா.<br />"ஏண்டி தேவிடியா! கொண்டவங் கொடுங்கையில, கொள்ளாதவன் உனக்கு மாரு மேலயாடி"ன்னு<br />மண்டயன் மூக்குல புளுத்துப்போயிக் கேக்க, சத்திப்பையன் நெட்டா அவங்காலடியில வுழுந்து<br />“அய்யோ வாத்தியாரே தப்பித் தவறிக்கூட உன்னு வாயால அப்பிடிச் சொல்லாத வாத்தியாரே அந்த தாயி ங்கம்மாளோட ஒணணு வாத்தியாரே”ன்னு<br />கெஞ்சிகெதர்றான்.<br />“ஏண்டா ங்கோயாலோக்க மொளச்சி மூணெலவுடல அதுக்குள்ள கூத்தியாச் சேத்தறயா கூத்தியா" ன்னு<br />வுட்டாம் பொத்துன்னு அவனுக்கு ஒருவொத! தெக்கித்திப்படலோட அவனும் புழுதிக்காட்ல போயிவுழுந்தான், வொதயத் தின்னுப்புட்டு என்னம்மோச் செரிக்கட்டி பொழுத ஒட்டி கதய முடிச்சி மங்கலம் பாடனாங்க. விடிஞ்சது, வேசத்த அழிச்சிப்புட்டு இவம்போறதுக்குள்ள மண்டயன் பைட்டேண்டு மோரிமேல தலகிழுதா கெடந்தாங் குடிச்சிப்புட்டு.<br />"வாத்தியாரே சம்பளம் வாத்தியாரே"ன்னு<br />பையங்கேட்க அந்த ஒணவு கெட்டவன் துள்ளிக் குதிச்செந்திரிச்சி,<br />"டே செட்டுக்கு வந்தமா குடுத்த வேசங்கட்டி ஆடனமான்னு உன்றச்சோலி மசுர பாத்துக்கிட்டுப் போயிக்கிட்டேயிருக்கனும், சம்பளங் கேக்கறப்பாரு, இந்தவொரு வேலப்புண்ட மட்லும் எங்கிட்ட வெச்சிக்காத"ன்னுப்புட்டு<br />திலுப்பியுங் குப்புற அடிச்சிப்படுத்துக்கிட்டாம் போதயில, என்னமுட்டும் நின்னுக்கிட்டிருக்கறது? பொட்டியத் தூக்கி தலமேல வெச்சிக்கிட்டு பதனெட்டு மைலு நடந்தேப்போயி வூடுச் சேந்தான்,<br />மண்டயங்கிட்ட சின்னப்பட்டு சீரழிஞ்சி ஒண்ணும் மோசம் போவல, ஒரு நல்லகாலம் பொறந்தது, மணிப்பையம் மறுக்கவுஞ் செட்டுக் கட்டனான், சத்திப்பையன் நாயா பேயா ஒழைச்சான், உருப்பிடியா தொழிலச் செஞ்சான், நாலுபேரு பரவால்ல சத்திப்பையன் வேசம் நல்லயிருக்குதுங்கற ரெவலுக்கு வந்தான், பொறவு சத்திப்பையன் இல்லையின்னா ஆட்டம் நெறக்காதுங்கற அளவுக்கு ஆச்சி, அவங்கையில ஒரு நூறு எரநூறு பொழக்காட்டம் போட்டது, அப்பறம் பாத்துக்க மாப்ளைக்கி கொம்பு மொளச்சிட்டுது, அறுப்புக்காலத்துல பெருக்கானுக்கு ஆறேழு கூத்தியாருன்னு சும்மாவாச் சொன்னாங்க?<br />பண்ணாடிக்கி போனபக்கம் பொண்டுங்க தொடுப்பு! பொழுது விடிஞ்சாலும் நழிச்சலு, கூட சீசாத்தண்ணீயும் போட பழவிக்கிட்டான், என்னம்மோ ங்காயா மேச்சேரி பத்ரக்காளி மொவம் முழிச்சி அவஞ்சாரீரத்த கெடுத்து பொழப்பல மண்ணள்ளிப் போடாம வுட்டுவெச்சிருந்தா.<br />இந்தக்கத இப்பிடியிருக்க.<br />சத்திப்பையனோட வீரப்பன் வீரப்பன்னு ஒரு குளுவன், அவனும் பொண்ணு வேசக¢காரஞ் செட்ல ஆடிக்கிட்டுயிருந்தான், பெருமைக்கிச் சொல்லல, தாயாலிக்கி கத்தியாட்டத்தொண்ட, முடிஞ்ச மட்லும் அவனும்பாவம் செட்டுக்குப் பாடுபட்டான், பாஞ்சாலக் கொறவஞ்சி நாடகம் வெச்சி அதுல இவங்கொறத்தி வேசங்கட்டிக்கிட்டு<br />சத்தியதுரோபதைக்கி தருமதயாளரும் விடையளித்து<br />சித்தமுங்கலங்கிவாடி தயங்கியே இருக்கும்போது<br />பத்தினி ரூபம்மாறி பாலனை இடுப்பில் வைத்து<br />அத்திமாநகரம் நோக்கி அம்மனும் வருகின்றாளே!ன்னு<br />விருத்தம்போட்டு<br />பாஞ்சால குறவஞ்சி வந்தாளே- பாலனையேந்தி<br />பாஞ்சால குறவஞ்சி வந்தாளே<br />பாஞ்சால குறவஞ்சி வந்தாள் பார்த்தாவ- பாலனாயேந்தி<br />செஞ்சிபதியாளுமம்மன் சிரசினில் கூடைவைத்து<br />நினைத்தகுறி தானுரைக்க நீலவர்ண மாயவரே<br />நீரும் வந்துதவவேணும் நினைத்தக்குறி சொல்லவேணும்<br />அக்கினியில் வந்துதித்து ஐவருக்கும் தேவியாகி<br />அக்யாதவாசம் விட்டு அத்திபுரம் போகலானேன்<br />முத்துமணிரத்தினங்களால் முடைந்து கட்டும் கூடையேந்தி<br />மூடனிட வாசலுக்கு முறைசொல்லப் போறேன் சாமி <br />சண்முகனார் அளித்த சதிரான கூடையேந்தி<br />சண்டாளன் வாசலுக்கு தான்போக நீதியாச்சே<br />ஆயனே மலர்கண்ணா அண்ணா அவரவர்க்கு குறியுரைக்க<br />அத்திபுர வீதிவந்து அமர்ந்திருக்க வேண்டும் சுவாமி.<br />மாபாவி துரியராசன் மானபங்கஞ் செய்திருக்க<br />மடையனிட வாசலுக்கு மாதுபோக காலமாச்சே<br />வனமாய் வனங்கடந்து வந்தேன் இருண்டவனம்<br />அந்தவனந்தனிலே ஆயனே துணை வருவாய்-ன்னு<br />இந்தப்பாட்ட பாடிக்கிட்டு வெளிய வந்தான்னா அடேயெங்கப்பா அவங்கொறத்தி வேசத்த அடிச்சி ஆட இன்னொருத்தன் பொறந்துதான் வருணும்.<br />மணிப்பையனும் மத்தாளக்காரன் பள்ளிப்பட்டி பெருமாளும் ஆளுங்க நெலவரத்தக்கண்டு செட்டுச் சம்பளத்த நேக்கா ஏப்பமுட ஆரம்பிச்சிக்கிட்டாங்க மூவாயிரஞ் சம்பளம் வாங்கனா ஆயிரந்தள்ளி ரெண்டாயிரம் போட்டுப் பிரிக்கிறது, ரெண்டாயிரஞ் சம்பளமின்னா உருவா ஆயிரந்தாங் கணக்கு, சத்திப்பையன் ஒருநாளு<br />“அடேய் நல்லவாயஞ் சம்பாரிக்கறத நாரவாயந் திங்கறாப்ல திங்கறிங்க. தின்னுத் தொலையிங்க, தூரந்தொலயா இருந்துப் பாவம் பத்து இருவது பஸ் சார்சுப் போட்டுக்கிட்டு வர்ரான் வீரப்பன். அவஞ்செலவுக்கு உண்டானத ஒரு அஞ்சிப்பத்து சேத்திக் குடுங்கடான்ன ததுதாம்ப்பா"....<br />“அடடா கூத்தாடிங்களே! பரவால்ல நல்ல நாயம் பேசிப் படிவிட்டீங்க. எங்களுக்கு தெரியாதாச் சம்பளம் பிரிக்க. குடுக்கறத்த வாங்கிக்கணும். கொலாய மூடிக்கிட்டு இருக்கணும், இதுதாஞ் செட்டு நடமொற! நாங்க வர்றவிங்கள வான்னுஞ் சொல்லல, போறவிங்கள வேண்டாமின்னுஞ் சொல்லல, இந்த சரோசாதேவியும் கே,ஆரு, விசியாவும் இல்லையின்னாச் செட்டு மாண்டாப் போவுது இல்ல பூன'கண்ண மூடிக்கிட்டா பூலோவம் இருண்டுப்போயிருமா?" ன்னு<br />கீட்டகம் பேசும்பிடி சத்திப்பையன் விசுக்குனு கௌம்பி வூட்டுக்குத் திலும்பிக்கிட்டான், மறாவது நாளு கூத்து இவனும் வீரப்பனும் போவாம நின்னுப்போச்சி. மணிப்பையஞ் சைக்கிலு எடுத்துக்கிட்டு சத்திப்பையமூட்டுக்கே வந்துட்டான்.<br />“என்றாச் சத்தி இப்பிடி சல்லியம் பண்றாப்ல பண்டிப்புட்ட? நீ பேசி வாங்கன வெத்தலப்பாக்கு, ச்சாமிச்சாமியா இருப்பியாம், இன்னிக்கி ஒரு நாத்திரியும்வந்து ஆடிக்குடுத்துர்றா. இல்லன்னா ஊருக்கரவத்தானுங்க ஈட்டுக்குச் சிக்கிப்போயிரவமுடா”ன்னு<br />அவங்கிட்டயும் அங்கயிருந்தபொண்டு பிள்ளைங்ககிட்டயும் நாயஞ்சொல்லி அழுவாத கொடுமயா கூப்புட, இவனுஞ் சேரி சேரின்னு போனான். போயி வேசம்போட்டு ஆடனான், விடிஞ்சி பெருமாளே வந்து இவங்கிட்டப் பேச்சிக்குடுத்தான்.<br />“ஏண்டாச் சத்தி நீரடிச்சி நீரு வெலகுமாடா? அப்பிடி என்றாப்பா நாஞ்சொல்லப்புட்டன்னு உனக்கு பொணக்கு வந்திரிச்சி, என்னம்மோ ஒரு பெரியமனுசன் வௌயாட்டுக்குப் பேசனா அதப்போயி கூரியமா மனசல வெச்சிக்கிறதா”ன்னு<br />கொழையிறான். கொணாய்க்கிறாஞ்சும்மா, இவனும் தொலையிதுடான்னு இருக்க அன்னிக்கி திருப்பியும் உருவா அயிநூறத்தின்னுப்புட்டாங்க நெண்டுப்பேரும், இவனும் வீரப்பனும் ஒரே முடுவாச் செட்டுக்கு போறதில்லன்னு தீருமானம் பண்டிக்கிட்டாங்க.<br />ஆட்டத்துக்கு போவலையின்னாச் சோத்துக்கு ஆரு குடுப்பா? அதும்போவ ஆடனகாலும் அவுசாரி போனப் பொச்சும் சும்மாயிருக்குமா? <br />கெடயில காலுத் தங்காம நத்தமேடு குளுவவமூட்டாரோட நாளு ராத்திரிக் கூத்துக்குப் போனாஞ் சத்திப்பையன்.<br />ஆரு ஆரோ ஆடறாங்க! பல பட்டறயுங் கூத்தாடுது அடோ சாமீ! கூத்துக்குன்னுப் பொறந்தவிங்க குளுவமூடுதான் நண்டுச் சிண்டு குஞ்சி குளுவான்னு சிறுகால் மட்டத்துலயிருந்து பெருங்காலுமட்டம் மட்லும் எதலயும் பூந்து வந்துருதுங்க அதுங்கச் சமாச்சாரமே வேற.<br />அவிங்க எசைக்கும் இவனோட எசைக்கும் ஒண்ணும்ரைனு வரல, ஆனா எடங்கண்டு பேசி தடங்கண்டுப் போறது எப்பிடின்னு அவிங்கக்கிட்டப் படிச்சிக்கிட்டான் உன்னப்பாரு என்னப்பாருன்னு கெழுடு கிண்டுங்களப் பாத்துக்கிட்டு எத்தன நாளைக்கி ஊட்டுல குந்தியிருக்கறது, அதும்பொறவு தொரசங்கட்டி ஏகாபுரத்துச் சுப்ருண்டப் போயி எடஞ்சேந்தான் அலங்காரத்துக்கு.<br />சுப்புரு ஒத்த உருவாயாயிருந்தாலுந் சேரி இன்னொருத்தங் காசுக்கு ஆசப்பட மாண்டான் ஒலக அனுப்பவம் தெரிஞ்சவன் எடப்பாடி மகுடஞ்சாவடியக்கட்டி, கெழக்க சேலம், தெக்க ராமக்கல்லு ஒருக்கோடியா பேரு தெரிஞ்ச கூத்தாடி. கொணம் மணம் ஆட்டம் பாட்டமின்னு, அவஞ்சங்கிதியே தனி. கச்சிதமான தொழிலாளி, நெலக்கடயானப் பாட்டுக்காரன். பதனெட்டாம் போர்க்களம் வெச்சி இவந்துரியோதனங்கட்டி,<br />“பாராளுந் திறமையிலாப் பாவியானேன்<br /> பஞ்சவர்மேல் போர்தொடுத்தே விருதாவானேன்<br />தூறாதமரம்போல வொண்டியானேன்<br /> துணையிழந்த பேடதுபோல் தவிக்கும்பாவி<br />நாராசங்காச்சிவிட்ட பான்மை போலே<br /> நடுநடுங்கி மெய் சிலிர்த்து துரியன்தானும்<br />பொறாமையுள்ள சகுனி சல்லியன் சூழப்<br /> போர்களத்தைக் கண்டு குறைமேற்கொள்வானே”<br />ன்னு, விருத்தம் போட்டு,பொறவு<br />பாவி துரியன் வந்தனன் ரணகளத்தில்<br />துரோகி துரியன் வந்தனன் ரணகளத்தில்<br />பாவி துரியன் வந்தேன் பாராச் சமர்களத்தில்<br />ஒண்டிக்கி ஒண்டியானேன் ஒருமரத்தோப்பானேன்<br />சிந்தனையில்லாது சிறகிழந்த பட்சியானேன்<br />பாவி துரியன் வந்தனன் ரணகளத்தில்”<br />ன்னு, பாட்டுப்பாடி வெளிய வந்து, படுகளத்துல வீமங்கெதயில அடிப்பட்டு காலொடிஞ்சி சாவற முட்டும் அவனப்பாத்து அழுத கண்ணுச் சிறுத்துப் போயிரும். சுப்புரிண்டப் போனப்பொறவு பரவால்ல. நல்லச் சேம்பரம் வரும்பிடிக்கும் ஒண்ணும் பஞ்சமில்ல.<br />கண்ணுச் சாளேசுரத்த கெவுணிக்க கெதியில்லாம திண்னையக் காத்துக்கிட்டு கெடந்த அவிங்கப்பங் கருப்பன மதுர கண்ணாசுப்பத்திரிக்கி கூட்டிப்போயி ஆப்பரேசன் பண்டி கண்ணாடி மாட்டிவுட்டான். மூட்டு வலியின்னும் மொழங்காலு வலியின்னும் வருசக்கணக்கா நடயில்லாம பாயிக்கி தொணயாப் படுத்துக்கிட்டிருந்த அவங்காயா செவிடிய ஈரோட்டு எலும்பாசுபத்திரிக்கி கொண்டி வைத்தியம் பாத்தான். அவந்தாயி தங்கப் பொண்ணூட்டுப்பிள்ள வயிசிக்கி வந்திச்சி, அதுக்கு அரப்பவுனு தோடு மூக்கித்தி ஆயிரம் உருவாயிக்கிச் சீலத்துணி மணி பதனேழு தட்டு வரிசயோட புளியம்பட்டி பல்லனையும் ஒலகடம் பூவரசனையுங் கூட்டியாந்து நையாண்டி கரவ முட்டாட்டி தெரட்டிச் செஞ்சாஞ் செரீங்கறாப்பிடி.. வவானித் சித்தாத்துல ஒருப்பொண்ணப் பாத்து அவனும் ஒரு கண்ணாலங் கார்த்திச் செஞ்சிக்கிட்டான்,அரமணைக்கிவொரு ஆம்பளப்பையனையும்,ஒரம்பரைக்கிவொரு பொட்டப்பிள்ளயையும் பெத்துக்கிட்டான், ஏழப்பால பொழச்சிட்டுப் போவுதுன்னு ங்கெப்பன் மவராசன் எம்,சி,யாரு அவிகப்பனும் ஆயாளும் போயி சம்பாரிச்ச சொத்துல காலனிக்கட்டிக் குடுக்க, அதுக்கொரு அய்யாயரம் வாக்கரிசிப்போட்டு சொந்த வூடுங்கட்டிக்கிட்டான்.<br />இதெல்லாம் மூணு நாலு வருசத்திக்கி மிந்தின ராமாயணம் மகாபாரதம், சுத்தமா இந்த வருசமும், போன வருசமும் பையம் பட்ட சித்ரவத பகவானுக்குதாந் தெரியிம், நேத்து வந்தானாங்குடி அவந்தலயில வுழுந்திச்சாம் இடிங்கறாப்பிடி உள்ளங்காலு வெள்ள எலும்பு தேய ஓழைச்ச சம்பாரிச்சி கட்ன வூட்ல எண்ணி எட்டு மாசங்கூட இந்தப் பையன் இருந்துப்பொழைக்கல.<br />மேக்க அந்தியூருக்கு அந்தல்ல எழுதிய மரத்தய்யங்கோயிலுக்கு கூத்தாடிப்புட்டு கழுத்துமுட்டும் கவட்டான் வரிச்சிக்கிட்டு வந்து மப்புல அவம் மச்சாங்காரன கண்டாரக் கழுதயின்னு பேச அவனிருந்துகிட்டு “இதாப்பாரு கடவுளே! என்னம்மோ கெடந்துசாட்டாவுது, நம்ப தங்கச்சிப் பிருசன் நம்பதங்கச்சிப் பிருசன்னு இத்தன நாளா நானும் வெச்சிப்பாத்தன், இன்னமேட்டும் போதப்போட்டுக்கிட்டு வந்து ஒரு வயசிப்பிள்ளைங்க இருக்கற எடத்துல நேந்தப்பிடி கொச்ச கோளாறு பேசிக்கட்டு திரியற வேல<br />நம்பளுக்குச் சுத்தப்படாது, மட்டு மரிகேதிய கெடுக்கறதுக்கு மின்ன வூட்டவுட்டு அந்தண்ட தாண்டிக்க”ன்னு<br />ஒரேவார்த்தயிலச் சொல்லிப்புட்டாங் கறாரா.<br />வெத்து மேலுல ஈமிய்க்க துணிமணியில்லாமக் கெடந்தவன் சிவுக்குனு எந்திரிச்சி சிண்ட ஒதிறித் தட்டி முடிஞ்சிக்கிட்டு இடுப்புலயிருந்த ஒட்டுக்கோமணத்தோட அப்பனாத்தா பொண்டாட்டி பிள்ளைங்கள கூட்டிக்கிட்டு அம்மாபேட்டைக்கி வந்து, பரசத்தாட்டி பூலாம்பட்டி வந்துட்டான்.ஆறுமாசம் ஒருவருசம் ஆவுமிந்தியே,அப்பனையும் அம்மாளையுந் தின்னு தண்ணிக் குடிச்சிப்புட்டான். அம்மா செத்த எலவுக்கு பொண்டாட்டி மூக்குல. காதுல இருந்தது அடவுக்குப் போச்சி, அப்பஞ்செத்த காரியத்துக்கு அந்த மோதரமும் வாஸ்சும் போச்சி.<br />மின்ன மாதரயா நோம்பி நொடிக்கி ஆட்டமுடறாங்க? இப்பத்தாங் குண்டியாட்டம் பாத்துப் பழவிக்கிச்சே சனம், எடவெளியே இல்லாம அலங்காரமா வந்து குமிஞ்ச எடத்துல கூத்துங்கறதே அறுதியாயிக்கிச்சி, கூழோ. கலியோ. கூப்புனு அரிசிச்சோறோ கொல நனஞ்சாப் போதுமின்னு வவுத்துப்பாடே பெருசாப்போச்சி, இதல எங்க அடமானத்த மூக்கறது, ஆறு மாசத்துல வட்டியும் மொதலுங்குடுத்தவனுக்கு இன்னிக்கி. நாளைக்கின்னு சாக்குச் சொல்லியே வருசம் ஒண்ணத் தாட்டியாச்சி.<br />தலமேல இருக்கறச் சொமயா கொண்டாடா நாஞ்சித்த தூக்கியாரமின்னு வாங்கிக்கிறதுக்கு உருவாச்சமாச்சாரம், இந்தக் காலத்துல ஒருத்தம் பொழைக்கறதப் பாப்பானா? பெறத்தியாங்கயிட்டத்தப் பாப்பானா? நகுலூருச் சுப்பனும். சௌந்தரங் கோமாளியும் ஆன முட்டும் இவஞ்சொல்ற தவுமானத்தக் கேட்டுக்கிட்டாங்க, ஆனாக் கண்ணாலக் காரியமாச்சே ஒரு நவ நட்டு இல்லாம எப்படி? பாக்கற வரைக்கும் பாத்துட்டு சுப்பஞ் சுருக்குனு ஒருச்சொல்லு சொல்லும்புடி சொல்லுப் பொறுக்க மாண்டாம ஒடி பனங்காட்டு மொண்டிச்சிக்கிட்ட ஒத்தைக்கி டவுலு கந்து வட்டிக்கி காசவாங்கி மோதரத்தையும் வாஸ்சயும் மூட்னதெல்லாம் மிந்தாநேத்தே மூட்டிப்புட்டாள் ரெண்டுநாளா ஆடவேண்டிய ஆட்டம் மழைக்கி நிக்கிம்பிடி அவுங்களும் நேர்ப்படல, மக்யாநாத்து சலகண்டபுரம் மதுர காளியம்மன் கோயில்ல அலங்காரம் இருந்தது, நேர்ல கொண்டி குடுக்க மொடப்பட்டுக்கிட்டு சேரி அங்க வந்தா பொருள ஒப்படச்சிப்புடலா மின்னுச் சிலேட்டமா இருந்தான். வெனய தேடிக்கிட்டான்.<br />செட்டுக்குப் போயும் தரித்தினியம் தொலயில, நீட்டாத கைய நீட்டி வாங்காத பக்கம் மொள்ளய வாங்கி வெச்சிட்டமே. எடப்பட தடப்பட எங்கியாச்சும் கூப்ட்டப்பக்கம் போயி பத்தஞ்சி ரெண்டு உண்டுன்னாச் சம்பாரிச்சாத் தானே கடங்கட்ட முடியிமின்னு மத்த செட்டுக்கும் போயிக்கிட்டிருந்தாம் பையன்.<br />வடச்சட்டிக்கிப் பயந்து அடுப்புல வுழுந்தாப்பிடி ஆயிப்போச்சி அன்னிக்கி இவங் கூத்துக்குப் போன கத, நம்ப சங்கிரி அஞ்சிப்பனையாண்ட கொரங்கச்செட்டுதுதாஞ் சதுரு, ஆனா கூத்துவுட்ட கரவத்தானுங்க பொண்ணு வேசத்துக்கு இவந்தான் வேணுமின்னு தனிச்சம்பளத்துக்கு பேசி வண்டிப்போட்டுக் கூட்டிக்கிட்டுப்போனாங்க.<br />கொரங்கனோட கூத்தாடறதும் ஒண்ணு அந்த நறவல்ல காலு வெக்கறதும ஒண்ணு, ஆலாமரத்துலக் குந்திக்கிட்டு கொரங்கு எம்புளுலேச் செம்புளுலுன்னுத் தடவித் தடவிப் பாக்குமாமே அந்த மாதர<br />ஒருச்சுக்குந் தெரியலைன்னாக் கூட என்யைவெட பெரிய புளுத்தி எவனுமிந்த பூமியிலியே இல்லம்பான், அவனோட ஒராளு வேசம்போட்டு ஆடுதுன்னா அவனுக்கு அடங்கித்தான் இருக்கணும், கடுகத்தன மீர்றதுக்கில்ல, அப்பிடி எங்கியாச்சுந் தப்பிடியா ஒருத்தங் கொண்டயம் போட்டுட்டான்னா இவன் விடியறதுக்குள்ள எதோவொரு வகயில அவன மொக்கப்பட்டம் பண்டிப்புடுவான், அரியானூரு பழனிசாமியிலிருந்து தானாதியூரு அர்ச்சுனன் முட்டும் அவஞ்சில்ரப்பித்திய செருப்பலடிக்காதவங்களே இல்ல, துரோபத துயிலு நாடகம், மடத்தூரு ஆறுமொகம் திரியோதனன், கொரங்கந் துச்சாதனன் சத்திப்பையம் பாஞ்சாலி. செட்டிப்பட்டி சின்னாளு அர்ச்சுனன். சித்தூரு பழனி தருமரு, திரியோதனந் தர்பாருக்குப் பொறன பாண்டவரு அஞ்சிபேரும் தர்பாரு ஆனாங்க, பகடயாட்டம் முடிஞ்சி. துச்சாதனன் துரோவதி சந்திப்புக்கட்டம்.<br />“மதித்த துரோபதையே நீதான் மானமுள்ளவளே யானால்<br />தித்தரும்நூற்றோர்அன்புவேணும்என்பவளேயானால்<br />கொதித்திடும்எந்தன்அண்ணன்கொலுவிற்குவரவேச்சொன்னார்<br />எதிர்த்துரை சொல்லாமல் யென்பின்னே வாராய¢“ <br />“மட்டும் மருங்கும் மரியாதி இல்லாமல்<br />பொட்டெனவே எனையழைத்த<br />புத்தியில்லா மைத்துனரே<br />தோற்றமுடி உங்கள் அண்ணன்<br />சூழ்ந்திருக்கும் சபையில் என்னை<br />இட்டு வரச் சொன்னவிதம் எனக்கறியச் சொல்வாயே“ <br />“வள்ளியே தருமபுத்திரன்<br />வலிவந்த சூதுமாடி முன்னிலும்<br />நாடுநகரம் முழுவதும் தோற்றான் பெண்ணே!<br />தன்னையும் தோற்றான் தம்பிமாரையும்<br />தோற்றான் உன்னயுந் தோற்று நின்று<br />ஒடுங்கினான் வந்து பாராய்“<br />“என்னையும் சொக்கட்டானில் வைத்து<br />இசையவே தோற்றார் என்றால்<br />என்மன்னவர் ஐந்துபேரும் வரவழைத்திடுவார்<br />காண் உன்னயும் யார்தான்<br />கண்டார் உன் தமையைனையும் யார்<br />தான்கண்டார்? பின்னமா பேசாதே<br />பேசாமல் நடந்திடுவாயே“<br />“நடக்கத்தான் வந்தேன் வந்தேன்<br />ஒரு நாழிகை தனிலே யுன்னை<br />ஒடுக்கத்தான் வந்தேன் வந்தேன்<br />வேந்தர்கள் சபையின் முன்னே<br />கெடுக்கத்தான் வந்தேன் வந்தேன்<br />கெர்வத்தை அடக்க வந்தேன்“<br />“துரோகியே இதுவென்ன சொல்லடா<br />என்னை தொடவேண்டாம் தூரநில்லடா<br />நெருப்பென்று தெரியாது நீசனே நீயாடாதே<br />கருத்தினால் கெட்டு வீணாய்க் கருகிப்போகாதே“<br />“தொட்டு இழுக்காமல் போவேனோ<br />போனால் துரியந்தம்பி ஆவேனோ<br />செத்தமாடும் பில்லுத் திங்குமா இனி<br />உஞ்சித்திர மினுக்கெல்லாம் செல்லுமா“<br />இந்த மாதர பாட்டுக்குப் பாட்டு விருத்தத்துக்கு விருத்தம் சத்திப்பையன் வுட்டுக் குடுக்காமப் போடும்படி, கொரங்கனுக்கு வேக்காடு ஒண்ணும் பொறுக்கமுடியல.<br />"போடுசா பொக்க "<br />"போடுசா பொக்க "ன்னு<br />சும்மாவே அல்லையில காரிக்காரித் துப்பிக்கிட்டிருந்தான்.<br />போடுசா பொக்கன்னா கூட ஆடற வேசக்காரன தொம்பரூட்டு பாசையில நாஸ்தி பண்றது, இவன் என்னாப் பண்டறான், ஏதுப்பண்டறான்னு கண்ணுறுத்துப் பாத்துக்கிட்டிருந்தாஞ் சத்திப்பையன். ஹூம் அவனுக்கா தெரியாது பல தண்ணி குடிச்சவனுக்கு. இருந்தாலும் தொழில தொழிலாச் செய்யனுமின்னு,,, பையங் குட்டு வுடல.<br />துயிலுரியறக் கட்டம் வந்தது, எப்ப அந்தக்கட்டம் வருதோ,,, தொரவதி வேசக்காரனும். துச்சாதன வேசக்காரனும் இன்னதுதாம் பண்றமின்னு ரக்கு தெரிஞ்சி வெளையாடனும். இல்ல மந்தையில மானங்கெட்டு நிக்கணும், இதுதாண்டா சமயமின்னு எடங்கண்டு ஏறி மிதிச்சாங் கொரங்கன், ஏமாந்த வாக்குல நின்னு,<br />வசனம் பேசிக்கிட்டிந்த சத்திப்பையஞ் சீலயப் புடிச்சி வெடுக்குனு இழுத்தாம் பாத்துக்க...... அவம் போட்ருந்த படி முடிச்சறுந்து முக்காச்சீல கொரங்கங் கையோட வந்துட்டது. அதறப்பதற அலயக்கொலய இப்பிடிச்செஞ்சா ஆருக்குத்தான் வெறி திலும்பாது? கங்கேடு மதிகேடா நட்ட நடு டேசியில போயிநின்னு சத்திப்பையன்,<br />“அடே கொழுந்தா! ஏண்டாப்பாவம் இவ்ள கயிட்டப்படற? இப்ப என்னா உனக்கு எம்பண்டத்தப் பாக்கணும் அவ்வளத்தான. இந்துரா பாத்துக்கடா”ன்னு<br />பாவாடய தூக்கி காட்டிப்புட்டு உள்ற போனவந் திரும்பி வரல, பிதுமாரு கெட்டுப்போச்சி, ஆயிரம் ஆட்டம் ஆடியிருக்கிறான், ஒரு நாளயிலியும் இந்த அவுமானம். நேந்ததில்ல.<br />பாஞ்சாலி சவதங் கூறாம கதய முடிக்க முடியாது, கூத்துட்டவங்க வந்து கெஞ்சிக் கொறமாட சத்திப்பையஞ் சாராயம் இல்லாம வெளி வரமாண்டேன்னுப்புட்டான், அஞ்சிப்பனையில சாராயத்துக்கா பஞ்சம்? நிழுசங் கொண்டாந்து குடுத்தாங்க சிலுவருப்போவுணி வழிய. சரக்கு அடிச்சிக்கிட்டுப் போயி ஒண்ணா ரெண்டா பாடி சந்தடைச்சிப்புட்டு வந்து வுழுந்தவன் உச்சி வெயிலு பொச்சியில அடிச்சப்பொறன எந்திரிச்சிப் பாத்தா, ஏப்பா கையிலிந்த மோதரத்தையுங் காணம்.! Õவாஸ்சயுங் காணம்! அவ்வளத்தாம் பையம் ஒடம்புல உசுரு இல்ல. கூட்ல ஆவியில்ல, எதக்கண்டு செரிக்கட்றது இருக்கற தொந்தரவ?<br />ஒடமக்காரஞ் சும்மாயிருப்பானா? மின்னயே “வயித்துக்கு என்றாத் திங்கறன்னு கேட்டுப்புடல? ஊருக்கெணத்தாண்ட ஒக்காந்தி வேசம் அழிக்கறப்பவே சத்திப்பையம்மேல சாவுக்கவுச்சி அடிச்சது, மொள்ள சங்கிரி வந்து அங்கயிருந்து முருகம்பஸ்ல ஏறி பூலாம் பட்டி வந்துச் சேந்தான்.<br />இவந் தலயக் கண்டதும் பையனும் பிள்ளயும் 'ஓ'ன்னுக்கத்தி கொணாய்ச்சிக்கிட்டு ஒடியாந்ததுங்க, பொட்டியக்கீழ வெச்சிட்டு கையிக்கு ஒண்ணாத் தூக்கயில தாயாலிக்கி எங்கிருந்து அத்தன ஆவுசம் வந்ததோ தெரியல! மென்னு முழுங்கறவனாட்டம் ரெண்டுங்களயுஞ் சொட்டவுடாம கடி கடின்னு கடிச்சி முத்தங் குடுக்கறானேச் சண்டாளப் பாவி!.<br />கள்ளு முள்ளு தெரியாத நிதானமாயிருந்தாலும் அதுங்களுக்கு நொறுவ வாங்க மறக்க மாட்டான், காலோட பின்னிக்கிட்டு வாற பிள்ளைங்களுக்கு பாலோடச் சோறூத்தலையின்னாலுங் கூட அகங்கைக்கிப் பத்தனத வஞ்சனையில்லாம வாங்கிப் போட்டு திங்கடிப்பான், அன்னிக்கிப்பாவம் வெறுங்கையோடதான் வந்தான், அதுங்களும் பாவம். அதப்பத்தி கண்டுக்கல, அப்பனோட சிரிச்சி மவுந்ததுங்க, ஒருச்சித்தய குடுமியப்புடிச்சேறி வௌயாண்டுதுங்க, போன நாயம் வந்தநாயம் பேசிக்கிட்டு அதுங்க தூங்கறதுக்கே ராவு வெகு நேரந்தாண்டிப் போச்சி...<br />தூக்கத்துல வில்லிதான், இருந்தாலுங் கடங்காரு வந்து போட்ட ரவுசுல சத்திப் பொண்டாட்டி காத்தாலப் புடிச்சே சோறுத்தண்ணியில்லாம கெடந்தா, வெறும் வவுத்துல எப்பிடி தூக்கம் புடிக்கும்? காலொருபக்கம், கையொருப்பக்கமா மாருமேல கெடந்த பிள்ளைங்கள தூக்கி ஒரு ஒரமாபோட்டுட்டு பொண்டாட்டியிண்ட வந்து படுத்தான், கண்டதும் அவ இவங் கோளாற நெனச்சி அழுதா,,, அழுதா,,, ஒயாம அழுதா.. சொல்ற சமாதானமெல்லாஞ் சொன்னவன் ஒண்ணும் வேலைக்கி ஆவாம பையம் ரவுக்குனு பண்ணயத்துல முசுவா பூந்துட்டான், வேணும் வேணாங்க உப்ப மழ அந்நேரம் பிச்சிக்கிட்டு ஊத்துது, வேர்த்த ஒடம்பு காத்து வேணுமிங்க பிருசனும் பொண்டாட்டியுந் திண்ணையில குந்தி மிய்க்க. மிய்க்க பொழைக்கற நாயம் பேசனாங்க.<br />காத்துச் சிலச்சிலுப்புக்கு கண்ண சொழட்டிக்கிட்டு வரும்பிடி அவ ஒருபக்கங் கட்டயச் சாய்க்க, இவனும் ஒருபக்கம் சாக்க விரிச்சுட்டுப் படுத்துக்கிட்டான், புருசம்பெருமயில பொம்பளைக்கி மசத் தூக்கம் மாயமா வந்துட்டது.. <br />சத்திப்பையன் சுத்தியும் ஒருவட்டம் எசவிருக்குதான்னு நோட்டமுட்டுட்டு இடுப்புல கைய வெச்சிப்பாத்தாங் குருண மருந்துப்பொட்டலம் பத்ரமாயிருந்தது,,,,ச்சேரி மாடப் பெரையில ஒளிய வெச்சிருக்கற வெராந்திப்பாட்ல எடுக்கனுமே, குந்தனவாக்குல பூனையாட்டம் நவுந்து மொள்ள எந்திரிச்சி, ஒரு எட்டு தரையில வெச்சவன் மறு எட்டு வெச்சான் மவக்காரி மணிக்கட்டுமேல! எளங்கையிக்கும் அதுக்கும் எலும்பு ச்சடக்குனு முறிஞ்சது.<br />"ரே யெஜ்ஜா" ன்னு<br />பிள்ள ஒரேக் கத்தா கத்த<br />"அய்யோ மவளே"ன்னு,<br />தன்னப்பால பையங்கையி படக்குனு ரைட்டப்போட்டது</div>manalveeduhttp://www.blogger.com/profile/11701810894595985945noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-891272482416127046.post-16201772040285237682009-05-22T10:35:00.000-07:002009-05-22T10:40:21.631-07:00அக்கப்போரு - மு. ஹரிகிருஷ்ணன்<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEisfCiqzP3urh8fBnV0nvYvgOY5i737QNm3bTiQgDIxpS8rw9-fmKi7r80MB12YkhQyV16UPWsL3SWB93dswjjmzNkqB5cyC2c8kZ6DhcVfo3vJUVl4P2ZAXiaW9Ig3VnHuN6henwq_D4wW/s1600-h/Akkaporu.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5338704056177536738" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 268px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEisfCiqzP3urh8fBnV0nvYvgOY5i737QNm3bTiQgDIxpS8rw9-fmKi7r80MB12YkhQyV16UPWsL3SWB93dswjjmzNkqB5cyC2c8kZ6DhcVfo3vJUVl4P2ZAXiaW9Ig3VnHuN6henwq_D4wW/s320/Akkaporu.jpg" border="0" /></a><br /><div>அறியாமையின் பாற்பட்டு எனக்கிருக்கும் சில கேள்விகளை வாசகர் மத்தியில் வைத்துவிட்டு அக்கப்போரை துவங்கலாமென்று நினைக்கிறேன்.<br />மகத்துவமானதொரு சனநாயகம் சமத்துவமாக நிலவி வருகின்ற நமது செந்தமிழ் நாட்டிலே மக்களுக்கான கலை இலக்கியத்தைக் கட்டிக் காப்பாற்ற இயல்- இசை - நாடக மன்றம் என்றதொரு அமைப்பு சீரும் சிறப்புமாக செயலாற்றி வருகிறது.<br />மேற்சொன்ன அதிகாரப்பூர்வ கலைவளர்ப்பு உரக் கம்பெனியின் செயலாளராக இளையபாரதி என்னும் கவிஞர் பெருமகனார் கொலுவிருந்து பரிபாலனஞ் செய்து வருகிறார்.<br />உடையவன் பரிமாறுகையில் அடிப்பந்தியில் இருந்தாலென்ன? கடைப்பந்தியில் இருந்தாலென்ன? என்று இந்த பாழாய்ப்போன ஏழை நிகழ்த்துக்கலைஞர்கள் (பனைமரத்து நிழலும் ஒன்று பங்காளி உறவும் ஒன்று என்ற விகல்பம் அறியாத தோற்பாவை, தெருக்கூத்து, கட்டப்பொம்மலாட்டக் கலைஞர்கள்)நாட்டில் என்ன நடக்கிறது, ஏது நடக்கிறது என்ற அரசியல் உணராது, சச்சின் திரைக்காவியத்தில், முன்னே இளைய தளபதி விசய் அண்ணன் தொந்தியும் தொப்பையுமாய் செனிலியா அண்ணிக்கூட குண்டு மாங்காத்தோப்புக்குள்ள வண்டுப்போல வந்தேனே என்று குத்தாட்டம் போட்டபடி காதல் பண்ணிக்கொண்டிருக்க பின்ணணியில் தகீர்தாஜுன திகீர்தாஜுன என்று ஓரடி ஆதி தீர்ப்பில் அடவு பிடித்து ஆடிக்கொண்டிருக்கிறார்கள் .கள்ளம் கவடற்று காத்திருக்கிறார்கள் தங்களது கலைச்சேவையுங் கவனங்கொள்ளப்படுமென்று........<br />"அம்மா நாயி சோறுக்குடிக்க மாட்டிங்குது '' என்ற மகனிடம்<br />" அப்பனுக்கு ஊத்துடா''என்று தீர்க்கும் பண்ணையக்காரிச்சி கதையைப்போல கடந்த 2006ல் சிலம்பரசன், விஷால், ஜெயம் ரவி, வினித், திரிஷா......இன்னுமுள்ள பெரியத்திரை., சின்னத்திரை கலை ஆளுமைகள் நுப்பத்தொரு பேர்களுக்கு இட்டதுப்போக மீதியொரு நான்கு கிராமியக்கலைஞர்களுக்கு கலைமாமனி விருது வழங்கப்பட்டிருக்கிறது. அன்பர்களே இங்கு என்னை இடறிய ஐயம் என்னவெனில் விழிக்கு அஞ்சனந் தீட்டிக்கொள்ளவும், மொகரக்கட்டைக்கு ஒப்பனைச் செய்துக்கொள்ளவுந் தெரியாத ,மெய்ப்பாடு என்பதை கிஞ்சித்தும் அறியாதவர்தம் ( மொதல்ல பொட்டிக்கி சேத்தி நாலடிப்பாட்டு பாடத்தெரியிமா? விருத்தம் போடத்தெரியிமா? தாளத்துக்கு சேத்தி ரெண்டு அடவதாம் புடிக்கத்தெரியிமா? சொந்தமா வஜனம் பேசத்தெரியிமா? இப்பிடி எதுந்தெரியாத பிசுக்கோத்து பசங்க , பிள்ளைங்க எல்லாங் கண்ணுக்குத் தெரியறாங்க ) அருமை பெருமைகளை கருத்திலிருத்தி கலைமாமனி விருது கொடுத்து கௌரவிப்போர்களுக்கு , வெறும் நாலே நாலு கிராமியக்கலைஞர்கள்தாம் கைக்குச் சிக்கினார்களா?<br />பாட்டின் பிழை பொறுக்காது அதிகார தகனமெரித்தும் வீழாது தமிழை உய்விக்க வாழ்ந்த கீரனின் வழி வந்த இளையபாரதியாரே! எங்கே உமது நடுவு நிலைமை?<br />நும் தெரிவு நெறிகளில் நேர்மையில்லை, பழுது, பிழை இருக்கிறது<br />நானிங்கே இந்த பழைய குப்பையை கிளற முகாந்திரங்களுண்டு..........<br />இயல் -இசை- நாடகமன்றம் செவ்வனே இயங்கிக்ªகொண்டிருக்கிறது என்றுச் சொன்னேன் அல்லவா.... அது மாத்திரமன்றி<br />நசிந்து தேய்ந்துப்போன கலைஞர்களின் வாழ்க்கைப் பாதையை செப்பனிடும் முகத்தான் செல்லுப்படியான 2007 ஜூன் மாதம் உரூவா ஒன்றுக்கு மக்களின் வீடு தேடிவந்து அவர்தம் அறிவுத்தாகத்தைத் தீர்த்து வைக்கும் பிரபல்ய நாளேடான தினகரனில் நலிந்த நிலையில் வாழும் சிறந்த கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்திற்கான விளம்பர அறிக்கை ஒன்றை இவ்வமைப்பின் முகாமையில் அரசு வெளியிட்டிருந்தது.<br />அதில் கண்ட பிரதான ஷரத்துப்படி நிதியுதவி பெற விழைவோர்க்கு அரசு நேமித்திருக்கும் வயது வரம்பு 58.<br />ஐம்பத்தெட்டு வருடத்திற்கு முந்திப்பிறந்த கிராமியக்கலைஞர்கள் அறுதிப்பெரும்பான்மையினருக்கு ஏட்டுச்சுரைக்காயென்றால் என்னவென்றேத் தெரியாது<br />பூர்த்தியாக எல்லோரும் கைநாட்டுப் பேர்வழிகள்! <br />ராவெல்லாம் கூத்தாடிவிட்டோ, பறையடித்துவிட்டோ, பொம்மையாட்டிவிட்டோ வருவோர் சோறுத்தண்ணி இல்லையென்றாலும் அகப்பட்ட இடத்தில் தெக்க வடக்க நெப்பில்லாம பொச்ச நெட்டுக்கிட்டு தூங்குபவர்கள்!<br />நாட்டு நடப்பு கிடக்கட்டுங் கழுதை!<br />சினிமாக்காரிகளின் விரி தொடையழகு காவிரிச்சி விளம்பரங்களுக்கிடையே இங்ஙனம் வெளியாகும் துக்குளியூண்டு அரசு செய்திகளை ஓதி விளக்கஞ்சொல்ல அவர்களுக்கொரு கதியுண்டா?<br />நலிந்த கலைஞர்களனைவரும் எண்ணறக்கற்று எழுத்தற வாசிக்க கூடியவர்கள் என்று தாமாகவே அரசு நம்பிக்கொண்டிருப்பது எவ்வளவுப்பெரிய பைத்தியக்காரத்தனம்?<br />சங்கடத்தில் பிள்ளைப் பெற்று வெங்கட்டம்மா என்று பேர் வைத்தது மாதிரி என்னம்மோ சாங்கியத்திற்கு இம்மாதிரி நலத்திட்டங்களை பேப்பரில் மட்டும் அறிவித்தால் ,போதுமா???<br />பாமரக்கலைஞர்களுக்கு கருதிய பலன் கிட்டுமா?<br />முதலில் நிதியுதவி வேண்டுவோர்க்கு படிவத்தில் விதிக்கப்பட்டிருக்கும் நிபந்தனைகளை வாசியுங்கள்<br />"அரசாங்கம்,ரசிகர்கள்அல்லது பிரபல கலை நிறுவனங்களிடமிருந்து தங்களுக்கு விருது, பாராட்டு, சன்மானம் வழங்கப்பட்டிருந்தால் அவற்றின் விபரம் குறிப்பிடவும் சான்றிதழ்களின் நகல்களை இணைக்கவும்(மறைந்த கலைஞரின் மனைவி விண்ணப்பிப்பாரெனில் கணவர் பாராட்டுப் பெற்ற விவரங்களைக் குறிப்பிட வேண்டும்)" நிபந்தனை-8<br />" தங்களையும் ,தங்களுடைய கலைத்தகுதிகளைப் பற்றியும் நன்கு அறிந்தவர்களை (தங்கள் துறையில் பிரபலமாக உள்ள)இரண்டு கலைஞர்களிடமிருந்து தங்களைப்பற்றிய பரிந்துரைகளைப் பெற்று இத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும் பரிந்துரை வழங்கியுள்ள இரண்டு கலைஞர்களின் முகவரிகளையும் குறிப்பிடவும் முக்கியமானதெனக் கருதப்படும் தாங்கள் பங்கேற்றுள்ள கலைநிகழ்ச்சிகளுக்கான அழைப்பு ,அறிவிப்பு , விளம்பரக்குறிப்பு, ஆகியவற்றினையும் தாங்கள் பெற்றுள்ள பாராட்டிதழ்களின் நகல்கள் ஆகியவற்றினையும் கண்டிப்பாக இணைத்து அனுப்பவும்" நிபந்தனை-9<br />மேலோட்டமாகப் பார்க்கும்போது எளிமையானவைப்போல தோன்றும் இவற்றைப்போன்றே விண்ணப்பத்தின் பல ஷரத்துகளில் பூர்த்திச் செய்யமுடியாதபடிக்கி பல குளறுபடிகள் உள்ளன. முதலில் கலைஞர்கள் என்றால் அரசுக்கும் சரி அதுவியக்கும் இயலிசை நாடக மன்றத்தார்க்கும் சரி புத்தியில் உறைந்துப்போயிருப்பது சினிமாக்காரர்கள்,டிவிக்காரர்கள் ,கர்நாடக இசைமேதைகள், ஆர்மெச்சூர் நாடகக்காரர்கள் கடைசியாக ஒப்புக்குச் சப்பாணியாக கிராமியக்கலைஞர்களில் ஒன்றிரண்டு ஒயிலாட்ட மயிலாட்ட, கரகாட்டக்கலைஞர்கள் .....<br />தொன்மையானதும், பழமையானதும், கிராமியக்கலைகளில் நுட்பமானதும் தமிழர்களின் ஒப்பற்ற பண்பாட்டு அடையாளமுமான தெருக்கூத்து முதலிய நிகழ்த்துக்கலைகள்<br />குறித்த பிரக்ஞையும் அக்கறையும் அவர்களுக்கு சுத்தமாகவே இல்லை.<br />ஒருவேளை கேட்பதற்கு நாதியில்லை என அறிந்தும் அறியாத சிவமணி போல இருக்கிறார்களோ என்னவோ.....<br />தெருக்கூத்தை அடியாகக்கொண்டு நிறுவப்பட்ட கூத்துப்பட்டறை போன்ற பிரபல கலை நிறுவனங்கள் சினிமாவுக்கு நடிக ,நடிகைகளை உற்பந்தி செய்யும் தொழிற்கூடங்களாகிவிட்டன. அதன் வாரிசுதாரர்கள்<br />ஆத்தாக்காரி அம்மணமாம் கும்பகோணத்தல கோதானமாம் என்றமானிக்கி மாநகராட்சிகளில் உள்ள நட்சத்திர ஹோட்டேல்களில்,பல்கலைவளாககங்களில் அமைந்திருக்கும் ஏசி பொருத்தப்பட்ட அரங்குகளில் தாம் கற்ற நாடகக்கலையை <br />வளர்த்துவருகிறார்கள்<br />இன்னும் சில கலை ஆர்வலர்கள், ஆய்வாளர்கள,தமிழ் பேராசிரியர்கள் இருக்கிறார்கள் அவர்கள் கூத்தாடிகளிடம் வந்து முடிந்தமட்டும் சமாச்சாரங்களைச் சுரண்டிக்கொண்டுப் போய் தீசீஸ் எழுதி பணம் பண்ணுகிறார்களேவொழிய தாம் கண்ணாரக்கண்டு காதாறக் கேட்டு தெளிந்த கலைஞர்களின் கலைத்திறமைகளை, கஷ்ட்ட நஷ்ட்டங்களை குறித்து வாய்க்கும் இடத்தில் இதுகாறும் ஒரேவொரு அச்சரத்தைக்கூட உதிர்த்ததில்லை. (சும்மானாச்சிக்குங்கூட)<br />இவற்றையெல்லாம் நான் ஏன் சொல்லவேண்டியிருக்கிறதென்றால் தடங்கண்டுப்போய் இனங்கண்டு சிறப்பு செய்யவேண்டிய இவர்களே நிகழ்த்துக்கலைஞர்கள் பால் பாராமுகம் காட்டும் போது.............................<br />இல்லாத பொருளைக் கேட்கிறார்களே(அரசாங்கம், பிரபல கலை நிறுவனங்கள் வழங்கிய விருது, சன்மானம் பாராட்டு சான்றிதழ்கள்) எப்படி <br />கொடுப்பது?அதோடு மட்டுமல்ல ஆணோ, பெண்ணோ ஒரு கூத்தாடிக்கி எந்த ஊரில் ரசிகர் மன்றமிருக்கிறது? எந்த ஊரில் தெருக்கூத்திற்கு அழைப்பிதல் அச்சிட்டு விநியோகிக்கிறார்கள்?<br />ஒத்த உரூவாயிக்கி வெற்றிலை வாங்கி ஐந்தோ பத்தோ அதில் வைத்து வந்து ஆடுங்கடா என்று பண்ணாடிகள் ஆணையிட்டால் முப்பது நாற்பது மைல்களுக்கு அப்பால் கூட சொந்தப் பணத்தைச் செலவழித்துக்கொண்டுப் போய் நடத்துகிற தெருக்கூத்து திடீர் மழை காரணமாகவோ, ஊரார்களின் அடிதடி சண்டை போன்ற அசம்பாவிதங்களினால் தடைப்பட்டு இடையில் நின்று விட்டால் போக்குவரத்து செலவுக்குக்கூட பணம் அவுக்க மாட்டார்கள். பத்தாயிரம் இருபதாயிரம் பெறு மதிப்புள்ள நிகழ்ச்சிக்கு ஒரு உரூவா வெற்றிலைதான் அச்சாரம்.<br />இந்த லட்சணத்தில் இவர்கள் கேட்கும் அழைப்பு, அறிவிப்பு, விளம்பரக்குறிப்பு, இத்தியாதி போன்ற ஆவணச்சான்றுகளுக்கு வெறும் வெற்றிலை சருகைதான் வைத்திருந்துக்கொண்டுப்போய் காட்ட வேண்டும் ...<br />ஒரு கலைஞராகப்பட்டவர் அரியணையில் அமர்ந்து செங்கோன்மை செலுத்தி வருகின்ற இந்த பொற்கால ஆட்சியில் சதமானத்தின் அடிப்படையில் பார்த்தால் நூற்றுக்கொரு தெருக்கூத்து கலைஞர் கூட (ஒருங்கிணைந்த சேலம், தருமபுரி,ஈரோடு, நாமக்கல் மாவட்ட) நலிந்த நிலையில் வாழும்சிறந்த கலைஞர்களுக்கான நிதியுதவி வழங்கும்<br />திட்டத்தின் பயனைப் பெறவில்லை என்பதே உண்மை!<br />எனக்கு தெரிய நான்கைந்து ஆண்டுகளாக இத்திட்டத்திற்கான விண்ணப்பத்தை வாங்கி நிரப்புவதிலிருந்து கோட்டாட்சியர், \வட்டாட்சியரின் வருவாய் விசாரணை அறிக்கை, கையெழுத்து மற்றும் முத்திரை பெற்று மன்றத்திற்கு அனுப்பும் பரியந்தம் பல நூறு உரூபாய்களை கடன்பட்டு அதிகாரிகளிடம் தாரை வார்த்துவிட்டு தனது விண்ணப்பம் போனவழி தெரியாமல் அன்னாடம் அஞ்சல் அலுவலகத்திற்கு சென்று<br />"பணமும் வரல ஒரு பாடையும் வரல அப்பிடி எதனாச்சிம் வந்தா வூட்டிண்டையே வந்து வாக்கரிசி போடறம் போ'"<br />என்று போஸ்ட் மாஸ்டரிடம் பாட்டு வாங்கி வரும் பொன்னான் வாத்தியார் கட்டிலில் கிடையாக கிடக்கிறார் . பல விண்ணப்பங்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை விட்டு தாண்டுவதேயில்லை.(ஏற்கப்படாத விண்ணப்பங்கள் குறித்த தகவல்கள் அதாவது இன்னின்ன காரணங்கள், குறைப்பாடுகளுக்காக அவ்விண்ணப்பம் பரிசீலிக்கப்படவில்லை என்ற விபரம் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தெரிவிக்கப்படுவதில்லை.)<br />கோரிப்பெறுவது வெகுமதியன்று.....ஆனால் அன்பர்களே<br />குரங்கு அப்பம் பங்கியதுப்போல உரியவர்க்கு உரியதை ஈயாமல் தன் வாயில் போட்டுக்கொள்ளும் நாட்டாமைத்தனம் நெடிய நாட்களுக்கு நிலைக்காது. <br />இடிப்பார் இல்லா எமரா மன்னன்<br />கெடுப்பார் இலானுங் கெடும் </div>manalveeduhttp://www.blogger.com/profile/11701810894595985945noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-891272482416127046.post-86460949688007717492009-05-15T13:07:00.000-07:002009-05-15T13:14:05.990-07:00தோல்பொம்மை தெருக்கூத்துக்கலைஞர் திருமதி.ஜெயா செல்லப்பன் அவர்களுடன் ஓர் நேர்காணல்<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgKWAdA_gZU7nYhZ3ERG7iOhFBlkZ4EIrXzyXlQqeoVRI_1gZhq4BGJMXcvFEC1_4bl8fsbJ37BR1u-fzuRC6zFUq_if0yS6UeL7ywKuvBMESaJNHnMr7coPzGKnbWo2JKbOojwdfyTrr9f/s1600-h/IMG_6063.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5336146140552473234" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 213px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgKWAdA_gZU7nYhZ3ERG7iOhFBlkZ4EIrXzyXlQqeoVRI_1gZhq4BGJMXcvFEC1_4bl8fsbJ37BR1u-fzuRC6zFUq_if0yS6UeL7ywKuvBMESaJNHnMr7coPzGKnbWo2JKbOojwdfyTrr9f/s320/IMG_6063.jpg" border="0" /></a><br /><div><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiqpN9rcywzgw47z_dUcm59tNh64l6FyYd0Q3paYmpCaEWm65NmEtn-jg2lzMC0EhpPgoS_5K9johmVjER4XSa7JDqknuE1R4Kw9eg1zxCPCKZ3rJ3auZQqD_kZ8myxwjrxv0eX1_GpqGa_/s1600-h/IMG_6061.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5336145965219532738" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 214px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiqpN9rcywzgw47z_dUcm59tNh64l6FyYd0Q3paYmpCaEWm65NmEtn-jg2lzMC0EhpPgoS_5K9johmVjER4XSa7JDqknuE1R4Kw9eg1zxCPCKZ3rJ3auZQqD_kZ8myxwjrxv0eX1_GpqGa_/s320/IMG_6061.jpg" border="0" /></a><br /><br /><div>சந்திப்பு;தவசிக்கருப்புசாமி<br />திருமதி ஜெயா செல்லப்பன்.<br /> தோல் பொம்மை / தெருக்¢கூத்துக்கலைஞர். ஈரோடு மாவட்டம், பவானி வட்டம் அம்மாபேட்டையில் வசித்து வரும் திருமதி ஜெயா செல்லப்பன் அவர்கள் நாமக்கல். ஈரோடு, சேலம், தருமபுரி மாவட்ட அளவில் நன்கறியப்பட்ட தோல் பொம்மை கலைஞர், மட்டுமல்ல அற்புதமான தெருக்கூத்து கலைஞரும் கூட. நிகழ்த்துக் கலைகளில் சவாலானதும், மிகவும் கடினமானதுமான தோல்பொம்மலாட்டத்தை தனியொரு பெண்மணியாக கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்திக் கொண்டிருப்பவர். வயோதிகம் அவரை/அவரது வாழ்க்கையைப் புரட்டிப்போட்டு மேலதிகமாக ஒடுக்கி விட்டிருந்த போதிலும், கைக்கொண்ட கலை மீது எல்லையற்ற அர்ப்பணிப்பு உணர்வையும், ஈடுபாட்டையும் கொண்டு வாழ்ந்து வருகிறார். அருகி மறைந்து வரும் தொல் கலைகளின் விதைநெல் இவரிடம் மூட்டை மூட்டையாக கொட்டிக்கிடக்கிறது. கொள்வாரின்றி செல்லரித்து மக்கி விடுமுன் நல்ல நிலம் பார்த்து விதைக்க வேண்டும்.<br />தவசி;<br />எத்தன வயசுல பொம்மையாட்ட வந்தீங்க?<br />ஜெயா:<br />அதிருக்குந்தம்பி ஒரு ஏழு எட்டு வயசு. ஒரெட்டு எங்கய்யனுக்கு (அப்பா) பாடறதுக் கில்லாம தொண்டக் கெட்டுப் போச்சி வாயத் தொறந்தா துளிச் சாரீரம் வெளிய வரல. தொழிலேச் சுத்தமாச் செய்ய முடியல. வவுத்துக்கொடும - தாக்குப் புடிக்க முடியல. வழுது தொழிலுந் தெரியாது. துணிஞ்சி ஒருதக்கம் டெண்டக்கட்டி, ஊரக் கூட்டி, டிக்கிட்டுங் குடுத்துட்டாரு. கூட்டமா வந்து குமிஞ்சிருக்குது, பிம்மேளம் கிடி மொழங்குது. தனக்குச் சுத்தமா வாயத்தொறந்து பாடமுடியல. ஒடியாடி வெளையாடிக்கிட்டிருந்த என்னையக் கூப்புட்டு மடியிலக் குந்த வெச்சி என்ற காதுல தாம்பாடி பொம்மையாட்டிக்கிட்டு, அத வாங்கி திலுப்பி என்னய பாடச் சொன்னாரு அன்னைக்கி புடிச்சது இந்த பித்து.<br />தவசி;<br />உங்களுக்குமுந்தி உங்கய்யன், அவருக்கு மிந்தி ஆராச்சும் தோல் பொம்மலாட்டம் நடத்தியிருக்கிறாங்களா?<br />ஜெயா:<br />அக்கானுங்க, (ஆமாம்) அய்யன், பாட்டன், முப்பாட்டன் ஏழெட்டு தலக்கட்டு முந்தியிருந்தே எங்களுக்கு இதே தொழுவாடுத் தானுங்க.<br />தவசி;<br />இதுவரைக்கும் எந்தெந்த கதய/எத்தன கதய தோல்பொம்மையில நடத்தியிருக்கறீங்க?<br />ஜெயா:<br />குருபுத்ரன் இறப்பு ராமர் பிறப்புலயிருந்து ராமாயணம் பூர்த்தியா. யயாதி கண்ணாலத்துலயிருந்து தருமரு வைகுந்தம் முடிய மகாபாரதம் பூர்த்தியா. பொறவு நல்ல தங்கா. அரிச்சந்திரன் மயான காண்டம், நள தமயேந்திரிக் கண்ணாலம். இப்பிடி பல கதைங்கள நடத்தறம்.<br />தவசி;<br />மொதல்ல தோல் பொம்ம ஆட்டிக் கிட்டிருந்த நீங்க பிற்பாடு தெருக்கூத்துல வேசம்போட்டும் ஆடியிருக்கறீங்க எதனால இந்த மாத்தம்?<br />ஜெயா:<br />தோல் பொம்மையாட்டறது நுணுக்கமான வேல மனசுக்குப்புடிச்ச தொழிலுன்னாலும் பத்து பேத்துகஷ்டத்த ஒராளு சுதாரிக்கணும், கதையில மொத வர்ற கோமாளி பொம்மையிலிருந்து ஆணுபொம்ம, பெண் பொம்ம, தோலு, துருத்தி எல்லாத்துக்கும் ஒரே ஆளு பேசி, பாடி ஆட்டணும். கால மடிச்சி குத்துக்காலுப் போட்டு மனையில கோந்து சோத்தாங்கையில கட்டயும் ஒரட்டாங்கையில பொம்மயும் புடிச்சமின்னா பொறவு அஞ்சி பஞ்ச பூதமும் வேலச் செய்யணும், இஸ்காரு சாஸ்தி, நாவரீவ காலமாவ, ஆவ சனத்துக்கு கூத்துமேல நாட்டமாச்சி, போற வாறப் பக்கமெல்லாம் கூத்தே ஆடச்சொன்னாங்க. அந்த பூட்டுல, அதோட கூத்துன்னா ஒரு வேசம் மட்டுந்தான் வேலையும் ரொம்பச் சுளுவு, இருந்தாலும் எடப்பாட தடப்பட எங்கியோ ரெண்டொரு ஊருல தோலு பொம்மையே வேணுமின்னு கேப்பாங்க அங்க பிரியமா நடத்திக் குடுப்பம்.<br />தவசி;<br />கூத்துல ஆண்வேசம் கட்டுவீங்களா இல்ல பெண் வேசமா?<br />ஜெயா:<br />கதைய பொறுத்து. ஆணு/பொண்ணு எந்த வேசமின்னாலுங்கட்டுவேன், ஒவ்வோரெட்டு கூத்து வுட்டவிங்க கேக்கறமாதரயும் வேசங்கட்டுவம், மாடுபுடிசண்டை வெச்சா நானு உத்தரகுமாரன் கட்டுவன். எம்பட வூட்டுக்காரரு பேடி கட்டு வாப்ல. பவளக்கொடி கண்ணால மின்னா அவரு அல்லி நானு அர்ச்சுனன் பத்மாச்சூர வதமுன்னா அவரு பத்மாசூரன் நானு மோகினி,நல்லதங்கா வெச்சா நானு நல்லதங்கா அவுரு மூளி அலங்காரி.<br />தவசி;<br />வேசம் போடறப்ப எத்தன ரக பவுடருப் பொழங்குவீங்க? இன்னின்ன வேசத்துக்கு இன்னின்ன நெறத்துலதாம் பவடருப் போடணுமின்னு எதனாச்சும் வரமொற உண்டா?<br />ஜெயா;<br />அடந்தடந்துப் பொழங்கறது, முத்து வெள்ள, மஞ்ச கோபி, நீலம், செவப்பு, செந்தூரம்.ஒரு அரவான், அனுமாரு வேசமுன்னா,பச்சப்பவுடரு,ஒரு பகவான்,பீமன் வேசமுன்னா நீலம், காளி மாரி, தொரவதி வேசமுன்னா செவப்புப் பவுடருப் போடுவம்.<br />தவசி;<br />எத்தன தினுசான அடவு ஆடுவீங்க? ஆணு வேசத்துக்கும். பெண் வேசத்துக்கும் தனித்தனியா அடவு உண்டா?<br />ஜெயா:<br />தோலுப் பொம்மையாட்டத்துக்கு சுதி நானம் உண்டு, தெருக்கூத்துல அது அறுதி. கண்ட பாவனதான், பண்ணண்டு வக தாளம். எழு வக அடவுதான் இப்ப ஆடறம், ஆணுவேசத்துக்கும் பெண்ணு வேசத்துக்கும் ஆதி. அடதாளம். ரூபகம். சூரடி சாப்பு. ரெண்டடி சாப்பு. நொண்டிச்சிந்து. திறப்பட தாளம். ஒத்த சம்ப ரெட்டச் சம்ப இப்பிடி தாள வரிச ஒண்ணு தான், ஆனாக்கா ஒரு ஆண் வேசத்துல ஆடும்போது பெண்ணாயிருந்தாலும் ஆட்டம் துடியா இருக்கணும். ஏர்வ தாளத்துல எத்து வரிசையா ஆடனும். பெண் வேசத்துல ஆடும்போது அதுவோரு ஆம்பளையாயிருநத்£லும் சீலைக்குள்ளயே நயனமா ஆடனம்.<br />தவசி;<br />பல வேசம் போட்டுருக்கீங்க உங்களுக்கு பேர் வாங்கி குடுத்த வேசமென்னன்னு சொல்லுங்க?<br />ஜெயா:<br />லவ குசங் கூத்துல சீத வேசந்தாந் தம்பி எனக்கு பேரு வாங்கி குடுத்த வேசம்.<br />தவசி;<br />பெண் கூத்துக்கலைஞரா உங்க ஜமாவுல நீங்க வேசம்போட்டு ஆடனாப்ல, மத்த ஜமாவுலயும் பெண்கள் வேசம் போட்டு ஆடியிருக்கறாங்களா?<br />ஜெயா:<br />என்ன தம்பி ஆடனாங்களான்னு அவ்வளச் சிலேட்டமா கேக்கறீங்க, எங்க ஜமாவுல நானு, எங்கமாமியா பாப்பா, என்ற கொளுந்தியா காளியம்மா, அங்கம்மா ,குரும்பனூரு புட்டி இப்பிடி பொண்டுங்க ஆடனமா, பொன்னிவூட்டு மண்டயஞ் செட்டுல சித்தாயி. பாவாயின்னு ரெண்டுப் பொண்டுங்க. அதே மாதர சேலங் கொண்டாலாம்பட்டியில பூவாயி செட்டுன்னு ஒரு பொண்டுங்க செட்டே தனியா இருந்தது, அதுல லச்சிமி கந்தாயி. பவுனாம்பா ராஜாமணி ,செல்லம்மா இப்பிடி பல பொண்டுங்க ஆடனங்க.<br />தவசி;<br />அப்பிடியா! அவுங்களப்பத்தி கொஞ்சம் வௌக்கமா சொல்லுங்க?<br />ஜெயா:<br />தம்பி கண்ணாலத்துக்கு முந்தி எனக்கு பொம்மையாட்ட மட்லுந்தான் தெரியிம், மொட்டயங்கொறவமூட்ல என்னய எங்கய்யங் கட்டிக்குடுத்ததும் எனக்கு கூத்து படிப்பிச்சிது எங்க மாமியா பாப்பா காலடவு சொல்லிக் குடுத்தது,லச்சிமி, லச்சிமின்னு ஒரு அம்மா, பாருங்க இன்னும் நம்ப மேச்சேரி காளிக்கவுண்டனூருல ஆண்வேச துணி தச்சிக்கிட்டு உசுரோட இருக்குது, அந்தம்மா ஆடற ரெட்டடவுக்கு மத்தாளத்த அடிக்க முடியாம எத்தனயோ ஆம்பளைங்க பாதிக்கூத்துல சொல்லாமப் புடிக்காம ஒட்டம் புடிச்சிருக்கறானுங்க. அதே மாதர அவிங்க வர்க்கத்துல அவிங்க பாட்டி பூவாயி, பெரியாயி கந்தாயி,சின்னாயி பவுனாம்பா இவிங்கெல்லாம் பெருங்கொண்ட வேசக்காரு மட்டுமில்ல, பேரேடுத்த கூத்தாடிங்க! காலுமேல காலுப்போட்டு குந்தி, பவுனாம்பா கைப்பைய மொழங்கையில மாட்டிக்கிட்டு, கத்திரி மார்க்கம் சிவரெட்ட பத்த வெக்கறத பாக்கவே பத்திருவது பேரு கூடுவாங்க, தருமன், வீமன், அர்ச்சுனன், ஆயன், துரியோதனன், துர்ச்சாதனன், அய்மன்னன்னு இப்பிடி வேசம் ஆணோ பொண்ணோ ஆரு வேணுமுன்னாலும் கட்டலாம், ஆனா கூடன சவ நெறக் கும்பிடி கோமாளி வேசம் போட்டு அதுமொரு பொம்மனாட்டி சாமான்யத்துல ஆடி செலாமணி பண்ட முடியாது, எங்க காளியம்மா ராமக்கறவத்தாங் (கோமாளி) கட்டி வெளிய வந்தா பாக்கற சனத்துக்கு சிரிச்சி சிரிச்சி வவுறு புண்ணாப்போவும், பேச்சிக்கி பேச்சி சிங்காரம்,,,, அவளாட்டம் பேச இன்னக்கி ஆளு இல்ல.<br />தவசி;<br />அவங்கெல்லாம் இப்ப என்னா ஆனாங்க எங்க இருக்கறாங்க? என்னா செய்யறாங்க?<br />ஜெயா;<br />ஒடம்புல சத்து இருக்கமட்டும் ஆடனாங்க, வூடு நம்ப பிள்ளைங்க குட்டிங்க பெத்தாங்க. காதுல மூக்குல கெடக்கறத வித்துக்கூட அதுங்களுக்கு சீரு பாரு பாத்தாங்க, இப்ப ஊடுமில்ல வாசலுமில்ல! ஒடம்புல வலுவுமில்ல! நாடோடிங்களா மேச்சேரி வனவாசி, நங்கோளி ஒருக்கோடியா சந்த சந்தைக்கி மொளவுத்தூளு வித்துக்கிட்டு திரியிதுங்க.<br />தவசி;<br />உங்களுக்கு அப்பரம் உங்க பொண்ணுங்க. பசங்க ஆராச்சுங் கூத்தாடறாங்களா?<br />ஜெயா:<br />எனக்கு ஏழு பொட்டப்பிள்ளைங்க! ரெண்டு பசங்க, ஒருப்பையன் ராரி ஓட்றான். ஒருப்பையன் இங்க சலண்டபுரத்திண்ட சேட்டு ஜமாவுக்கு மத்தாளத்துக்குப் போறான். பிள்ளைங்க ஒவ்வொருத்திக்கும் கால காலத்துல கண்ணாலங்கட்டி குடுத்துட்டம், ஒருத்திக்கிகூட இந்த தொழிலு வோண்டாம்னுட்டம், ஏன்னு கேளுங்க அந்த காலத்துல நானு தோலு பொம்மையாட்டும் போது ஆட்டம் முடிஞ்ச பெறவு டெண்டவுட்டு வெளிய வந்தா பார்ரா பொம்மையாட்ற மவராசி வருதுன்னு நாலுச்சனம் கும்புட கையெடுக்கும், கூத்தாடும் போது பலபட்ற ஆம்பளைங்களோட சச்சமமா நின்னு உடுப்பு மாத்துவம் புடிப்பம் ஒரு தப்புத் தவறு நடக்காது, கன்னியமா நடந்துக்குவாங்க, காசி பணம் இல்லாட்டியும் ஊருநாட்ல மட்டு மருவாதி இருந்திச்சி. ஊருக்கு நூறு வூடு குடியானப்பசங்க, பத்திருவது டிக்கிட்டுங்க தான் பறயமூட்டாரு சக்கிலியூட்டாரு, இவிங்க பாவம் வருசமுச்சூடும் பாடுபட்டு சம்பாரிச்ச பணத்த போட்டு, ஆதிய மறக்கக் கூடாதுன்னு உள்ளூரு நோம்பி நொடிக்கி கூத்துவுட்டா, அத பொறுக்க மாண்டாம எதுத்தாப்பல குடியானப்பசங்க காலேசிப்பிள்ளைங்கன்னு சேலம் கல்லாங்குத்துலருந்து பொம்பளைங்கள கூட்டியாந்து அம்மண ஆட்டம் வுடறாங்க தம்பி! என்ற மகனாட்டம் நீங்க உங்ககிட்ட சொல்ல நாவு கூசுது, ஒசக்க பிளாசிட்டிக்கி தொட்டிய நிறுத்தி பைப்ப போட்டு கீழ தண்ணிய வுட்டு நட்ட நடு டேசியில பொம்பளய நெற அம்மணா நிக்க வெச்சி தண்ணி வாக்கச் சொன்னாங்க தம்பி ஒரு ஊருல. கேட்டா சினிமா பாட்டு அப்பிடியே ஆடறாங்கன்னு சொல்றாங்க! இப்பிடி பாத்து கண்டவிங்க கூத்தாடிப் பொம்பளய வேசம்போட்டு ஆடறவ தானேன்று அப்பிடி சினிமா பாட்டுக்கு ஆடுன்னா நம் கெவுரவம் என்ன ஆவறது தம்பி? அதான் அந்த நாத்தமே ஆவாதுன்னு வுட்டுட்டந் தம்பி.<br />தவசி;<br />இதுவரைக்கும் எத்தன கூத்து நடத்தியிருப்பீங்க?<br />ஜெயா:<br />வருசத்துக்கு நூறு, நூத்தம்பது ராத்திரி கூத்து கொறவில்லாம நடத்தனம், அம்பது வருசமா தொழிலுச் செய்யறன், எத்தன ராத்திரி கூத்து கணக்கு வருது நீங்களே பாத்துக்கங்க.<br />தவசி;<br />கூத்துல வர்ற வரும்பிடி உங்களுக்கு போதுமா?<br />ஜெயா:<br />அறக்க-பறக்க பாடுபட்டாலும், படுக்க பாயில்லங்கறாப்பல தானுங்க நம்ப பொழப்பு! அன்னைக்கிம் சரி இன்னிக்கும் சரி என்னமோ வர்ற வரும்பிடி வவுத்து ஈரங்காயாம பாத்துக்கலாம் அவ்வளதானுங்க.<br />தவசி;<br />பிரயோசனமில்லாத காரியத்தச் செஞ்சி,என்னங்க புண்ணியம்? வவுத்துக்கு கஞ்சி ஊத்தாத தொழில எனத்துக்குங்கயிப்பிடி வலிவந்தமாச் செய்யினும்?வுட்டுட்டு வேற தொழில எதனாலும் பண்டலாமில்ல?<br />ஜெயா;<br />நீங்க சொல்றது நூத்துலவொரு வார்த்தைங்க, எப்பிடிச் சம்பாரிச்சியென்னா? எத தின்னாயென்னா இந்த அங்கமாகப்பட்டது நம்பிப்போயிருஞ் சாமி! ஆனா பாழாப்போன பொந்தி அப்பிடிங்களா?<br />தவசி;<br />வருசா-வருசம் அரசாங்கம் உங்க மாதர கலைஞர்களுக்கு பென்சன், உதவித்தொகை,அதுயிதுன்னு பல நலத் திட்டம் அறிவிக்குது. நெறயாபேரு பென்சன் வாங்கறாங்க நீங்க அதுக்கு முயற்சி பண்ணலாமில்ல?<br />ஜெயா:<br />அதயேந் தம்பி கேக்கறீங்க! பெருமைக்கி பேசனா எருமைக்கி பில்லு ஆவாது. உங்க மாதர ஒருத்தரு சொல்லுப்பேச்சக் கேட்டுத்தானுங்க அஞ்சி வருசமா வுடாம எழுதிபோடறம். அது எந்த பொறட்டுல கெடக்குதுன்னே தெரியலீங்க. மினிசீப்பு, ஆர்.ஐயி. தாசில்தாருன்னு வருசந்தப்பாம வாக்கரிசி போட்டு உருவா ஐய்யாயிரம் கடம்பட்டதுதாந் தொச்சம். </div></div>manalveeduhttp://www.blogger.com/profile/11701810894595985945noreply@blogger.com1